Thursday, June 11, 2015

ஸர்மிளா ஸெய்யித் புரட்ட நினைக்கும் மலை - 03

- முஸ்டீன் - 

தென்மாகான சபையில் பாலியல் தொழிலாளர்களுக்கு சட்ட அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று கோரி ஒரு பிரேரனையை ஒரு சிங்கள மாகாண சபை உறுப்பினர் முன்வைக்கின்றார் அப்பிரேரனை குறித்து பலரிடமும் பீபீசி கருத்துக்களைப் பெற முயன்றது. அதிகமானவர்கள் அதை மறுத்துவிட்டதாக அறியக் கிடைக்கின்றது. அப்படியிருக்கும் போதுதான் அப்பிரேரணை குறித்த தனது கருத்துக்களை சர்மிளா செய்யித் பீபீசியிடம் முன்வைக்கின்றார். அப்பேட்டியை முழுமயாக விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டிருந்தது. அதைத் திரும்பத் திரும்ப பல தடவைகளில் வாசித்து வௌ;வேறு கோணங்களில் விளங்க முயற்சித்தன் படி எனக்குத் தோன்றியது ஒன்றுதான்.

பீபீசியின் கேள்விக்கு சர்மிளா இப்படி பதில் அளிக்கத் தொடங்கியிருந்தால் இன்று எந்தப் பிரச்சினையும்வந்திருக்காது. 'இஸ்லாம் விபச்சாரத்தை முற்றாகத் தடை செய்திருக்கின்றது. அதை நெருங்கவும் வேண்டாம் என்று சொல்கின்றது. அந்த வகையில் ஒரு முஸ்லிம் பெண்ணாக நான் இது குறித்து கருத்துரைப்பதை தவிர்ப்பதுதான் சரி. ஆனாலும் ஒரு சமூகவியல் செயற்பாட்டாளராக நோக்கும்போது குறித்த மாகாண சபை உறுப்பினரின் பிரேரணை...' 

இந்தத் தொடக்கத்தில் விட்ட பிழை இறுதியில் சர்மிளா விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கவேண்டும் என்று குரல் கொடுக்கின்றார் என்று ஆகிப் போனது. ஒரு மயிரிழையில் எல்லாம் மாறிப்போனது. சமுகத்தில் சிலர்  அவசரப்பட்டு எடுத்த சில தீர்மானங்கள் சில முட்டாள்கள் நடந்து கொண்ட விதம் எல்லாம் இந்தப் பிரச்சினையை உடன்பாட்டு ரீதியில் அல்லாமல் முரண்பாட்டு ரீதியிலேயே பிடிவாதத்துடன் எதிர்கொள்ளும்படி சர்மிளாவைத் தூண்டிற்று. 

அடுத்த நாள் பீபீசியில் சர்மிளா உரத்துச் சொன்ன எந்த நியாயப்படுத்தல்களும் மக்களின் செவிகளில் விழவே இல்லை. இந்தப் பிரச்சினையில் சர்மிளா கொண்டிருந்த பிடிவாதம்தான் தொடர்ந்தும் சர்ச்சையைக் கூர்மைப்படுத்தும் நிலைக்குக் கொண்டு சென்றது என்பது ஒரு பக்கம், உட்சாக மடையர்களின் தலைகால் புரியாத எதிர்ப்பு சமமான மறுபக்கம் என்பது எனது அவதானம். 

