Friday, December 20, 2013

ஹராங்குட்டி சிறுகதைத் தொகுப்பு நான்காவது பார்வை. - மன்சூர் ஏ காதிர்


ஹறாங்குட்டி - பலவீனங்களால் கட்டமைப்பட்ட ஒரு விம்பம்
மன்சூர் அப்துல் காதிர்
(இது படிகள் சஞ்சிகையிலும் பிரசுரிக்கப்பட்டது)

I

ஆவணவியலில் அதீத ஆர்வத்தைக் கொண்டுள்ளவரும் அத்துறையின் நுட்பங்களில் பரிச்சயமுள்ளவருமான எழுத்தாளர் முஸ்டீன் தற்போது சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியீடு செய்துள்ளார்.

இலங்கை முஸ்லிம் இனத்துவ அரசியலின் பல்வேறு பரிமாணங்களையும் புரிந்த பின்னர்தான் அது பற்றிய படைப்புக்களை உருவாக்குதல் வேண்டும் என்ற கருத்து நிலையை அழகியல் முழுமைவாதிகளும் அமைப்பியலாளர்களும் சிலவேளை நிராகரிக்கவே செய்வர். இந்த நிராகரிப்பை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளக்கூடிய நுட்பத்தை நன்கு புரிந்து கொண்டவராய் எழுத்தாளர் முஸ்டீன் தனது படைப்புகளை உருவாக்கியுள்ளார் என்ற கருத்து இதனை வாசிக்க ஆரம்பித்த உடனேயே ஒரு வாகசகனிடம் உருவாக்கத் தொடங்கி விடுகின்றது.

முழுவதும் வாசித்து முடித்த பின்னர் கருத்தியல் ரீதியான பக்கச் சார்புகளைப் புறந்தள்ளி விட்டுஇ தன்னந் தனியனாய் நின்று சிந்துத்துப் பார்த்தபோதும் கூட அழகியல் முழுமை வாதிகளும் அமைப்பியல் வாதிகளும் (structuralists) புனைகதைகளின் உள்ளடக்கம் சார்ந்த கருத்தியல் நிலைப்பாட்டில் செய்த நிராகரிப்பை முஸ்டீன் தனக்கு பெரிதும் பக்கபலமாகவும் சாதமமாகவும் ஆக்கிங்கொண்டுள்ளார் என்ற கருத்தே உறுதிப்படுத்துகின்றது.

இத்தொகுதி மீதான இவ்விமர்சன கருத்துருவாக்கம் படைப்பியலிலும் அழகியலிலும் முழுமை தொடர்பான உடன்பாடதோர் அபிப்பிராயத்தை நான் கொண்டிருப்பதாக பலர் விளங்கிக்கொள்ளும் ஓர் ஆபத்தும் மேற்படி எனது கூற்றினால் உருவாக் கூடும். ஆனால் தொடக்கத்திலேயே முடிவொன்றை பிரஸ்தாபிக்க வேண்டிய அவசியம் இக்கட்டுரைக்கு இல்லை.

அத்தகைய ஒரு சிந்தனைசார் அசம்பாவிதம் விமர்சகனின் எண்ணக் குவியலிடையே பீறிட்டு எழுவதினால் படைப்புக்களினதும் படைப்பாளரினதும் பலமான அம்சங்களை விடவும் அவற்றினதும் அவரினதும் பலவீனமான அம்சங்கள் மிகைப்படுகின்றன என்ற மற்றொரு யதார்த்தத்தை இங்கு புறந்தள்ள முடியாதுள்ளது. 

ii

இதனால் இத்தொகுதி தொடர்பான என்னுடைய அபிப்பிராயங்களை நிரற்படுத்தும்போது எனக்குள் வலியுறுத்தப்படும் பலவீனமான அம்சங்களை முதலிலும் அது நியாயப்படுத்தப்படுமாற்றை அதனைத் தொடர்ந்தும் அதன் பின்னர் இவ்வாசியரின் எழுத்துக்கு உருவாகவுள்ள வாய்ப்புக்களைப்பற்றியும் இவ்வெழுத்தின் மூலம் சமூகத்தின்மீது திணிக்கப்படப்போகும் அச்சுறுத்தல்கள் பற்றியும் இங்கு வழமைக்கும் இயற்கைக்கும் முறையியலுக்கும் மாறாக எடுத்துரைக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

01. சிறுகதை அமைப்பியல் மற்றும் அழகியல் பற்றிய எண்ணக்கரு:

எல்லோரும் அறிந்திருப்பதுபோல சிறுகதை ஒரு மொழி சார்ந்த கலைப்படைப்பு ஆகும். புனைகதை இலக்கியத்துள் பல் வேறு தரப்பான வாசகர்களையும் உள்வாங்கும் சக்திவாய்ந்த ஓர் இலக்கியப்படைப்பாக இது பார்க்கப்படுகின்றது. மொழிசார்ந்த அழகியல் ஊடகங்களுள் சிறுகதைக்கு ஓர் உன்னதமான ஸ்தானம் வழங்கப்படுகின்றது. அதற்கான காரணம் பல்வேறு வயதுப் பகுப்புக்களையும்இ பல்வேறு அறிவுசார் மட்டங்களையும் சேர்ந்த வாசகர்களை இது கொண்டிருப்பதாகும். 

சிறுகதை எனப்படும் மொழிசார் கலைப்படைப்பு தனது அழகியல் முழுமைத் தன்மையில் காண்பிக்கின்ற வெற்றியானது அதன் உள்ளடக்கம் மற்றும் ஏனைய கருத்தியல்சார் துறைகளில் தான் காட்டும் அக்கறைகளை விடவும் முக்கியமானதாகும். ஓர் அழகியல் சார்ந்த படைப்பானது 'தான் ஓர் அழகியல் படைப்பு என்பதில் முழுமை பெற்றிருக்கின்றதா' என்பதைப் பொறுத்தே அந்தப் படைப்பின் வெற்றியும் தோல்வியும் தங்கியிருக்கின்றது. 

இவ்வடிப்படையில் பார்க்கும்போது முஸ்டீன் படைத்தளித்துள்ள இத்தொகுதியில் பின்வரும் அம்சங்களை இங்கு கோடிட்டுக் காட்ட முடியும்.

(அ) அழகியல் ரீதியான அம்சங்களுள் பிதானமானது மொழிக் கையாளுகை சம்மந்தமாக ஆசிரியருக்கு உள்ள திறனும் பரிச்சயமும் ஆகும். சிறுகதையின் மொழியானது நாவல் மற்றும் ஏனைய புனை கதைகளின் மொழிக் கையாளுகையில் நின்றும் பெரிதும் வேறுபடுகின்ற ஓர் அம்சமாகும். அதாவது ஆற்றல் வாய்ந்த ஒரு கவிஞனுக்குரிய மொழிச் சிக்கனமும் அந்த மொழிக் கையாளுகையினூடே அவன் காட்சிப்படுத்த நினைக்கின்ற பாத்திரங்களின் உளவியல் பரிமாணமும் ஒரு கைதேர்ந்த சிற்பிக்கு உரித்தான வெளிப்பாட்டுத் திறன்களுடன் ஒரே நேர் கோட்டில் வந்து சங்கமிக்குமாயின் அந்த சிறுகதையானது மொழிக்கையாளுகை ரீதியான அழகியலின் முழுமையை அடைந்து விட்டதாகக் கருதப்படலாம்.

இவ்விரு அம்சங்களும் இங்கு சிரத்தையுடன் வடிவம் பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு திருப்திகரமான ஒரு பதிலைத் தேடுவது சிரமமாக உள்ளது. ஏனெனில் ஆசிரியரின் மொழிக் கையாளுகையானது தங்கு தடையற்ற ஒரு பிரவாகமாய் பெருக்கெடுத்து வரும் அதே வேளை சிறுகதையின் சிக்கனமான மொழிக்கையாளுகை என்பது ஆசிரியன் பிரக்ஞைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கவில்லை. வார்த்தகைளில் வீறிட்டெழும் கருத்தாக்கமானது அவற்றின் வீண் விரயத்தினால் அதன் உயிர் நைந்து போகின்ற ஒரு தன்மையை கதையின் ஓட்டமெங்கிலும் ஏற்படுத்தி விடுகின்றது.

ஆதலினால் இவரிடம் இயல்பாகக் காணப்படும் ஆற்றல் மிக்க மொழி ஆளுமையும் அதன் மூலம் இயல்பானவே பரிணமிக்க வேண்டிய அழகியல் அம்சமும் சொற்ளால் 'மேக்அப்' பண்ணப்பட்டு தான் கொண்டுள்ள கருத்தியலை நோக்கிய நகர்வுக்கு அனாவசியமாக பயன்படுத்தப்படுகின்றது என்ற ஓர் அகவயப்பட்ட பிரக்ஞையை இங்கு ஏற்படுத்தி விடுகின்றது. 

(ஆ) மொழிக் கையாளுகையில் காணப்பட்ட அதீத சிரத்தையின்மை பாத்திர வார்ப்பு அளவில் இல்லை. பெரும்பாலான பாத்திரங்கள் படைக்கப்பட்டிருப்பதனை அதன் கருத்தியல் நேர்மையைப் பிரதானப்படுத்தாது நோக்குகையில் அவற்றின் உணர்ச்சி சார் வெளிப்பாட்டுத்திறனும் அதன் படிமப்பாங்கான காட்சிப்படுத்தலும் புறந்தள்ளத் தக்கதன்று. ஓர் ஆவணவிலாளன் தனக்கு அதிலுள்ள தேர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டு சிறுகதை ஒன்றைப் படைத்தால் அதன் படிமப் பாங்கிலும் காட்சிப்படுத்துதலிலும் காணப்படும் நேர்த்தி முஸ்டீனிடம் பிரதிபலிக்கவில்லை என்று கூறுவதும் அபத்தமாகும். 

ஆனால்இ கருத்தியல் அடிப்படையிலான ஆடம்பரமான மொழிசார் பரோபகாரத் தன்மை அல்லது வீண் விரயம் பாத்திர வார்ப்பை பாதிக்கவில்லை என்றும் நிதானித்துச் சொல்லவும் முடியாதுள்ளமை இத்தொகுதியின் மற்றொரு அம்சமாகும். பாத்திரங்கள் செதுக்கப்பட்டிருப்பதில் சில மொழிசார்ந்த உள்ளக பிசிறல்கள் இங்கு இரண்டறக் கலந்து காணப்படுகின்றன. இப்பலவீனமானது ஒன்றில் ஒன்று தங்கிய சங்கிலித் தொடராக வெளிப்படக்கூடிய ஆபத்தைச் சார்ந்தது. ஓன்றைத் தவிர்த்தால் மட்டுமே மற்றதையும் தவிர்த்திருக்க முடியும்;. இந்த ஆபத்தை முஸ்டீனின் மொழிப்பிரவாக அலை ஏற்படுத்தியுள்ளது.

(இ) முஸ்டீனின் கதை சொல்லும் உத்தியானது அந்தக் கதையின் மையப் புள்ளியில் இருந்தே பெரும்பாலும் ஆரம்பிக்கின்றது. அதாவது மையப் புள்ளியை காட்டிவிட்டு அதை நோக்கி கதையை நகர்த்திச் செல்லுகின்ற உத்தியானது பெரிதும் இலக்கியத்தின் பயன்பாட்டு வாத்ததை முதன்மைப்படுத்தும் உத்தியாகும். இலக்கியப் பயன்பாட்டுவாதக் கோட்பாட்டாளர்கள் இலக்கியம் படைக்கின்ற தொழிலில் ஈடுபட்டாலும் கூட பெரும்பாலும் இலக்கியத்தின் படைப்பியல்சார் பிரதான பாதையை விட்டு நெடுந் தூரம் தன்னிச்சiயாகவே பயணிக்கின்ற ஆபத்தை அவர்களை அறியாமலேயே விலைக்கு வாங்கி விடுகின்றனர். இத்தகைய ஒரு போக்கு முஸ்டீனிலும் தோற்றம் காட்டுகின்றது. இது பொதுவாகவே அழகியலைச் சிரச்சேதம் செய்துவிடும் ஆடம்பரங்களாகும்.

(ஈ) சிறுகதையின் அளவுகோல்இ கட்டமைப்புஇ சட்டகம் அல்லது பௌதிக உருவம் பற்றிய எண்ணக்கருவை எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்க முடியாது. ஏனெனில் அதற்கான பௌதீக வடிவமைப்புப்பற்றிய தவிர்க்க முடியாத ஒரு வரைபு இருக்கின்றமைதான் இன்றைய யதார்த்தமாகும். அதனை இரண்டாக வகைப்படுத்தி நாம் சுருக்கமாகக் கூற முடியும். ஓன்று உருவம் பற்றிய சட்டகம். மற்றது உள்ளடக்கம் பற்றிய சட்டகம். எழுத்தாளர் முஸ்டீன் இந்த இரண்டு அம்சங்களிலுமே புதுமை செய்யும் ஆர்வத்தோடு தனது கதைகளை நகர்த்திக் கொண்டு சென்றாலும் மேற்படி இரண்டு அம்சங்களிலும் தனக்கு இன்னும் பரிச்சயம் தேவை என்பதை சாதாரண வாசகனிடம் இல்லாது போனாலும் விமர்சகனிடம் சொல்லிக்கொண்டிருக்கின்றார். 

இதனை இன்னும் விளக்கமாகச் சொன்னால் உருவம் பற்றிய வரையறையை அவர் திட்டமிட்டுக் கொண்டே கதையை நகர்த்திக்கொண்டு செல்லுகின்றார் என நாம் எடுத்துக் கொண்டாலும் கதையின் நடுவிலும் முடிவிலும் அபரிமிதமாக அதனை வளர்த்துக்கொண்டு சென்று தன்னுடைய உணர்ச்சிகளுக்கக் கடிவாளமிடத் தவறிவிடுகின்றார். நகர்த்திச் செல்லப்படும் கெமறாவுக்கும் ஸ்ரில் கெமறாவுக்கும் இடையில் காணப்பட்ட பாரிய வித்தியாசத்தை அவர் புரிந்துகொண்டதாகத்த தெரியவில்லை. இது இவ்வாசிரியரிடம் காணப்படும் பாரிய குறைபாடாகும். கதையின் உருவத்தில் மட்டுமன்றி உள்ளடக்கத்தில்கூட இக்குறைபாடானது காணப்படாமல் இல்லை. சில கதைகள் சிறுகதைத் தன்மையை விட நாவலுக்கான எத்தனைங்களைக் கொண்டிருப்பதுபோன்ற ஒரு குழப்பத்தன்மையும் வாசிப்பாளர்களிடையே உருவாக்கக் கூடும். 

02. வெளிப்பாட்டுத்திறன் பற்றிய எண்ணக்கரு:

அழகியலுக்கு அடுத்ததாக இவ்வாசிரியரின் வெளிப்பாட்டுத்திறன் பற்றிய எண்ணக்கரு கருத்திற் கொள்ளப்படத்தக்கது. வெளிப்பாட்டு அம்சம் தொடர்பில் வாசகர்களை உணர்ச்சி வசப்படுத்தலோடு சம்மந்தப்படுத்திப் பார்க்கும் ஓர் அபிப்பிராயம் நமது இலக்கிய உலகில் காணப்படுகின்றது. ஆனால்இ அது ஓர் இலக்கியக்காரனின் வேலையல்ல. ஓர் அரசியல் வாதியால் அதனை இன்னும் கச்சிதமாகச் செய்து முடிக்க இயலும். கலையைக் காசாக்கும் ஓர் இலக்கிய விபச்சாரி இன்னும் கவர்ச்சிகரமாக அதனைச் செய்து முடிப்பான். 

அவ்வாறன்றி இலக்கியம் அறிதலை நோக்கிய ஆர்வத்தை ஏற்படுத்துகின்ற ஓர் ஆரோக்கியமான பணியையே செய்கின்றது என்பது உலகப் பிரசித்தி பெற்ற இலக்கியங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிவார்ந்த ஒரு காட்சிப்படுத்தலின் ஊடாக வாசகனை உணர்ச்சிப்படுத்தலுக்குப் பதிலாக அறிதலின் கிளர்ச்சசிப்படுத்தலை உலகின் சக்தி வாய்ந்த இலக்கியங்கள் செய்திருக்கின்றனஇ செய்து கொண்டும் இருக்கின்றன. 

வெளிப்பாட்டுத் திறன் என்பது படைப்புலகின் நுட்பமான (வநஉhழெடழபல) அம்சங்களுடன் தொடர்பு பட்டதாகும். எல்லா ஆக்கங்களினதும் வெற்றியும் தோல்வியும் சிருஷ;டி கர்த்தா அப்படைப்புக்கு தான் உபகரணமாகக் கையாண்ட வநஉhழெடழபல யுடன் சம்மந்தப்பட்டும் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த வகையில் முஸ்டீன் கையாண்டுள்ள வெளிப்பாட்டு நுட்பங்கள் அவரை ஒரு ஜனநாய இலக்கியத்தின் ஜாம்பவானாகக் காட்டிக்கொள்ள சிலவேளை துணைபுரிந்தாலும் கூட அறிவர்ந்த இலக்கியத்தின் பரிமாணங்கள் உள்வாங்கப்பட்ட படைப்புக்களை வெளியே கொண்டு வர அவருக்குத் துணைபோகவில்லை.

