Sunday, January 14, 2018

இரண்டு பேர் : மயூரனும் மீநிலங்கோவும்

இரண்டு பேர்
மயூரனும் மீநிலங்கோவும் 

2006களில் ஆத்மாவின் ஏற்பாட்டில் திரைப்படங்கள் சம்பந்தமான ஒரு பயிற்சிப் பட்டரையில் தான் முதன் முதலாக மயூரனைச் சந்தித்தேன். அப்போதிருந்தே ஒரு நெருக்கமான உறவு இருந்தது. அதாவது அன்றாட நடப்புகள் சார்ந்து கருத்துப் பரிமாற்றம் செய்யும் போது ஒத்த சிந்தனையுடையவெளிப்பாடுகள் அந்த நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.அப்போது வீரகேசரியில் பணிபுரிந்த கோபி கிருஷ்னாவை அடிக்கடி ஆமர் வீதில் சந்தித்து கதைத்துக் கொள்ளும் பொழுதுகளிலெல்லாம் மயூரனையும் சந்தித்துக்கொள்ளவும் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளவும்  கிடைக்கும்.
  
தகவல் தொழிநுட்பம் சார்ந்து மிக எளியமுறையில் மயூரன் அளிக்கும் விளக்கங்கள் அதில் அடிப்படையறிவற்றவருக்கும் விளங்கும் தன்மையது. இலகுவான மொழியில் அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்ற ஆசையை பல முறை அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார். ஆயினும் அந்தப் பணியை முன்னெடுக்கும் கால அவகாசத்தை அவர் இன்னும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பதுதான் கவலையளிக்கின்றது. தொழிநுட்பத்துறை சார்ந்து தெளிவுகளைப் பெற நினைக்கும் நண்பர்கள் அல்லது ஒரு இணையதளத்தை உருவாக்கிக்கொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்புகொள்ள வேண்டிய மிக நம்பிக்கையான ஒரு நபர் நிச்சமாக மயூரன்தான் என்று அடித்து உத்தரவாதப்படுத்திச் சொல்வேன். என்னிடம் யாராவது இது சார்ந்து கேட்டால் மயூரனைப் பரிந்துரைசெய்துவிட்டுக் கடந்து செல்வேன். ஏனெனில் இந்தத் துறைக்குள் மோடிமஸ்தான் வித்தைகாட்டும் நபர்கள் மிகமிக அதிகம் மயூரணுக்கு அந்த வித்தை வசப்படவில்லை என்று நினைக்கின்றேன். 

2007களில் நான் தயாரித்த தீ நிழல் திரைப்படத்தை 2008இன் இறுதியில்தான் முழுமைப்படுத்த முடிந்தது. பின்னர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட அத்திரைப்படம் திரைக்கு வராமலே முடங்கிப் போகும் நிலைவந்தபோது அந்தப் படைப்பு அமுங்கிப் போய்விடக்கூடாது என்பதற்காக அதனை 58 நிமிடங்களுக்குத்தான் மீளவும் சுருக்கி எடிட் பண்ண முடிந்தது. சட்டரீதியானபிரச்சினைகளை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக அதனை அந்தளவுக்கு சுருக்க வேண்டியேற்பட்டது. படைப்பை மக்கள் மன்றுக்கு எடுத்துச் செல்ல அந்த நேரம் எனக்குக் கை கொடுக்கும் என்றும் நம்பினேன். கொழும்பில் அமைச்சர் அமிர்அலியின் அமைச்சில் அஷ்ரஃப் சிஹாப்தீன் உதவியோடு நண்பர்களுக்காக அதைத் திரையிட்ட போது குறிப்பிட்ட எழுபது பேருக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்தேன். இருவரைத் தவிர மற்ற அனைவரும் வந்திருந்தார்கள்.

எல்லா வேலைகளும் முடிந்து அனைவரும் சென்ற சென்றபின்னர் அங்கு ஒழுங்கின்ற வீசப்பட்ட வாழைப்பழத் தோல்களையும் கேக்துண்டுகளையும் பால்பெக்கற்றுகளையும் மயூரன் பொறுக்கி ஒரு இடத்தில் சேர்த்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அதைத் தொடர்ந்து செய்தார்  அப்போது அவர் சொன்ன ஒரு விடயம் ' மாசாலா சினமாப் புத்தியில் மூழ்கியிருக்கும் ஆக்களுக்கு மத்தியில் நல்ல சினமாவைப் படைத்திருக்கும் உங்கள் பணிக்கு என்னால் ஒத்துழைப்பு நல்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, ஆனால் இதைச் செய்தால் இந்தப் படைப்புக்காக உங்களுக்காக உதவி செய்த திருப்தியாவது கிடைக்குமே' உண்மையில் நான்நெகிழ்ந்து போனேன். இப்போது நினைக்கும் போதும் மிக்க உணர்வுபூர்வமாக இருக்கின்றது. அத்துடன் திரையிடலுக்குப் பின்னர் நடந்த கலந்துரையாடலில் மிக வெளிப்படையாக கருத்துக்களைப் பகிர்ந்த மயூரன் விடுபாடுகளைச் சுட்டிக்காட்டிவிட்டு 'ஓர் அநியாயத்தை எதிர்ப்பதற்குத் துணிவுள்ள முஸ்டீனுக்கு எல்லாவித அநியாயங்களையும் எதிர்பதற்கான துணிவிருக்கும், ஓர் அநியாயம் எந்தவடிவில் இருந்தாலும் எதிர்க்கும் ஒருவனால்தான் எல்லாவித அநியாயங்களையும் எதிர்க்கும் திராணியுள்ளவனாகத் திகழ முடியும், ஆக இந்தத் திரைப்படம் யாருக்கும் எதிரானாதல்ல ஒரு சமுகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரானது என்று எடுத்துக் கொள்வோம்' இந்தக் கூற்று ஒரு போதும் என்னால் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது. இப்படிப்பட்ட மேம்பட்ட மனநிலை வாய்க்கப்பெறுதல் என்பது மிகவும் முக்கியமான அப்படிப்பட்ட மனிதர்களும் மிகவும் குறைவுதானே.

அடுத்தது மயூரனின் வாசிப்பும் தேடலும். கடவுள் என்ற நபரை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனிதனாக மேம்பட்ட வாசிப்பையும் தெளிந்த சிந்தனையையும் கொண்டிருக்கும் அவருக்கு எல்லாவிடயங்கள் தொடர்பிலும் கரன்ட்லி அப்டேப் இருக்கும். தமிழ்மிரர்இலக்கியப்பக்கம் செய்யம் போது மயூரனிடம் சில கேள்விகள் கேட்டேன் இன்று வரை அவர் பதில் தரவில்லை பதில் தர வேண்டும் என்பதற்காக மீண்டும் அதே கேள்விகள் கீழே!
01. உங்களை நீங்கள் எப்படிப் புரிந்து வைத்திருக்கின்றீர்கள்?
02.உண்மையான நண்பர்களை எப்படி அடையாளம் காண்பீர்கள்?
03. இலக்கியவாதிகளுக்கிடையே நிலவும் நட்பு எத்தகையது?
04. அன்மைக்கால புத்தகவரவுகளில் உங்கள் வாசிப்புக்குட்பட்டதில் உங்களைக் கவர்ந்த புத்தகள் சிலதைச் சொல்லுங்களே?
05. உங்கள் பார்வையில் சிறந் படைப்பாளிகள் மூவரைச் சொல்லுங்கள்?
06. நன்றியோடு யாரையெல்லாம் நினைவுகூருகின்றீர்கள்?
07. இப்போது வருகின்ற சிறு சஞ்சிகைகள் பற்றிய அபிப்பிராயம்?
08. இலக்கிய உலகின் ஜாம்பவான்கள் என்று சிலர் திரிகின்றார்களே அவர்களைப்பற்றி?
09. ஐவு யில் தொழிற்றுறை தேர்ச்சியுள்ள நீங்கள் பல்துறை ஆர்வலராக எப்படிச் செயற்படமுடிகின்றது?
10. இலங்கையின் தமிழ் சினமா மெல்ல உயிர்பெறுவதாகத் தெரிகின்றதே உங்கள்அவதானம்?
11. உங்களின் வெளிப்படையான கருத்துக்களை மற்றவர்கள்எப்படி எடுத்துக்கெள்கின்றார்கள்?
12. சமுகவியல் செயற்பாடு  இலக்கிய ஆர்வம் என்று ஒரு தெிவானஅடையாளமாக உங்களால் எப்படி மாறமுடிந்தது?
13. மயுரன்என்றால் பல்துறைசார் சார் தேடலுள்ள எளிமையானமனிதன் என்ற அடையாளப்படுத்தலை எப்படி எடுத்துக் கொள்கின்றீர்கள்?
14. இலங்கையின் பத்திரிகைகளில் இலக்கியப்பக்கங்கள் உங்கள் பார்வையில் எப்படி?
15. அன்மைக்கால உங்களின் செற்பாடுகள்பற்றி?
16. நம்நாட்டு அரசியல் போக்கு எந்தளவுக்கு இலக்கியத்தில் பிரதிபலிக்கின்றது?
17. நம்நாட்டுப் படைப்பாளிகளுக்கு சர்வதேச  அரசியல்வெளிபற்றிய புரிதல் எந்தவுக்கு இருப்பதாக உணர்கின்றீர்கள்?

பெருவாரியான களச் செயற்பாடுகளில் மயூரனை நான் அவதானித்திருக்கின்றேன். வெறும் பேச்சு வகையறாக்களில் இருந்து அவரைப் வேறுபடுத்திக் காட்டும் முக்கியமான பிரிகோடு அது. 

2010ல் இந்தியாவின் கீற்று இணைய தளத்தின் 6வது ஆண்டு நிறைவு விழாவில் ஒரு பேச்சாளராகக் நானம் கலந்துகொண்டு பேச அது சர்ச்சைகளைக் கிளப்பிட அதன் தாக்கத்தை கீற்று பதிவு செய்த நீண்ட நேர்காணல் மேலும் என்னை வெளிப்படுத்த மயுரன் தொடர்பு கொண்டு இலக்கியப் பேரவையில் ஒரு கலந்தரையாடலையும் ஏற்பாடு செய்திருந்தார் அது வெள்ளவத்தையில் இடம்பெற்றது. அதற்குப்பிறகு அவ்வப்போது மயூரனைச் சந்தித்துக்கொள்ள முடிந்தது. ஹபறனையில் இருந்து கொழும்பு வரை எனது வாகனத்தில் அவரையும் அழைத்துக் கொண்டு வந்த பயணத்தில் ஒரு செக்கனைக் கூட வேஸ்ட் பண்ணாமல் அவித்த கச்சான்கொட்டைகளைக் கொறித்துத் தள்ளியபடி கதைத்துக் கொண்டு வந்த தருனம் எங்களுக்குள் பேசுவதற்கு எவ்வளவு விசயங்கள் இருக்கின்றன என்பதைத்தான் அறிவித்தது. மயூரனைக் காணும் போதெல்லாம் நான் கேட்கும் ஒற்றைக் கேள்வி 

எப்போது திருமணச் சாப்பாடு தரப் போகின்றீர்கள் என்பதுதான்.
மயூரன் அந்தச் சாப்பாட்டை எனக்கு இன்னும் தரவில்லை!
 மீநிலங்கோ

மீநிலங்கோ இதுவரை நான் சந்திக்காத ஒருவர் ஆனால் வாராவாரம் அவரது கட்டுரைகளை தமிழ்மிரரில் வாசிக்கத் தவறுவதில்லை. அவற்றை வாசிக்கும் போது எனது எழுத்தை நானே மீளப் படிப்பது போன்று தோன்றும். அந்தளவுக்கு எனக்குள் இருக்கும் சிந்தனைகளின் வெளிப்பாடாகவும் பார்வைக் கோணமாகவும் அவரது கட்டுரைகள் இருப்பதால் இயல்பாக அவை என்னில் ஈர்ப்புச் செய்வது வாஸ்தவம்தானே.

