Tuesday, January 5, 2016

மனதிற் பட்டது - 10 - ரஹ்மான் ஹஸன் மற்றும் ட்ரிம் ஆர்ட்ஸ்

தமிழ்மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்  - 10

'காற்றுச் சுமந்து வரும் கனவுகள்' என்று ஓர் ஓடியோ பாடல் அல்பம் 2003ஆம் ஆண்டு வெளிவந்தது. அதை 'ட்ரிம் ஆர்ட்ஸ்' என்ற நிறுவனம் வெளியிட்டிருந்தது. அரபுப் பாடல்களின் மெட்டு மாதிரியில் இருந்து தமிழ் வடிவம் பெற்ற அப்பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் அடிக்கடி முனுமுனுக்கப்படும் நிலையினையும் எட்டியிருந்தது. இதற்கு முதல் இஸ்லாமியப் பாடல் வகையறாக்கள் பல வெளிவந்திருந்தாலும் 'காற்றுச் சுமந்து வரும் கனவுகள்' அல்பம் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் வித்தியாசமானது. உயிர்ப்பானது. 
வரகாபொலையைச் சேர்ந்த ரஹ்மான் ஹஸன் இந்நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர். புதுமைகளைத் தேடிப் பயணிக்கும் இவர் ஓர் இசைப்பிரியரும் கூட.

இஸ்லாமிய மாதிரிகளைத் தேடும் இளைஞர் கூட்டத்திற்கு கவர்ச்சிகரமான ஈர்ப்புமிக்க பாடல்களை அளிப்பதில் இந்தோனேசியவைச் சேர்ந்த ஹதாத் அல்வி மற்றும் ஷூலிஸ் ஆகியோரின் பாடல்கள் வெற்றிபெற்றன என்றுதான் சொல்ல முடியும். அவர்களின் பாடல் மாதிரிகளைக் கொண்டு தமிழில் பாடல் இயற்றும் எண்ணம் யாருக்கும் வந்திருக்காத வேளை ரஹ்மான் ஹஸன் மற்றும் அஹ்சன் ஆரிப் அத்துடன் நுஸைர் நௌபர் ஆகிய மூவரும் இணைந்து அவ்வெண்ணத்தை செயல்வடிவமாக்கி வெற்றிபெறச் செய்ததன் அறுவடைதான் 'காற்றுச் சுமந்து வரும் கனவுகள்'

2003ஆம் ஆண்டு இம்மூவரும் ஜாமியா நழீமிய்யாவில் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள். ஜாமியாவின் நிருவாகம் நளீமீக்கள் எல்லாவிதத்திலும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் எதிர்பார்த்த அளவுக்கு செயற்பாட்டுத்தளத்தின் கதவுகளை இறுக மூடியிருந்த தருனம். அதனால் 'காற்றுச் சுமந்துவரும் கனவுகள்' அல்பத்தின் தயாரிப்புப் பணிகள் மிகவும் ரகசியமாகவே இடம்பெற்றுக் கொண்டிருந்தன. 

எனது வகுப்புத் தோழன் கிண்ணியாவைச் சேர்ந்த நாஸிக் மஜீட் அதில் ஒரு பாடல் எழுதியிருந்தான் ஆனால் அல்பம் பார்க்கும் வரை எங்களில் யாருக்கும் அது தெரிந்திருக்கவில்லை. அந்தளவுக்கு ரகசியம் பேணப்பட்டது. அத்துடன் அப்போது தாருல் அர்க்கமாக இருந்து இப்போது ஜமாஅத்துஸ் ஸலாமாவாக பெயர்மாற்றம் பெற்றிருக்கும் இயக்கப் பரப்பிற்குள்தான் எல்லாமும் நிகழந்தேறின.

மறுமொழி என்றொரு சஞ்சிகையையும் ஜெஸார் போன்றவர்களுடன் இணைந்து ரஹ்மான் ஹஸன் வெளியிட்டார். சுயம் என்று தரமானதொரு பத்திரிகை வெளிவந்தது. எல்லோருடைய எதிர்பார்ப்பையும் தூண்டிவிட்டு முதலாவது இதழோடே அது காணாமல் போயிற்று அது போலத்தான்  மறுமொழியும் ஒரு இதழுடன் நின்று போயிட்டு. ரஹ்மான் ஹஸனின் தேடலும் வாசிப்புத்தளமும் ரசனையும் பொது ரசனையில் இருந்து வேறுபட்டது. 

2002ல் ஷெய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த தயாரிப்பகம் ஆரம்பிக்கப்பட்டு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விதையாய் விழுந்தது காற்றுச் சுமந்து வரும் கனவுகள். மருதானை சாஹிராக் கல்லூரியில் 2003 செப்தம்பர் 26ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்டபோது. அந்தப் பாடல்களைக் கேட்டவுடனேயே ளுஐஆ-Pசழனரஉவழைn அடுத்து என்ன செய்ய வேண்டு;ம் என்ற முடிவுக்கு நான் வந்திருந்தேன். 

புலிகளுக்கு எதிராக அப்பாடல்களில் சில வரிகள் இடம்பெற்றிருந்தன. பகைப்புலத்திலும் ஆத்திர வெளிப்பாடாகவும் நேரடியாகச் சுட்டாமல், புலிகள் மீதான் அச்சத்தினால் அமுங்கிப் போய், சமுகத்தின் மேல் கொண்ட பற்றினால் மேலெழுந்த வசனங்கள் அவை. ஏனெனில் அப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தைரியமாக எழுத முஸ்லிம்களுக்கு திராணி இருக்க வில்லை, பாடல்களில் சாடையாகப் புலிகளை உரசிச் செல்லும் வசனங்கள்தான் ஏன் எல்லோரும் இவர்களுக்கு இந்தளவு பயப்பட வெண்டும் என்ற கேள்விகளை எனக்குள் எழுப்பின.. அப்போதே சட்டென எடுக்கப்பட்ட முடிவுதான் அக்கினிச் சுவாசம் என்ற பாடல் அல்பம். 

எனது அக்கினிச் சுவாசம் அல்பத்திற்கான வீடியோ எடிட்டிங் வேலைகள் அனைத்தையும் நேர்த்தியாகச் செய்து அதன் அட்டைப்படம் உட்பட அனைத்து டிசைனிங் வேலைகளையும் செய்து விழாவிலும் இறுதிவரை என்னோடு துணையாக நின்றது மட்டுமல்ல ளுஐஆ- Pசழனரஉவழைn னின் ஸ்திரத்திற்கும் எந்தவிதமான எதிர்பாhர்ப்புகளுமில்லாது செயற்பட்டவர்தான் ரஹ்மான் ஹஸன்.

இப்போது அவர் எந்தளவுக்கு வளர்ந்நிருக்கின்றார். என்னென்ன தறைகளில் புலமை பெற்றிருக்கின்றார் என்பது குறித்து இனித்தான் தேடிப் பதிவு செய்ய வேண்டும். எங்கிருந்தாலும் வாழ்க ரஹ்மான்


No comments:

Post a Comment