சாரு நிவேதிதாவின் ஸீரோ டிக்றி என்ற நாவலுக்கு இந்திரா பார்த்தசாரதி பிற்காலத்தில் விமர்சனம் செய்யும்போது 'ஜூகுப்ஸம்' என்ற ஒரு ஸமஸ்கிருதப் பதப்பிரயோகத்தைச் சுட்டிக்க காட்டி ஜூகுப்ஸம் என்பது தமிழில் வழங்கும் 'இழிவரல்' என்பதன் அர்த்தத்தை விடவும் கூடுதலான அர்த்த புஷ;டியுடன் உள்ளது என்றும் விளக்கினார். ஸீரோ டிக்றி ஜூகுப்ஸத்தின் வெளிப்பாடு போன்ற ஒரு பரபரப்புத் தன்மையினை ஏற்படுத்தக் கூடியது என்றும் அவர் நிறுவிக்காட்ட முன்வந்தார். இக்கூற்றுக் கூட ஒரு வகையில் மனவெழுச்சி (நஅழவழையெட) சார்ந்த அபிப்பிராயம் என்றோ அல்லது குழும உணர்ச்சியால் கிளர்ந்த அபிப்பிராயம் என்றோ கருதுவோரும் உள்ளனர். 

சல்மான் றுஷ;டி கூட கேவலமான ஒரு விபச்சாரத்தையே தனது சாத்தனிய வசனங்களில் வெளிப்பாட்டு அம்சமாக சாதித்துக் காட்டினார். அது அவருக்கு விருதுகளையும் டொலர்களையும் 

அள்ளி வளங்கின. மதம் சம்மந்தமான குரோதம் தலைதெறிக்க உணரப்படும் காலமெல்லாம் ஒரு குறிப்பிட்ட மக்கட் பிரிவினர் அவரை தலைமேல் தூக்கிக் கூத்தாடவே செய்வர். அதற்காக அவர் சாத்தனிய வசனங்களின் மூலம் ஏற்படுத்திய கிளர்ச்சி ஒரு நீலப்படத்தின் கெமெறா மேன் ஏற்படுத்திய மனக் கிளைர்ச்சியை விடவும் உயர்வானதாக நாம் கருத வேண்டியதில்லை.

ஆனால் படைப்பாளனின் வெற்றி என்பது அவன் வெளிப்பாட்டுத் திறனுக்குக் கிடைக்கும் வெற்றியே என்று நாம் மொழிபெயர்த்துக் கொள்வதில் தவறில்லை. இப்படிப் பார்க்கும்போது ஜூகுப்ஸத்தை விடவும் தற்போதைய அறிவியல் உலகில் பேசப்படுகின்ற emotional intelligence ஊடான ஒரு படைப்பியல் வெற்றியையே இலக்கியத்தின் வெற்றி என்று நாம் கருதுதல் சாத்தியமாகலாம்;. இந்த அடிப்படையில் பார்க்கும்போது பயன்பாட்டு வாதிகளை சற்றேனும் அனுசரித்துப்போக வேண்டிய ஒரு தேவையும் படைப்பாளிக்கு விதியாக்கப்படுகின்றது. 

எந்த வகையான எல்லைகளைக் கடந்து போனாலும் அல்லது எத்தகு கோட்பாட்டாளர்களை அனுசரித்துக் கொண்டு போனாலும் படைப்பும் அதன் சிருஷ;டி கர்த்தாவும் வெளிப்பாட்டுத் திறனில் கொண்டுள்ள தேர்ச்சி நிலைதான் படைப்புலகுக்கான அவனின் ஆயுளைத் தீர்மானிக்கின்றது. முஸ்டீனைப் பொறுத்த வரையில் ஒரு ஜனரஞ்சகமான வெளிப்பாட்டுத்திறன் உள்ளவராகவே அவர் தன்னைக் காட்ட முயற்சிக்கின்றாரே தவிர அறிவார்ந்த ஒரு விமர்சகனின் பாரம்பரியமான அல்லது அதனைக் கடந்த கவன ஈர்ப்பை அவர் பெறுவதற்கு இன்னும் தனது வெளிப்பாட்டுத் தன்மையை அதிகரிக்க வேண்டிய ஒரு தேவை தென்படுகின்றது. 

03. கதைப்பின்னல் என்ற நுட்பம்:

வெளிப்பாட்டு அம்சத்தில் பின்னடைவு காணப்படின் அது கதைப்பின்னலிலும் செல்வாக்குச் செலுத்துவதற்கான சாத்தியப்பாடுகளே பெருமளவுக்கு வெளிப்பட்டு நிற்கும். இந்த அம்சத்தை அல்லது பலவீனத்ததை நாம் கண்டு பிடிக்க பெருமளவுக்கு அவஸ்தைப்படத் தேவையில்லை.

முஸ்டீன் கூட இவ்விதிக்கு விலக்காக முடியாது. இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ள ஏராளமான கதைகளில் கதைப்பின்னலின் பலவீனமான அம்சங்கள் வெளிப்பாட்டுத்திறனின் குறைபாட்டினால் ஏற்பட்டதே. 

அத்துடன்; கதையின் மையப்பகுதியை கனதி பண்ணவேண்டிய நிலைமை பெரும்பாலும் கருத்திற் கொள்ளாத கதாபாத்திரங்களை சரளமாகப் படைத்து விடுதலும் முஸ்டீனின் கதைகளின் தராதர இறுக்கத்தை (qualitative inflexibility) ஐதாக்கி விடுகின்றது. 

முன்பு ஓர் இடத்தில் குறிப்பி;ட்டது போன்று கதையின் மையப் பொருளில் தொடங்கி கதை பின்னப்பட்டுள்ளமை சராசரி வாசகனுக்கு ஓர் அசுவாரஸ்யமாகவே இருக்கப் போகின்றது. 

அதற்காக சந்தைப்படுத்தல் உத்தி கதைஞனுக்கு வேண்டும் என்பது எனது கருத்தல்ல. கதைப்பின்னலும் அழகியலுடன் சார்ந்த ஓர் அம்சம் என்பதே எனது கருத்ததாகும். 

04. உள்ளடக்கமும் எதிர்காலம் பற்றிய பீதியும்:

பெரும்பாலான கதைகள் தமிழ் ஈழப் போராட்டத்தின் பக்கவிளைவுகளுடன் சம்மந்தப்பட்டதாகும். வெளிப்படையாகக் குறிப்பிட்டால் தமிழ் ஈழப் போராட்டமானது எவ்வாறு ஒரு விடுதலைப் போராட்டத்துடன் சம்மந்தப்பட்டது என்பது உண்மையோ அவ்வளவு உண்மையானது அது பிராந்திய விஸ்தரிப்பு வாதத்தின் புவிசார் அரசியல் அபிலாiஷகளுக்கு (புநழ pழடவைiஉயட யளிசையவழைளெ) அனுசரித்துச் செல்ல வேண்டியதும் அத்துடன் சர்வதேச ஆயுதச் சந்தையின் நெளிவு சுழிவுகளுடன் அனுசரித்துச் செல்ல வேண்டியதும் என்ற பல்வகை கடப்பாடுகளைக் கொண்டுள்ளது என்பதுமாகும். தங்களுடைய இலக்கு எவ்வித காப்புக் கலப்பும் இல்லாமல் கொண்டு சேர்க்கப்பட வேண்டுமெனில் பிராந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கும் சர்வதேச ஆயுத அங்காடிகளின் ஆசைகளுக்கும் சோரம் போயாக வேண்டிய ஒரு தேவை அவர்களுக்கு ஏற்படவே செய்கின்றது. 

மறுபக்கத்தில் இவர்களை ஒழிக்கக் கங்கணங் கட்டியோருக்கும் இந்த இரு தரப்பாருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய தவிர்க்க முடியாமை உள்ளது. மேற்சொன்ன பிராந்திய விஸ்தரிப்பு வாதமும் சர்வதேச ஆயுத அங்காடியும் சர்வதேசிய அடிப்படையில் முஸ்லிம்களை தமது பாரம்பரியமான எதிரிகளாகப் பார்க்கக் கற்றுக் கொண்டவர்கள். அதனால் தமிழ் ஈழப் போராட்டத்தின் ஆணையிடும் சக்கிகளும் அவர்களைப் பூண்டோடு ஒழித்துவிடக் கங்கணங்கட்டியுள்ள சக்திகளும் முஸ்லிம்களின் உயிர்களையும் உடைமைகளையும் பகடைக் காய்களாக்கிக் கொண்டனர். இதனிடையே முஸ்லிம் உணர்வாளர்கள் கூட சிலவேளை பித்தம் தலைக்கேறி அள்ளுண்டு போனமையை இங்கு குறிப்பிடாமல் விட்டால் நேர்மையாகாது. 

இந்த முத்தரப்பாரும் ஒரே நேர் கோட்டில் சங்கமிக்கும் கைங்கரியத்தை சர்வதேச சமூகம் அல்லது ஸியோனிஸம் செய்து முடித்தது. இதனால் இங்கும் ஓர் இரத்த ஆறு ஓடிற்று. இந்த வாய்ப்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் சிறுபான்மையைச் சேர்ந்த புத்திஜீவிகளும் குழப்பமான கருத்துக்களைச் சொல்லுகின்றனர். இன்னும் சிலர் வெளி நாடுகளில் இருந்து கொண்டு இங்கு என்ன நடக்கின்றது என்பதைப் புரியாமல் அல்லது சர்வதேச ஆயுத வியாபாரிகளின் கடை வாய்ப் பற்களின் ஊடாக வழியும் டொலர் சில்லறைகளுக்காக தமிழ் முஸ்லிம் மக்களிடையே மீண்டும் ஒரு குழப்ப நிலையைத் தூபமிடுகின்றனர்.

அதிலும் நாம் பயன்பாட்டு வாதத்தின் அடிப்படையில் இதனை நோக்கின் இன்றைய காலக் கட்டம் சிறுபான்மையினர் என்று இனங் காணப்பட்டவர்கள் தங்களின் கடந்த கால வெறுப்பு மிகு அனுபவங்களை முதலில் புறந்தள்ளிவிடல் வேண்டும். தங்களுக்குள் ஒற்றுமைப்பட்டு தனிப்படத் தனிப்படவும் முழுமையாகவும் தங்களுடைய உரிமைகளை வெண்றெடுப்பதற்கான தற்திரோபாயங்களையும் நிகழ்ச்சி நிரலையும் வகுக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழலில் இருக்கின்றோம். 

அதனை தமிழ்; மற்றும் முஸ்லிம் வெகு ஜனங்களே இப்போது தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்கள். தமிழ் மக்களை அரவணைத்துச் செல்லத் தயார் இல்லாத தம் தலைமைகளை முஸ்லிம்கள் புறக்கணித்து விடவும் முஸ்லிம் வெகு ஜனத்தின் உரிமைககை கண்டு கொள்ளாத தமிழ்த் தலைமைகளை தமிழ் மக்கள் புறக்கணித்து விடவும் தயாராகும் சிந்தனைத் தெளிவு ஏற்பட்டுள்ள ஒரு காலத்தில் அவற்றை செப்பனிட்டு உற்சாகப்படுத்த வேண்டியது சமுதாயவாத அல்லது பயன்பாட்டுவாத எழுத்தாளர்களின் பாரிய பொறுப்பாகும். இவ்வாறு சிந்திக்காத படைப்பாளர்கள் இன்னும் சிறுபான்மையினர்களுக்கு இடையிலான ஓர் இனக் கலவரத்தை அவாவி நிற்கும் பேரினவாத அடக்கு முறையாளர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு பல்லாக்குத் தூக்கும் கைங்கரியத்தை செய்வதாகவே படும்;. ஆகவே குறிப்பாக முஸ்லிம்களைப் பிரதிநிதிப்படுத்தும் படைப்பாளர்கள் இதில் சற்றேனும் கவனக் குறைவாக இருப்பதும் ஆபத்தனதாகும். 

இத்தனைக்கும் மேலாக இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களுக்கான அதிகார அலகு பற்றிய சிந்தனைகளும் நம்மிடம் இருந்து தோன்றிற்று. அதனைக் கேட்டவர்கள் பிரக்ஞை பூர்வமாக புரிந்துதான் கேட்டார்களோ இல்லையோ அதன் பாரதூரத்தையும் அது புவிசார் அரசியலாளர்களிடையே தோற்றுவித்த குலை நடுக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு நம்மை சிந்திக்கத் தூண்டும் சில உதிப்புக்களையே முஸ்டீன் பிரதான இலக்கியக் களமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் அவரிடையே இயல்பாகக் காணப்படும் ஆவணவாக்கம் சம்மந்தமான ஆற்றல் அவரை செயல்படத் தூண்டியுள்ளது. இனப் பிரச்சினையில் முஸ்லீம்கள் தொடர்பான ஆவணவாக்கத்தின் ஒரு பகுதியை அவர் வெற்றிகரமாகச் செய்ய ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அந்த விடயதானங்கள் தொடர்பில் அவரிடம் காணப்படும் உள்ளகக் குழப்பங்களை அவர் நிச்சயமாக இனங்காணல் வேண்டும். 

அத்துடன் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் ஒரு பாத்திரம் ஆயுதங்களுடன் உலாவருவது இத்தொகுதியின் பிரதான பலஹீனமாகும். அது நமது சமகால தலைமுறையின் பலஹீனம் அல்லது காலத்தின் குறியீடு என்ற ஒரு இலகுவான பதிலை தயார் நிலையில் வைத்துக் கொண்டாலும் வன்முறையை நோக்கிய ஒரு மக்கள் கூட்டத்தின் நகர்வை ஏதோ ஒரு வகையில் உற்சாகப்படுத்தும் கைங்கரியத்தையே இவரின் கதாநாயக வழிபாடான அப்பாத்திரம் ஏற்படுத்தப் போகின்றது. அது இரத்தத்தையும் வன்முறையை நிராகரித்து விட்டு எங்காவது ஒரு புள்ளியில் இருந்து சமாதானத்தை நோக்கிய நகர்வை அங்கலாய்க்கும் சராசரி மனிதாபிகளுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆகவே அந்த கருத்தியல் ரீதியான ஒரு மனக் குழப்பம் ஆசிரியரை தன்னுடைய எல்லையை மீறி ஆட்கொண்டிருப்பதானது நஅழவழையெட iவெநடடபைநnஉந தொடர்பான முன்னெடுப்புக்களை உற்சாகப்படுத்தாது. அதேவேளை ஆவணவாக்கத்தக்கான ஸ்கிறிப்ற் ஒன்றை அடிப்படையாக வைத்து அதனை சிறுகதையாக்கலாம் என்ற நம்பிக்கையை காரியமாக்க இன்னும் சில படிகளை அவர் தாண்ட வேண்டும்.

பலவீனங்களின் வரிசைக்குள்ளே ஹறாங்குட்டி என்ற சிறுகதையை அடக்குவதில் சில பிரச்சினைகள் காணப்படவே செய்கின்றன. ஹறாங்குட்டி என்ற இக்கதையையே பெயராக இத்தொகுதிக்கு வைத்ததன் மூலம் இத்தொகுதியின் master piece கதை இதுவே என ஆசிரியரே கூறியுள்ளார் என்று நாம் அபிப்பிராயப்படுவதில் தவறில்லை. அதில் வரவேற்கத்தக்க அம்சங்கள் காணப்பட்டபோதும் துப்பாக்கியுடன் அலையும் ஒரு தீவிர ஆத்மாவையும் பள்ளிவாசலுக்குள்ளே வைத்து பாவியைக் கொல்லத் துடிக்கும் 'அரசியலையும்' இளைய மனங்களில் விதைப்பதை ஒப்புக்கொள்ள முடியாதுள்ளது. அப்படியென்றால் பாக்கிஸ்தானில் ஷPஆக்களின் அல்லது சுன்னிகளின் அல்லது கிறிஸ்தவர்களின் வணக்க ஸ்தலங்களில் குண்டு வைத்து பள்ளிவாசலையும் தகர்த்து அங்கு வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் கொல்லத் துணியும் மனங்களை நாம் நியாயப்படுத்துவதும் அங்கீகரிப்பதும் சரிகாணப்பட வேண்டிய விடயங்களாகி விடலாம் அல்லவா? அதனை இலங்கையில் வியாபாரிகளினதும் அரசியல் வாதிகளினதும் கையிலே சிக்கியுள்ள ஒரு மதவாத அமைப்பு செய்யும் வேலைகளுடனும் மொழி பெயர்த்து ஒப்பிட்டுப் பார்க்க முடியும். 

அத்துடன் இங்கு ஹோமோ ஸெக்ஸில் ஈடுபடுவாதாக சித்தரிக்கப்படும் மதகுரு விடயம் கூட சமூகத்தில் பகிரங்கப்படுத்தி அந்த விடயம் பற்றி அறியும் ஆவலை உண்டாக்குவதும் மதக்கல்வி ஸ்தாபனங்கள் இதைச் சரளமாக செய்யும் இடங்களாகப் பிரகடனப்படுத்தப்படலும் ஒரு வகையில் 'அரச சாhபற்ற நிறுவனங்களின'; பிரதான பணிகளில் பங்கேற்பதாவே அமையும். அதை மிகுந்த 'அதபு'டன் அடக்கி வாசித்திருக் முடியும் என்பதே ஒரு சராசரி மனிதனின் எதிர்பார்ப்பாகும்.

05. ஆளுமையை நிலைநிறுத்தும் அம்சங்கள்:

இத்தொகுதி பற்றிய விமர்சனத்தில் எதிர்மறையான அம்சங்கள் முதலில் எடுத்து விளக்கப்பட்டமையானது இவரின் இலக்கிய ஆளுமையின் மறுபக்கத்துக்கு உதாரணங்கள் இல்லை என்ற அர்த்தத்தில் அல்ல. கதைகள் அடுக்கி வைக்கப்பட்ட ஒழுங்கில் இருந்து பார்த்துப் பழகிய ஒரு முறையியலுக்கு ஆட்பட்டமையினால் என் போன்றவர்களுக்கு அத்தகைய விபத்தானது தவிர்க்க முடியாமற் போகின்றது. 