அதிகாரம் பற்றிய பார்வையும் உலக இயக்கத்துக்குப் பின்னால் இருக்கின்ற பலம்பொருந்திய கைகள் பற்றியும் தெளிவில்லாமல் பல்வேறு உலகவிடயங்கள் நாட்டு நடப்புகள் வெளிநாட்டுப் பூசல்கள் பற்றியெல்லாம் எழுதப்பட்ட பல கட்டுரைகளை பலரும் எழுதி வாசித்துவிட்டு காரித் துப்பியுமிருக்கின்றேன். அவர்களிடம் தேடலுமில்லை புரிதலுமில்லை சிந்தனையுமில்லை. ஆனால் மீநிலங்கோ கட்டுரைகளுக்காக தன்னை மிகவும் தயார் படுத்துகின்றார். தகவல்களைத் திறம்படத் தேர்வுசெய்து வகைபிரித்து எல்லா விடயதானங்களோடும் இணைப்புச் செய்து அவற்றை தெளிவாக முன்வைக்கும் பாங்கு அவரது கடினமான உழைப்பையும் ஈடுபாட்டையும் அடையாளப்படுத்தப்போதுமானது. 

ஏகாதிபத்தியம் என்ற ஒன்றை சரியாக விளங்கிக் கொள்ளாத மன்னாங்கட்டிகளால் உலக அரசியல் பற்றி எதையும் வியாக்கியானஞ் செய்ய முடியாது. அத்தகு மன்னாங்கட்டிகளின் பார்வை கொப்பி கட் பேஸ்ட்தான் ஏதாவது இங்லிஷ் கட்டுரை தமிழில் அவரது பெயருடன் வெளிவரும் அத்தகு மனிதர்களுக்கு மீநிலங்கோவிடம் கிலாசுக்குச் செல்லுமாறு பரிந்துரை செய்கின்றேன். நமக்குப் பிடிக்காவிட்டாலும் உண்மைகளைச் சொல்லுதல் எழுதுதல் பரப்புதல் என்பது தூய்மையான மனபெற்றமைக்குச் சான்று, விபச்சார எழுத்தில் இருந்து அத்தகையவர்கள் வெகுதூரத்தில் இருப்பார்கள். அப்படியொரு தூரத்தில்தான் இவர் இருக்கின்றார்.

ஒரு நாளை முழுமையாக ஒதுக்கி அவருடன் கதைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் இருக்கின்றது. எப்போதாவது அது சாத்தியப்படும் என்றும் நம்புகின்றேன். அப்போது எங்களுக்கிடையில் பகிர்ந்து கொள்ளவும் தெரிந்து தெளிந்துகொள்ளவும் நிறைய விசயங்கள் இருக்கும். 

ஒரு திறமையான சரியான ஆளைத் தேடிப்பிடித்து பொறுப்பை ஒப்படைத்து திருப்தி காண்கின்ற தமிழ்மிரரின் பிரதம ஆசிரியர் நண்பர் மதனுக்கு ஒன்றுக்கு இரண்டு சல்யூட். ஏனெனில் தெளிந்த நீரோடை போன்று  பயணிக்க மதனும் தயாராக இருக்கின்றார் என்பதால்தான் இத்தகு திறமைசாலிகளைத் தேடிக்கண்டுபிடித்து வாய்ப்புக்கொடுக்க முடிகின்றது. நண்பா என் பணிமென்மேலும் சிறக்கட்டும்.

மீநிலங்கோ மென்மெலும் தேடலுடன் எப்போதும் எழுத வேண்டும் அதற்கான வாய்ப்பையும் அவகாசத்தையும் ஆற்றலையும் ஆளுமையையும் ஆரோக்கியத்தையும் அமைதியையும் காலம் அவருக்குப் பரிசளிக்க வேண்டும் என்று காலத்திடமே பிரார்த்திக்கின்றேன். ஏனெனில் காலந்தான் எல்லாம். மீநிலங்கோவின் கட்டுரைகளை நண்பர்கள் கட்டாயம் படிக்க வேண்டுமென்று நான் பரிந்துரைக்கின்றேன்.

மீநிலங்கோவுக்கும் மயூரனுக்கும் இடையில் இத்தகு உலக அரசியல் சார்ந்த விடயங்களில் நிச்சயம் நிறையவே ஒற்றுமைகளும் ஒத்தகருத்தும் இருக்கும் என்பது எனது புரிதல். அவர்கள் சந்தித்துக் கொள்ளும் போது பேசுவதற்கும் பகிர்வதற்கும் விடயதானங்களுக்குப் பஞ்சமே இருக்காது என்றும் நம்புகின்றேன். இத்தகு சிந்தனைத் தெளிவுள்ள நண்பர்கள் சிலர் சேர்ந்து மாதத்தில் ஒருமுறை சந்தித்து அரட்டை அடித்து அதைப் பதிவு செய்து எழுத்தாக்கிவிட்டால் நிச்சயம் பல்வேறு பயணுள்ள கதவுகளை அவை திறந்து கொடுக்கும் அத்தகையொரு தொடர்சந்திப்பை சாத்தியப்படுத்தும் வழிமுறைகள் குறித்து யோசிக்கத் தோன்றுகின்றது. 

இலக்கியம் அரசியல் சினமா சமுவியல் போரியல் யுத்தம் புரட்சி மாற்றம் பொருளாதாரம் அழகியல் இறையியல் சூழலியல்  விவசாயம் நடைமுறைப் பிரச்சினைகள் வாசித்த புத்தகங்கள், எதிர்கொண்ட அனுபவங்கள் எதிர்பார்ப்புகள் எண்ணங்கள் சிந்தனைகள்  அவற்றைச் சாத்தியப்படுத்தும் வழிமுறைகள் என்று பல்வேறு தளங்களிலும் அனுபங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு பத்துப் பேர் ஒன்றினைவது ஒரு புரட்சிக்கு வித்திடுவதற்கு ஒப்பானதுதானே


Sunday, August 13, 2017

கிழக்கின் சுயநிர்ணயம்

கிழக்கின் சுயநிர்ணயம்

-முஸ்டீன்-
தோழர் எம்.ஆர் ஸ்டாலின் அவர்களின் உரையொன்றைத் தொகுத்து கிழக்கின் சுயநிர்ணயம் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கின்றார்கள். இப்போதுதான் அதைப்படிக்கக் கிடைத்தது. புத்தகம் கிடைத்தவுடனேயே அதைப் படிப்பதற்கான முக்கிய காரணி தோழர் ஸ்டாலினைப் பற்றி ஓரளவுக்கு எனக்குத் தெரியும். 2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் பிளவுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் நிலவிய பயங்கரம் கலந்த மௌனப்பெருவெளியில் தனித்து நின்று தற்துணிவோடு சிலர் தமது அக்கறையை வெளிப்படுத்தினார்கள். அந்த அக்கறையோடு 2005களின் நடுப்பகுதியில் நானும் இணைந்து கொண்டேன். 

அதன் பின்னரான எனது செயற்பாட்டுத்தளம் ஆயுதங்களோடு பின்னிப்பிணைந்து மரணத்தைப் சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு அலைந்த நினைவுகளை இப்போது மீட்டுத் தருகின்றது. அந்த அலைச்சலில்தான் தோழர் ஸ்டாலினை கிழக்கு மக்களின் நலன்மீது எப்போதும் அபிமானங்கொண்ட ஒருவராக நேரில் சந்திக்கக் கிடைத்தது. அதற்கு முன்னரே எக்சில் சஞ்சிகை மூலம் அவர் எனக்குப் பரிச்சயமானவராக இருந்தார். அவரது நியாயத் தன்மைகளை நான் முதன் முதலில் நேரில் கண்டு வியந்து நின்றது இப்போதும் தித்திப்பான பொழுதுகளாய்த்தான் தெரிகின்றது. 

விடுதலைப்புலிகள்முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு  கிழக்கு விடுவிக்கப்பட்ட சூழ்நிலையில் கிழக்குவாழ் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின்  எதிர்கால இணக்கப்பாடான வாழ்க்கைக்கு என்னவிதமான செயற்பாட்டுத்தளமொன்றை நிறுவலாம் என்பதில் இவரோடு இணைந்து நான் பணியாற்றிய பொழுதுகளில்தான் வுஆஏP தலைமையுடன் எமது அணி சார்பாக ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொள்வது என்று முடிவானது அது மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் மக்களுக்கான செயற்;பாட்டுத்தளத்தில் நிச்சயம் பெரிதும் சாதகமான பல விளைவுகளைத் தரும் என்ற நம்பிக்கையில் மேற்கொள்ளப்பட்ட சுயநலன்கள் கலக்காத முன்னெடுப்புகளாகும். அப்போது திரு சிவநேசத்துரை சந்திரகாந்தன் அரசியல் சாயம் கலக்காத ஒரு நல்ல மனிதராக இருந்தார். இங்கு ஒரு நல்ல மனிதராக இருந்தார் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். 

ஐந்து சரத்துகளை உள்ளடக்கிய தாக அந்த ஓப்பந்தம் வடிவமைக்கப்பட்டது. ஒப்பந்தத்துக்கான முதல் மாதிரி வரைபை தோழர் யூ.எல்.எம்.நஜீப் வரைந்தார் பின்னர் அதை நான் மேம்பட்ட முழுமையான வடிவமாக மாற்றினேன் அதில் நியாமான சொற்பிரயோகங்களை பிரயோகிக்க எந்தவிதமான உள்ளரசியலுமற்ற தெளிவான மனநிலையில் தோழர் ஸ்டாலின் செயற்பட்டார். கிழக்க தனி மாகாண சபைத் தேர்தலை முதன்முதலில் சந்திக்கின்றது அதன் பிறகாவது கிழக்குக்கு விடிவு கிடைக்கும் அதன் பின்னராவது கிழக்குவாழ் மக்கள் தமது தனித்துவ சமய கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பேணி நிம்மதியான வாழ்வு வாழ வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில்தான் எல்லா விதமான செயற்பாடுகளிலும் தோழர் ஸ்டாலின் வெளிப்பட்டு நின்றார். ஒப்பந்தத்தில் 'கடந்து காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் துரதிஸ்டவசமானது' என்று ஒரு வசனத்தை நான் சேர்த்திருந்தேன், அந்த வசனத்தை மற்றயதரப்பு நபர் ஒருவர் நீக்கியிருந்தார் ஆனால் தோழர் ஸ்டாலின் வெட்டப்பட்ட அந்த வசனத்தைப் பார்த்துவிட்டு கட்டாயம் அதைச் சேர்க்க வேண்டும், கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது உண்மைதானே அந்த உண்மையை வெளிப்படுத்துவதில் தப்பில்லைதானே எனவே அதைக்கட்டாயம் சேர்த்த்துவிடுங்கள் என்றார் அவரது கையாலே வெட்டப்பட்ட அந்த வசனத்தை மீண்டும் எழுதினார் அவரது இந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த நேர்மையை அவர் இன்று வரை விட்டுக் கொடுக்கவில்லை என்றும் விட்டுக்கொடுக்கவுமாட்டார். இவரது  இந்த நேர்மையும் கிழக்கு மக்களுக்கான தனித்துவங்களுடன் கூடிய எதிர்பார்ப்புகளுமே கிழக்கின் சுயநிர்ணயம் என்ற நூலில் பெரிதும் பிரதிபலிக்கின்றது. 

