Saturday, January 2, 2016

மனதில் பட்டது - 05 - ஆரோக்கியமும் கலைத்துவமும்


தமிழ்மிரர் பத்திரிகையின் இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்

வாய்விட்டுச் சிரித்து மகிழும் சங்கதிகள் நிறைந்த உரையாடல் இலக்கியவாதிகளுக்கு மட்டுமே பெரிதும் அமைகின்ற ஒரு விடயம். தமிழ்மிரருக்காக இந்த இலக்கியப் பக்கத்தை ஆரம்பிக்க முன்னர் என்னோடு நெருக்கமாகப் பழகும் பலரிடம் ஆலோசனைகள் கேட்டேன். அத்துடன் சில நிகழ்வுகளையும் பறிமாறிக் கொண்டேன். அப்போதுதெல்லாம் சிரிக்க முடிந்தது அதுவும் வாய்விட்டு

இலக்கியப் பக்கத்தைக் கொஞ்சம் வித்தியாசமாச் செய்யலாம் என்று நினைக்கிறன். உங்களுக்கு எதாவது ஐடியா இருக்கா? எப்பிடிச் செஞ்சா நல்லா இருக்கும்? என்று கேட்டேன்

இலக்கியம் என்டு பேரப் போட்டுவிட்டு அப்பிடியே வெறுமையா விடுங்களம் அதவிட யாரால வித்தியாமாச் செய்ய முடியும். என்று பதில் சொன்னார்.
இதில் வெறும் சிரிப்பு மட்டுமல்ல இப்போது இலக்கியம் என்று படைக்கப்படும் பலதையும் கூர்ந்து நோக்கும் போது இலக்கியப் பக்கம் வெறுமையாக வந்தால்தான் சரியாக இருக்கும் என்றும் சிந்திக்கத் தோன்றியது. 
நேர்மறை என்று தலைப்பு வைத்ததே எதையும் நேர்மறையாக விளங்கிக்கொள்ள வேண்டும் எதிர்மறையாக விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே. வழமையான கேள்விகளில் இருந்து விலகி பஞ்ச் போல இருக்கும்படியாக எழுந்த 15 கேள்விகளையும் பலருக்கும் அனுப்பினேன். மிகச் சிலரைத் தவிர மற்றெல்லோரும் எதிர்மறையாகவே விளங்கிக் கொண்டார்கள். அக்கணத்தில் நேர்மறை என்பதுகூட அவர்களின் கண்களுக்குப் புலப்படவில்லை போலும். 

ஒரு கவிஞரிடமிருந்து இப்படி பதில் வந்தது.
மன்னிக்க வேண்டும் முஸ்டீன் இப்போது ஆரோக்கியமான கருத்தாடல்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றேன், அதனால் இப்போதைக்கு உங்கள் கேள்விகளுக்குப் பதில் தர முடியவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்

அன்று வீட்டுக்கு வந்த ஒருவரிடம் இந்தவிடயத்தையும் சொன்னவுடன் தடாலடியாக அவர் 'என்னது!! ஆரோக்கியமாமா..ம்;ஹ்.. நல்லா மரக்கறிலயும், இறச்சி முட்ட பாலும் சாப்பிடச் சொல்லி இருக்கலாமே அது ஆரோக்கியமா இருக்குமென்டு'

எனது கதைகளையும் இன்னும் சிலதையும் வாசித்துவிட்டு ஒருவர் 'உங்கட கதைகள்ல கலைத்துவம் இல்ல வெறும் தகவல்கள்தான் இருக்கு, வெறும் தகவல்கள் கொண்ட ஆக்கம் இலக்கியமாகாது. அதனால கொஞ்சம் கலைத்துவமா எழுதுங்க அப்பதான் கலர்புல்லா இருக்கும்' என்றார். 
இக்கருத்தை நண்பரிடம் சொன்னபோது 'கலர்புல்லா இருக்கனும்னா கலைத்துவமா இருந்தாச் செரி வராது மல்டிலக் பெய்ன்ட்ல வாங்கி நல்லா அடிச்சாத்தான் கலர்புல்லா இருக்கும் என்டு நீங்க சொல்லியிரிக்கலாமே' என்றாரே பார்க்கலாம் 

இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒருவர் கேட்டார் 'என்னப்பா கேள்விகளால கசக்கிப்பிழியிரிங்கலாமே' அப்போது எனக்குப் பக்கத்தில் நின்ற நண்பர் அவர் பேசி முடிவதற்குள் 'ஓஹ் அதென்ன பெரிய விசயமா? கசக்கும் போது கொஞ்சம் கூடுதலாச் சுருங்கியிருந்தா வண்ணான்கிட்டக் குடுத்து நல்ல அயர்ன் ஒன்டு போட்டு எடுத்திடலாம்' என்றார். 

பல பொழுதுகளில் நம்மில் பலர் மோதவிகளாகக் கருதிக் கொண்டு செயற்படுவோம் அப்போது கொஞ்சம் சீரியசாகக் கருத்துச் சொல்லத் தோன்றும் அப்போது இப்படி விழும் பதில்கள்தான் நம்மைச் சற்று நிதானிக்க வைக்கின்றன. அப்பதில்கள் சில அடிப்படைகளையும் அசைத்துப் பார்க்க வல்லவை.

வாய்விட்டுச் சிரித்தா நோய்விட்டுப் போகுமாமே 
பிறகென்ன சிரிக்க வேண்டியதுதான்.

No comments:

Post a Comment