Saturday, March 5, 2016

நேர்மறை 15 கேள்விகளுக்கு தம்பி ஐயா தேவதாஸ் பதில்கள்



1. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
எழுத்து மூலம் மானுடம் பாடுபவன்

2. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
நான் யாருடனும் முரண்படுவதில்லை

3. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
இதுவரை அப்படி ஒன்றைக் கண்டதில்லை

4. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
பேராசிரியர் துரை மனோகரன்,மா.பா.சி, அஷ்ரப் ஷிஹாப்தீன், கே.எஸ்.சிவகுமாரன்,வீ.ஏ.திரு ஞானசுந்தரம், பரசுராமன், இன்னும் பலர்

5. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
ஒலிபரப்பாளர்கள் நூறு பேருக்கு மேல், சினமாக்காரர்கள் நூறுபேருக்கு மேல், எழுத்தாளர்கள் நூறுபேருக்கு மேல்

6. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
நல்ல கலைஞர்கள் அனவரையும்

7. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
வாங்கும் போதே நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவேன்.

8. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் புத்தகங்களைப் வாசிக்கும் போது

9. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
எல்லா இலக்கிய சஞ்சிகைகளையும் பிடிக்கும்

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
சில தொடர் கட்டுரைகளைக் கூட இலவசமாகத்தான் இன்னும் எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்தால்தான் நோபல் பரிசு என்பது தவறு

12. உங்களுக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
தமிழ்,ஆங்கிலம், சிங்களம் ஆகியவற்றில் சிறிது பாண்டித்தியம்

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
சுதந்திரமாக எழுத முடிகின்றது. ஆனால் சுய கட்டுப்பாட்டுடன் எழுத வேண்டும்.


14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
நான்,மனைவி, மூத்த மகன்மார் இருவர் கனடாவில் வாழ்கின்றனர், மூன்றாவது மகன் வங்கியில் வேலை செய்கின்றார். ஒரேயொரு மகள் அமெரிக்காவில் படிக்கின்றார்.

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
அந்தளவுக்குப் பெரிதாக எனக்குக் கோபம் வருவதில்லை

No comments:

Post a Comment