தொகுதியின் பெயராக ஹறாங்குட்டி எடுக்கப்பட்டமையினால் அப்படைப்புக்கு ஆசிரியர் முக்கிய இடம்கொடுத்துள்ளார். ஆனால் படைப்பு என்று நோக்குகையில் ஓரளவுக்கு தேறக் கூடிய கதை மனமாற்றம் என்பது மட்டுமேயாகும். ஆசிரியர் தன்னுடைய பலவீனங்களை ஒரு பக்கத்தில் ஒதுக்கி வைத்து விட்டு அழகியல் அக்கறையோடு இக்கதையை கையாண்டுள்ளார். ஏனைய கதைகளை விட அமைப்பிலும் கதைப் பின்னலிலும் கதை நகர்த்திச் செல்லும் பாணியிலும் பயன்பாட்டு வாதத்தை விட அழகியல் அக்கறை மேம்பட்டுச் செல்லுகின்ற போக்கு கதை எங்கணும் விரவிச் செல்கின்றமை இக்கதைக்கான தனித்துவமாகும். 

மனமாற்றம் என்ற கதை எங்கணும் மொழிக்கையாட்சி நறுக்கெனவும் செப்பமாகவும் ஒரு சிற்பிக்கான நிதானத்துடன் செய்யப்பட்டடுள்ளது. உணர்ச்சிகள் வார்த்தைகளால் கட்டுக்கடங்காது செல்லாது கடிவாளமிடப்பட்ட தன்மையும் இதில் ஓரளவு காணப்பகின்றது. 

இந்தக் கதாசிரியரின் பிரதான பண்பாகக் காணப்படும் மையப்புள்ளயில் இருந்து கதையை நகர்த்திச் செல்லும் பண்பானது கூட இக்கதையில் முற்றுமுழுவதுமாகக் கைவிடப்பட்டிருக்கின்றது. இக்கதை 'சுட்டுப்போட்டாலும் இவரால் கதை எழுத முடியாது' என்ற அபிப்பிராயத்தை நிராகரித்து இவருக்குள்ளும் ஒரு சிறுகதையாளன் உறங்கிக்கொண்டு இருக்கின்றான் என்ற ஒரு தோற்றப்பாட்டை இவரில் ஏற்படுத்தி விடுகின்றது. ஆக ஆவணவியலாளர் முஸ்டீன் சிறுகதை எழுத்தாளராக புனர் ஜென்மம் எடுக்க இக்கதை இவருக்குக் கைகொடுத்துள்ளது. ஆனால் அதைத் தொடர்ந்து வரும் கதையில் பழைய குறுடி கதவைத் துறடிதான். நூலின் அட்டை விNஷட கவனத்துடன் கையாளப்பட்டமை பாராட்டத்தக்கது. 

iii
முடிவுரை:
ஓட்டு மொத்தமாக பார்க்கும்போது சிறுகதையின் ஆசிரியன் ஒருவன் போட்டுக் கொள்ளவேண்டிய கடிவாளத்தை உதறிவிட்டு அலைந்து திரியும் ஒரு சிறந்த ஆவணவியலாளன்இ மனமாற்றம் போன்ற சிறுகதைகளில் தான் எடுத்துக்கொண்ட அக்கறையை எதிர்காலத்தில் தொடருவாராயின் அவர் பெயர்பெற்ற சிறுகதைகளைத் தரும் வாய்ப்புள்ளது. அதனைத் தீர்மானிக்க வேண்டிது முஸ்டீன் மாத்திரமே.

அதே வேளை உற்பத்தி மற்றும் பக்க அமைப்பு, அதன் இடைவெளிகள் தொடர்பில் அச்சகர் விட்ட கவனக்குறைவு நூலின் குறைபாடாக வந்து சேர்ந்தமை ஆசிரியன் துர்அதிஷடமே.

Sunday, October 27, 2013

அஹமதும் அனிவாவும்

அஹமதும் அனிவாவும்
சிறுகதை – முஸ்டீன்

முன்னொரு நாள்

'ச்சே நான் நம்பவேயில்ல அனிவா இப்பிடி ஹராங்குட்டி வேல பாப்பான் எண்டு'
அஹமது புலம்பிக் கொண்டிருந்தார், 
அஹமது புகழ்பெற்ற ஒரு எழுத்தாளர், பல கதைகள் பத்திரிகைகளில் வந்து அவருக்குப் புகழ் சேர்த்துக் கொண்டிருந்தன, நல்ல எழுத்து அவருக்கு வசப்பட்டிருந்தது, அது எல்லோரையும் வசீகரித்தது, அரச தொழிலில் இருந்தாலும் நேரமெடுத்துக் கொண்டு எழுதியது அவரது அதீத திறமைதான், 
அஹமதுக்கு ஒரு உற்ற நண்பன் இருந்தான் அவன் பெயர் அனிவா
அனிவாவுக்கு வாசிப்பது ரொம்பவுமே இஷ்டமான ஒன்று, எல்லாவற்றையும் தேடித்தேடி வாசிப்பான், நல்ல ரசனையும் இருந்தது, இலக்கிய ஆளுமைகள் மீது நல்ல ஈர்ப்பும் இருந்தது, கடிதத் தொடர்புகளையும் பேணிவந்தான், கடிதம் எழுத வந்த அனிவாவுக்குக் கதை எழுத வரவில்லை, ஆனாலும் அஹமதுவின் கதைகளுக்கு அனிவாதான் முதல் வாசகன், அஹமது ஒரு கதை எழுதிவிட்டால் அதை உடனே அனிவாவிடம் கொடுத்து
'மச்சான் இதக் கொஞ்சம் பாரு' என்பான்
அனிவாவுக்குப் பெரு மனது, நண்பனின் கதையை நன்றாகப் படித்து நல்ல கருத்துக்கள் நான்கைச் சொல்வான், அதன் பின்னர் திருப்தியுடன் அஹமது அதைப் பத்திரிகைக்கு அனுப்பி வைப்பார், இப்படியே எழுதி எழுதி அனிவாவிடம் கொடுத்த மூலப் பிரதிகள் ஏறாளம், அஹமது சிறுகதைகள் மட்டுமில்லாது குறுநாவல், நாவல் என்று பலதையும் எழுதிக் கொண்டே போக அவரது எழுத்துலகமும் விரிந்து கொண்டே சென்றது, 

அனிவாவுக்கு அஹமதைப் போலக் கதை எழுதிப் பெயர் வாங்க ஆசை வந்தது, அனிவா இரவுபகலாகக் கதை எழுதினான், இடையிடையே கதைகளையெல்லாம் கடிந்து கொண்டான், 
'இந்தக் கதை மசிறு வாசிக்க நல்லாத்தான் இரிக்கி எழுதத்தான் வருகுதில்லியே' 
ஆனாலும் அனிவா முயற்சியைக் கைவிடவில்லை, இதற்கிடையே அஹமதுக்குப் பிரச்சினைகள் ஏராளமாகின, குடும்பத்தினுள்ளும் பிரச்சினை, சமூகக்  களத்தில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய அரச அதிகாரியான அவருக்கு ஆயுத தாரிகளாலும் பிரச்சினை, இந்த இடைப்பட்ட காலத்தில் அனிவாவுடன் முன்னைய காலம் மாதிரி ஒட்டுறவாட அஹமதுக்கு அவகாசம் கிடைக்கவில்லை, ஆனாலும் அவ்வளவு பிரச்சினைக்குள்ளும் அஹமது எழுதுவதை நிறுத்தவேயில்லை, 
இப்படியிருக்க ஒரு நாள் அந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு 
அஹமது ஆடிப் போனார்
அப்படி என்னதான் நடந்தது?
அஹமது எழுதிய கதையொன்று அனிவாவின் பெயரில் சிறிய சிறிய திருத்தங்களுடன் பத்திரிகையில் பிரசுரமாகி இருந்தது, நட்புக்குள் விரிசல் வந்தது, அஹமது தனது நாற்குறிப்பேட்டில் இப்படி எழுதினார்
'எனது நண்பனை நம்பினேன், ஆனால் அவன்...?
நான் பெற்றெடுத்த குழந்தைக்கு தனது இனிஷ்ஷியலை வைத்துவிட்டான்'
அதன் பின்னர்தான் அஹமது வாய்விட்டுச் சொன்னார் 
'ச்சே நான் நம்பவேயில்ல அனிவா இப்பிடி ஹராங்குட்டி வேல பாப்பான் எண்டு'
அதன் பிறகு அஹமதுவுக்கு அனிவாவிடம் கொடுத்த சிறுகதைகளின் மூலப்பிரதிகள் திரும்பக் கிடைக்கவேயில்லை, ஆயினும் அனிவாவின் பெயரில் நிறையக் கதைகள் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின, 
நட்புக்குள் வந்த விரிசலின் பின்னர் அஹமது எழுதும் கதைகள் நாவல் பிரதிகள் குறுநாவல் பிரதிகள் என்று அனைத்தையும் மிகவும் கவனமாகப் பாதுக்கத் தொடங்கினார், அனிவாவின் வாசிப்பாளுமை அவனையும் ஒரு இலக்கியவாதியாக மற்றவர்களை எண்ணத் தூண்டியது, அதனால் அனிவா தன்னை நிலைப்படுத்திக் கொள்ள நினைத்தான் இலக்கிய ஆளுமைகளுடன் கடிதப்பறிமாற்றங்களைச் செய்தான் அவற்றைப் பலரிடமும் காட்டிக் காட்டி மகிழ்ந்தான், பெரும் பெரும் இலக்கிய ஆளுமைகளைப் பற்றிப் பேசிவிட்டுத் தன்னையும் இடையில் சொருகிக் கொள்வான், அப்படியே கட்டமைக்கும் பணி தொடர்ந்து கொண்டிருக்க அனிவாவுக்கு தானும் ஒரு புத்தகம் வெளியிட வேண்டு மென்று ஆசை வந்தது, 
அஹமதுவின் கதைகளில் நன்கு பரிச்சயமாகியிருந்த அனிவா அதைப்போலவே எழுதத் தொடங்கினான் 
ஓரிரண்டு கதைகள் கைகூடின, 
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்ற அரசியற் கட்சிப் பிரிவினைகள் மேலோங்கியிருந்த காலத்தில் அது இலக்கியப் பரப்பிலும் பாதிப்பை உண்டு பன்னி முகாம் அமைக்கத் தூண்டிக் கொண்டிருந்தது, எஸ்.பொ மற்றும் சிவத்தம்பி பிரச்சினைகளும் அதற்குரம் சேர்க்க அனிவா நட்சத்திரமாகத் தன்னைக் கட்டமைப்பதில் மட்டும் குறியாக இருந்தான், பிரதேசத்தில் நடக்கின்ற எல்லா இலக்கியக் கூட்டங்களில் அவனும் பங்காளியானான்,  
விசயம் தெரியாத பலர் அனிவாவிடம் கதை சொன்னார்கள் நல்லதாய்த் தெரிந்தவைகளை அனிவா தன் பெயரில் எழுதிப் பிரசுரத்துககு அனுப்பினான், அனிவா படிப்படியாக வளர்ச்சி பெற்றுயர்ந்தான்,
'சால்வை' அனிவாவின் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததும் திரைப்படப் பாணியில் அனிவா தன் பெயருக்கு முன்னால் சால்வையைச் சேர்த்துக் கொண்டான், அதன்பின்னர் சால்வைப் புகழ் அனிவா எனத் தன்னைப் பிரகடனப் படுத்தினான், சின்னஞ் சிறு பிரசுரமாயினும் அதை வாங்கிப்பத்திரப்படுத்தும் அவனது இயல்பு புகழ் அனிவா தன்னை பெரும் இலக்கிய ஜாம்பவானாகப் பிரகடனப்படுத்தினான், கடிதங்களினூடாகப் பரஸ்பர முதுகு சொரியும் செய்திகளுடன் சால்வை புகழ் அனிவாவின் பெயரும் பின்னினைக்கப்பட்ட கடிதங்கள் தேசத்தின் எல்லைகள் கடந்தும் பயணிக்கத் தொடங்கின, 
அஹமதுவுக்குப் பிரச்சினைகள் தலைக்கு மேலாய்ப் போக குடும்பம் களைந்தது, மனைவி வேறொரு துணையைத் தேடிக் கொண்டு மாயமானாள், அஹமது அதையும் இலக்கியமாக்கினார், கண்ணிவெடித் தாக்குதலில் அவர் மரணித்துப் போகும் வரையும் நிம்மதியிழந்து தவித்தார், நண்பனின் துரோகம், மனைவியின் துரோகம் இப்படி எல்லாமும் எப்போதோ அவரைக் கொன்று போட்டிருந்தன, அந்த ஆத்மா மரணித்துப் போனதுடன் சால்வை புகழ் அனிவாவும் பெரிதாக எதையுமே எழுதுவதில்லை, சில வேளை பிந்திய காலத்தில் மூலப்பிரதிகளை அஹமது அனிவாவின் வாசிப்புக்காகக் கொடுத்திருந்தால் தொடர்ந்தும் அனிவா எழுதியிருகக் கூடும், அனிவாவின் எழுத்துலகம் அமைதியானாலும் சால்வையின் புகழைப் பரப்புவதில் அவன் கொஞ்சம் கூடத் தொய்வடையவில்லை,

பின்னொரு நாள்
சால்வைப் புகழ் அனிவாவை பெரும் இலக்கிய ஆளுமையாக மதித்த புதிய தலைமுறை இளைஞர்கள், அவரைப் பேட்டி காணச் சென்றார்கள், அவரின் வாசிப்பாளுமையும், தேடலும் வாதமும் பேச்சும் கூட கவர்ச்சிகரமானதாக இருந்தன, 
இளைஞர்கள்: உங்களின் இலக்கியப் பிரவேசம் பற்றிச் சொல்லுங்கள்
சால்வைப் புகழ் அனிபா : அது ஒரு விபத்து, நல்ல படைப்புக்களைத் தமிழ் இலக்கிய உலகுக்குத் தரவேண்டும் என்பதற்காகத்தான் அந்த விபத்து நிகழ்ந்தது, எனது கதைகள் புதிய மரபைத் தோற்றுவித்தன, எனது கதைகள் தமிழ்ச் சிறுகதை உலகின் பொக்கிசங்கள், ஒரு தனித்துவ அடையாளத்தை நிறுவின, எனது கதைகள் அப்படித்தான்
(பேட்டிகாணச் சென்றவர்கள் முகத்தை முகத்தைப் பார்த்தனர்)
இளைஞர்கள் :ஈழத்து இலக்கியப் பரப்பில் தொன்னூறுகளுக்குப் பின்னர் நல்ல காத்திரமான நாவல் ஒன்றும் வெளி வரவில்லையே ஏன்?
சால்வைப் புகழ் அனிபா : ஹா..ஹா.. அதுவா! அது இந்த அனிபா எழுதல்லடா, அதான் வரல்ல.
இளைஞர்கள் விக்கித்துப் போனார்கள் அதற்கு மேல் அவர்களால் நேர்காணல் செய்ய முடியவில்லை, அறுவைக்குக் கொண்டு போன கடாய் கழுத்தில் கத்தி பட கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடுவதைப் போல சென்று மறைந்தார்கள்,

இன்னொரு நாள்
அஹமது மரணித்துப் பத்தாண்டுகளின் பின்னர், அஹமதுவின் கதைகளைத் தேடும் பணியில் ஒரு சேகு ஈடுபட்டார், அவருக்கு  அஹமதுவின் எழுத்துக்கள் மீது அவ்வளவு விருப்பு, ஒருவாறாக இரண்டு குறு நாவல்களையும் பல சிறுகதைகளையும் சில குறிப்புக்களையும் கண்டெடுத்து அஹமதுவின் பெயரிலேயே தனது சொந்த செலவில் இரண்டு நூல்களாக வெளியிட்டார், அவ்வளவு பெரிய மனது சேகுக்கு, நல்ல வேலை அக்கதைகள் அனிவாவுக்குக் கிடைக்கவில்லை, கிடைத்திருந்தால் அனிவா தனது பெயரில் அதற்கு முக்காடு போட்டு உயிர்ப்பைத் தேடி  வேரைப் பலப்படுத்தி மீண்டும் தஸ்பி மணி உருட்டி இருப்பார், அஹமதுவின் உண்மையான உழைப்புக்கு இறைவன் அளித்த பரிசு அது, அனிவாவுக்கு அதைப் பார்த்த போதேனும் வெட்கம் வந்திருக்க வேண்டும், மனசாட்சி குத்தியிருக்க வேண்டும்...

மற்றொரு நாள்
சால்வை புகழ் அனிபா தலைநகரத்து நடைபாதையில் சென்று கொண்டிருந்தார், எதிர்த்தாற் போல வந்த மற்றுமொரு இலக்கியவாதியைக் கண்டு விட்டார், 
'ஆ எப்படி சுகமா?'
'அனிவா என்ன இந்தப் பக்கம்?  நான் நல்ல சுகம், மனைவிக்குத்தான் கொஞ்சம் சுகமில்ல, அதான் அவசரமா போய்க் கொண்டிருக்கிறன், பின்ன நீங்கள் எப்படி? சுகமே!'
'இஞ்ச ஒரு விழாவுக்கு வந்தன்'
'அப்படியா நல்லது நல்லது, பின்ன ஒரு நாளைக்கி சந்திப்பமே என்ன' 
'அதுக்கு முதல் லசரா எனக்கு கடிதம் போட்டிருந்தார்,  வாசிச்சிப் பாருங்களன்' அவர் கடிதத்தைக் கொடுத்தார்
'.................'
'இது சு.ரா எனக்கு எழுதியது'
'.................'
அவர்காட்டிய கடிதங்களை அலுப்போடு பார்த்துவிட்டும் அவர் சொன்ன கதைகளை வெறுப்போடு கேட்டுவிட்டும், கழன்று கொள்ள வெகு நேரமாகியது, அனிவாவிடமிருந்து அவர் வெருண்டோடினார்.