கிழக்கு கிழக்காக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று கிழக்கு மக்கள் எதிர்பார்ப்பதில் என்னதான் தப்பிருக்கின்றது என்பதை ஆதாரங்களுடன் கிழக்கு கிழக்காகத்தான் வரலாறு நெடுகிலும் இருந்திருக்கின்றது வடக்கின் வாலாக இருக்கவில்லை என்பதை இதைவிட அழகாகக் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கின்றேன். புலிகளின் தென் தமிழீழம் அதே புலிகளினால் சகோதரப்படுகொலைகளுக்குப் பின்னர் சிதைக்கப்பட்ட நிலையில் வெருகல் படுகொலை போன்ற யுத்தக் குற்ற அல்லது தண்டிக்கத் தக்க மனிதவிரோத செயற்பாடுகுள் அரங்கேறிய நிலையில் கிழக்கினைத் தொடர்ந்தும் வடதமிழீழத்தின் ஆளுகைக்குள் வைத்திருப்பதை மக்கள் எப்படி அங்கீகரிப்பர் அதனால்தான் இராணுவத்தால் வெகுவிரைவாகவே தென் தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுப் போயினர். அதன் பின்னர் கிழக்கு கிழக்காக விடிந்தது. அந்த விடியலை அனுபவிக்கவிடாமல் யாழ்மையத் தலைமைகள் இன்னும் முன்னெடுக்கும் அனைத்துவித முயற்சிகளையும் தோற்கடித்தால்தான் கிழக்கின் தனித்துவம் வெளிப்படையா நிலைபெறும் இந்த எதிர்பார்ப்பு பிரதேச வாதமல்ல யதார்த்தத்தின்பாற்பட்ட எதிர்பார்ப்பு அந்த எதிர்பார்ப்பை தோழர் ஸ்டாலின் அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றார். 

கிழக்கில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் இந்நூலைப்படிக்க வேண்டும் சிங்கள மக்களுக்கும் இச்செய்திகள் போய்ச் சேர வேண்டும் அப்போதுதான் எதிர்காலத்தில் ஒளிமயமான சமதான பூமியாக சச்சரவுகளின்றி கிழக்கு வாழும். சிங்களத்தில் மொழியாக்கப் பணிகளைச் செய்தால்தான் இது அம்மக்களையும் சென்றடையும். நிச்சயம் கிழக்குவாழ் சிங்கள மக்களின் மனதில் நல்லமாற்றம் ஒன்றை அது உருவாக்கும். இப்போதே இதைச் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யும் முயற்சிகளை முன்னெடுக்கலாம் என்று நினைக்கின்றேன்.

தோழர் ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழத்துக்கள். இதை வெளியிட்டு வைத்த சிராஜ் மஸ்ஹூருக்கும் மனநிறைவான நன்றிகளும் பிரார்த்தனைகளும்.

Tuesday, December 27, 2016

இலக்கியமும் ரவுப் ஹகீமும் சில குறிப்புகளும் இன்னும் சில அடிக்குறிப்புகளும்

இலக்கியமும் ரவுப் ஹகீமும் 
சில குறிப்புகளும் இன்னும் சில அடிக்குறிப்புகளும் 

 குறிப்பு – 01 
நீண்ட நாட்களாக எழுத வேணடும் என்று நினைத்துக் கொண்டிருந்த சில விடயங்களை இப்போதுதான் எழுத அவகாசம் கிடைத்திருக்கின்றது. அவகாசம் என்பதை விட எழுதவேண்டிய சந்தர்ப்பம் இப்போதுதான் ஏற்பட்டிருக்கின்றது. அல்லது ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. 

எடுத்தாளவும் பேசவும் வேறு தலைப்புக்களுடனான பல்வேறு விடயங்கள் இருப்பதால் அவற்றைத் தவிர்க்க நேரிடும் அப்போது அடிக்குறிப்பு என்று அதை இலக்கமிட்டுச் செல்வேன். 

 குறிப்பு – 02 
சாதாரணமாக எல்லா இளைஞர்களுக்கும் இருப்பது போல எனக்கும் இருந்த உணர்வு முதலாவது வோட்டை முஸ்லிம் காங்கிரசுக்குப் போட வேண்டும் என்பது. அது மர்ஹூம் அஸ்ரப் ஏற்படுத்திய ஈர்ப்பு அப்படித்தான் நானும் எனது முதல் வோட்டை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் போட்டேன். எந்த வேட்பாளருக்கும் விருப்பு வாக்களிக்க விருப்பமில்லாது இருந்து. (அடிக்குறிப்பு – 01 எனது வோட்டுகள் எதையும் வீணாக்கவில்லை ஒவ்வொரு சமயத்திலும் நிதானமாகச் சிந்தித்து வாக்களித்து இருக்கின்றேன்.)  

குறிப்பு – 03 
தலைவர் அஷ்ரபின் மரணத்துக்குப் பின்னர் ரவுப் ஹகீம் தலைமைக்கு வந்தார் அப்போது இரத்தக் கொதிப்புள்ள வயது. அனைத்தையும் உணர்ச்சிகளால் மட்டும் பார்த்துக் கொண்டிருந்த தருனம் (அடிக்குறிப்பு-02: தலைமைத்துவச் சண்டை, ஹகீம் பேரியல் கயிறிழுப்பு, முஸ்லிம் காங்கிரஸ் பிளவு, புலிகளுடனான அரசின் சமாதான ஒப்பந்தம், ஆளுக்கொரு கட்சி தொடங்கியமை, கதிரைச் சண்டை, ஹகீம் தன்னுடைய நப்சு கேட்டமைக்காகத் தலைமையைப் போராட்டத்துக்கு மத்தியில் பெற்றதும் தக்கவைத்ததும் தனித்தனித் தலைப்புகளில் எழுத வேண்டியவை. பலர் எழுதியிருந்தார்கள் ஆனால் எனது பார்வையை இன்னும் பதிவு செய்யவில்லை, ஒரு நேரம் வரும் அப்போது பாரப்போம்.)  

குறிப்பு – 04 
ஹகீமை எனக்குப் பிடித்து ஏன்? 
இங்குதான் மிக முக்கியமான சில விடயங்களைப் பகிர வேண்டி இருக்கின்றது. ஹகீமுடைய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து எனக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது,குறிப்பாக பிரபாரனுடனான ஒப்பந்தமும் அதன் பின்னர் அவர் பேசிய விடயங்களும். (அடிக்குறிப்பு 03 ஒவ்வொரு காலத்திலும் தனது இருக்கையைத் தக்க வைக்க ஹகீம் மேற்கொண்ட பிரயத்தனங்கள்) 

அடுத்தது தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் மக்கள் எழுச்சியை உள்வாங்கி அழித்தமை, 
(அடிக்குறிப்பு-4 ஹகீமுடைய உள்வாங்கி அழித்தல் என்ற விடயம் தனித் தலைப்பாக ஆராயப்பட வேண்டியது) இந்த இரண்டு விடயங்களுக்காகவும் ஜாமியா நளீமியாவின் ராபிதா கலமிய்யா சுவரேட்டில் அப்போதே விரிவான கட்டுரைகளை எழுதியிருந்தேன். 

ஹகீமின் மீது பிடிப்பை ஏற்படுத்திய ஒரேயொரு விடயம் அவருக்கெதிரான அனைத்துச் சிக்கல்களையும் முறியடித்து இன்னும் தலைவராக நீடிக்கின்ற திறமை மட்டும்தான். 
ஒரு மனிதனை அவமானப்படுத்த பயன்படுத்தப்படும் கடைசி ஆயுதம் அவன் இன்னொரு பெண்ணுடன் முறையற்ற பாலியல் தொடர்பு வைத்தருந்தான் என்று பொதுவெளியில் பகிரங்கமாக போட்டுடைப்பதுதான். குமாரியை வைத்து சிரச தொலைக்காட்சியும் ஐ அலைவரிசையும் இரு வேறு கோணங்களில் கருத்துக்களை நேரலையாக வழங்கி மக்களைக் குழப்பிக் கொண்டிருந்த போது குமாரி விடயத்தில் ஹகீமும் கொஞ்சம் ஆட்டம் கண்ட போதும் கூட அனைத்தையும் உடைத்துக் கொண்டு தன்னை நிலைநிறுத்திக்கொண்ட துனிச்சல் இருக்கின்றதே அந்தத் துணிச்சல்தான் இப்போதும்கூட அவரைப் பார்த்துப் புன்னகைக்க வைக்கின்றது. 

இந்தப் பிரச்சினைக்குப் பின்னர்தான் அவர் அம்பாறையிலும் கண்டியிலும் பாராளுமன்றத் தேர்தலிலும், திருகோணமலையில் மாகாணசபைத் தேர்தலிலும், அதிக விருப்புவாக்குள் பெற்று வெற்றிபெற்றுக் காட்டினார். அதற்காக அவர் செய்த செலவு அடிக்குறிப்பு – 05 ஆனாலும் அனைத்து அவமானங்களையும் தாங்கி அனைத்தையும் உடைத்தெறிந்து மீளவும் மீளவும் எழுந்து நிற்க ஒரு தில்லும் கட்ஸ்ஷூம் இருக்கவண்டும் அது ஹகீமிடம் மிகத் தாரளமாக இருக்கின்றது. அதற்காக அவருக்கு ஒரு சல்யூட். 

ஒருவன் தலைவனாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டால் விட்டொதுங்கும் வரை வீழ்த்துவதற்கு இடங்கொடுக்கக் கூடாது அதுவொரு தனித்துவம்தான். அதுதான் வெற்றிபெற்ற தலைமை ( அடிக்குறிப்பு 06 ஹகீமை வீழ்த்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள்) ஒரு கட்டத்திலும் வீழ்த்தப்படாத போது அது யாராக இருந்தாலும் அவர் மீது எனக்குப் பிரியம் ஏற்படும். அத்தகைய பிரியத்தை வைத்துக் கொண்டு மாத்திரம் எல்லாவற்றையும் பிரியமாகப் பார்க்க முடியாதே 

குறிப்பு-05 
2002 ம் ஆண்டு இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் முன்னெடுத்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஹகீம் இருந்த நெருக்கடி நேரத்தில் கிடைத்த மிகத் தரமான வெகுமதி. ஒருபக்கம் தலைமைத்துவப் பிரச்சினை மறுபக்கம் நாட்டின் அரசியல் முன்னெடுப்புகள் என்று எல்லாவற்றிற்குள்ளும் அவர் தனது இயலுமையை முஸ்லிம் சமுகத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடிநேரம். (நெருக்கடி நேரங்களில் ஹகீம்-அடிக்குறிப்பு – 07)  

இந்த நேரத்தில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்துக்கு ஒரு உலக மாநாட்டை எப்படியாவது நடாத்தி முடிக்க வேண்டிய தேவை இருந்தது. ஹகீமும் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமும் பரஸ்பரம் ஆளையாள் பயன்படுத்திக் கொண்டனர். ஹகீம் தனது பலமான அமைச்சைக் கொண்டு அரச அனுசரனையை அப்போது பெற்றுக் கொள்வது ஒன்றும் பெரிய சிக்கலான அல்லது சாதிக்கச் சிரமமான காரியமே கிடையாது. அதை அவர் திறமையாகச் செய்து முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்திற்கூடாக மாநாட்டுக்கான பொருளாதாரத் தேவையில் 80 வீதத்தை நிவர்த்தி செய்தார். மாநாட்டுக்கான இதர செலவுகள் 20வீதத்தை அல்லது அதை விடச் சற்றுக் குறைவான சதவீதத்தை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினர் சுமந்தனர். அவர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பும் முழுமையாகப் பதிவு செய்யப்பட வேண்டியது. 

இங்கு கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு விடயம் வெறுமனே பணம் இருப்பதால் மட்டும் வெற்றிகரமான மாநாட்டைச் செய்து விட முடியாது என்பதை பகுத்தறிவுள்ள யாரும் ஏற்றுக் கொள்வார்கள்.

இந்த இடத்தில் ஹகீம் மற்றும் அவர் சார்ந்தவர்கள் தமது சொந்தப் பணத்தில் இருந்து எவ்வளவு மாநாட்டுக்காகச் செலவழித்தார்கள் என்பது எனக்குத் தெரியாது அதைத் தேட வேண்டிய தேவை ஏற்படவில்லை, அவசியமாயின் அதையும் தேடிவிடலாம். இந்த மாநாடு வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்த பின்னர் ஒரு அதீத திருப்தி நிலவியது. 
இம்மாநாடு வெறுமனே ஹகீம் செய்துமுடித்தமை மாதிரி செய்யப்பட்ட பரப்புரை - அடிக்குறிப்பு-08 
ஆனால் எனக்குத் தெரிந்தவரைக்கும் ஹகீம் கலந்து கொண்ட புத்தக வெளியீடுகள் திருமண வைபவங்கள் என்று எதற்கும் தனது பையிலிருந்து அன்பளிப்பாகப் பணத்தைக் கொடுத்ததாகத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவரைக்கும் எனது அவதானத்தின் பிரகாரம் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்குமான பணரீதியிலான உதவி என்பது பூச்சியம்தான். அவர் கலந்துகொள்கின்ற புத்தக வெளியீட்டு விழாக்களில் நானும் கலந்து கொண்டால் முதலில் கேட்கின்ற கேள்வி ஹகீம் எவ்வளவு பணத்தை அன்பளிப்புச் செய்தார் அல்லது ஊக்குவிப்பாகக் கொடுத்தார் என்பதுதான். 

