Saturday, March 5, 2016

மனதிற் பட்டது - 16 மாபெரும் படைப்பாளி

மாபெரும் படைப்பாளி

பல்லாயிரம் ஒளியாண்டு தூரத்தில் இருக்கின்ற ஒரு நட்சத்திரம் ஒரு புள்ளியளவுக்கு மின்னிக் கொண்டிருக்கும் போது, அது நமது பார்வையில் தோற்றுவதும் மறைவதுமாக இருப்பதை மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கும் போது, பரந்த வானமும் இன்னபிற நட்சத்திரக் கூட்டங்களும் நமது பார்வையை ஈர்த்துக் கொள்ளும் போது, அவ்வப்போது எரிகட்கள் அல்லது வால் நட்சத்திரங்கள் ஒளி வீசிப் பிரகாசமாகப் பயணித்து சட்டென்று மறைந்து போகும் போது அந்த மாபெரும் படைப்பாளி பற்றிய சிந்தனை எனக்குள் தோன்றியது.

இந்த இயற்கையில் இருந்துதானே நமது படைப்புலகம் விரிந்து செல்கின்றது. இந்தப் பூமியில் உள்ள ஜீவராசிகள்தானே சமது படைப்புலகத்தின் மூலம். இந்த வஸ்துக்களின் வாழ்வியல் அசைவியக்கம்தானே நமது இலக்கியம். இந்த இயற்கையின் படிமங்களில் இருந்து சொற்கள் பொறுக்கிச் சேர்த்துத்தான் நமது எழுத்தாக்கங்கள் புகழ்பெற்றவையாக உருவெடுக்கின்றன.

மொத்தத்தில் நமெல்லாம் பிரதியெடுத்துக் கொண்டிருக்கின்றோம். நம்மால் புதிதாக எதனையும் படைத்துவிட முடியாது. இருப்பதில் இருந்து நாம் தேடிப் பெற்றுக் கொள்ளும் படிப்பினைகளும் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் அவாக்களும் விருப்பு வெறுப்புக்களும் கோபதாபங்களும் ஆச்சரியங்களும் பிரமிப்புக்களும் ஆத்திரங்களும் ரசனைகளும் கற்பனைகளும்தான் நமது படைப்புலகம் அதைத் தாண்டி ஒன்றுமில்லை. அதற்கப்பால் நாங்களும் ஒன்றுமில்லை.

இப்போது அந்த மாபெரும் படைப்பாளிக்கு முன்னால் இயல்பாக நமது தலை குனியும்.

நாம் ஒன்றுமேயில்லாத வெறும் கூடுகள்தான் என்பதை அந்த மாபெரும் படைப்பாளி எப்போதுமே நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றான். அதை அன்றுதான் நாம் புதிதாகப் பார்க்கும் அழகிய சின்னஞ்சிறிய பூச்சியொன்று அல்லது வண்டு ஒன்று வெகு சுலபமாகப் பறைசாற்றிவிட்டுச் சென்றுவிடும். 
எத்தனை கோடிப் படைப்பினங்கள் இப்படி இன்னமும் மனித சக்திக்கு அப்பாற்பட்டு இந்தப் பிரபஞ்சத்தில் வசிக்கின்றன. மனிதனுக்கு சவால் விடுக்கின்ற எத்தனை அற்ப உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. 

இப்போது நாம் நம்மீது கொண்டிருக்கும் பெருமிதம் குறித்துக் கேள்வி கேட்டுப் பார்த்தால் பதில் கிடைக்கவேண்டும். அவ்வாறு பதில் கிடைக்காது போனால் அது நமது துரதிஷ;டம். நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் நமது புத்தி மிகவும் சொற்பமானதுதான், நமது மூளைக்கு அவ்வளவுதான் முடியும் என்பதுதான் உண்மை.

நமது எழுத்துக்களில் ஒரு மகா பிரமாண்டத்தைக் கற்பிதம் செய்து கொண்டு நாம் பெரும் படைப்பாளிகள் என்று மனத் திருப்பி காண்கின்ற போது நம்மைவிடத் துரமிஸ்டசாலிகள் ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

ஏனெனில் பல்லாயிரம் ஒளியாண்டு தூரத்தில் பார்வையில் தோற்றுவதும் மறைவதுமாக புள்ளியளவுக்கு மின்னிக் கொண்டிருக்குமஇருக்கின்ற ஒரு நட்சத்திரம் எத்தனை பிரமாண்டமானது அதைப் படைத்தவன் எத்தகைய மகா பிரமாண்டமாக இருப்பான். அத்தகைய மகாபடைப்பாளி பற்றிச் சிந்தித்து அமைதி கொள்கன்ற உள்ளங்கள், அல்லது அம்கா படைப்பாளிக்கு முன்னால் சிறுமைகொண்டு தலைவணங்கி நிற்கின்ற மனிதர்களால்தான் உலகம் திரும்பிப் பார்க்கும் சின்னச் சின்ன விசயங்களைச் செய்ய முடியும். அது வரலாறாகி நிற்கும். 

தலைக்கணம் கொண்டு செருக்கு பிடித்து ஆணவம் தலைக்கேறி என்னை விடடால் ஆள்கிடையாது என்று மனிதப் பலவீனங்களில் புகுந்து காரியம் சாதித்துச் செல்லும் இலக்கியப் படைப்பாளிகள் நீண்ட தூரம் மிக வேகமாப் பயணித்து ஒரு கட்டத்தில் ஸ்தம்பித்து நிற்கையில் தான் தோன்றும் எங்கோ தவறு விட்டிருக்கின்றோம் என்பது. எல்லாவற்றுக்கும் மேலாக மீண்டு வர ஒரேயொரு வழிதான் இருக்கும் அது பணிவினால் ஆனதாக இருக்கும். பெருமையைத் தொலைத்துவிட்டுத் திரும்பி வரும் பாதையாக இருக்கும். புத்தி இருந்தால் திரும்பி வந்து பிழைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அங்கே நின்று சான்றுகளேயில்லாத வாழ்க்கையோடு அழிந்து போக வேண்டியதுதான்.

தெய்வ நம்பிக்கையில்லதவர்களை என்ன செய்து என்ற கேள்வி எழலாம். அதற்குப் பதில் அவர்கள் பாவம் என்பதுதான். இன்னும் அவர்களால் சின்னஞ்சிறிதாய்த் தோன்றும் ஒரு பென்னம்பெரிய நட்சத்திரத்தில் இருந்து படிப்பினை பெறத் தெரியவில்லை. அற்பமான கேள்விகளுக்கே அவர்களிடம் பதில் இருக்காது அதனால் அவர்களை கழிவிரக்கத்துடன் பரிதாமாகக் கடந்து செல்வோம்.

மாபெரும் படைப்பாளி எப்போதும் வல்ல இறைவன் மட்டும்தான். என்றென்றைக்கும் அவன் மட்டுமேதான். 


No comments:

Post a Comment