நேற்று
அனிவாவுக்கொரு ஆசை, ஒரு வீதிக்காவது இந்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளனின் பெயரை வைப்பதற்கு யாருமே பரிந்துரை செய்கிறார்களில்லையே என்பதுதான், இருதயமும் பலவீனப் பட்டுப் போய்க் கொண்டிருக்கையில், ஒரு வீதிப் பெயர்ப்பலகையிலேனும் தனது பெயரைக் கண்குளிரப் பார்த்துவிட்டு மரணிக்கலாம் என்றால் அது கடைசி வரையும் கைகூடாது போல விளங்கியது, அதனால்தான் மனம்விட்டே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி விட்டார், உலகப் புகழ் பெற்ற எழுத்தாளன் என்று தன்னைத்தானே பிரகடனமும் செய்து கொண்டார், 
அவ்வளவு புகழ் பெற்ற தன்னை இப்போதெல்லாம் யாருமே இலக்கியக் கூட்டங்களுக்குப் பேசுவதற்காக அழைப்பதில்லை என்ற ஆதங்கமும் அவருக்குள் ஈறலாக அரித்துக் கொண்டிருந்தது, தனது மேன்மையும் கீர்த்தியும் பேசப்படுவதில்லையே என்ற வெஞ்சமும் கூட இருந்தது, தான் அஹமதுவின் மரணத்திற்குப் பின்னர் எழுதாவிட்டாலும், இலக்கியத்தில் யாருக்கும் தெரியாத கொள்ளிமலை ரகசியமெல்லாம் தனக்குத் தெரியும் என்பதைப் பிரகடனப்படுத்தும் வண்ணம் நவீன உலகின் முகநூலையும் வலைத்தளத்தையும் பயன்படுத்திலாம் என்று முடிவும் எடுத்துக் கொண்டார், அதிலேனும் அதிக செலவில்லாது சுயபுராணம் பாடலாம் என்பது அவரது குட்டி ஆசை, கொஞ்சம் அவசரப்படாது விட்டிருந்தால் இன்று ஈழத்தின் தவிர்க்க முடியாத நாவலாசியராகவும் பல சிறுகதைத் தொகுதிகளைப் போட்ட கதைஞ்ஞராகவும் கூட மாறியிருக்கலாம் என்று அவ்வப்போது யோசிப்பதும் உண்டு, அதுவே அவரது இதயத்தில் அவ்வப்போது ஓங்கிக் குத்திப் பலவீனப்படுத்தியது,

இன்று
அனிவா அணிந்து கொண்ட சால்வை அஹமதுவுக்குரியது, எப்போதேனும் அனிவா அதை அஹமதுவின் கபுறுஸ்தானத்தில் போர்த்தக் கூடும் என்ற எதிர்பார்ப்புகள் எங்கும் உலாவிக் கொண்டிருக்க, அனிவா  தனது காய்கறித் தோட்டத்தை வெறித்துப் பார்த்தார்.

நாளை
அனிவா? சால்வை? புகழ்?

Saturday, August 31, 2013

கீழக்கரை ஜூனைன் என்ற ஓட்டமாவடி அறபாத்.

இப்போது பேஷ்புக் களவானிகள் அதிகரித்து விட்டார்கள். எங்கோ தொலைவில், யாரும் காணாத இடத்தில் இருந்து, தனக்குப் பிடிக்காதவர்களுக்கு வசையால் வாழ்த்துப்பாட இந்தக்களவானிகள் போலி ஐடிக்களை உருவாக்கி அதில் குய்யோ முய்யோ என்று குதியாட்டம் போடுவார்கள். அவர்களை யாரும் கண்டுபிடித்துவிட முடியாது என்ற ஒரே தைரியம்தான் அவர்களின் பலம். கல்குடாத் தொகுதியின் மாவடிச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அறபாத் மௌலவி. ஓட்மாவடி அறபாத் என்ற பெயரில் கவிதைகள் கட்டுரைகள் கதைகள் என்று எழுதி அதன் மூலம் பிரசித்தம் பெற்றவர். அவருடைய எழுத்துக்களுக்கு மதிப்பளிக்கும்வகையில் சில விருதுகளும் கிடைக்கப்பெற்றமை மிக முக்கியமானது. அன்மையில் மோசடி செய்து ஒரு தொகுதிக்கு சாகித்திய விருதும் பெற்றுக்  கொண்டார்;. (அவருடைய நற்பெயருக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அந்தத்தகவலை இங்கு விரிவாக எழுதவில்லை. ஆனால் இதை அறபாத் எங்காவது உத்தியோகபூர்வமாக மறுத்தால் ஆதாரத்துடன் விளக்கமளிக்க முடியும்.) இப்பேர்ப்பட்ட பிரபல்யமிக்க எழுத்தாளர் தனக்கு வேண்டாதவர்களைப் போட்டுத்தாக்கவும் சிலரைக் காக்காய்பிடிக்கவும் என தனக்கென்று ஒரு போலி பேஷ்புக் பக்கத்தைத் தொடங்கினார்.  அதன் பெயர் கீழைக்கரை ஜூனைன். அதன் முகப்புப் பக்கம்தான் இது
14 ஏப்ரல் 2011  ல் தான் இது தொடங்கப்பட்டது. இப்படித் தொடங்கப்பட்ட  இப்பக்கத்தில் இருந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் தனது உண்மையான  பக்கமான அறபாத் ஸஹ்வி என்ற தனது பக்கத்திற்கு தானே ஒரு ப்ரண்ட் ரிக்வெஸ்ட்விடுத்து  2011 ஏப்ரல் 17ம் திகதியில் இருந்து தனது போலிப்பக்கத்திற்கு தானே முதல் நண்பரானார். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை கீழே பார்க்கலாம். அறபாத் எங்களோடு நண்பர் பட்டியலில் இல்லாத காரணத்தினால் எமக்கு அவரை  அட் பிரண்ட் என்றே காட்டுகிறது
இப்படியே தொடங்கிய பக்கத்தை என்ன செய்வதென்று தெரியாது யோசித்துக் கொண்டிருந்தவருக்கு சில ஐடியாக்கள் தோன்றின போலும். அடுத்து கல்குடாத்தொகுதியில் உலகப்புகழ்பெற்ற மாபெரும் எழுத்தாளர் திலகமான எஸ்.எல்.எம்.ஹனிபா என்பரை தனது நண்பராக இணைத்துக் கொள்கிறார். ஹனிபாவும் மறுப்பேதும் இல்லாது போலிப் பக்கத்தில் மகிழ்வுடன் இனைந்து கொள்கிறார். அதன் பின்னர் இந்த கீழக்கரை ஜூனைன் என்ற ஓட்டமாவடி அறபாத் மௌலவி தன்னை யாருமே அடையாளம் கண்டுகொள்ளமாட்டார்கள் என்ற உறுதியான நம்பிக்கையில் கிளுகிளுப்பான சில பக்கங்களை லைக் பன்னி நட்பைப் பேணவிளைகிறார் அதை ஹனிபாவும் அங்கீகரிக்கின்றார்  அதை நீங்களும் பர்க்கவேண்டாமா???
ஒரு பக்கம் மௌலவி  வேசம் மறுபக்கம் காமக் களியாட்டம். இப்படியாக காலத்தைத் தள்ளிக் கொண்டு வந்த இந்த கீழக்கரை ஜூனைன் என்ற ஓட்டமாவடி அறபாத் மௌலவி தனது போலிப்பக்கத்தை சும்மா வைத்திருப்பதில் அர்த்தம் இல்லையே என்பதால் எனது மனைவியின் முகநூல் பக்கத்திற்கு 2012 நவம்பர் 23ம் திகதி ஒரு ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்விடுக்கிறார். அதுபற்றிய படங்களும் அதன்பின்னர் இடம்பெற்ற உரையாடல்களும் கீழே
படம் 01

படம் 02
 படம் 03


இத்தோடு அவரின் தகவல்களைக் கிளிக்கியபோது போலியான தகவல்களே அறிமுகத்திற்காகக் கொடுக்கப்பட்டிருந்தன. 
அத்துடன் கோபம் பொத்துக் கொண்டு வந்தது அவருக்கு. 2011ம் ஆண்டு தொடங்கிய பக்கத்தில் 2013 மார்ச்29ம் திகதி  அவரது முதலாவது பதிவு கீழே உள்ளபடி அமைந்தது.  அதுவும் எனது ஹராங்குட்டி என்ற சிறுகதைத் தொகுதி வெளிவரவிருந்த ஓரிரு நாட்களில். அதில் ஹராங்குட்டி என்ற சிறுகதை சிறுவர்களுடன் தன்னினச் சேர்க்கையில் ஈடுபடும் மௌலவிகளைப் பற்றியது. அறபாத்தும்  ஒரு மௌலவி என்பதால் அந்தக்கதை அவரில் என்ன பாதிப்பை உண்டுபண்ணியதோ தெரியாது. அல்லது நான் எழுதுவது பிடிக்கவில்லையோ தெரியாது. (எனது எழுத்துக்களில் அதிக கோபம் கொண்டவர்கள் அறபாத்தும் ஹனிபாவும்தான் அன்மைக்காலமாக எனது அவதானத்திற் தென்பட்டது)
முகநூல் பக்கம் தொடங்கி எதுவுமே எழுதாது காலத்தைக் கடத்திய இந்தப்புன்னியவானுக்கு நான் அவரது முகநூல் நட்புக்கான வேண்டுகொளை நிராகரித்த ஒரே காரணத்திற்காக கண்ணாபின்னவென்று மிக மோசமான வார்த்தைகளைக்கொண்டு திட்டித்தீர்த்துள்ளார். அதற்காக நான் அதையெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை. இதுவரையும் இவர் பதிவிட்ட அனைத்தையும் நான்  கிளிக் செய்துவைத்துள்ளேன் திட்டல்களையும் குமுறல்களையும் அதில் பார்க்கலாம்.மாதிரிக்காக சில

பலரையும் தன் இஷ்டத்திற்கு பிரித்துமேய்ந்து ஏப்பம்விட்ட மௌலவி ஜீ அத்தோடு நின்றிடாது இன்னும் சிலரையும் முதுகு சொரியும் வண்ணம் எழுதினார் மற்றவர்கள் எழுதியதை தனது பக்கத்தில் செயார் பண்ணினார். பெரும்பாலும் ஜூனைன் என்ற பேர்வழியின் தில்லுமுள்ளுகளை அறியவில்லையென்று நினைக்கிறேன்.  மேமன்கவி, ஜவாத்மரிக்கார் சோளைக்கிளி, பேராசிரியர் நுஃமான் எனப் பலரைப்பற்றியும் பதிவுகள்   



அதன்பின்னர் நட்புப்பட்டியலை ஓரளவு விஸ்தரித்துக்கொண்ட இந்த கீழக்கரை ஜூனைன் என்ற ஓட்டமாவடி அறபாத் மௌலவியின் நட்புப் பட்டியல் தொடர்பில் அன்மையில் கிளிக்கிய படம் இது


  


இந்த கீழக்கரை ஜூனைன் என்ற பக்கத்தை முன்னிறுத்தி இன்னும் கொஞ்சம் தேடியபோது மேலும் சில ஆதாரங்கள் சிக்கின.
2011ம் ஆண்டு கல்குடாப் பகுதியில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கால் உருவான ஆற்றங்கரையோர நிலப்பகுதி எமது பிர தேசத்தின் ஓவியர்களுள் ஒருவரும் மற்றும் புகைப்படக்கலைஞருமான ரியோ ஸ்ரூடியோ உரிமையாளருமான மஃரூப் உரிமை கொண்டாடியபோது பெருங்குழப்பங்கள் ஏற்பட்டன. சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது ஒரு இணையதளம் இப்படியொருபடத்தினையும் ஆக்கத்தினையும் பிரசுரித்திருந்தது. 

அதற்காக மஃரூப் என்ற தனிநபர் குறித்து ஜூனைன் என்றபெயரில் பாலியல் சேட்டையும் ஆற்றங்கரை அபகரிப்பாளரும் என்று இடப்பட்ட பின்னூட்டம் மிகக் கேவலமாக மஃரூப் அவர்களை பல்வேறு பெண்களுடன் தொடர்புபடுத்தி எழுதப்பட்டிருந்தது நாகரீகம் கருதியும் நம்கத்தன்மை கருதியும் அவைகள் இங்கு இணைக்கப்படவில்லை ஆயினும் அவர் இட்டஒரு பின்னூட்டம் மட்டும் கீழே 

அதன் பின்னர்  என்னுடன் மீண்டும் ஒரு பிரச்சிணையை ஏற்படுத்திக் கொள்ளும்பொருட்டு பின்வருமாறு தனது தளத்திலேயே ஒரு பின்னூட்டம்விட்டார் ஆசாமி. நானும் ஒரு பொழுது போக்கிற்காக கொஞ்சம் ஓவராகச் சீண்டிப் பார்த்தேன் அதன் விளைவாக வெளிவந்த அவரது ஆத்திரத்தின் சூடுதான் இது.

தன்னைப்பற்றியும் தனது செயற்பாடு பற்றியும் ஒரே போடாகப் போட்டார் மௌலவி. (ஒரு பேஷ்புக் தளத்தை நானும் மனைவியும் இணைந்து செய்வதே பெரியபாடாக இருக்கும்போது இவர் கருத்து செம காமடியாக இருந்தது. )அதன்பின்னர் கொஞ்சம் ஹொட்டாக இன் பொக்ஸில் ஒரு மெசேஜ் கொடுத்தேன் அதன்பின்னர் அந்தப்பக்கம் இப்படிக் காட்சியளித்தது.
இந்த ஆக்கத்தைப் படித்த பின்னர் மீண்டும் இந்தப் பக்கம் இயங்கத் தொடங்கும் அப்போது உரத்து ஒலிக்கப் போகும் ஒரே குரல் நான் அறபாத் இல்லை நான் அறபாத் இல்லை என்பதுதான். ஆப்போது யாராவது ஒருவன் சொல்லுவான்  'நாங்க நம்பிட்டம்' ok


Sunday, July 28, 2013

03. ஹராங்குட்டி சிறுகதைத் தொகுப்பு: மூன்று பார்வைகள் - பார்வை 03 (முஹ்சின் முஹம்மது)

