Tuesday, January 5, 2016

நேர்மறை 15 கேள்விகளுக்கு கே.எஸ்.சிவகுமாரன் பதில்கள்

தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு எழுத்தாளர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்களின் பதில்கள்

உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
01.எழுத்து மூலம் மனுக்குலத்திற்கு என்னால் இயன்ற சேவையை செய்து வருபவன்.

நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
02. கருத்துரீதியாக யாருடனும் நான் முரண் படுவதில்லை . அது அது அவரவர் அபிபிராயம் என்று அமைதிகாண்பேன்.

இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
03. அவர்கள் முரண்பாடுகளில் நான் கவர்ச்சியைக் காண்பதில்லை.ஆயினும் அவர்கள் கூற்றுக்களைப்
 படித்ததும் எனக்குள் முறுவலித்துக் கொள்வேன்.சிலரின் அறியாமை  கண்டு மனம் வருந்துவது முண்டு.

உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
04.என்னைப்பற்றி நிறையப்பேர் திறன் ஆய்வாகவும், கண்டன விமர்சனமாகவும் எழுதி இருக்கிறார்கள். அவற்றைத்
தொகுத்து  நூலாக வெளியிட்டால் பின் வரும் சந்ததியினர் ஓரளவு என்னைக் கணிக்க உதவும் என நம்புகிறேன்.

நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
05.இலங்கையிலும், வெளி நாடுகளிலும் தமிழ், ஆங்கிலம்,
சிங்களம் ஆகிய மொழிகளில் எழுதுபவர்கள் பற்றியும், அவர்கள் படைப்புகள் பற்றியும் எழுதிருக்கிறேன். எனது 62 வருட இலக்கிய வாழ்வில் இவற்றின் தொகை  எண்ணில் அடங்கா.

யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
06. கற்று அறிந்த ஆய்வு அறிவாளர்களை மிகவும்  மதிக்கிறேன்.

இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
07. அப்படி ஒன்றும் இதுவரை தோன்றவில்லை.

இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
08.உலகப் பேர் அறிஞர்களின் புத்தகங்களை வாசிக்கும்போது
அவ்வ்வாறு தோன்றியது.

உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
09. இலங்கை இலக்கிய சஞ்சிகைகள் அனைத்தும் பிடிக்கும்.

உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
10. பொருளாதார மதிப்பு  ஆகக்கூடியதாக தமிழ் சிறுகதை ஒன்றின்   ஆங்கில ஆக்கத்துகாக கிடைத்தமை. வெளிநாட்டிலிருந்து கிடைத்தது. அதன் மதிப்பு ரூபாய் 25,000.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
11. நொபெல் பரிசு உட்பட எல்லாப் பரிசுகளிலும் ஓரளவு  உள்ளக அரசியல் கலந்து இருக்கும்.

உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
12. பாண்டிதியமென்று சொல்லாவிட்டலும்,ஓரளவு நல்ல அறிவு  ஆங்கிலம், தமிழ் மொழிகளில் மாத்திரம் உண்டு.

முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
13. முக நூல் மாத்திரமே எனக்குப் பரிச்சயம் அவற்றுள் பிற நாடுகளில் வாழும்   பெண் கவிஞர்கள் சிலர் எழுதும் கவிதைகளில் காணப் படும் தமிழ் அழகு என்னைப்பெரிதும் கவர்ந்து உள்ளது.

உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
14. குடும்பத்தில் என்னுடன் ,துணைவியார், இரு மகன்கள், அவர்கள்  துணைவியர், நான்கு பேரப் பிள்ளைகள் ஆகியோர் அடங்குவர்.

எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
15. என் மீது அப்பண்டமாக அவதூறு செய்துள்ள ஓரிருவர்  முகங்களில் ஓங்கிக்குத்த வேண்டும் என்று நினைத்தாலும் அவர்கள் அறியாமை  கண்டு வாளாதிருப்பேன்.

No comments:

Post a Comment