ஆனால் அவரது சகோதரர் ரவுப் ஹஸீர் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர். எல்லாப் புத்தக வெளியீடுகள் இலக்கிய நிகழ்வுகள் என்று அழைக்கப்படாவிட்டாலும் கலந்துகொள்ளும் தன்மைமிக்க பந்தா இல்லாத பெருந்தகை. அவர் கலந்துகொள்ளும் வெளியீட்டு நிகழ்வுகளில் அன்பளிப்புக்கொடுக்காமல் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. அத்துடன் முக்கியமான வெளியீட்டு நிகழ்வுகளை அவர் மிஸ் பண்ணியதும் அரிது என்றுதான் நினைக்கின்றேன். அவரைப் பற்றி நான் எழுதத் தொடங்கிய ஒரு குறிப்புத் தொடர் அப்படியே இடையில் நிற்கின்றது. மேலதிகமாக அவரிடமிருந்து பெறவேண்டிய தகவல்களை இன்னும் பெற முடியாமையால் அப்படி இடை நடுவே நிற்கின்றது. 
இந்த இடத்தில் இதற்குமேல் இது குறித்து எழுதத் தேவையில்லை என்று தோன்றுகின்றது. இரு வேறுபட்ட இயல்புள்ளவர்கள். 
காக்காவும் தம்பியும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் அல்லது இருப்பார்கள் என்பதற்கில்லைதானே.
ஆனால் அமைச்சர் ஹகீமுக்கு அதுவொன்றும் பெரிய விசயமில்லைதான் ஏன் அதில் மைனசாக அவதானிக்கப்படும் அளவுக்கு அவர் கவனயீனமாக இருக்கின்றார் என்பதுதான் எனக்குக் கவலையளிக்கின்றது. குறைந்தபட்சம் இரண்டாயிரம் ரூபாவையேனும் அவர் கொடுக்கலாம் அதனால் அவருக்கு பாரிய பொருளாதார இழப்புகள் ஏதும் வந்துவிடப்போவதுமில்லை.

சில சமயங்களில் வீட்டில் இதைப் பற்றிக் கதைக்கும் போதெல்லாம் இந்த மனிசன் ஏன் இப்பிடி இரிக்கான் என்டுதான் தெரியல்ல என்று சொல்வதுண்டு. 

ஒரு கட்சியின் தலைவராக அவரை மதித்து அதிதியாக அழைக்கின்ற கலைஞர்களுக்கு அவர் கொடுக்கின்ற குறைந்த அன்பாக அவை இருக்கக் கூடும். 

குறிப்பு-06 
எனது அவதானிப்பின் படி ஹகீம் ஒரு இலக்கிய ஆளுமை கிடையாது. அந்தளவுக்கு அவரைப் பார்க்கும்படி எந்தப்படைப்பையும் செய்திடவில்லை. சில கவிதைகளுக்காக அவரை இலக்கிய ஆளுமையாகக் கொண்டாடும் பலவீனம் எனக்கில்லை. மறைந்த அமைச்சர் ஏசியெஸ் ஹமீத் அவர்களை ஓர் இலக்கிய ஆளுமையாகக் கொண்டாடுகின்றேன். அவருடைய கவிதைகளாக இருந்தாலும் சரி ஏனைய ஏழுத்துக்களாக இருந்தாலும் சரி அவர் மிகச் சிறந்த ஆளுமையாக அவற்றில் வெளிப்பட்டார். துரதிஸ்டம் அவர் தமிழில் எழுதவில்லை. அதனால் பெருமபாலும் அறியப்படவுமில்லை. அவரது கவிதைத் தொகுப்பு தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டாலும் அது பெரிதாக கவனத்தை ஈர்கும் வகையில் இலக்கியகர்த்தாக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்படவுமில்லை. அதனால் ஹமீத் அவர்களின் இலக்கிய ஈடுபாடு பேசப்படவில்லை பதியப்படவில்லை. தமிழ் மிரர் பத்திரிகைதான் அவரைப்பற்றிய இலக்கியப் பார்வையைப் பதிவு செய்திருந்தது. 

அமைச்சர் ஹகீம் அவர்கள் எதிர் கொண்ட சிக்கல்களையும் சவால்களையும் படைப்பாக்கம் செய்தாலே போதும் தரமான படைப்புகளாக அவை மிளிர வாய்ப்பிருக்கின்றது. அரசியலில் இருந்து படைப்பாக்கம் பெறுகின்ற சங்கதிகள் முதிர்ச்சி பெற்ற ஓர் அரசியல்வாதியின் எழுத்தாக வெளிப்படுகின்ற போது அதன் கனதி ஈர்க்கவல்லதுதானே. அத்தகைய கூர்ந்து நோக்கச் செய்யும் எத்தகைய படைப்பும் ஹகீமால் இன்னும் தரபடவில்லை என்பது எனது அவதானம். 
இலக்கிய மாநாடுகளில் முன்னுரிமை பெறுவதாலும் இலக்கிய விழாக்களில் அதிதியாக அல்லது தலைமையாகக் கலந்துகொள்வதாலும் ஒருவர் சிறந்த இலக்கிய ஆளுமையாகிவிடுவதில்லைதானே. 

எப்படியாவது ஓர் உலக இலக்கிய மாநாட்டை நடாத்த வேண்டும் என்றும் அதில் தாம் முக்கிய பிரமுகர்களாக இருக்க வேண்டும் என்றும் சில நபர்கள் முன்னெடுத்த முயற்சிக்கு அமைச்சர் ஹகீம் பச்சைக் கொடி காட்டினார். அதன் விளைவானதாகத்தான் 2013ஆம் ஆண்டு மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அனுசரனையோடு ஓர் உலக மாநாட்டை நடாத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளைப் பார்க்க வேண்டும். 

ஹகீமினாலும் அவரது பரிவாரத்தினாலும் அந்த உலக மாநாட்டை நடாத்தி முடிக்க முடியாது என்பது வெள்ளிடைமலை. ஒரு தேர்தல் காலச் செயற்பாடு போன்றதல்லவே இலக்கியமாநாடு. இந்த இடத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சந்திப்புகள் என்று பலகோணங்களில் பல சந்தர்ப்பங்களில் இடம்பெற்றாலும் அவைகளால் எந்தப் பிரயோசனமும் ஏற்படவில்லை. மலேசிய மநாட்டில் கலந்து கொண்டமை கும்பகோண மாநாட்டில் கலந்து கொண்டமையெல்லாம் நிறைய இலக்கிய ஜாம்பவான்களைக் உருவாக்கி விட்டிருந்தது (ஹகீமும் மநாடுகளும் அடிக்குறிப்பு -09) 

ஆனாலும் அந்த ஜாம்பவான்கள் தத்தமது கதிரைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்தார்களே தவிர மாநாட்டின் வெற்றிக்கு எத்தகையபங்களிப்பை வழங்க முடியும் என்று ஒருபக்கமும் உறுதிப்படுத்தப்படவில்லை அந்தக் கூட்டத்தை நம்பி களத்தில் இறங்க ஹகீமும் தயாரில்லை.

ஆனால் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செயற்பாட்டுத்திறன் எத்தகையது என்பது அமைச்சர் ஹகீமுக்கு மிக நன்றாகவே தெரியும் அதனால் இலக்கிய ஆய்வகத்தின் பங்களிப்பை அவர் எதிர்பார்த்தார் ஆனால் அந்தப் பங்களிப்பு இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் என்ற பெயரோடுகிடைக்கக் கூடாது என்றும் விரும்பினார். அமைச்சரின் விருப்பம் தொடர்பில் சில சந்திப்புகள் நடந்தன. அவை முழுமையான வெற்றியைப் பெறவில்லை. இலக்கிய ஆய்வகம் முழுமையாக முன் நின்று பொறுப்புகளைச் சுமப்பதை அவருடன் நெருங்கிய சிலர் மிகத் தெளிவாக மறுத்தமையை அவர் உள்வாங்கிக் கொண்டே நகர்வுகளை முன்னெடுத்தார். மாநாட்டை நடாத்துவதற்காக அமைச்சர் ஹகீம் அவர்களுடைய விருப்பங்கள் எத்தகையவை என்றும் இந்த மாநாட்டுக்கு இலக்கிய ஆய்வகம் எத்தகைய பாத்திரத்தை வகிக்க வேண்டும் அல்லது வகிக்கப் போகின்றது என்பது தொடர்பில் இலக்கிய ஆய்வகம் கூடி ஆராய்ந்தது. 

ஹகீம் முன்மொழிந்த இஸ்லாமிய இலக்கியக் கலகங்களின் ஒன்றியம் அல்லது பேரவை என்பது இலங்கையில் உள்ள சகல முஸ்லிம் இலக்கிய அமைப்புகளையும் ஒன்றினைத்த ஒரு குழுவாகும். இந்த முன்மொழிவுக்குப் பின்னால் இருக்கும் நோக்கத்தை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் கலந்துரையாடலின் போது தெளிவாக ஆய்வகம் தெரிந்துகொண்டது. இலக்கிய ஆய்வகத்தைக் கருவறுக்கும் எந்தவொரு நிகழ்ச்சி நிரலுக்குள்ளும் இலக்கிய ஆய்வகம் இருக்காது என்பது பொதுவான ஒரு முடிவாக இருந்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் தனிநபர்களாக கலந்துகொள்வதும் பொறுப்புக்களை ஏற்பதும் அவரவர் தெரிவுக்கு விடப்பட்டது. அதன்படி தாருஸ்சலாமில் இடம் பெற்ற மாநாட்டுக்கான கருத்தாடல் நிகழ்வில் ஆய்வகத்தின் உறுப்பினர்கள்சிலர் கலந்து கொண்டார்கள் சிலர் புறக்கனித்தார்கள். 

அடிக்குறிப்பு 10 இதற்கிடையே எழுந்த முஸ்லிம் தேச இலக்கிய மாநாடு குறித்த சலசப்பும் அப்படியொரு மாநாட்டை நடாத்தி முடிக்க சில அன்பர்கள் எடுத்த முயற்சிகளும் பகிர்ந்துகொண்ட கருத்துக்களும் விட்ட சவால்களும். 

அடிக்குறிப்பு 11 தாருஸ்ஸலாமில் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட எனது விலையுயர்ந்த தரமான நவீன ஒலிப்பதிவுக்கருவி யாரோ ஓர் இலக்கியவாதியால் அல்லது நிகழ்வில் கலந்துகொண்ட கௌரவமான கனவான்களில் யாரோ ஒருவரால் தாருஸ்ஸலாமில் வைத்தே திருடிச் செல்லப்பட்டது. 

இப்படியே இந்த மாநாட்டுக் காய்சல் கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் வரை தொற்றியிருந்தது. ஆனால் கடைசி வரை அது நடக்கவேயில்லை. பேசாமல் ஹகீம் எல்லோரையும் திருப்திப்படுத்தும் நிகழ்ச்சி நிரலில் இருந்து விலகியிருந்தால் கூட மாநாட்டை நடாத்தி இருக்கலாம். அல்லது இலக்கிய ஆய்வகத்திடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கலாம். அரசியலுக்குப் பயன்படுத்தும் டெக்கினிக்கு எல்லாமே இலக்கியத்துக்கு உதவாது என்பதை இந்நகர்வுகள் அமைச்சருக்கு தெளிவாகச் சொல்லி இருக்க வேண்டும். அதிலிருந்து அவர் படிப்பினை பெற்றிருக்க வேண்டும். இலக்கிய ஆய்வகத்தைப் புறந்தள்ளிவிடுவதில் சில தனிமனிதர்கள் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார்கள். (இதுவும் அடிக்குறிப்பு 12 ) அவர்களின் கபடத்தனத்திற்கும் சகுனிப் புத்திக்கும் மதிப்பளிக்காமல் அமைச்சர் இருந்திருக்கலாம் ஆனால் அவர் அப்படி இருக்கவில்லை. எல்லோரையும் திருப்திப்படுத்திட அவர் மேற்கொண்ட அனைத்தும் இறுதியில் தோற்றே போயின. 