முஸ்டீன் எழுதிய ஹராங்குட்டி சிறுகதைத்தொகுதி – விமர்சனப்பார்வை

மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டுவரும் ஒரு புத்தகமாக இந்த ஹராங்குட்டி தொகுதி இடம்பெற்றுவிட்டது அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று முஸ்டீன் எழுதியிருப்பது இரண்டு இந்தத் தொகுதியின் தலைப்புஇ மிக மோசமாகக் கருதப்படும் ஹராங்குட்டி என்ற சொல்லாடலை கோபத்தின் உச்ச வெளிப்பாடகத்தான் யாரேனும் பயன்படுத்துவர் அதுவே ஒரு புத்தகத்தின் தலைபபாக மாறியது சர்ச்சைகளைத் தோற்றுவிப்பது ஒன்றும் புதிதல்ல. இந்தத் தொகுதியின் வெளியீடுபற்றியும் வெளியிட்டபின்னர் அந்நிகழ்வு பற்றியும் பல இனையதளங்களும் பத்திரிகைகளும் கனிசமான முக்கியத்துவத்தினை அளித்திருப்பதுதான் சந்தேகத்துடன் இத்தொகுதி குறித்து ஆய்வு செய்யும் அவசியத்தைத் தோற்றுவித்தது. அரசாங்கத்தின் உத்தியோக பூர்வச் செய்தித்தளமான நெறள.டம கூட இந்நூலின் வெளியீடு குறித்து அறிவிப்புச் செய்திருந்தமையும் இந்நூலாசியருக்கு உயர்மட்டத்தில் இருக்கும் செல்வாக்கைப் பிரதிபலித்தது. அது கூட கொஞ்சம் கூர்ந்து கவனிக்க செய்ததில் ஆச்சரியமில்லைதான் ஏனெனில் அரச செய்திச்சேவை இதுவரைக்கும் எந்த நூல் வெளியீட்டிற்கும் முக்கியத்துவமளித்ததில்லை. ளழயெமயச.உழஅ இல் சில சகோதரர்கள் வெளிப்படையாக சந்தேகத்தை வெளிப்படுத்தியதன் விளைவாகவும் அம்பாறை மாவட்டத்தில் நடக்கவிருக்கும் இந்நூலின் அறிமுக விழாவினை ஜம்இய்யதுல் உலமா தடை செய்வாற்கான செயற்பாடுகள் பற்றிய செய்திகளும் தான் இந்நூலைத் தேடிப் பெற்று வாசித்துக் விமர்சிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த அடிப்படையில் முஸ்டீன் என்பவரைப் பற்றியும் அவரது ஹராங்குட்டி பற்றியும் பார்ப்பது அவசியமானது. இத்தொகுதியில் ஸாமிலா ஷரீப் என்பவர் முஸ்டீன் பற்றி நீண்ட பதிவைச் செய்திருக்கிறார் அதன் சுருக்கம்
இந்த முஸ்டீனுக்கு ஒன்றும் தெரியாது! அதற்காக ஒன்றையும் தெரிந்து கொள்ளாமல் விட முடியுமா? 
இந்த முஸ்டீனை எதிர்கொள்வது என்பது பலருக்கு மிகவும் கடினமான காரியங்களிலொன்று
1983 ஏப்ரல் 22ம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டஇ காவத்தமுனை எனும் கிராமத்தில் பிறந்தார்.
1985 ஏப்ரல் 29ம் திகதி இவரின் தந்;தை விடுதலைப் போராளிக் குழுவொன்றினால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். 
காவத்தமுனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலும் (இப்போதைய அல்அமீன் வித்தியாலயம்) கம்பஹா-யட்டிஹேன முஸ்லிம் வித்தியாலயத்திலும் ஆரம்பக்கல்விஇ பின்னர்; மள்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிஇ பின்னர் யத்தாமா சர்வதேசப் பாடசாலை. இங்குதான் க.பொ.த (சா.தரம்) வரைக் கற்றார். 
1992இல் இருந்து 2004 வரை மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் அனுசரனையுடனேயே கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். 
2000ஆம் ஆண்டு பேருவலை ஜாமிய்யா நளீமிய்யா வில் சேர்ந்த இவர் 2002ல் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தயாரான காலப்பகுதியில் தனது தந்தையின் ஞாபகார்த்தமாக ளுஐஆ-Pசழனரஉவழைn எனும் நிறுவனத்தைத் ஏப்ரல் 22ம் திகதி தோற்றுவித்தார்.
2004ல் அக்கினிச் சுவாசம் எனும் பாடல் வீடியோ அல்பத்தை தயாரித்து வெளியிட்டார்.அத்துடன் அதில் ஆறு பாடல்களையும் எழுதியிருந்தார்இ இக்காலப் பகுதியில் ஆயுத இயக்கங்களுக்கெதிரான புரட்சிகரமான செயற்பாட்டாளராக இணங்காணப்பட்ட இவர் ஜாமிய்யா நளீமிய்யா நிருவாகத்துடன் முரண்பட்டதனால் இவரின் கற்றலுக்கு நிருவாகம் தடை விதிக்க போர்க்கொடி தூக்கினார்இ சட்டரீதியான உச்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரான வேளை ஜாமிய்யா நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.சி. அகார் முஹம்மத் தலைமையிலான குழுவினரின் சமரசமான பேச்சுவார்தைக்குப் பின்னர் நளீமிய்யாவுக்கெதிரான சட்டநடவடிக்கைகளைக் கைவிட்டதுடன்இ 2004களிலேயே அங்கிருந்து வெளியேறினார். 
2004ல் புகலிடம் எனும் குறும்படத்தைத் தயாரித்து வெளியிட்டதோடு அதில் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்இ 
2004 இறுதிகளில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலை காரணமாக குவைத்துக்குப் புலம் பெயர்ந்தார்.
குவைத்தில் ஐ.பி.ஸி அமைப்பின் பிரைடே போரத்தில் கணணிக் கற்கையை நிறைவு செய்தார்இ அங்கேயே இக்ரஃ இஸ்லாமியச் சங்கத்தின் அனுசரணையில் அஷ்பால் எனும் சிறுவர் கார்ட்டூன் சித்திரத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளிட்டார். அத்துடன் அமுதம் எனும் வீசீடி சஞ்சிகையையும் தாயாரித்து வெளியிட்டார்இ 
நாடு திரும்பி 2005 இறுதியில் ஒரு மாதிரி எனும் குறும்படத்தைத் தயாரித்தார்இ 
ஏபியெம்.இத்ரீஸ் தயாரித்த புரிதல் எனும் குறும்படத்தையும் 2006 களில் செய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த தயாரிப்பகம் ஊடாக வெளியிடட்டார். அதே ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிக் கலைமானிப் பட்டப்படிப்பையும் பூர்த்திசெய்தார். உளவியலில் முதுகலைப் பட்டப்படிப்பு இன்னும் நிறைவு செய்யப்படவில்லை.
பின்னர் வடக்கு-கிழக்கு மாகாண சபைக்காக எச்.ஐ.விஃஎய்ட்ஸ் விழிப்புணர்வுப் படங்களான உதிரும் மொட்டுகள்இ தடம் மாறியது ஆகிய இரண்டு குறும்படங்களை மட்டக்களப்பு கலாபம் கலை மன்றம்இ வாழைச்சேனை இந்துக்கல்லூரி மற்றும் வாழைச்சேனை சமாதானப் பேரவை ஆகியவற்றின் ஒத்துழைப்போடு தயாரித்தளித்தார்இ இலங்கை முஸ்லிம்களுக்கிழைக்கப்பட்ட இன ரீதியான வன்ம அழிப்புக்களைப் பல்வேறு ஆவணப்படங்களாக இயக்கியதுடன் தயாரித்தளித்தார்இ 2006 ஆகஸ்ட் மூதூர் மக்கள் வெளியேற்றப்பட்டதை மையப்படுத்திய ஆவணப் படத்தை இயக்கியதுடன் அஷ்ஷெய்ஹ் துவான் ஆரிபீன் மற்றும் அஷ்ஷெய்ஹ் முஹம்மட் ஸஜீத் ஆகியோருடன் இணைந்து தயாரித்தார்இ
2007களில் ரி.எம்.வி.பி இயக்கத்துக்காக உறங்காத உண்மைகள் எனும் ஆவணப்படத்தை இயக்கினார்இ பலஸ்தீன விடுதலைப் போர் தொடர்பான விவரணப்படத்தினை தமிழ் மற்றும் சிங்கள மொழியிலும் தயாரித்தளித்தார்இ அத்துடன் ஹைகல் சொலமன் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஷா பற்றிய தனது உரையைக் காட்சிப்படுத்தி வெளியிட்டார்இ மேலும் காஷ்மீர்இ செச்சனியா பிரச்சினைகள் பற்றிய விவரணப்படங்களையும் தமிழில் மொழிபெயர்த்துத் தயாரித்தளித்தார்இ செய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த பதிப்பகம் ஊடாக ஏ.எம்.ஸமீமின் அலங்கார வேலைக்கு அற்புத வடிவங்கள் எனும் நூலைப் பதிப்பித்தார்இ
முஸ்லிம் சமுதாயத்தின் நலன்களைக் கருத்திற்கொண்டு 2008களில் ரி.எம்.வி.பி யின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையினை வடிவமைப்பதில் எக்ஸில் ஆசிரியர் எம்.ஆர்.ஸ்ராலினுடன் இணைந்து அதிக சிரத்தை எடுத்துக் கொண்டதுடன்இ முஸ்லிம்கள் சார்பாக அதில் கையொப்பமுமிட்டார்இ இதே காலப்பிரிவில் தீ நிழல் திரைப்படத்தின் தயாரிப்புப்பணிகளைத் தொடங்கி 2009களில் நிறைவு செய்து அதை வெளியிட்டார்இ அதில் இரண்டு பாடல்களையும் எழுதினார்இ அத்துடன் தீ நிழல் திரைப்படத்துக்கான விஷேட இதழையும் பதிப்பித்தார்இ
ஜப்பான் பில்ம்கிறேவ் இன்டர்நேஷனல்-டிஜிப்ளேன் ஆகியவற்றின் புலமைப் பரிசிலுடன் 2009களில் சினமா தொடர்பான முழுமையான பயிற்சியினை நிறைவு செய்த இவர்இ அக்காலப் பகுதியில் நான்கு குறும்படங்களையும் இயக்கினார்இ அத்துடன் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கலாச்சாரப் பிரிவின் வேண்டுகோளுக்கமைய ஐசயnயைn உiநெஅய வழறயசன pநசகநஉவழைn எனும் தொனிப் பொருளில் ஈரானியத் திரைப்படங்கள் சம்பந்தமான ஒரு காட்சித் தொகுப்பையும் செய்தார் மேலும் ரூஹூல்லாஹ் எனும் இமாம் கொமெய்னியின் வாழ்க்கைச் சரிதத்தினைத் தமிழில் மொழி பெயர்த்து ஒரு மணித்தியால விவரணச் சித்திரமாகத் தயாரித்து வெளியிட்டார்.
2010ல் சென்னை தேவநேயப் பாவனர் அரங்கில் கீற்று இணையதளத்தின் ஆறாவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான ஒரு உரையையும் ஆற்றினார்இ அத்துடன் அவரது மிக நீண்ட நேர்காணலையும் கீற்று பதிவு செய்ததுஇ தமிழ்- முஸ்லிம் மக்களின் இணக்கப்பாடான சூழல் உருவாக்கத்திற்குப் புதிய வழிகளைத் திறந்துவிடும் அழைப்பாக அந்நேர்காணல் அமைந்திருந்தது. அத்துடன் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான 1990 மனிதப் பேரவலம் எனும் விஷேட இதழைப் பதிப்பித்ததுடன் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பான ஆய்வையும் செய்து முடித்தார். அத்துடன் இது தொடர்பான ஆவணப்படத்தையும் இயக்கினார். எப்.பீ.ஏ ஸ்ரீலங்கா ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற குறும்படப் பயிற்சிப்பட்டறையில் பிரதான பயிற்றுவிப்பாளராகவும்இ விரிவுரையாளராகவும் உளவளத்துணையாளராகவும் செயற்பட்டார்.
2011 ஏப்ரல் 29ல் திருமணம் செய்தார்இ தமிழ் தேசியவாதிகளுடன் சீரான உறவை வைத்திருந்த இவர் ஜூலை மாதம் இந்திய காயல்பட்டணத்தில் நடந்த சர்வதேச இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் பேராளராக் கலந்து கொண்டுவிட்டு நாடு திரும்பிய போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்திற்காகக் களப்பணி செய்தார் என்ற அடிப்படையில் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுக் கொலைக் குற்றச்சாட்டுடன் சிறையிலடைக்கப்பட்டார்இ 2012 மார்ச் மாதம் சிறையிலிருந்து விடுதலையான இவர் மே மாதம் 17ம் திகதி மௌனப் போரும் புன்னகை ஆயுதமும் எனும் தனது முதலாவது கவிதை நூலை வெளியிட்டார்இ இலங்கையின் சிவில் யுத்தம் நிறைவுபெற்று மூன்று வருட நிறைவையொட்டி வெளியிடப்பட்ட அத்தொகுதியில் உள்ள சில கவிதைகளுக்குக் காட்சி வடிவமும் கொடுத்தார். ஜூன் 17ல் ஷாமிலா ஷெரீபின் நிலவின் கீறல்கள் எனும் கவிதை நூலைப் பதிப்பித்ததுடன் அதன் ஒலிப் புத்தகத்தையும் (யுரனழை டீழழம) தயாரித்தளித்தார்இ 2012 ஜூலையில் சருகுகள் எனும் குறும்படத்தை இயக்கினார் அத்துடன் ஆகஸ்டில் நேத்ரா தொலைக்காட்சியின் ஈத் பெருநாள் நிகழ்வுக்காக ஒரு பாடலையும் எழுதினார்இ ஹராங்குட்டி இது இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி.
இவ்வளவுதான் இவர்பற்றிய செய்திகள்
முஸ்டீன் சிறையில் இருந்தபோது எழுதிய கதைகள்தான் இப்போது நூலாக்கப்பட்டிருக்கின்றன
ஹராங்குட்டி - இத்தொகுதியில் மொத்தம் பன்னிரெண்டு கதைகள் நாடறிந்த எழுத்தாளர் அஸ்ரப் ஸிஹாப்தீன் உட்பட எழுத்தாளர் சுதாராஜ் பேராசிரியர் துரை மனோகரன் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் சட்டத்தரணி ஜீ ராஜகுலேந்திரா சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் முஸ்ஏனுடைய எழுத்துக்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள் நாடறிந்த ஆளுமைகள் இந்தக் குறிப்புகளில் முஜ்டீனைப் பாராட்டி எழுதியிருந்த பின்னனியோடு கதைகளைப் படித்தேன்
முதலாவதுகதையும் இறுதிக் கதையும் பொலிஸ் தடுப்புக்காவல் பற்றியும் தடுப்பில் இருக்கும் விசாரனைக் கைதி பற்றியும் வதைகள் பற்றியும் பேசுகின்றன பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் அனுபவித்ததைதான் இக்கதைகளில் பதிவு செய்துள்ளார். குப்பைவாளி எனும் கதை பொலிசாருக்கு nருப்பால் அடிக்கிறது மனசாட்சிகொன்று கதை இலங்கையின் புலனாய்வுத் துறைக்கு செருப்பால் அடிக்கிறது. 
ஏனைய பத்துக் கதைகளும் கொல்லப்பட்ட மனிதர்கள் பற்றிப் பேசுகின்றன. அவை பற்றி விரிவாகப் பார்க்க வேண்டும்
காட்டிக் கொடுத்தவன் : இந்திய ராணுவம் இலங்கைக்கு வந்த போது அவர்களாலும் விடுதலைப்புலிகளாலும் முஸ்லிம் சமுகம் பெற்ற துன்பங்களுக்கு இது மிகச் சிறந்த கதை. புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட கொமெய்னி முஸ்தபா என்ற வாழைச்சேனையைச் சேர்ந்த ஒருவரின் மக்களுக்கான போராட்டத்தை தத்ரூபமாகப் பதிவு செய்கிறது கதை. பாலைநகர் தியாட்டவான் காவத்தமுனை ஓட்டமாவடி வாழைச்சேனை மக்கள் பட்ட துன்பங்களையெல்லாம் இது பேசுகிறது. இது வரை வந்த பதிவுகளில் அதிசிறந்த பதிவு இதுதான் என்பது எனது கருத்து. முஸ்லிம்கள் தமிழரின் போராட்டத்துக்கு எதிரானவர்கள் என்று சில தீவிர தமிழ் இனவாதிகள் கட்டமைத்து வைத்திருக்கும் அம்சங்களையெல்லாம் தகர்த்தெறிகிறது
பேயன்: இது தேசியப் புலனாய்வுப்பிரிவில் இருக்கும் ஒரு புலனாய்வு வீரனின் கதை அவன் பேயனாக இருந்து கொண்டு எப்படியெல்லாம் சாதித்தான் என்றும் வெள்ளைவேனில் கடத்தப்பட்டு இன்னும் அவன் திரும்பி வரவில்லை உன்பதையும் மையப்படுத்தி எழுதப்பட்ட கதை தமிழர்கள் இதுவரை வெள்ளைவேன் தமிழருக்கு மட்டும்தான் பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் முஸ்லிம்களுக்கு அதில் பாதிப்பில்லை என்றும் கூசாமல் எழுதிவருகையில் முஸ்டீன் தைரியமாக இங்கு முஸ்லிம் சமுகத்தின் பாதிப்புக்களைக் கொண்டுவந்திருப்பது பாராட்டுக்குரியது.
கேர்னலின் வாக்கு: புலிகளுக்கு எதிராக தீவிர எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவன்தான் கேர்ணல் லத்தீப் என்பவன் அவனது வாக்குமூலமாகப் பிதுங்கும் கதை மிகவும் அதிர்ச்சிகரமான செய்திகளை அள்ளிக் கொட்டுகிறது. அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் புலிகளுக்கெதிராக ஆயுத நடவடிக்கைகளை எப்படி முன்னெடுத்தார்கள் என்பதும் மிகவும் தெளிவாக இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. இந்தக் கதையில் முஸடீன் முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை முஸ்லிம் ஆயுத தாரிகள் தமிழ் மக்களை எப்படியெல்லாம் கொன்றார்கள் என்பதை நியாயமாகப் பதிவு செய்கிறார். இந்தக்கதைக்காக தமிழ்ர்கள் அவரைத் தூக்கி வைத்துக் கொண்மாடுவார்கள் ஆனால் அதில் ஒரு வில்லங்கம் இருக்கிறது. அதாவது பாகிஸ்தான் ஜிஹாத் என்றால் என்ன என்பதையும் அது எப்படி உருவானது என்பதையும் பிச்சி உதறுகிறார் ஜிஹாத் இயக்கங்கங்கள் பற்றிக் கதையளப்பவர்களுக்கு நல்ல செருப்படி. முஸ்லிம் இளைஞர்கள் ஏன் ஆயுதம் தூக்க வேண்டி வந்தது? அதற்கு யார் காரணம்? பின்னர் அவர்களின் நிலை என்ன? இதற்கெல்லாம் பதில் இந்தக் கதையில் இருக்கிறது.
புஹாரி : இந்தக் கதை நாயகன் விடுதலைப்புலிகளின் பிரதேசப் பொறுப்பாளனாக இருந்த முஸ்லிம். பின்னர் இவன் எதிர் கொண்ட பிரச்சினைகள்இ துப்பாக்கி சுமந்து கொன்டு போட்ட அட்டகாசங்களால் விளைந்த விபரீத விளைவுகள் மற்றும் சமுகம் அவனைக் கழித்து வைத்திருந்தது என்று அவனது மரணம் வரைக் கதை செல்கிறது ஓட்டமாவடி கதைக்களமாக இருக்கிறது. புலிகளில் இருந்த உரு முஸ்லிம் பொருப்பாளர் பற்றிய முதலாவது சிறுகதை இதுதான் என்பது எனது அபிப்பிராயம்
நினையாத ஒன்று : இதன் கதைக்களம் ஏறாவூர் ஆகும். அப்துல் சமது என்ற ஒருவரினை கதை நாயகனாகக் கொண்டு 1990 ஆகஸ்ட் 12 ஏறாவூரில் புலிகளால் மேற்கொள்ளபட்ட படுகொலைக் களத்துடன் ஆரம்பிக்கும் கதை சரியாக 19 வருடங்களின் பின் உத்தியோக பூர்வமாக ஆயுதம் சுமந்தவர்களால் அவர் தொழுகையில் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டதையும் வெள்ளை வேனில் கடத்தப்பட்டதையும் விபரிக்கிறது யுத்தகாலம்இ யுத்த நிறுத்த காலம்இ கருணாவின் பிளவுக்காலம்இ யுத்த முடிந்த காலம் வரை கதை பயணிக்கிறது. அருமையான பதிவுஇ முஸ்லிம்கள் ஏன் புலிகளுக்கு எதிராக இரானுவத்தில் சேர்ந்தார்கள்இ ஏன் ஆயுதம் தூக்கினார்கள் என்பதையெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் விபரித்து சோகத்துடன் முடிகிறது
ஹராங்குட்டி : இந்தக் கதைபற்றி பச்சையாகச் சொல்வதானால் அரபு மத்ரசாக்களில் பொடியன் அடிக்கும் மௌலவிமார்களைப்பற்றிப் பேசுகிறதுஇ தஃவா என்ற பெயரில் பிஸ்னஸ் செய்யும் இஸ்லாமிய இயக்கங்கங்களைப் பற்றிப் பேசுகிறதுஇ என்.ஜி.ஓ களுக்கு ஆட்கள் பிடித்துக் கொடுக்கும் நபர்கள் பற்றிப் பேசுகிறதுஇ தரமில்லாத டம்மி பீசுகளான மௌலவிமார் பற்றிப் பேசுகிறதுஇ ஹோமோ செக்ஸ் எனும் தன்னினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் ஹஜ்இ உம்ரா வழிகாட்டிகளாக இருப்பது பற்றிப் பேசுகிறதுஇ அப்படிப்பட்ட மௌலவி ஒருவரின் தொல்லையால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் மௌலவி மாணவன் பற்றியும் பேசுகிறது பொடியன் கள்வனான அந்த மௌலவி சுட்டுக் கொல்லப்படுவது பற்றிய கதை. முஸ்லிம் சமுதாயத்தின் ஆன்மாவை உலுக்கி எடுக்கும் கதை. தன்னினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றவன் எப்படி மிம்பரில் ஏறி குத்பா செய்ய முடியும்? அவன் எப்படி தொழுகைக்கு இமாமத் செய்ய முடியும்? என்று கெட்ட நடத்தையுள்ள ஆலிம்சாக்களை விளாசித்தள்ளுகிறது. இவ்வளவு காரமாக இதுவரையும் இந்த சமுதாயத்தை யாரும் இப்படி உலுக்கிக் கேள்வி கேட்கவில்லை என்றுதான் எனக்கும் தோன்றுகின்றது. பொடியன் அடிப்பவனை ஹராங்குட்டி என்று அழைப்பதில் தப்பில்லைதானே. முஸ்டீன் உங்களுக்கு நான் எழுந்து மரியாதை செய்வேன்.
முகத்துக்கு முகம் : இந்தக்கதை நாயகன் சித்தீக் காத்தான் குடியைச் சேர்ந்தவன்இ அரசியல் வாதிகளுக்கு அடியாளாக இருந்தவன் ஆயுதம் தூக்கி மக்களைப் பாதுகாக்க களத்தில் குதித்தவன் அவனைக்கொல்லுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகளை அவன் கொல்லப்படுவது வரைக் கொண்டு செல்கிறது. அதில் புலிகளுடன் இணைந்து கஞ்சா வியாபாரம் செய்த முஸ்லிம்கள் பற்றியும் புலனாய்வுக்காரர்கள் பற்றியும் நேரடியாகச் சில செய்திகளயும் மறைமுகமாகப் பல செய்திகளையும் சொல்லும் கதை. சிறந்த கதை
மையத்துப்பெருநாள் : 2002 யுத்த நிறுத்தகாலத்தில் காவத்தமுனையில் சுட்டுக்கொல்லபட்ட ஒரு இராணுவப் புலனாய்வுக்காரனின் கதை. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சக இராணுவப் புலனாய்வு வீரனால் அவன் படுகொலை செய்யப்பட்டான் என்பதையும்இ புலிகளுக்கு ஒத்தாசை நல்கும் சிங்கள இராணுவப் புலனாய்வுக் காரர்களைப் பற்றியும் கவனமாகப் பேசும் கதை. மிகவும் வித்தியாசமான கதை. இப்படிப்பட்ட கதைகள் இதுவரை முஸ்லிம் கதைப்பரப்பில் மட்டுமல்ல ஈழத்துக் கதைப்பரப்பில் கூட வரவில்லை என்று எண்ணுகிறேன்.
மனமாற்றம் : இந்தக் கதை 1985ம் ஆண்டை மையப்படுத்தியது அக்கரைப்பற்று கதைக்களம் ஈரோஸ் இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட ராபிதான் கதைநாயகன். இப்போதைய காலத்து அக்கரைப்பற்றின் நிலைமைகளைத் ஆழமாகவும் அற்புதமாகவும் பேசுகிறது. தமிழ் விடுதலைப்போராட்டத்துக்கு முஸ்லிம்கள் எந்தளவுக்குப் பலம் சேர்த்தார்கள் என்பதையும் முரண்பாடுகள் எப்படி தோற்றம் பெற்றனஇ முஸ்லிம்கள் ஆயுத இயக்கங்களை ஏன் எதிர்த்தார்கள் என்பதையும் ஆழமாகப் பேசுகிறது.ராபியின் மனமாற்றத்தை அடிப்படையாக் கொண்டது.
தோணிக்காரன் : நான் வாசித்து அதிசயித்துப் போன கதைஇ ஒரு முஸ்லிம் மீனவனின் கதைஇ இந்தவருடத்தின் சிறந்த கதைக்கான விருது இதற்குக் கிடைக்க வேண்டும். மிகப் பெரிய கதை முஸ்லிம் ஏழைகளின் வாழ்வில் யுத்தத்தின் தாக்கம் எத்தகையது என்பதை அருமையாகப் பதிவு செய்துள்ளது வாசித்துச் சுவைத்துப் பாருங்கள்
கடைசியாகஇ இந்தத் தொகுப்பு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று ஆவனம்இ சோனக தேசத்தின் அசைக்கமுடியாத சொத்து பொதுபல சேனா போன்று ஆயிரம் அமைப்புக்கள் தோற்றம் பெற்றாலும் விடுதலைப்புலிகள் போன்று எத்தனை இயக்கங்கள் தோற்றம் பெற்றாலும் அனைவரையும் எதிர் கொள்ள முஸ்டீன் போன்ற ஒருவனே போதும் இந்தப் பின்னனியில்தான் தொகுதியில் இறுதியாக உள்ள பின்னிணைப்பு என்ற பதிவை நான் பார்க்கிறேன். 
அமரிக்காவின் கைக்கூலியாகச் செயற்பட்டு தேசத் துரோ வேலைகளில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட பட்டானி ராசிக் என்பவரின் கொலையில் முஸ்டீன் சம்பந்தப்படுத்தப்பட்டிருப்பது ஜீரணிக்க முடியவில்லை. 
காரணம் கதையில் துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு எதிரான போக்கையே முஸ்டீன் கடைப்பிடிக்கிறார். எழுத்தாளர் அஷ்ரப் ஷிஹாப்தீன் 'இத்தொகுதி ஒரு இளைஞனுக்கு நிச்சயம் வழி காட்டும் என்று நம்புகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளது சாலப்பொருத்தம்
முஸ்டீனுக்கு இறைவன் மேலும் தைரியத்தையும் தெம்பையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் என்று மனதாரப்பிரார்த்திக்கிறேன். கற்பனைகளில் புனைவு செய்து காலத் கடத்தும் இலக்கிய வாதிகளுக்குள் மேம்பட்ட தளத்தில் முஸ்டீன் சமூக வாஞ்சையுடன் அமர்ந்து கொள்கிறார். 