இதை விட மிகவும் சர்சைக்குரிய கருத்துக்களை அதுவும்  இஸ்லாமிய அடிப்படைகளையே புரட்டிப் போடும் அளவுக்குச் கண்டனத்திற்குரிய கருத்துக்களைக் கொண்டு கவிதை எழுதியவர்தான்  சாய்ந்தமருதைச் சேர்ந்த இஸ்ஸத் ரிஹானா எனப்படும் அனார். லெஸ்பியன் முறை பாலுறவை ஆதரித்து எழுதியவர், கணவனை விட்டுவிட்டு அடுத்தவன் மீது ஆசைப்படுவதில் தப்பில்லை என்று பகிரங்கமாக எழுதியவர். (இவரின் கணவர் இன்னொரு எழுத்தாளரின் மனைவியை தனது படுக்கையறைக்கு வருமாறு அழைத்த விவகாரத்தில் அவருக்கு எதிராக வத்தளை பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாடு இன்னும் நிலுவையில் இருக்கின்றது) அனார் விபச்சாரத்தையும் தாண்டி இஸ்லாத்தின் ஆன்மாவில் ஓங்கிக் குத்தியவர். இறைவனையே தான் தண்டிக்க வேண்டும் என்று பகிரங்கமாக மேடையில் பேசியவர் உதாரணத்திற்கு

'...எல்லாவிதக் கட்டாயத் தினிப்புக்களில் இருந்தும் வெளியேற விரும்பினேன். யாரையேனும் இதற்காக தண்டிக்க வேண்டுமென நினைத்தேன், குறைந்தபட்சமாகக் கடவுளையேனும்...'
(அனார் - இலங்கை - தாயகம் கடந்த தமிழ் - தொகுப்பு மாலன் - பக் 160)

இப்பேர்ப்பட்ட கருத்துக்களையே மூக்கு மசிறு அளவுக்கேனும் கணக்கெடுக்காத  முஸ்லிம் மக்கள் கூட்டம் சர்மிளாவின் மீது ஏன் இந்தக் காட்டுப் பாச்சல் பாய்கின்றது என்று ஒரு கணம் நான் சிந்தித்துத்துப் பார்த்தேன். அந்த அரசியலின் பின்புலம் இன்னும் எனக்குச் சரியாகப் புரியவில்லை. இந்த இடத்தில் எனது மக்களை நோக்கித்தான் என்னால் கேள்விகளைத் தொடுக்க முடியும். எனது மக்களின் வழிகாட்டிகள் என்று தொப்பியும் தாடியுமாக மிம்பர் மேடைகளில்  முழங்கும் ஆலிம் சாக்களை நோக்கித்தான் எனது சாட்டையைத் திருப்ப முடியும். சமயத்துக்கு ஒவ்வாத ஒரு கருத்துக்காகப் போரட்டக் களத்தில் குதிப்பதென்றால் அப்படி ஒவ்வாத எல்லாக் கருத்துக்களுக்காகவும் அது நடைபெற்று இருக்க வேண்டும். இனால் இங்கு அப்படியொன்று நடைபெறவில்லை. அப்படியானால் அதற்குப் பின்னால் இருப்பது என்ன?  எனது சிறு புத்திக்கு இப்படிப் படுகின்றுது . 

அவர்களின் அறியாமையும் தேடலின்மையும் சோடாக் கேஸ் போன்று சீறிப் பாய்ந்து சற்று நேரத்தில் அடங்கிப் போகும் தன்மையும், சீசன் போராளிகளாய் மாறி தாமும் இன்னும் உயிருடன் இருக்கின்றோம் என்பதைப் பறைசாற்றிவிட்டு ஓய்ந்து போகும் வெறும் உணர்ச்சி வசப்படும் உயிருள்ள பிணங்களாயும் அவர்கள் இருப்பதுதான். இந்தப் பிணங்களையே கொதித்தெழச் செய்ததில் சர்மிளாவின் பிடிவாதத்திற்கு பெரும் பங்கு இருக்கின்றது. 