 இந்த இடத்திலிருந்துதான் ஆய்வகம் தீர்க்கமான சில முடிவுகளுக்கு வந்தது. ஆய்வகத்தின் இருப்புக்கு ஹகீம் ஒருபோதும் துணையாக இருக்கப் போவதில்லை. அதனால் ஹகீமுக்குப்பின்னால் ஆய்வகம் செல்ல வேண்டியதே இல்லை. யார் குத்தினாலும் அரிசாகினால் சரிதான் ஆனால் அதற்காக இருப்பை அழித்துக் கொண்டு இன்னொருவரின் நிகழ்ச்சி நிரலுக்குல் காணாமல் போகின்ற அபாயகரமான செயற்பாடுகளில் இருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் இலக்கிய ஆய்வகம் எதிர்காலத்தில் தனது செயற்பாட்டுத்தளத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், என்பது மிக முக்கியமான அம்சம்.

 அடிக்குறிப்பு 13 எப்படியாவது ஒரு மாநாட்டை நடாத்துதல் என்ற நினைப்பில் மூன்றாண்டுகளாக முன்னடுக்கப்பட்ட ஆய்வகத்தின் கலந்துரையாடல்கள். 

கடைசிவரையும் ஹகீமால் ஒரு மாநாட்டை நடாத்த முடியாமல் போனமை இலக்கிய ஆய்வகத்தின் பலம் எத்தகையது என்பதை நிரூபித்திருந்தது. இலங்கையில் இன்னொரு மாநாட்டை நடாத்துவதாக இருந்தால் அது இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினால் மட்டுமே முடியும் என்பதை நாம் மிகத் தெளிவாக உணர்ந்திருந்தோம். இப்படியிருக்கும் போதுதான் 1966 இல் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற விடயம் ஒரு பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு 2016ஆம் ஆண்டோடு 50 ஆண்டுகள் முடிந்திருந்த விடயத்தை இலக்கிய ஆய்வகம் கண்டுபிடித்தது. அத்துடன் புது உட்சாகம் பிறந்தது.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம் இலக்கிய ஆய்வகம்தான் இந்த பொன்விழா என்ற விடயத்தை முன்னிறுத்தி செயற்படத் தொடங்கியது அதன் பின்னர்தான் மருதமுனையிலேயே மிகச் சிறிய நிகழ்வாக பொன்விழாவை முன்னிறுத்தி ஒரு விழா இடம்பெற்றது அதன் பின்னர் ஏட்டிக்குப் போட்டியாக மற்றுமொரு அரசியல் விழா பொன்விழாவின் பெயரால் தெளிவான திட்டமிடல்களும் தயார்படுத்தல்களுமின்றி நடந்தேறியது.

அடிக்குறிப்பு 14- கவிஞர் ரவுப் ஹஸீர் அவர்கள் சில விடயங்களை இனித் தெளிவு படுத்தக் கூடும் ஏனெனில் அவர் கேட்டிருந்த ஒரு கேள்வியின் விளைவாகவே இந்தக் கட்டுரை எழுத வேண்டியேற்பட்டது. 

 குறிப்பு-07 
பகுதி இரண்டு விரைவில் நேரங் கிடைக்கும் போது எழுதுகின்றேன். அதில் பொன் விழா குறித்த சுவாரஸ்யமான பல்வேறு இடக்குமுடக்குகளைப் படித்துச் சிரிக்கலாம்.

Saturday, June 18, 2016

மனதில் பட்டது -22 - கவிஞர் மஜீத் போட்ட விதை


கவிஞர் மஜீத் போட்ட விதை

இலங்கையில் வெளிவருகின்ற எல்லாப் பத்திரிகைகளும் தன்னில் இலக்கியப் பக்கங்களைச் சுமந்தே வருகின்றன. இலக்கியவாதிகளினதும் எழுத்தாளர்களினதும் பங்களிப்பில்லாமல் அப்பக்கங்களை அலங்கரிப்பதென்பது சிரமமான காரியம். ஏதாவதொன்றைப் போட்டு பக்கத்தை நிறைத்துவிடுதல் என்ற நிலைப்பாட்டிலிருந்து கவனத்தையீர்க்கும் வண்ணம் சிறப்பானதைச் செய்தல் என்பதுதான் தனித்துவமானது. 

அதுபோலவே ஓர் எழுத்தாளன் உப்புச் சப்பில்லாமல் எழுதுவதென்பது தன் எழுத்து குறித்த சுயமதிப்பீட்டைத் தூரத்தே எறிந்துவிட்டு செயற்படுகையில்மட்டும்தான் நிகழக்கூடியது. அவன் தனது பெறுமதியைப் பற்றிக் கவலைப்படாமல் காரியமாற்றுகையில் அவனது எழுத்தும் பெறுமதி மிக்க தளத்தை நோக்கி நகர முடியாதுதான்.

எழுத்தாளர்களைப் பயன்படுத்தும் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் அவர்களுக்கான ஊதியத்தைக் கொடுத்துக் கௌரவப்படுத்துவதில் பெரும்பாலும் கள்ளமௌனம் காப்பது புதியவிடயமுயல்ல. அத்தகைய ஊதியத்தால் அவன் தனது தேவைகளை முழுமையாக நிவர்த்திசெய்து தன்னிறைவு காண்பதுமில்லை. ஏதோ அத்தொகை என்பது எழுத்துக்கான சின்னஞ்சிறிய அகக்குளிர்ச்சி அவ்வளவுதான்.

இதே எழுத்தாளன் ஒரு துயரில் விழுகின்ற போது இப்பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் அவனுக்காகக் கைகொடுக்கக் களத்தில் நிற்பதுமில்லை. கண்டுகொள்வதுமில்லை.
ஆனால் மனிதம் மிகுந்த ஒருவன் இவ்விடயத்தில் பொடுபோக்காகஇருக்க மாட்டான். அவன் ஒரு சிறுசஞ்சிகையைச் நட்டப்பட்டு நட்டப்பட்டுச் செய்பவனாக இருப்பினும் சரியே!

அக்கறைப்பற்றைச் சேர்ந்த கவிஞர் மஜீத் சுகயீனப் பட்டு படுத்த படுக்கையாக இருக்கையில் அவரின் அவலமிகு சோகக் குரல் என் செவிகளில் விழுந்த போது ஒரு விதை எனக்குள் விதைக்கப்பட்டது. ஒரு கலைஞன் ஓர் எழுத்தாளன் ஓர் இலக்கியவாதி மீளாத் துயரில் வீழ்கையில் அவனுக்கு உதவி செய்ய நம்மிடம் ஒரு குழுமச் செற்பாடு ஏன் இல்லாமல் போனது என்பதுதான். 
அவ்வகையானதொரு செயற்பாட்டுத் தளத்தை ஏன் எம்மால் உருவாக்க முடியவில்லை? தமிழ் மிரர் உருவாக்கியிருக்கும் இவ்விலக்கியப் பக்கத்தினூடாக ஏன் நாம் இப்பணியை முன்னெடுக்கக் கூடாது என்று தோன்றுகின்றது. 

ஏனைய பத்திரிகைகளின் இலக்கியப் பக்கங்கள் போலவும் இல்லாமல் எழுத்தாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் ஒரு விடிவை உறுதிப்படுத்தும் செயற்றிட்டமொன்றை நாம் ஏன் முன்னனெடுக்கக் கூடாது என்று தொடங்கியிருக்கும் இச்சிந்தனை ஒரு விதைதான். அதை இன்றே விதைப்போம் அது முளைக்கும் இலைவிடும் கிளைவிட்டு ஓங்கி வளரும் விழுதிறக்கி தன்னை ஸ்திரப்படுத்தும். பூக்கும் காய்க்கும் பழுக்கும் அப்போதுதான் நாம் அனைவரும் அதன் கீழ் ஒன்று கூடுவோம் அதன் பழங்களைச் சுவைப்போம். தேவைப்படுவோருக்கும் பகிர்ந்தளிப்போம். ஓர் இலக்கியவாதிக்குப் பிரச்சினையெனில் நாம் முதல் அணியில் இருக்கும் நபர்களாக மாற இது மிகவும் துணை செய்யும். 

பிராந்திய ரீதியாக இதனை உருவாக்கி தேசிய ரீதியில் ஒரு வலையமைப்பாகவே இதனைத் திட்டமிடுவோம். எந்தவொரு நீண்ட பயணமும் ஒரு எட்டிலிருந்துதான் ஆரம்பிக்கும். அந்த முதல் எட்டு சிறியதுதான் அதற்காக அதைக் குறைத்துமதிப்பிட முடியாதுதானே. 

இலக்கியவாதிகளுக்கான ஒரு முதலீட்டுத் திட்டத்தையும் சேமிப்புத்திட்டத்தையும் ஆரம்பித்து அதற்கூடாக இலக்கியவாதிகள் எதிர்கொள்ளும் அவசர பொருளாதாரத் தேவையை நிவர்த்தி செய்ய ஒரு பொறிமுறையை நாம் உருவாக்க முடியும். எதிர்காலத்தில் இது குறித்த பரவாலான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்போம். எந்தவொரு நல்ல காரியத்தையும் அவ்வளவு எளிதில் செயற்படுத்த முடியாதுதானே.

இந்த மார்ச் மாதம் இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்காக பெருந்தொகைப் பணத்தேவையுடன் எதிர்பாhர்ப்புகளை மட்டும் சுமந்து நிற்கும் கவிஞர் மஜீத் அவர்கட்டு எம்மால் எவ்வகையில் உதவ முடியும் என்று இப்போதைக்குச் சிந்திப்போம்.  உதவக் கூடியவர்களுக்கு பரிந்துரை செய்வோம். தமிழுக்கு சேவை செய்த ஒரு கவிஞனைக் காப்பாற்ற முடிந்ததைச் செய்வோம்.
கவிஞர் மஜீத் - 0775 009 463
மக்கள் வங்கி அக்கரைப்பற்றுக் கிளை – 063 2001 8002 2795

புரொய்லர்களால் ஆளப்படும் ஜம்இய்யதுல் உலமா சபையும் உலக அரசியலும் - 2

புரொய்லர்களால் ஆளப்படும் ஜம்இய்யதுல் உலமா சபையும் உலக அரசியலும் - 2
முஸ்டீன்

கடந்த வாரம் இக்கட்டுரையின் முதல் பகுதியை பதிவேற்றியிருந்தேன். குறிப்பிட்டசில நண்பர்கள் மாத்திரம் தமது ஆதங்கத்தினைப் பகிர்ந்து கொண்டார்கள். ஊடகவியலாளர் தாஹாமுஸம்மில மாத்திரம் கட்டுரையிலேயே தனது கருத்தினைப் பதிவு செய்திருந்தார். அதிலும் ஒரேயொரு விடயம் தொடர்பில் மாத்திரம் அவரது பின்னூட்டம் அமைந்திருந்தது. தொடர்பு கொண்டு பேசியவர்கள் குறிப்பிட்ட விடயங்களில் இருந்து அவர்கள் முன்வைத்த ஆதங்கம் அல்லது விமர்சனம் ஆகியவற்றிலிருந்து இப்பகுதியை எழுதலாம் என்று நினைக்கின்றேன்.
எழுதிவிட்டு பதிவேற்றுவதா இல்லையா என்று யோசித்து பதிவேற்ற சிலமாதங்களாயிற்று  இருந்தாலும் காலங்கடந்துவில்லை.