(முஹ்சின் முஹம்மது)

02. ஹராங்குட்டி சிறுகதைத் தொகுப்பு மூன்று பார்வைகள் - பார்வை 02 (எம்.சி.ரஸ்மின்)

ஹராங்குட்டி சிறுகதைத் தொகுப்பு: ஒரு சுருக்கமான வாசிப்புக் குறிப்புக்கள்
எம். சி. ரஸ்மின் 

தனது சிறுகதைகளை தொகுத்து முஸ்டீன் அண்மையில் ஹராங்குட்டி எனும் தொகுப்பினை வெளியிட்டிருந்தார். இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்களின் அண்மைக்காலத் தொகுப்புக்களில் இது தனித்துவமான ஒன்று. இது முஸ்டீனின் முதலாவது சிறுகதை தொகுப்பு முயற்சி. மௌனப்போரும் புன்னகை ஆயுதமும் எனும் தன்னுடைய கவிதைத் தொகுப்பினை அடுத்து வெளிவந்துள்ளது. இதில் மொத்தமாக 12 கதைகள் இடம்பெறுகின்றன. இவற்றின் பேசுபொருள் தொடர்பாக எனது அவதானத்தை பதிவு செய்வதாகவே இக்குறிப்பு அமைகின்றது. மாறாகஇ இது விமர்சனமோ அல்லது அறிமுகமோ அல்ல. ஒரு தொகுதி என்ற அடிப்படையில்இ பேசுபொருளாலும் அது பேசப்பட்ட முறையாலும் முக்கியத்துவம் பெறும் தொகுதியாகவே நான் ஹராங்குட்டியைப் பார்க்கின்றேன். 

மற்றுமொரு சிறுகதையாளனின் பிரவேசம் என்பதற்கு அப்பால் இந்தத் தொகுப்புஇ முஸ்லிம்களின் அரசியல்இ பொருளாதார இருப்பினை தனித்துவமான பார்வையுடனும் தர்க்கரீதியான சிந்தனையுடனும் நோக்குவதற்கு ஒருவன் வெளிக்கிளம்பியிருக்கின்றான் என்ற நம்பிக்கையை தருகின்ற தொகுப்பாக நோக்கலாம். சிறுகதையின் அங்கலட்சணங்களை ஒப்புவித்து கதை எழுத முற்படும் ஒருவன் என்றில்லாம்இ ஒரு குறிப்பிட்ட அரசியல் யுகத்தில் ஒரு சமூகம் எவ்வாறு அழுததோஇ எவ்வாறு தவித்ததோஇ எவ்வாறு போராடியதோ மற்றும் எவ்வாறு நசுங்குண்டு போனதோ அதை அப்படியே சித்திரிக்கின்ற ஒரு எழுத்தாளனாக முஸ்டீன் பார்கப்படலாம்.

தான் பார்த்தவற்றையும் பதிவு செய்தவற்றையும் அவ்வாறே கதையாக்கியுள்ளார். இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் இதுவரை வெவ்வேறு தளங்களில் பேசப்பட்ட சிறுபான்மைச் சமூகத்தின் வரலாற்றை யாரும் தரிசிக்காத ஒரு கோணத்தில் பிரதிபலித்துள்ளார் முஸ்டீன். 

சமூகத்தின் விடிவுக்காக போராட நினைக்கும் உண்மையான ஆனால் சமானியத் தலைவர்கள்இ சமூகத்தின் நற்பெயரை முதலீடாக்கிஇ அதில் வாழ்வு நடத்தும் வேறு சிலர்இ ஓர் அரசியல் பொருளாதார மற்றும் சமூகச் சிறையிலிருந்து தடைச் சுவர்களை இடித்துத் தள்ளிவிட்டு சுயாதிபத்தியத்துடன் வெளிப்பட்டு நிற்கத் துடிக்கும் ஒரு சமூகம்இ சமயப் பணியினை ஒரு சம்பிரதாயத்திற்காக மேற்கொள்ளும் மற்றும் சிலர் மற்றும் எனது சமூதத்தின் குரல்வளையோரம் மண்டியிட்டு அது நசிபடும் சத்தத்தைக் கூட நான் ஒலிப்பதிவு செய்வேன் என்று பிடிவாதமாக நிற்கும் ஓர் இளைஞன் போன்றோரைச் சூழவே இத்தொகுப்பு பின்னப்பட்டுள்ளது. 

ஹராங்குட்டி சிறுகதைத் தொகுப்பின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று சமூகத்தின் விடிவின் மீது உண்மையான நாட்டம் கொண்ட அடிநிலை அல்லது சாமானிய தலைவர்களை கதைமாந்தர்களாக முன்னிறுத்துவதாகும். காட்டிக்கொடுத்தவன் (முஸ்தபா கொமைனி)இ பேயன் (ரபாய்)இ கேணலின் வாக்குமூலம் (கேணல் லத்தீப்)இ புஹாரி (புஹாரி)இ முகத்துக்கு முகம் (சித்தீக்) போன்ற கதைகளை இத்தகைய பண்புக்கு உதாரணமாகக் கொள்ளலாம். கல்வியறிவால் குறைந்தாலும்இ சமூகமயமாதலில் முதிர்ச்சியற்றவர்களாக இருந்தாலும்இ சமூக கலாசாரா போக்குகளுடன் சமரசம் செய்துகொள்ளும் இயலுமையில் குறைந்தவர்களாக இருந்தாலும் சமூகத்திற்காக வாழ வேண்டும் என்று கருதுகின்ற புதுமையான தலைவர்களை இந்த நூல் முன்னிறுத்துகின்றது. கதைகளை வாசிக்கின்றபோதுஇ முஸ்லிம் சமூகத்தின் இன்றையத் தலைமைத்துவத்தை சூழ்ந்திருக்கின்ற சுயநலவாத தாகம் மிகவும் தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது. சமூகத்தின் மீதான அக்கறை என்றால் என்னஇ சமூகத்தை நேசிப்பதற்கான அரசியல் என்றால் என்ன என்பதை மறுபடி மறுபடி விசாரிக்கத் தூண்டுவதாக இத்தகைய கதைகள் அமைகின்றன. இது ஹராங்குட்டி தொகுப்பில் தொகுப்புக்கான முக்கிய சிறம்பம்சங்களில் ஒன்று என்பது எனது கணிப்பு. 

சமூகத்தை காப்பாற்ற வேண்டும் என்கின்ற உளப்பூர்வமான பிரக்ஞை இத்தகைய தலைவர்களை ஆற்றல் குன்றாதவர்களாக போராட்ட உத்தி மிக்கவர்களாகஇ மனிதாபிமானத்தின்  நம்பிக்கையுடையவர்களாக காட்டியிருப்பது ஓர் ஒடுக்கப்பட்ட வரலாற்று புருசர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருப்பதாக அமைகின்றது. கேணல் லத்தீப் முகத்துக்கு முகம் போன்ற கதைகளை ஒரு சமூகம் அதன் முன்னேற்றத்தின் பேரில் குரல் கொடுக்க வேண்டியவர்கள் மௌனித்திருப்பதால் ஒடுக்கப்பட்ட வரலாற்றை இலக்கியமாக் காட்டும் கதைகளுக்கு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். 

கிழக்கிலங்கையில் சமூகத்தின் குரலாக இருக்க வேண்டும் என்று உயிரை கையில் எடுத்துக்கொண்டு உழைத்த மேற்சொன்ன தலைவர்கள் குற்றமிழைத்து விட்டோம் என்று வருந்துவதையும் அவர்களின் இலட்சியத்தை முதலீடு செய்து பிரதேச அரசியல் வாதிகளும் மேற்தட்டு முதலாளிமார்களும் தமது இருப்பினை முன்னிறுத்த முன்பட்டதையும் அனேகமான கதைகள் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய கதைகள் முஸ்லிம்களின் எதிர்காலம் தொடர்பான வினாக்களை மேலோங்கச் செய்கின்றன. முஸ்லிம் சமூகத்தில் நிலவும் நிலையான மௌத்தின் ஆணிவேர் எந்த மூலத்தில் இருந்து வருகின்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. ஒரு சமூகம் சுயநலத்திலிருந்து மீண்டு பொதுநலத்தை ஏற்றுக்கொள்ள எவ்வளவு போராடுகின்றது என்பதை ஆழ்ந்து சிந்திக்க வைப்பதாக இவை அமைகின்றன. மக்கள் சமூகத்தின் காவலாளிகளை இம்சிப்பதும் அவர்கள் வேதனையில் வெந்து போகுமாக அமையும் கதைகள் ஒரு சுயவிசாரணையை வேண்டி நிற்கின்றன. 

அனேகமான கதைகளில் வரும் கதைமாந்தர்கள் மணரத்தை வீரத்துடன் எதிர்கொள்ள சற்றும் அஞ்சாதவர்கள். பேயன் மற்றும் புஹாரி கதைகள் இத்தகைய பண்புக்கு உதாரணமாக் கொள்ளலாம். ஆயுதக் கலாசாரம் மக்களின் வாழ்க்கையுடன் மிகவும் நெருங்கிப் போன சூழலைக் களமாக கொண்டு இயங்கும் இக்கதைகள் இலங்கை முரண்பாட்டின் முற்றுப் புள்ளி ஆயுதப் போராட்டத்தில் இல்லை என்பதைத் தீர்க்கதரிசனத்துடன் கூறுகின்றன. இது ஒரு பிரக்ஞை பூர்வமான கருத்தியல் தரிசனமாகவே எனக்குத் தோன்றுகின்றது. முஸ்டீனிடம் வெளியில் தெரியும் வேகத்துடனும் துடிப்புடனும் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுஇ இந்த நிதானம் அவரின் தகுதிக்கு ஓர் எடுத்துக்காட்டாகவே உள்ளது. இது ஒரு கூர்மையான நோக்கு நிலையில் வெளிப்பாடாகும். மனமாற்றம் என்கின்ற கதை இத்தகைய கருத்திலை எடுத்துக்கூற முற்படுகின்றது. 

விடுதலைப் புலிகளும் இந்திய இராணுவமும் கிழக்கில் முஸ்லிம்களை எவ்வாறு பந்தாடினார்கள் என்பதையும்இ சமூக போராட்ட சிந்தனையால் கவரப்பட்டு தமிழர் விடுதலை இயக்கங்களுடன் இணைந்த முஸ்லிம் இளைஞர்கள் எவ்வாறு தீர்த்துக் கட்டப்பட்டார்கள் என்பதையும் எடுத்துக்காட்டும். காட்டிக்கொடுத்தவன் போன்ற கதைகளில் அகன்ற சமூகப்பார்வையைக் காணமுடிகின்றது. கிழக்கில் வெறும் ஆய்வியில் வரலாறுகளுக்குள் புதையுண்டு போன ஒரு காலகட்டத்தின் வாழ்வியல் போராட்டத்தை தோண்டி எடுப்பதாக இத்தொகுதியில் இடம்பெறும் காட்டிக்கொடுத்தவன்இ மையத்துப் பெருநாள் மற்றும் நினையாத ஒன்று ஆகிய கதைகள் இடம்பெறுகின்றன. 