ஏன் சர்மிளா இந்த விடயத்தில் அவ்வளவு பிடிவாதமாக இருந்தாள்? என்ற கேள்விக்கு கட்டாயம் பதில்  தேடியாக வேண்டும். முதல் நாள் பேட்டியில் இருந்த வேகம் பிரச்சினையாகிவிட்டபின்னர் மறுநாள் தன்னை நியாயப்படுத்துவதிலும் சரணடையாமல் தப்பித்துக் கொள்வதிலும் உயர்ந்த பட்ச  கரிசனை கலந்திருப்பதாய் வெளிப்பட்டது ஆச்சரியமானதல்ல. நிலைமையைப் பூதாகரப்படுத்தியது பேட்டியில் தொனித்த கருத்துக்கள்  மட்டுமல்ல சர்மிளாவின் பிடிவாதமும்தான்.

இந்நிகழ்வுக்குச் சில நாட்களுக்கு முன்னர்தான் சிறகு முளைத்த பெண் என்ற கவிதைத் தொகுதி வெளிவருகின்றது. அத்தொகுதியில் உள்ள இரண்டு கவிதைகள் வெளியீட்டின் போது திரையிடப்பட்டன அவற்றை நானே காட்சி வடிவமாகச் செய்து கொடுத்துமிருந்தேன். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல சங்கடங்களும் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் கனவுகளும் கவிதைகளாகி இருப்பதையும் அவதானிக்கலாம். கiவிதைகளில் சில இடங்களில் தொனிக்கும் விடயதானங்களில் எனக்கு முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகுறித்து நோக்குவதல்ல இங்குள்ள பிரதான விடயம். பொதுவாக பெண்ணுடலை முன்னிறுத்திய கவிதைகளை விட்டும் தூரமாக நிற்கவே நான் விரும்புவேன். எனது வாழ்வில் நேர்ந்த ஒNயொரு அவலம் ஒரு பதிலடிக்காக குறிப்பிட்ட வகையறா கவிதைகள் அடங்கிய சில தொகுதிகளை வாசிக்கக் கிடைத்ததுதான். ஆனால் சர்மிளாவின் கவிதைகளில் அந்தளவுக்கு அஜீரணம் இல்லை. சில இடங்களில் மட்டும் நெருடல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லைதான். சில விடயங்களை எழுதுபவரின் தனிப்பட்ட வாழ்வோடு சம்பந்தப்படுத்தி யோசிக்கும் மனித மூளை நிறைய இடங்களில் தடமாறி விழத்தான் செய்யும். இதுவா? அதுவா? அப்படியிருக்குமோ அல்லது இப்படியிருக்குமோ என்று தனது புத்திக்கொப்ப ஏதேனுமொரு பிடிமானத்தைத் தேடி ஓடும் இந்த இயல்புக்கு அவரேதான் பொறுப்பாக முடியும். 

இந்த மனித இயல்பைக் கடந்து ஒருவரின் எழுத்துலகில் நகர்வது என்பது எந்தளவுக்குச் சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் ஒருவர் எழுதுவது எல்லாமே அவரது வாழ்வில் நடந்ததாக அல்லது அவரே அதற்குரியவராகக் கருதும் ஒரு சின்ன இடைவெளியில் ஏன் பிறரின் வாழ்வில் நேர்ந்ததை தனக்குப் போல எழுதியிருக்கக் கூடாது என்று எண்ணத் தோன்றுவதில் இருந்து தூரச் செல்வதில்தான் ஒருவரின் எழுத்தில் தொனிக்கம் பல விடயங்களை உள்வாங்குவதில் ஒரு நியாயத் தன்மையைத் தோற்றுவிக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. மற்றவர்களுக்கு இதில் வேறு கருத்துக்கள் இருக்கலாம்.

சர்மிளாவின் எழுத்துக்கள்  குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம். எந்தத்தனிப்பட்ட நிலைப்பாடுகளுக்கும் அப்பால் நின்று அவற்றைப் பார்க்க முயல்கின்றேன்.

தனிமனித ஒழுக்கம் என்பதில் இருந்து எழுத்துப் பிறல்தல் மட்டுமல்ல வார்த்தையும் நடத்தையும்தான்...
தொடரும்...

No comments:

Post a Comment