குறிப்பாக ஜம்இய்யதுல் உலமாவை இந்தளவுக்குக் கிண்டலடித்து விமர்சிப்பதைத் தவிர்க்கலாமே.
உலமா சபைக் கட்டமைப்பில் உங்களுக்கு என்ன பிரச்சினை
இப்போதைய சமூகவீழ்ச்சிக்கு ஜம்இய்யதுல் உலமா மட்டுமே பொறுப்பேற்க முடியுமா?
நிலமையைக் கையாள உலமா சபைக்கு ஆலோசனை வழங்கலாமே
கட்டுரை மிதமிஞ்சி அச்சுருத்துவதாகத் தெரிகின்றது.
ஐஎஸ்ஐஎஸ் துருக்கியை இலக்காகக் கொள்ள சியோனிசத்தின் பின்புலத்தில் என்ன வரலாற்றுத் தேவை இருக்கின்றது.

உண்மையில் அக்கட்டுரை யாரையும் கிண்டலடிக்கவோ விமர்சிக்கவோ எழுதப்பட்டதல்ல நமக்குப் பக்கத்தில் இருக்கும் அபாயம் பற்றிய முன்னெச்சரிக்கையை அறிவிப்பதும் அதனை எதிர்கொள்ளத் தயார்படுத்துவதும்தான் பிரதான எண்ணம். உதாரணமாக புயல் மையங்கொண்டிருக்கின்றது என்பதை எல்லோராலும் புரிந்து கொள்ளவோ விளங்கிக்கொள்ளவே இயலாது. மையங்கொண்டிருக்கும் புயலை அடையாங் கண்ட பின்னர் அது எந்தத் திசையில் நகரும் என்ன வேகததில் நகரும் என்ன விதமான பாதிப்புகளையெல்லாம் உண்டாக்கும் என்ற எச்சரிகையும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்படும் பாதுகாப்பு எச்சரிக்கைகளும் முன்னேற்பாடுகளும் வளிமண்டலத் திணைக்களத்தின் அதிகாரிகளால் அறிவிக்கப்படுவது போன்றுதான் இதுவும். இந்த இடத்தில் சர்வதேச மட்டத்தில் மையங்கொண்டிருக்கும் பிரச்சினை இலங்கைச் சமுகத்தை நோக்கி எப்படி முன்னர்கின்றது என்பதை முன்கூட்டியே உணர்ந்துகொண்டு முன்கூட்டியே நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய உலமா சபை அதை கவனியாது இருப்பதால் எழுகின்ற கோபத்தின் விளைவுகள்தான் அவ்வாறு வெளிப்படுகின்றன. இது நக்கல் அல்ல முன்னெச்சிரிக்கையை உணர்ந்துகொள்ளாத 'பேத்தனமான ஆட்கள்' மீதான கோபம் அவ்வளவுதான்.

இந்த நிலைமையைச் சரிப்படுத்த வேண்டிய பொறுப்புள்ள அமைப்பு உலமா சபைதான் அவர்கள்தான் இதைச் செய்தாக வேண்டும். அதனால்தான் அவர்கள் மீது பாய வேண்டியிருக்கின்றது. இந்தச் சிக்கலை விளங்கிக் கொள்ள மூளை இருக்க வேண்டும். இஙகு பிரச்சினையே இவர்களில் பெரும்பகுதியினருக்கு என்ன நடக்கின்றது என்பது பற்றியதெளிவே இல்லை என்பதுதான். உலக நடப்புத்தெரியாமல் சும்மா கன்னியத்துக்குரிய மேலான சோதர்களே பெரியார்களே என்று பயான் பண்ணித் திரிவதை ஒவ்வொருவாரமும் காண நேர்கின்ற அவலத்தின் மீதுள்ள ஆற்றாமையின் வெளிப்பாடு.

ஏனெனில் சில நாட்களுக்கு முன்னர் அவர்கள் திருகோணமலை அனுராதபுரச் சந்திப் பள்ளிவாயலில் நடாத்திய மாநாட்டை அவதானிப்பதற்கென்றே கொழும்பில் இருந்து பயணப்பட்டேன். அங்கு பலரையும் அளவிட முடிந்தது. அவர்களின் லட்சனத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. நளீமியாவின் சேகுமார்கள் பலர் அப்போது என்னுடன் உரையாடினார்கள் அவர்களிடம் பிரஸ்தரிபத்த விடயங்களையே பின்னால் தெளிவாக எழுதுகின்றேன்.

உம்ரா பிஸ்னஸ் பண்ணித்திரியும் உலமாக்களாலும் ஹலால் பத்வா விற்பனை உலமாக்களாலும் இந்த சமுகத்தை நோக்கி திட்டமிட்டு நகர்த்தப்படுகின்ற சிக்கலான நிலையை உள்வாங்கவோ அதன்பாதிப்புகளில் இருந்து சமுகத்தைக் காப்பற்றவோ முடியாது என்பதை வேறு எப்படித்தான் வெளிப்படுத்துவது?

பொதுபலசேனா மிகப் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் ஹலால் என்ற ஆயுதத்தை தூக்கி அடிக்கத் தொடங்கியிருந்த காலத்தில் அதன் போக்கைத் தெளிவாகப் புரிந்து கொண்ட ஓர் உலமாசபை உறுப்பினரைத்தானும் என்னால் அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்த ஹலால் பிரச்சினை மூலம் வெளிப்பட்டது இலேசானபிரச்சினை கிடையாது அது இன்னும் பத்து வருடங்களுக்குள் வேறுவிதமான வடிவங்களை எடுக்கும். ஏனெனில்முஸ்லிம் சமுகத்தi குறிவைத்து தாக்குவதற்குத் சர்வதேச அதிகாரம் தேர்வு செய்திருக்கும் ஆயுதம் பௌத்த பேரினவாதம். இந்தப் பேரினவாதத்தை எந்தவொரு சிங்கள அரசியல்வாதியும் எடுத்த எடுப்பில் எதிர்மறை நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தவோ கையாளவோ முடியாது. என்ன செய்தாலும் அது அவர்களது வாக்கு வங்கியில் தாக்கம் செலுத்தும். பிழையான விசயமாகத் தெரிந்தாலும் பார்த்துக்கொண்டுதான் இருக்க முடியும். அந்தப் பார்த்துக்கொண்டிருத்தலை இயலாமை என்று இலகுவாகக் கடந்துசொன்றுவிடவும் முடியாது முஸ்லிம் சமுகம் வெறுமனே அவர்களைப்பழிசொல்லியபடி இன்னுமொரு சக்தியைத் தேடிச் செல்லவும் கூடாது. உதாரணமாக   அளுத்கமை தர்கா நகர் கலவரம் மிகவும் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டது. மஹிந்த ராஜபக்ச அரசுதான் அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றாக வேண்டும் என்ற கருத்தியல் மகிந்த அரசில் எமக்குப் பாதுகாப்பில்லை என்று மக்களை உணரச் செய்தது. இப்போது புதிய அரசாங்கத்தைத் தெரிவுசெய்ய வைத்திருக்கின்றது. இந்த அரசாங்கத்தில் மீளவும் ஒரு கலவரம் கண்டியிலோ குருவாகலையிலோ மாவனல்லையிலோ இடம்பெற்றால் இப்போதுள்ள மைத்திரி-ரணில் அரசினால் அதைத் தடுக்க முடியாது. அளுத்கமையைவிட நூறுமடங்குபொருளாதார இழப்பைத் தந்தாலும் அதைத் தடுக்க அரசு என்ன செய்தாலும் முடியாது. அத்தகையதொரு களவர சூழல் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

எல்லாப் பிரச்சினைக்குப் பின்னாலும் பொதுபலசேனாவும் சிங்கள ராவயவும்தான் இருக்கும் என்பதை மட்டும் நீங்கள் என்ன வேண்டாம். கண்டியில் கலவரம் நடந்தால் வேறு அமைப்பும் நபரும் அடையாளப்படுத்தப்படுவார்கள் குருநாகலில் கலவரம் நடந்தால் அதற்கு வேறு அமைப்பும் நபரும் அடையாளப்படுத்தப்படுவார்கள். மாவனல்லையில் கலவரம் நடந்தால் இதுவும் வேறுவிதமாகத்தான் இருக்கும். இத்தகைய நிலைமைகளைக் கூட  எலமா சபை புரிந்து கொண்டு அதற்கேற்றமாதிரி செயற்படத் திராணியற்று இருக்கின்றதே என்ற ஆதங்கத்துக்கும் கோபத்துக்கும் எங்கிருந்து வார்த்தைகளைத் தேடி வெளிப்படுத்துவது?

அப்போது ஹலால் பிரச்சினையின்போது அதை சரியாகத் கையாளத் தெரியாத இதே எலமா சபை இன்னும் ஐந்து வருடத்துக்கு நிலைத்திருக்குமாக இருந்தால் இதேபோன்று பல்வேறு பிழைகளுக்காக சமூகத்தின் முன்னால் தமதுபிழைழய ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கும் நிலை நிச்சயமாகத் Nhதன்றும் அப்போது என் போன்றவர்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள். ஏனெனில் நிலைமைகள் கைமீறிச் சென்றிருக்கம். இந்த ஹலால் பிரச்சினை எங்கும் பேசுபொருளாக இருந்த போது எனது குடியிருப்புத் தொகுதியில் இருக்கின்ற பௌத்த அயவலர் என்னிடம் சொன்ன ஒரு விடயத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
'ஹலால் சொல்லி சல்லி சேத்து தலிபானுக்கும் அல்காயிதாவுக்கும் உலமா கபையால அனுப்பி இருக்கிறாங்க பாருங்களே! இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா'
அவரின் இந்தக்கூற்றுக்கு நான் தரமானதொரு விளக்கத்தைக் கொடுத்தேன் ஆயினும் கேட்டுக்கொண்டாரே தவிர ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தகைய பிரச்சாரம் என்னவிதாமன விளக்கத்தைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளச் செய்யாதளவுக்கு ஆழமாக செய்யப்பட்டிருக்கின்றதென்றால் இது ஒரு கட்டத்தில் அல்குர்ஆன்பிரதியொன்றைக் கையில் வைத்திருப்பதையே குற்றமாகக் காணும் நிலைiயொன்றினை நிச்சயம் தோற்றுவிக்கும். அப்போது தலிபான் பற்றிய பேச்சோ அல்காயிதா பற்றிய பேச்சோ இருக்காது இப்போது ஓடிக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் தயாரிப்பில் சவுதியின் இணைத்தயாரிப்பில் சியோனிசத்தின் இயக்கத்தில் வெளியான ஐஎஸ்ஐஎஸ் என்ற திரைப்படம் பற்றிய பேச்சு பேசுபொருளாக இருக்கலாம் அல்லது அதை வித வேறு லேட்டஸ் படம் வந்திருந்தால் அதைப்பற்றிய பேச்சு நிகழும். (இப்போதைக்கு மட்டுமல்ல இன்னும் பத்து வருடங்களுக்கு இந்த ஐஎஸ் திரைப்படம் ஓடும் என்பது தெரிகின்றது, அதனால் நிச்சயம் ப்போதும் இதே ஷ்கிரிப்ட் தாக்கம் செலுத்தும். இதெயெல்லாம் வேடிக்கையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் எனது வேண்டுதல்.