இலக்கியத்தின் இயல்பான தன்மைமைஇ ஒரு காலகட்டத்தின் வரலாற்றுஇ கதைசொல்லும் ஆசிரியன் இத்தொகுதியினூடாக வெளிக்கொணர முற்படும் தனது கருத்தியல் அரசியல் ஆகிய மூன்று தளங்களில் இருந்து இயங்குதல் மிகவும் இலகுவானதல்ல. அத்தகைய ஒரு போராட்ட நிலையில் நின்று எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பாகவும் ஹராங்குட்டியைப் பாரக்கலாம். கிழக்கிலங்கை சிறுகதைகளைப் பொருத்தவரை இத்தகையை ஒரு போக்கு போராட்டத்துக்கு பின்னரான சிறுகதைகளில் முனைப்புப் பெற்றுவருகின்றது. 

எந்த ஓர் உண்மையான போராட்ட நிலையின் நியாயத்தையும் குற்றக்கூண்டில் நிறுத்தவோ அல்லது உத்தமமாகக் காட்டவோ கஸ்டமில்லாத ஒரு நிலை உருவாகியிருக்கின்றது. மனிதஉரிமை மீறல்கள்இ அடக்குமுறைகள்இ சட்டவிரோதம்இ அராஜகம் என அத்தனை நாசகாரச் செயல்களையும் உள்ளே வைத்துக்கொண்டு மேலால் மினுக்கமாக ஒரு முலாம் பூசுவார்கள். அதுதான் ஜனநாயம் என நிஹ்லிசம் பற்றிப் பேசுபவர்கள் சொல்வர்கள். தெற்காசியாவின் வரலாற்றாசிரியர்களில் ஒருவரான அருன்செமியேன் இது பற்றி அதிகம் எழுதியுள்ளார். இந்தக் கருத்தியலின் காட்சிவடிவமாக இத்தொகுப்பின் பல கதைகள் அமைந்திருந்திருக்கின்றன. சில முகமூடிகள் காரசாரமாக கிழித்தெறியப்படுகின்றன. இத்தகைய ஒரு சாத்வீகமான ஒரு முகத்திரைக் கிழிப்பினை குப்பைவாளி மற்றும் நினையாத என்று போன்ற கதைகள் செய்கின்றன. இக்கதைகள் முஸ்டீனின் பதிவுகள் என்றாலும் அதற்குள் வெளிப்படும் இத்தகைய அர்த்தங்களை சொல்வற்குத் தயங்கவேண்டியதில்லை. 

1980 தொடக்கம் 2012 வரையிலான கிழக்கு முஸ்லிம்களின் வாழ்க்கையின் ஒரு பதிவாகவும் இந்தத் தொகுப்பினை பார்க்க இடமுண்டு. ஆரம்பகாலங்களில் தமிழ் விடுதலைப் போராட்டத்தினால் முஸ்லிம் இளைஞர்கள் கவரப்பட்டதையும் அத்தகைய போராட்டத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டதால் கதியற்றுப் போனதையும் உருக்கமாகவே இத்தொகுப்புப் பேசுகின்றது. இலங்கையின் ஆரம்பகால போராட்டம் கிழக்கு மாகாணத்தையொட்டி அதன் நகர்வுஇ அதில் சிறுபான்மைச் சமூகம் சிக்குண்டு போன விதம் என்பனவற்றை ஒரு நாவலைப் போல விரித்துக்கொண்டு செல்லும் இத்தொகுப்பில் தோணிக்காரண்இ மனமாற்றம் மற்றும் மையத்துப் பெருநாள் என்பன ஒரு முப்பரிமான வெட்டுமுகத்தோற்றத்தை காட்டுகின்றன. இதன் காத்திரமான தொடர் அறுபட்டுப் போவதாகவே இதில் இடம்பெறும் ஹராங்குட்டி கதையில் அமைவினை நான் பாக்கின்றேன். இந்தக் கதையின் அமைவு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருந்தால்இ நேரடியாகவே இது வராலாற்று ஆவமாகப் பாரப்பது இன்னும் இலகுவாக இருக்கும்.  

போராட்ட வர்க்கத்தின் கெடுபிடிகளால் பாமரச் சமூகம் எவ்வாறு விலைகொடுத்தார்கள் என்பதை எடுத்துக்காட்டும் ஒரு தனியான நோக்குநிலையும் இத்தொகுதியில் பல இடங்களில் இடம்பெறுகின்றன. தோணிக்காரன் என்கின்ற கதையினை இதற்கு சிறந்த உதாரணமாக கொள்ளலாம். ஒரு கதையாளனுக்கு இருக்கவேண்டியதாகக் கருதப்படும் சமூகத்தின் மீதான பார்வை மெச்சும் விதத்தில் நிறைந்திருக்கின்ற ஒரு கதையான இதனை நான் காண்கின்றேன். அனிபா எனும் கதை மாந்தரின் கடல்வாழ்கையை ஒட்டு மொத்த மீனவர்களின் கதையாகக் காட்டுகின்றார். யுத்தம் எப்படி பொதுமக்களின் நல்வாழ்கையின் அன்றாட உரிமைகளைக் கூட மாசுபடுத்தியது என்பதை இக்கதை எடுத்துக் காட்டுகின்றது. கடலுக்குச் சென்ற முஸ்லிம் தொழிலாளிள் சடலாமாக மீட்டெடுக்கப்பட்டதை தைரியமாக சித்திரித்து நிற்கின்றது. முஸ்டீனின் வெற்றிகரமா பாத்திர வார்ப்புகள் ஒருசிலவற்றுள் தோணிக்காரன் கதையில் வரும் அனிபாவும் ஒன்று. தப்பிவரும் தருணத்தில் கூட ஒருவேளைக்கு கஞ்சி கிடைக்கின்றது என்றால் மரணத்துடனும் சீண்டி விளையாடும் அசட்டு தைரியம் உள்ள கதைமாந்தர்களை இக்கதையில் காண முடிகின்றது. 

ஹராங்குடி என்ற கதையும் அதில் பேசப்படும் விடயம் பற்றியும் எனக்குத் தனியான அபிப்பிராயம் உண்டு. ஓர் இஸ்லாமியச் சமயப் போதகர் எவ்வாறு தனது மாணவர்களை தன்னினச் சேர்க்கைக்கு உட்படுத்துகின்றார்கள் என்பதை இக்கதை பேசுகின்றது. இத்தகைய ஒரு பேசு பொருளை முஸ்டீன் தெரிவு செய்ததில் எந்தவிதமான பிழையும் இருப்பதாககத் தெரியவில்லை. ஓர் எழுத்தாளன் என்ற அடிப்படையில் அவருக்கு இத்தகைய ஒரு கருவினைக் கையாழும் முழுச் சுதந்திரமும் உண்டு. இதனை ஒரு பிரச்சினைக்குரிய பேசு பொருளாக பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு முஸ்லிம் இந்தத் தவறை செய்தார் என்பதற்காக இதனை பேசினால் இஸ்லாத்தின் புனிதம் கெட்டு விடும் என்று நினைப்பது மாமரத்தனம். ஒரு தவறு இடம்பெறும்போது தவறைச் செய்தவர் முஸ்லிம் என்பதற்காக தவறை மௌமாகப் பேச வேண்டும் என்பது யோக்கியத்தனம் அல்ல. இத்தகைய விமர்சனம் தவறு செய்கின்றவர்களையன்றி இஸ்லாத்தை ஒருபோதும் விமர்ச்சிக்கவில்லை. அத்தோடுஇ எந்த ஒரு சமயத்தைச் சார்ந்தவர்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்லர் என்பதையும் முஸ்டீன் தயக்கமின்றி குறிப்பிடுகின்றார். ஒருவகையில் இதனை பொதுமைப்படுத்தியும் இருக்கின்றார். பௌத்தஇ கத்தோலிக்க மற்றும் கிருஸ்தவ சமயத் தலைவர்களும் இத்தகைய குற்றச் செயலில் ஈடுபடலாம் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நவீன ஆங்கிலச் சிறுகதைகளில் பால் நிலைசார் சிறுபான்மையினர் (ளுநஒரயட அiழெசவைநைள) தனியான துறையே வளர்ந்து வருகின்றது. இதனை எல்.ஜீ.பீ.ரீ.கியு கதைகள் என்பார்கள். எவ்வாறாயினும் இக்கதையின் தரம் மற்றும் தொகுதியில் இது பெறும் அமைவிடம் பற்றி எனக்கு வேறு கருத்துக்கள் உள்ளன. இக்கதையின் அமைவிடம் ஹராங்குட்டியின் பேசுபொருள் ஒழுங்கிணையும் கால ஒழுங்கினையும் பேணிவந்த தொகுப்பு முறைக்கு சவாலாக அமைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது. 

எனக்கு இயல் மற்றும் இலக்கியக் கட்டுமானங்கள் தொடர்பாக முழுமையான உடன்பாடு இல்லாவிட்டாலும் ஓர் இலக்கியத்தின் அமைப்பு ரீதியான கட்டமைப்புத் தொடர்பாக சற்று அக்கறை உள்ளது. அந்த அடிப்படையில்இ இத்தொகுப்பில் இடம்பெறும் சில கதைகள் அவற்றின் உள்ளடக்கத் தரத்திற்கு அப்பால் காவியப்பாங்கானவை என்பது எனது அபிப்பிராயம். காவியப்பாங்கானது என்பது கதையின் தரத்தைப் பாதிப்பதில்லை. அது பெரும்பாலும் உருவம் பற்றியது உரையாடல். கேணல் புகாரி என்கின்ற கதையினை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். கதைகளில் காவியப்பாங்கான தன்மையிடம் பெறுவது கதையில் பேசப்படும் விதத்தையோ பேசப்பட்ட முறையையோ அதிகம் பாதிக்கவும் இல்லை. ஆனால்இ இத்தகைய கதைகளை சிறுகதை என்ற பெயரில் பார்க்கும் போது சிலவேளை பிரச்சினைகள் உண்டு. இது சிறுகதை என்ற பெயரில் வெளிவந்திருப்பதால் வேறு பெயரில் பார்க்க வேண்டிய தேவையும் இல்லை. இவற்றை ஒரு நெடுங்கதையாகவோஇ குறுநாவலாகவோ பார்த்தால் இது ஒரு பிரச்சினையல்ல. இது முற்றிலும் என்னுடைய சொந்த அபிப்பிராயம் என்பதால் வேறு கருத்துக்களுக்கு அதிக இடமுண்டு. 

முஸ்டீன் இந்த தொகுப்பில் பல இடங்களில் வெளிப்பட்டு மறைகின்றார். அவருடைய நடமாட்டம் மிகவும் தெளிவாகவே இத்தொகுப்பில் இடம்பெறுகின்றது. முஸ்டீன் ஒரு வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சியையும் பல இடங்களில் மேற்கொள்கின்றார். உண்மைச் சம்பவங்களின் அதிகமான கோவைகளை அவர் வைத்திருப்பதாகத் தெரிகின்றது. இந்தநிலையில் இத்தகைய தரவுகளை இலக்கியமாக்கும் போது இலக்கியத்தரத்தினை பேணிக்கொள்வதில் அதிக அக்கறையும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மிகவும் கடினமாக ஒரு செயல். இதனை அதிக சிரமத்துடன் முஸ்டீன் செய்திருக்கின்றார். இந்த முழுத்தொகுதியையும் அவதானமாக வாசிக்கும் போது இந்த போராட்டம் தெரிகின்றது. இந்த நிலை இலக்கியத்துக்கும் உண்மைச் சம்வங்களுக்குமிடையிலான சமரசத்தன்மையை தோற்றுவித்துள்ளது. இது பல இடங்களில் அழகாக இருக்கின்றது. சில இடங்களில் மாத்திரம் இது கைகூடவில்லை என்று தோன்றுகின்றது. 

இத்தொகுதியில் கையாளப்பட்டுள்ள மொழி தொடர்பாக எனக்கு நிறைய அபிப்பிராயங்கள் உண்டு. அவற்றை தனியாகப் பேசவேண்டும். இறுதியாக மேலே குறிப்பிடப்பட்டவை முற்றிலும் எனது தனிப்பட்ட அபிப்பிராயம் என்பதால் இவற்றை பொதுமைப்படுத்த வேண்டியதில்லை.

01. ஹராங்குட்டி சிறுகதைத் தொகுப்பு மூன்று பார்வைகள் - பார்வை 01 (அஷ்ரஃப் சிஹாப்தீன்)


ஹராங்குட்டி சிறுகதைத் தொகுப்பு - இரத்தம் தோய்ந்த கதைகள்!

முஸ்தீன் ஒரு வித்தியாசமான போக்காளி. பதினைந்து பேர் குழுமியிருந்து கலந்துரையாடும் போது ஒரு விடயத்தில் பதினான்கு பேரும் ஒரு கருத்தோடு ஒன்றிப் போக அந்த விடயத்தை வேறொரு கோணத்தில்  ஒருவன் சிந்திப்பான் என்றால் அவன்தான் முஸ்தீன்.

யாரையும் எதிர்பார்த்திராத வேளையில் எனது வீட்டு அழைப்பு மணி ஒலிக்கும். திறந்தால் முஸ்தீன் நிற்பான். எங்காவது ஓர் அவசரத்தில் வீதியில் சென்று கொண்டிருப்போம். அங்கே ஒரு முனையில் அவன் நின்று கொண்டிருப்பான். இந்த வேளைகளிலெல்லாம் அவனது கையில் ஒரு ஃபைல் அல்லது ஒரு பை இருக்கும். அவ்வப்போது எந்த முயற்சியில் அவன் இயங்கிக் கொண்டிருக்கிறானோ அந்த முயற்சி பற்றிய தஸ்தாவேஜூகள் அந்த ஃபைலுக்குள் அல்லது பைக்குள் இருக்கும்.

நான் கடமை புரிந்த அமைச்சுக் காரியாலயத்துக்கு அடிக்கடி வருவான். தனது முயற்சிகள் அரை மணி நேரம் அமர்ந்து பேசுவான். அவனது பேச்சினூடாகப் பல வினாக்களைப் போடுவான். நமது பதிலில் பலதை வெட்டிப் பேசுவான். சிலதை ஏற்றுக் கொள்ளுவான். 

ஒரு முறை அவன் நடத்தும் நிகழ்வு ஒன்றுக்கு என்னை அழைப்பதற்கு எனது காரியாலயத்துக்கு வந்திருந்தான். பேசிக் கொண்டிருந்து விட்டு ஓர் அழைப்பிதழை நீட்டினான். ஒரு நிகழ்வுக்கான சம்பிரதாயபூர்வமான எந்த முறைமையையும் பின்பற்றி அச்சிடப்படாத அழைப்பிதழாக அது இருந்தது. அந்த நிகழ்வுக்குப் பிரதம அதிதி மத்திய கிழக்கு நாடு ஒன்றின் இலங்கையில் உள்ள தூதுவர். இவனுக்கு மிகவும் பழக்கமான நபராக அவர் இருந்தார் என்று நினைக்கிறேன். என்னதான் அறிமுகம், நட்பு இருந்தாலும் அவர் ஒரு நாட்டின் தூதுவரல்லவா? அவரது பெயருக்கு முன்னால் 'அதிமேன்மை தங்கிய' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இவனது அழைப்பிதழில் அவரது பெயர் மட்டும் மொட்டையாக அச்சாகியிருந்தது. இதைப் பார்த்ததும் எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. கடும் கோபத்தை அடக்கிக் கொண்டு அவனைப் பார்த்தேன். 'கட்டாயம் வந்துடுங்க!' என்று வெகு சாதாரணமாகச் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டான்.

பாடசாலையில் படிக்கும் போது எப்படி இருந்தான் என்று தெரியவில்லை. ஆனால் கல்லூரிப் படிப்புக்கு வந்ததிலிருந்து நீண்ட காலமாக மற்றவர்கள் பார்வையில் 'கிறுக்குப் புடிச்ச பய'லாகத்தான் தெரிந்தான், திரிந்தான். அவனைப் பற்றிக் கேள்விப்படும் போது 'ஏதோ தேவையற்ற வேலை செய்து திரிகிறான்' என்ற மனப்பதிவு ஏற்படும் விதமாகவே தகவல்கள் கிடைக்கும். தன்னைப் பற்றித் தனது எதிர்காலம் பற்றிக் கவலைப்படாமல் ஒரு 'ஹத்து மத்து'க்கு அடங்காமல் திரிகிறானே என்ற கவலை எனக்கும் ஏற்பட்டதுண்டு. ஆனால் தன் போக்கை, செயற்பாட்டையிட்டு மற்றவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதையிட்டுச் சிறிதளவேனும் அவன் கவனத்தில் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.

ஒரு நாள் முஸ்தீன் தொலைபேசியில் தொடர்பு கொண்டான். 'ஒரு சினிமா எடுத்திருக்கிறேன். கொழும்பில் எங்காவது ஓரிடத்தில் பல்திறப்பட்டவர்களையும் அழைத்து இதைத் திரையிட விரும்புகிறேன். நீங்கள் எனக்கு எந்த வகையில் உதவி செய்வீர்கள்?' என்று கேட்டான். அது வரை தனிப்பட்ட முறையில் எந்த உதவிகளையும் என்னிடம் கேட்டிராத முஸ்தீனிடம் 'நான் இடத்தை ஏற்பாடு செய்து தருகிறேன். மற்றைய ஏற்பாடுகளைப் பாருங்கள்' என்றேன். அதன் படி ஏறக்குறைய அறுபதுக்கு மேற்பட்ட பல்வேறு துறைசார்ந்தவர்களுக்கு மத்தியில் அதைத் திரையிட்டோம். அவனது முயற்சிக்காக அவனைப் பலரும் பாராட்டினார்கள்.

