Saturday, March 5, 2016

நேர் மறை 15 கேள்விகளுக்கு குப்பிழான் ஐ. சண்முகன் பதில்கள்

நேர் மறை 15 கேள்விகளுக்கு 
குப்பிழான் ஐ. சண்முகன் பதில்கள்

01. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
நான் கட்டுகளற்றவன். எனக்குச் சரியென்ப்பட்டதையே செய்பவன். என்னால் மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளவன்.

02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
முரண்பாடுகள் இயல்பானவை. அவரவர்கள் அவரவர்களது இயல்பிலேயே இயங்குவார்கலென்பதில் நம்பிக்கை உள்ளவன். எனக்கு உடன்பாடனாவற்றை ஏற்று கொள்வேன். முரண்பாடானவற்றுடன் மாறுபடுவேன். முரண்பாடுகளையும் நட்பு ரீதியாகவே கையாள முயல்வேன்.

 03. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
கவர்ந்தவையென்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவுமில்லையென்றே நினைக்கிறேன்.

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
சட்டென நினைவில் வந்த பெயர்கள் இவை ... முல்லைமணி சுப்பிரமணியம், தெளிவத்தை ஜோசெப் (புனை பெயரில்), அ. யேசுராசா, எம்.கே. முருகானந்தன்இ இரஞ்சகுமார், இயல்வாணன், சண்முகம் சிவலிங்கம், இராகவன், கருணாகரன், குணேஸ்வரன், அஜந்தகுமார், மயூரரூபன், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், சி. உதயகுமார், க. சட்டநாதன், சோ. பத்மநாதன், த. ஜெயசீலன் இப்படியே.....

05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
2003 ல் நிகரி வெளியீடாக வந்த 'அறிமுகங்கள்- விமர்சனங்கள் குறிப்புகள்' என்ற எனது நூலில் பலரும் இடம்பெற்றுள்ளார்கள். பின்னரும் பலரைப் பற்றி எழுதியுள்ளேன்.


06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
என்னை நான் அறிந்து கொள்ளவும்இ எனது அறிவுப்பரப்பை விசாலப் படுத்தவும் உதவியவர்களை  நன்றியுடன் நினைவு கூறுவேன். அமரர்கள் கா.க சோமசுந்தரம், பண்டிதர் செ.நடராசா, பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை சிவகுமார் ஆகியோருடன் இன்னும் பலர்.

07. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
பல புத்தகங்கள் எனக்கு அவ்வாறு தோன்றின.

08. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
பற்பல புத்தகங்கள் என்னைப் பிரமிக்க வைத்தன. பதின்மவயதில் காந்தியின் சத்திய சோதனையிலிருந்து.... அண்மைக்காலங்களில் ஏழுதலை முறைகள்( சழழவள)இ தமிழில் மொழிபெயர்பாக வெளிவந்த ரூஷியநாவல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.

09. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
நானும் எழுத வேண்டும் என்ற முனைப்பு மெலெழுந்த காலங்களில் வெளிவந்த தீபம்இ கணையாழிஇ தாமரை பின்னர் சுபமங்களா.

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்குஇ சிறுகதைக்குஇ ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
பொருளாதாரமதிப்பு.....? மற்றவர்களில் சிறிதளவாவது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற மதிப்பே போதுமானது.

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
நோபெல் பரிசு பெற்ற நாலைந்து நூல்களைப் படிந்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் முக்கியமானவை.

12. உங்களுக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
தமிழில் மட்டுமே பாண்டித்தியம் உள்ளது.

13. முகநூல்இ வலைப்பூஇ இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
குப்பைகளும் இருக்கின்றன. மாணிக்கங்களும் இருக்கின்றன.

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
மனைவி- மகள்- நான் சிறிய குடும்பம். அம்மா வெளிநாட்டில் ஜீவியவந்தராக இருக்கிறார். ஒரு சகோதரன் உள்ளூரிலும்இ நாலு சகோதரங்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள்.

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
அப்படி ஒருபோதும் தோன்றியதே இல்லை.

No comments:

Post a Comment