அடுத்தது இன்னுமொரு அபாயகரமான நிலை இருக்கின்றது. பள்ளிவாயல்களை மையப்படுத்தி ஒருமுகப்படுத்தப்பட்ட சரியான ஒரு கட்டமைப்பையும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கி;டத்தட்ட 180 அரபு மத்ரசாக்களையும் ஒரே பாடத்திட்டன்கீழ் அரசாங்கத்தின் அனுசரனையின் கீழ் விரைவாகக் கொண்டு வந்து சேர்க்கும் பணியை ஜம்இய்யதுல் உலமா செய்ய வேண்டும். அதற்கு இந்த நேரத்தில் இருக்கும் அனைத்து அரசியல்வாதிகளையும் முரன்பாடுகளுக்கும் அரசியல் இலாபம் பற்றிய வேறுபாடுகளுக்குமப்பால் இணங்கச் செய்து சட்டமாக்கிக் கொள்ளவேண்டும் பாராளுமன்றின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு எதிர்காலத்தை வெளிப்படையாக எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இதற்கான காரணங்களை நான் தெளிவாகவோ வெளிப்படையாகவே சொன்னால் நிச்சயமாக என்னைக்கொண்டுபோய் அங்கொடையில் சேர்த்துவிடும்படி இதே ஆலிம்கள் மிம்பர்மேடைகளில் பயான் பண்ணுவார்கள். இலக்கிய நண்பர்கள் முஸ்டீனுக்கு கலன்றுவிட்டது போலத்தான் தெரிகின்றது என்று கூறிக்கொள்வார்கள். என்மீது பிடிப்பில்லாத யோக்கியர்கள் 'அவன் ஹராங்குட்டி ஏஜெண்டு வேலபாக்கான், இப்பிடித்தான் சம்பந்தமில்லாம சம்பந்தமில்லா பேசுவான் நாம கண்டுக்கப்படா' என்று கதைப்பார்கள். இந்த சமுகத்தின் இப்போதைய நிலையில் எதைசொல்லவேண்டுமோ யாருக்குச் சொல்ல வேண்டுமோ  அவர்களுக்கு மட்டும்ந்தான் சொல்ல வேண்டிய விடயங்களைச் சொல்ல முடியும்.

லத்திப் பாருக் போன்று திறனுள்ள ஊடகவியலாளர்கள் இங்கில்லை எல்லாம் லேபல் கேசுகள்தான் இருக்கின்றார்கள் அதுபோல புலனாய்வு ஊடகவியலாளர்கள் மருந்துக்கும் கிடையாது எனவே எழுத்துகளை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியாது. ஒரு பிரச்சினை தோற்றம் பெற்று அரங்கேறி அழிவுகளை விதை;தத பின்னர் எதிர்கொள்ளும் பொழுதுகளுக்க மட்டுமே அவர்கள் செய்தி சேகரிப்பார்கள் கருத்தரைப்பார்கள் அல்லது மீட்டிங் போடுவார்கள். இங்கு நான்சொல்லவது இரண்டு மூன்று வருடங்களுக்குப்பின்னரான தயார்படுத்தல் பற்றியது. இந்தத் தயார்படுத்தல் இல்லாத போது ஒருகட்டத்தில் நான் நோன்பு இல்லையென்பதை ரமலானில் தண்ணீர் குடித்து நிரூப்பித்துவிட்டுச் செல்லவும் இஸ்லாத்தில் அவ்வளுவ பற்றில்லதா முஸ்லிம் என்று காட்டுவதற்கா தாடிமழித்து பெண்களை அவிழ்த்துவிட்டுக் கூட்டிச் செல்லும் நிலை தோன்றும். அது சடுதியாக வெளிப்பட்டு நிற்காது இப்போதிருந்து நகர்த்தப்படும்காய்கள் அப்போது அத்தகைய நிலைக்கு எங்களைக் கொண்டு வந்து நிறுத்தி விடும்.

முதற்கட்டுரையில் சொன்னது போல் இந்நாட்டின் தேசாபிமானியாக வெளிப்படையாக அறியப்பட்ட ஒருவர் இந்நாட்டின் உயர்ந்த இடத்தில் அல்லது மதிப்பு இடத்தில் அல்லது மக்களுக்கான தவல் சொல்லும் இடத்தில் மொத்தத்தில் அது இந்நாட்டின் கௌரவமும் மதிப்பும் மிக்க இடமாக இருக்கும் அப்படிப்பட்ட இடத்தில் வைத்து சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி ஒருபெயர்ப்பட்டியலைச் சமர்ப்பித்தால் அதிலிருந்து இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் இந்நாட்டில் சம்பந்தமில்லாத இருவேறுதளங்களின் இந்நாட்டு மக்களை மரணபயத்தைக் கொண்டு அச்சுறுத்தும் சம்வங்கள் நடந்தேறினால் குறிப்பாக அல்லாவின் பெயரைச் சொல்லி வெடித்துச் சிதறினால் சுவர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் மடையர்கள் அதற்கு முன்னோடிகளாக இருந்தால் அதன்பின்னர் மக்களே முஸ்லிம் என்ற காரணத்துக்காக உங்களின் தன்மானத்தின் மீதும் இருப்பின் மீதும் கல் பகிரங்கமாக வீசப்படும் நிலை இந்நாட்டில் தோன்றினால் இந்நாட்டு அரசாங்கம் செய்துகொள்ளும் சர்வதேச ஒப்பந்தங்கள் அனைத்தையும் வார்த்தைக்கு வார்த்தை படித்துப் பாருங்கள் ஏனெனில் அந்த சர்வதேச ஒப்பந்தங்களுக்குப்பின்னால் எந்த நாட்டின் தூதுவர் இருக்கின்றாரோ அவரின் கடந்தகாலப் பணிகள் மீது அவதானம் செலுத்தங்கள் (இன்னும் ஆறுவருடத்தில் நம்நாட்டுக்கு இஸ்ரல் நாடு தனது தூதுரை நியமிக்க வாய்யுள்ளது. அப்படியொரு தூதர் வரும் போது யார் ஆட்சியில் இருந்தாலும் இந்நாடு பாரிய பொருளாதார நெரு்கடியில் இருக்கும். அது அமெரிக்க டொலரை மையப்படுத்தியதாக இருக்கும். அப்போது சர்வதேச நாணய நிதியத்திடம் நம்நாட்டை சரணடையச் செய்வார்கள். நிர்க்கதியான நிலையில் அப்போது நம்நாட்டின் மீட்பராக முதன்முதலாக நியமிக்கப்படும் குறித்த அந்த நாட்டின் தூதர் தோன்றுவார். இதற்கு ஆதாரம் என்னவென்று கேட்டால் அதற்கு காலமே பதில் சொல்லும் என்பேன்.) 
மேற்சொன்ன களேபரம் அல்லாவின் பெயரால் வெடித்துச் சிதறும் நபர்களால் அரங்கேற்றப்படுமாயின் அப்போது மரணபயம் எங்கும் தலைதூக்கினால் இந்நாட்டின் வளங்கள் பற்றிய அல்லது சர்வதேசத்துக்கு அவசியமாகவுள்ள பொக்கிசங்கள் பற்றியும் அவதானம் செலுத்துங்கள். அதே நேரம் இஸ்லாத்துக்கு மதம்மாறிய நபர்கள் குறித்தும் அவதானம் கொள்ளுங்கள். ஏனெனில் புலனாய்வுப்பணி செய்ய எதிரிகளுக்கு இஸ்லாத்துக்கு மதம் மாறுவது மிச்சம் இலகுவானது. பாதுகாப்பானதும் கூட மேற்சொன்ன களேபரம் அப்படி இஸ்லாத்துக்கு மதம்மாறிய ஒருவரால் நிச்சயம் வழிநடாத்தப்பட வாய்ப்புள்ளது. அப்போது இந்தியாவையும் ரோவையும மறந்துவிடாதீர்கள். ஏனெனில் எமது நிகழ்வுகளுக்கான சுடசுட செய்தி ரிப்போட்டராக சு.சுவாமி போன்றவர்கள் இருப்பார்கள். அடுத்த ஐந்து வருட காலத்துக்கும் இந்திய மக்கள் மோடியைத்தான் தெரிவு செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம் அப்போது இங்கு ஒரு மிடருக் கஞ்சி கூட நிம்மதியாக இறங்காது. இப்போதுள்ள ஆட்சியாளர் அந்சந்தர்ப்பத்தில் இருந்தால் பாதுகாப்புக்காக நிச்சயம் பொறுப்புள்ள தலைவர்கள் நாட்டுக்கு வெளியில்தான் இருப்பார்கள். பந்தை ஆளையாள் மாறிமாறி பாஸ்பண்ணி விடுவார்கள் சர்வதேச தலையீடு பற்றி சில தலைவர் கொக்கரித்துத் திரிவர். அப்போது அங்கு மோடி ஆட்சி நிலைப்பட்டு நிற்றுகம் ஆட்சியைப் பிடிக்க சிம்பதி கிரியேசன் நடக்கும் அது தன் நாட்டு மக்கள் அதுவும் இராணுவத்தை பாகிஸ்தானிய பயங்கரவாத்தின் பெயரால் இந்திய அரசு பலிகொடுத்துவிட்டே தேர்தலை எதிர்கொள்ளும் அந்த அலையில் தமிழ்நாடும் கேரளாவும் மட்டுமே தப்பித்துக் கொள்ளும். மற்றறைய அனைத்து மாநிலங்களும் அந்த அலையில் மோதுண்டு அள்ளுண்டு திசைதெரியாமல் போகும் தமிழ்நாட்டில் மிகப்பிரதான கட்சிகளில் ஒன்று மோடியிடம் சரணடையும். அப்போது அது தலைமைத்துவ இடைவெளியில் தள்ளாடிக்கொண்டிருக்கும். எப்படியிரு்நதாலும் அந்தச்சரணைடைதல் வெற்றிபெறாது.  ஏனெனில் தமிழ்நாடு பற்றிய எதிர்வுகூறல் அதிகம் தேவைப்படாது ஏனெனில் அங்கு மோதவிகள் அதிகம் அதிகம் நமது பேச்சு அவ்வளுவு எடுபடாது. ஆனால் தமிழ்நாட்டில் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பிஜேபி அங்குள்ள பெருங்கட்சிகள் கூட்டோடு கைகோர்த்து பகிரங்கமாக எச்சரிக்கும் நிலையில் இலங்கையில் அனர்த்தம் நிகழ்ந்துவிட்டிருந்தால் இலகுவெற்றியைக் கண்டு அதன்பின்னர் தௌஹீத் அமைப்புகள் மீது வைக்கப்படும் கண் மொத்த இந்தியாவுக்கும் முஸ்லிம்களுக்கும் சொருகப்படும் ஆப்பாக மாறி விடும். அப்போது இந்திய மக்கள் கவனம் செலுத்தத் தவறிய உவைசி போன்றவர்கள் உங்களைக் காப்பாற்ற முடியும். ஏனெனில் இந்தியா சிறந்த வர்த்தகத்தளம் அதாவது நல்லதொரு சந்தை. இலங்கை சர்வதேச நகர்த்தல்களுக்கு சிறந்ததொரு மைதானம் இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். ஏனெனில் இதற்குப் பின்னால் இருக்கும் ஒரு சின்ன விடயத்தை கட்டாயம் தெளிவுபடுத்தியாக வேண்டும். இந்திய சந்தையில் ஒரு சாதாரண மிட்டாய் பெக்டரி போட்டாலும் குறைந்தது மாதத்துக்கு பத்துக்கோடி மிட்டாய் விற்கலாம். வருடத்துக்கு என்ன கணக்கு என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். அதே நேரம் இந்தியாவில் சிலவிடயங்களைத் தக்கவைக்க முன்னெடுக்கப்படும் அதிகாரப் போட்டி இலங்கையைமையமாக வைத்தே நகர்த்தப்படும். அப்போது இதற்கான ஊக்குவிப்புக் கருவியாக பௌத்த பேரினவாத சக்தி இருந்திருக்கும் அதேபோன்று அமெரிக்காவின் கை ஓங்கியிருப்பின் இஸ்லாமியப்பயங்கரவாதம் அச்சுறுத்தும் பேசுபொருளாக களத்தில் இருக்கும். அது இந்தியாவுக்கும் சேர்த்தே என்பதையும் நினைவல் கொள்க. இதெல்லாம் சர்வதேச பிஸ்னசப்பா புரிந்துகொள்ளவே நேரம் எடுக்கும்.