முஸ்தீனைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசிய போதும் எனக்கு அவன் மீது ஓர் அபிமானம் இருந்தது. அவனுக்குச் சமூகத்தின் மீதிருந்த பேரபிமானமே அதற்கான காரணமாகும். படித்துப் பட்டம் பெற்றுப் பெரும் அரச பதவிகளில் அமர்ந்திருந்து 'தனக்கு மட்டுமே எல்லாம் புரியும்' என்ற எண்ணத்தோடு சமூகத்தொடர்புகள் ஏதுமின்றி, சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இன்றி வெறுமனே முந்நூறு ரூபாய் வவுச்சருக்காக அல்லாடும் படிப்பாளிகளை விடச் சமூகப் பற்றுக் கொண்ட முஸ்தீன் மீது எனக்கு அபிமானம் இருந்தது நியாயம்தானே. 

2

'தமிழ்மிரர்' இணையத்தளத்தில் 'குப்பை வாளி' என்று ஒரு கதை இடம்பெற்றிருந்தது. முஸ்தீன் எழுதிய கதை என்றறிந்ததும் படிக்கத் தொடங்கினேன். அந்தக் கதையில் முஸ்தீனின் எழுத்து நடையும் அந்தக் கதை பேசும் விடயமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. உண்மையில் அந்தக் கதை மூலம் முஸ்தீன் வேறு ஒரு கட்டத்துக்கு நகர்ந்து விட்டான் என்ற மகிழ்ச்சி பரவியது. பொலிஸ் தடுப்புக்குள் இருக்கும் ஒருவன் அங்கிருந்த குப்பைவாளியைப் பற்றியா சிந்திப்பான்? அதைப் பற்றிச் சிந்திக்கவும் அதைக் குறியீடாக்கிச் சில விடயங்களைச் சொல்லவும் தேர்ச்சி மட்மல்ல, மிகுந்த திறமையும் வேண்டும். அது முஸ்தீனுக்குக் கைகூடி வந்திருக்கிறது.

இந்தத் தொகுதி ஒரு மதிப்புரைக்காக என்னிடம் வரும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. கதைகள் ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்த போதுதான் எனக்குப் புரிந்தது, முஸ்தீன் எனது கையில் ஒரு வெடிகுண்டைத் தந்து விட்டுப் போயிருப்பது. 

இந்தத் தொகுதியில் பன்னிரண்டு கதைகள் அடங்கியிருக்கின்றன. இவற்றில் முதலாவது கதையாக இடம்பெற்றுள்ள 'குப்பை வாளி', கடைசிக் கதையாக உள்ள 'மனச்சாட்சி கொன்று' ஆகிய இரண்டு கதைகளும் ஒரு வகைக்குள் அடங்கும். இந்தத் தொகுப்பின் தலைப்பாக அமையும் கதையான 'ஹராங்குட்டி' மற்றொரு வகை. அந்தக் கதையுடன் ஏனைய ஒன்பது கதைகளும் சேர்த்துப் பத்து வெடிகுண்டுகள். ஆம். அப்படித்தான் என்னால் சொல்ல முடியும்!

ஒரு போர் முடிந்த பிறகு பல ஆயிரம் உண்மைகளும் பல ஆயிரம் கதைகளும் வெளிவர ஆரம்பிக்கும். அவை  போர் முடிந்ததிலிருந்தும் போர் முடிந்து சில காலங்களுக்குப் பின்னரும் சில வேளை பல ஆண்டுகள் கழித்தும் வெளிவரலாம். கால, தேச, வர்த்தமானங்கள், கதையை வெளியே கொண்டு வருவோரின் உள நிலை என்பவற்றைப் பொறுத்து அவை அமையும். அவ்வாறான கதைகள் நமது பிரமைகளைக் கலைத்து விடும். அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த தகவல்களைத் தெட்டத் தெளிவாகச் சொல்லிப் போகும். மக்கள் நினைவில் பதிந்திருக்கும் படிமங்களின் சாயத்தைக் கரைத்து நம்பமுடியாத ஒன்றை ஏற்க வேண்டிய அவசியத்தை உருவாக்கும்.

இரண்டாம் உலகப்போரின் கதைகள் இன்னும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதற்குப் பிறகு வௌ;வேறு நாடுகளுக்கிடையில் நடைபெற்ற போர்களில் இடம்பெற்ற நம்பமுடியாத சேதிகளும் தகவல்களும்; வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்தப் போர்களிலெல்லாம் வெளிவராமல் போன செய்திகளும் தகவல்களும் கதைகளும் ஆயிரமாயிரம்.

இரு தேசங்களுக்குள் இடம்பெறும் போரை விட பல்வேறு இனங்கள் வாழும் ஒரு தேசத்துக்குள் நடைபெறும் போர்தான் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்பதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் நூல்தான் 'ஹராங்குட்டி!' 

இலங்கைக்குள் நடந்த போரில் மூன்று இனங்கள் (பொது மக்கள்), வௌ;வேறு கருத்துப் போக்குகளுடன்  இயங்கிய போராட்டக் குழுகள், அரசு, அரச எதிரணிகள், அயல்நாடுகள், சர்வதேசம் - இவர்களுக்குள் நடக்கும் கயிறிழுப்பும் காய் நகர்த்தலும் சாதாரண பொது மகன் நினைத்தே பார்த்திராத விடயங்களை நிகழ்த்திச் சென்றிருப்பது பின்னால் வெளிவருகிறது. பிரபல பத்திரிகையாளரான, கொலையுண்ட, 'தராக்கி' என்றழைக்கப்பட்ட சிவராமின் கரங்கள் கொலைக் கறையுடையவை என்ற தகவலை அண்மையில் கவிஞர் நட்சத்திரன் செவ்விந்தியன் குறிப்பிட்டிருந்ததானது இவ்வாறான தகவல்களுக்கு உதாரணம்.

நடந்து முடிந்தவற்றின் ஒரு பகுதியைப் பற்றி அதிகம் எழுதாமல் புரிந்து கொள்வதற்கு சி.சிவசேகரம் அவர்களின் கவிதை ஒன்று நமக்குப் போதுமானது.

துரோகி எனத் தீர்த்து
முன்னொருநாட் சுட்டவெடி
சுட்டவனைச் சுட்டது.
சுடக் கண்டவனைச் சுட்டது.
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது.
குற்றஞ் சாட்டியவனை
வழக்குரைத்தவனைச்
சாட்சி சொன்னவனைத்
தீர்ப்பு வழங்கியவனைச் சுட்டது.
தீர்ப்பை ஏற்றவனைச் சுட்டது.
சும்மா இருந்தவனையுஞ் 
சுட்டது.

இதற்கப்பால் சொந்தக் குரோதங்களைச் சாதித்துக் கொள்ளவும் ஒருவரின் சொத்தை அபகரித்துக் கொள்ளவும் எப்போதோ நடந்த ஒரு சிறிய விடயத்துக்காப் பழியெடுக்க 'துரோகி' என்றோ 'பயங்கரவாதி' என்றோ காட்டிக் கொடுத்தல் அல்லது சட்டத்தின் பிடியில் சிக்க வைத்தல் அல்லது கொலை செய்தல் என்று பல் விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன. இவற்றில் இதுவரை வெளிவந்த தகவல்கள், சம்பவங்கள், கதைகள் மிகவும் சொற்பமானவை. வெளிவந்திராதவற்றைத் தெரிந்திருந்தவர்களில் பலர் இன்னொரு கபடத் தனத்துக்கு அகப்பட்டு, கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது ஒரு குண்டுத் தாக்குதலில், துப்பாக்கிப் பிரயோகத்தில் - இடையில் அகப்பட்டு உயிரிழந்திருக்கலாம். 

இவற்றிலிருந்ததெல்லாம் தப்பிப் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அற்பத் தொகையினர் சம்பவங்களையும் தகவல்களையும் வெளியே கொண்டு வருவதற்குச் சந்தர்ப்பங்களை எதிர்நோக்கியிருப்பார்கள். புலிகளின் வதைமுகாமில் ஒன்;றரை வருடங்கள் துன்புற்ற தனது கதையை தேனீ இணையத்தளத்தில் மணியம் என்பவர் இப்போது எழுதி வருகிறார். அவரது நேரடி அனுபவங்களைச் சொல்லி வரும் அவர் கொள்ளை, கொலைகளோடு சம்பந்தப்பட்ட பலர் இப்போது மேற்கத்தேய நாடுகளில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடுகிறார். 'மனமாற்றம்' என்ற கதையில் வரும் ராபியைச் சுட்டுக் கொன்ற இருவரில் ஒருவர் மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் இறந்ததையும் மற்றையவரான சாந்தன் என்பவர் இப்போது கனடாவில் வசித்து வருவதாகவும் முஸ்தீன் குறிப்பிடுகிறார். 

ஏதோ ஒரு வகையிலான ஆபத்திலிருந்தும், தாம் செய்த பாவங்களின் காரணமாக தம்மைத் துரத்தும் மரணத்திலிருந்தும் தம்மைக் காத்துக் கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறியோர் அதிகம். சொகுசு வாழ்க்கைக்காகத் தமது வாழ்வும் ஆபத்திலிருப்பதாகக் காட்டிக் கொண்டு சென்றவர்களும் இருக்கவே செய்கிறார்கள். சிலர் எவ்வாறு அங்கு சென்றார்கள் என்பதை எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்காது. ஆனால் அங்கே போயிருந்து இவர்கள் மனிதாபிமானம், சமூக அக்கறை பற்றிப் பேசுவதையும் எழுதுவதையும் ஒரு நாவலாகவே எழுலாம்.

எதிர்வரும் காலங்களில் நாம் பல புதிய கதைகளை அறிய, நம்ப முடியாத விடயங்களைக் கேள்விப்படத் தயாராக இருக்க வேண்டும். 

3

முஸ்தீன் எழுதியிருக்கும் இக்கதைகள் வெளிப்படுத்தும் நபர்களும் அவர்கள் சார்ந்த தகவல்களும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குபவை. முஸ்தீன் இப்பணியை மேற்கொள்ளவில்லையென்றால் வேறு யாரும் இவற்றை வெளியே கொண்டு வந்திருப்பதற்கு வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன். முஸ்தீனின் செயற்பாட்டுத் தளம் யாரும் புக நினையாதது. எனவே இந்தக் கதைத் தொகுதி கடந்த காலத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் அவல வாழ்வின் வெட்டு முகமாகத் தோற்றமளிக்கிறது.

நான் ஏற்கனவே சொன்ன ஒன்பது கதைகளுள் வரும் பாத்திரங்களானகொமைனி முஸ்தஃபா, பேயன், புகாரி, கேர்ணல் லத்தீப், சமது நானா, அஸீஸ், ராபி ஆகியோரின் பக்கங்களையும் அவர்கள் சார்ந்த ஏனைய பக்கங்களையும் நமக்கு முன்னே முஸ்தீன் விரித்து வைக்கிறார். எமது பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களான கொமைனி முஸ்தஃபா, பேயன், புகாரி, கேர்ணல் லத்தீப் ஆகியோரில் புகாரியை மட்டுமே எனக்கு நன்கு தெரியும். கொமைனி முஸ்ஃபாவைப் பற்றித் தெரிந்திருந்த போதும் அவரது தோற்றம் ஞாபகத்தில் இல்லை. ஒரு முறை ஊரில் நின்ற வேளை ஜூம்ஆத் தொழுகைக்காக மீராவோடைப் பள்ளிவாசலுக்குச் சென்ற போது ஒரு எஸ்.எல்.ஆர். துப்பாக்கியுடன் (அத்துப்பாக்கி அந்த ரகத்தைச் சேர்ந்தது என்று பக்கத்தில் நின்றவர்கள் பேசிக் கொண்டனர்) தொழுகைக்கு வந்திருந்தார். சிறுவயதில் நேருக்கு நேர் சந்தித்தால் சிரித்துக் கதைக்கும் புகாரி அங்கு யாரையும் கண்டு கொள்ளவில்லை. புகாரியையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இவர்களுள் சமூகத்தைக் காப்பது என்று செயல்படத் தொடங்கி வேறு வலைகளுக்குள் சிக்கிக் கொண்டவர்கள், துப்பாக்கியை ஏந்தினால் தாமும் மக்களின் அவதானிப்புக்குள்ளாகுவோம் என்ற 'ஹீரோயிஸ'  எண்ணம் கொண்டு இயக்கங்களில் இணைந்த விடலைகள் அநேகம். பயன்படுத்தப்பட்ட பிறகு கொலை செய்யப்பட்டவர்கள், எதிர்த்து நிற்கிறார்கள் என்று தமிழ் விடுதலை இயக்கங்களால் கொல்லப்பட்டவர்கள் என்று - போராட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் இயங்கியோரால்  இவர்களை உயிரிழக்க நேர்ந்திருக்கிறது. அதேவேளை, துப்பாக்கிகளைக் கையில் எடுத்துக் கொண்ட பிறகு இவர்கள் மக்களின் மீது நாட்டாமை செய்யத் தொடங்கிய காரணத்தால்  மக்களால் வெறுக்கப்பட்டார்கள். 

பல இயக்கங்கள் விடுதலைக்காக இயங்கிய காலகட்டம், போராட்டம் உக்கிரமடைந்த காலகட்டம், இந்திய அமைதிப்படை வந்த கால கட்டம், சமாதான ஒப்பந்தக் கால கட்டம் என்று முக்கியமான காலப்பகுதிகளில் கிழக்கு முஸ்லிம் பிராந்தியங்களின் நிலைமையை இக் கதைநாயகர்களூடாகவும் கதைகளினூடாகவும் முஸ்தீன் நம்மைத் தரிசிக்க வைத்திருப்பது இந்த நூலின் முக்கியமான ஒரு சிறப்பம்சமாகும். 

தான் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் குறிப்பாக உரியவர்களின் வாக்கு மூலங்களின் அடிப்படையில் இக்கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. கதை நாயகர்களது தகவல்களைக் கொண்டு அல்லது வாக்கு மூலங்களைக் கொண்டு அவர்களது செயற்பாடுகளை விபரித்ததோடு பெரும்பாலும் முஸ்தீன் நின்று கொள்கிறார். அவற்றைத் தனது தராசில் ஏற்றி நிறை, குறை சொல்லாமல், அவர் விலகி நின்றபடி அவற்றை மக்கள் சமூகத்தின் முன் சமர்த்திருப்பது இத்தொகுதியின் இன்னொரு சிறப்பு.

தமிழ் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தவர்கள், முஸ்லிம் சமூகத்தை விமர்சித்தவர்கள், போராட்டக் குழுக்களின் தகவல்கள் அடிப்படையில் ஊடகங்களில் எழுதியவர்கள், ஊகங்களின் அடிப்படையில் கருத்துத் தெரிவித்தவர்கள், போராட்டத்தை விமர்சித்தவர்கள் என்று சகலருக்கும் இக்கதைகள் பேசும் விடயங்கள் பற்றியதும் கதை நாயகர்கள் பற்றியதுமான தமது மனப் பதிவுகளில் சிறியதாகவோ பெரிய அளவிலோ மாற்றமொன்றை இத்தொகுதி ஏற்படுத்த இடமுண்டு. 

எல்லாவற்றையும் விட, என்றாவது மற்றொரு போராட்டம் முளை கொண்டால் தான் ஏன் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கக் கூடாது என்பதற்கும் யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது என்பதற்கும் இந்தப் போராட்டத்தில் நான் யார்? எதற்காக ஈடுபடுகிறேன்? என்ற கேள்வியற்று இறங்காமலிருப்பதற்கும் துப்பாக்கிகளைத் தூக்கி விட்டால் மட்டும் போராளியாகவோ 'ஹீரோ' வாகவோ மாறிவிட முடியாது என்பதற்கும் ஓர் இளைஞனுக்கு இத்தொகுதி வழி காட்டுவதாக நான் நம்புகிறேன்.

இத்தொகுதியின் தலைப்புக்குரிய கதைதான் 'ஹராங்குட்டி.' இது குறித்து எழுதுவதை விடப் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்வது நல்லது. கேடுகெட்ட நடத்தையில் ஈடுபடும் சாமியார்கள், பாதிரியார்கள், பிக்குகள் வரிசையில் ஆலிம்கள் என்று அறியப்பட்ட ஒரு சிலரது கெட்ட நடத்தை பற்றி இக் கதை பேசுகிறது.  

4

வழமையான சிறுகதைப் பாணிக் கதைகளாக இதற்குள் அடங்கியிருக்கும் எல்லாக் கதைகளும் இமையவில்லை. சிறுகதைகளின் வடிவம் மாற்றத்துக்குள்ளாகியிருக்கிறது. இங்கே சொல்லப்படும் விடயங்கள் தம்மை வெளிப்படுத்த முஸ்தீன் ஊடாக எடுத்துக் கொண்ட வடிவத்தில் இவை வந்திருக்கின்றன.  அப்படித்தான் நான் நினைக்கிறேன்.

நிறைய எழுதியிருக்கிறார் முஸ்தீன். இரத்தமும் சதையும் அச்சமும் புதைகுழிகளுமாகக் கொத்துக் கொத்தாக  எழுத்துக்கள். இந்த எழுத்துக்கள் என்னில் ஓர் அழிச்சாட்டியம் நடத்துவதற்கு என் மேனியில் ஏறி நடந்து திரிவதாக ஒரு பயமும் ஏற்பட்டது. எனவே ஒவ்வொரு கதையையும் நில நாட்கள் விட்டுத்தான் படிக்க வேண்டியிருந்தது.

ஒரு குறிப்பிட்ட விடயத்தை கதையில் ஓர் இடத்தில் மட்டும் அல்லாது வேறு வார்த்தைகளில் வேறு இடத்திலும் பேசுவதாகத் தெரிகிறது. இது வாசகனை அலுப்புக்குள்ளாக்கக் கூடியது. தகவல்களைக் கொண்டு பிதுங்கும் இத்தொகுதியின் கதைகளை எழுதும் போது இந்த விடுபாடுகள் மன்னிப்புக்குரியவை தான். 

அஷ்ரஃப் சிஹாப்தீன்