துருக்கி பற்றியும் எதிர்காலத்தில் அது எத்தகைய சவால்களை ஐஎஸ் பேரில் எதிர்கொள்ளப்போகின்றது என்பது பற்றியும் இதற்குப் பின்னால் உள்ள வரலாற்றுக் காரணிகள் பற்றியும் முடிந்தால் அடுத்த பகுதியில் பார்ப்போம். இன்னும் ஐந்து வருடங்களுக்குள் உலகம் ஸ்தம்பிதமடையும். கல்வியும் உலக பொருளாதாரமும் புதியவடிவம் பெறும் அப்போது எலகை புதிய சக்திகள் கட்டுப்பாட்டில் வைததிருக்கும். எல்லா நாடுகளும் அந்தச் சக்திக்கு அடிபணிந்தே ஆக வேண்டும். உலகப் போக்குவரத்து தடைப்பட்டால் எத்தகைய பொருளாதாரச் சிக்கல் தோன்றும் என்பதை இப்போது சொன்னால் நகைப்பாக இருக்கும் அதையெல்லாம் உணரும் போது மட்டுமே புரியும். மொத்தத்தில் உலகே ஸ்தம்பிதமாகும் நாடுகள் அனைத்தும் அடுத்து என்னசெய்வதென்று திண்டாடிக்கொண்டிருக்கும். 2020களுக்குப் பின் சோதனைக்காலம்தான். இதெல்லாம் உலக அரசியல் இதை முன்னுணரும் நபர்களால் மட்டுமே நாட்டையோ தனது மக்களையோடு இனத்தையோ சமுகத்தையோ வழிநடாத்த முடியும். அதற்கு புரொய்ளர் கோழிகள் போன்ற வக்கற்ற உலமாசபையால் வழிநடாத்தல் கொடுக்க முடியாது. இப்போது போர்ச்சேவல் போன்ற தில்லான கட்ஸ் மிக்க ஆலிம்கள்தான் நமக்குத் தேவை. 

எது எப்டியோ இறுதியாக மக்களே உங்களை வஹாபிசத்தைக் கொண்டு எச்சரிக்கின்றேன். செச்சனியாவிலும் டாகெஸ்தானிலும் நமக்கு நிறையப்படிப்பினைகள் இருக்கின்றன இப்போது சவுதி மையப்பட்டு நன்கொடைபெற்றுக்கொண்டு பள்ளிகளை வீதிகொன்றாகக் கட்டித்திரியும் வியாபாரிகள் விரைவில் தாம்பெற்றுக்கொண்ட ஒவ்வொரு றியாலுக்கும் பொறுப்புச் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் வரும் அபபோது உங்கள் பையில் உள்ள பேனைகள் கூட பயங்கர கூரிய ஆயுதமாகச் சித்தரிக்கப்படும். எனவே தௌஹீத் குஞ்சுகளே உங்களுக்குப் பின்னால் நீண்டு போய் இருக்கும் கயிற்றில் எந்த இடத்தில் வஹாபிசம் பிணைக்கப்பட்டு இருக்கின்றது என்பதை சரியாக இனங்கண்டுகொள்ளுங்கள். அதேபோல் மை;இயயதுல் உலமா இது தொடர்பில் விரைவாகச் செயற்பட்டு  பள்ளிகளை முன்னிறுத்திய சமுகத்தை திறம்பட ஒழுங்குபடுத்தும் வேலையைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆளையாள் காட்டிக்கொடுத்துவிட்டாவது தப்பித்துவிடுவோம் என்று யாநப்சி ஓட்டம் எடுப்பீர்கள். அபபோது இயக்கங்கள் ஜட்டியோடு அம்மனமாக நிற்கும்.

இறுதியாக மேலதிக குறிப்பு: இப்போதுள்ள உலமா சபையில் ரிஸ்வி முப்தி தலைமையில் இருக்கின்ற பலர் ஓதப்பள்ளி நடத்துவதற்கு மட்டுமே பொருத்தமானவர்கள் அதனால் அதைச் செய்ய முயலுங்கள். இப்போதுள்ள மக்தப் வேலைத்திட்டதோடு உங்கள் அறிவைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் உங்களைப் போன்றவர்களால் இந்தச் சழுகத்தை ஒழுங்குபடுத்தவும் முடியாது காப்பாற்றவும் முடியாது என்னை சமுகத்தில் உள்ள பித்னா வாதியாகப் பிரகடனப்படுத்தினாலும் இதுதான் உண்மை.

மீண்டும் சந்திப்போம்

மனதிற்பட்டது - 21 - பார்வை அரசியல்

(தமிழ் மிரர் பத்திரிகையில் எழுதும் தொடர் பத்தி)

பார்வை அரசியல்

ஒரு மனிதனுக்கு மிக முக்கியமானது மூளை ஆயினும் அதை விட முக்கியமானது பார்வை. மூளை இல்லாத பல மனிதர்கள் இயல்பாக வாழ்ந்துவிட்டுச் செல்ல, முளையுள்ள பார்வையற்ற ஒருவன் மிகுந்த அவஸ்தைகளுடன் வாழ்கின்ற பல உதாரணங்களை நாம்கடந்து வந்திருப்போம்.

ஓர் ஓவியத்துக்குக்கூட உயிர் கொடுப்பது அதன் கண்கள்தான். அதனால்தான் மொனாலிசாவின் பார்வை வசீகரத்துக்கு முன்னால் லியானாடொ டாவின்சி நம்மை முட்டி போட வைக்கின்றார். சீகிரிய ஓவியங்களிலும் சரி அஜந்தா ஓவியங்களிலும் சரி அங்கு தீட்டப்பட்டுள்ள அழகிய பெண்களின் முகத்தில் வசீகர ஒளியைப் பாய்ச்சுவது அவர்களின் கண்கள்தான். ஆண்களைக் கிறங்கடிப்பதற்கென்றே பெண் ஓவியங்களில் மயக்கும் பார்வையை நம் மூதாதையர் காலத்தில் தீட்டியிருக்கின்றார்கள் போலும். பண்டைய கால சிலை சிற்பங்களிலும் கூட இதே போன்ற வசீகரப் பார்வையை நாம் காண முடிகின்றது. 

அன்மையில் முகநூலில் தனது பக்கத்தில் காப்பியக்கோ டொக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்  ஒவியங்களுக்கு வெண்பாக்களை எழுதினார். அவர் தேர்தெடுத்த ஓவியங்களின் பார்வைதான் என்னைக் கூர்ந்து கவனிக்கச் செய்தன. காப்பியக் கோ அப்பார்வைகளைக் கூர்ந்து கவனித்தால் இன்னும் ஆயிரம் வெண்பாக்களை எழுதிலிட முடியும். அது போல கவிஞர் சோலைக்கிளி அப்பெண்களின் கண்களைப் பார்த்தால் அப்பார்வைகளின் வசீகரத்தை முன்னிறுத்தி மண் மனக்க ஓராயிரம் கவிதைகளைப் படைத்துவிடுவார். ஏனெனில் பார்வை அத்தகைய ஈர்க்கும் செழுமைமிகு அரியற் தன்மை கொண்டது. 

கண் ஜாடை காட்டுவதுதான் பார்வை அரசியலில் வாளின் கூர்மையொத்தது. வார்த்தைகளைச் செலவு செய்யாது பார்வைகளால் மட்டுமே ஒரு பெரும் உரையாடலைச் செய்து முடிக்க உலகில் இரண்டு தரப்பினால்தான் முடியும். முதல் வகையினர் புலனாய்வுக் காரர்கள், இரண்டாவது காதலர்கள். பல சந்தர்ப்பங்களில் வார்த்தைப் பிரயோகம் சிக்கலைத் தோற்றுவித்துவிடுவதால் இரு தரப்பினரும் பார்வைகளால்தான் தமது காரியத்தை கன கச்சிதமாக முடித்துக் கொள்வார்கள். அது வெகு சுதந்திரமாக. அலைபாயும் பார்வைகளும் நுண்திறன் மிக்க கண்களும்தான் இவர்களின் நம்பிக்கைமிகு ஆயுதம்.

குடிகாரன் ஒரு சாராயக் கடையைக் கடந்து போகும் போது பார்க்கும் ஒரு பார்வையை அவதானித்துப் பாருங்கள் அதில் தொக்கி நிற்கும் தவிப்பும் வாஞ்சையும் அவன் மீது ஒரு போதும் கோபத்தை உண்டு பன்னாது. அது போலவே குடிப்பதற்குப் பணமில்லையே என்று ஏக்கத்துடன் மதுக்கடையைப் பார்க்கும் ஒருவனின் பார்வையில் தொக்கி நிற்கும் தவிப்பு நம்மையும் அவன் பக்கம் ஈர்த்து அவன் மீது கழிவிரக்கம் கொள்ளச் செய்துவிடும். வெறும் பார்வை என்று அவ்வளவு எளிதில் அவற்றைக் கடந்து சென்றுவிட முடியாது.

இந்தப் பத்திரிகையின் ஓர் இளவயதுப் பிரதம ஆசிரியர் மதன் அவர்களின் கண்கள் குறித்து உமாவரதராஜன் தனது அவதானிப்பை ஒரு குறிப்பில் தொட்டிருந்தார். பிரச்சினைகளைச் சமாளிக்க அந்தப் பார்வையிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே விடயங்கள் இருக்கின்றன. அந்தப் பார்வையில் தொனிக்கும் அரசியல் மிகவும் சக்தி வாய்ந்தது. அதனால்தான் இத்தனை விரைவாக அந்தப் பார்வை பலதையும் மிக இலகுவாக வெற்றி கொண்டு தனித்துவமாகத் தன்னை ஸ்திரப்படுத்தியிருக்கின்றது. 

ஆணுக்கும் பெண்ணுக்குமான பார்வை அரசியல் பற்றி தோழி யோகி சந்துரு ஒரு கருத்தை வரைந்திருந்தாள். அதை அப்படியே உங்கள் பார்வைக்குத் தருகின்றேன்.  

ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான பார்வையரசியலில் ஒரு பெண்ணே அந்த அரசியலின் முடிவினையும் ஓட்டத்தையும் நிர்ணயிக்கிறாள். பார்வையை உள்வாங்குதல்,
பார்வையை நிராகரித்தல், 
பார்வையை தவிர்த்தல், 
பார்வையில் கேள்வி எழுப்புதல், பார்வையில் ஆச்சரியத்தை வெளிபடுத்துதல், 
பார்வையில் எச்சரித்தல், 
பார்வையில் குழப்பம் வெளிபடுத்துதல், பார்வையில் சம்மதம் தெரிவித்தல், பார்வையில் மறுத்தல் 
என அத்தனையும் அந்த இருபாலரும் வௌ;வேறு இடத்தில் இருந்துக்கொண்டு
பார்வையில் அரசியல் நடத்துகிறார்கள். ஆனால், அந்த அரசியலின் முடிவு
எப்போதும் பெண்ணிடமே மண்டியிட்டு கிடக்கிறது. ஆண் பெண்ணின் பார்வை அரசியலில் பல முறை தோல்வியைத்தழுவி சில நேரம் வெற்றியும் கொள்கிறான்

Friday, June 3, 2016

பிணம் தின்னிகள்.(சிறுகதை)


20011 / 2012 காலப்பிரிவில் பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் இருந்த நபர்களில் 10 வீதமானவர்கள் தமது சொந்த மகளை பாலியல் வன்புனர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதானவர்கள். அவர்கள் ஒவ்வொருவருடனும் மேற்கொள்ளப்பட்ட உரையாடலின் பிரகாரம் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டே இக்கதை எழுதப் பட்டுள்ளது. கவனம் செலுத்தாமலு; கரிசனையற்றும் இருக்கும் ஒரு முக்கியமான பகுதி இது.
-முஸ்டீன்-


மிருகம் 01

தனபால இரண்டு பிள்ளைகளின் தந்தை. அவனுக்கு வாழ்க்கை ஒரு போராட்டக் களம். ஆயினும் அதில் போராடும் திறனையும் ஆற்றலையும் கடவுள் அவனுக்கு அளித்திருந்தார். ஒரு நாளைக்கு ஐந்நூறு ரூபாய் சம்பாதிப்பதற்கு இரண்டு தேங்காய்ச் சிரட்டைகள் அவனுக்குப் போதும். இப்போதுள்ள ஆட்சியில் ஒரு நாளைக்கு வாழ்வதற்கு ஐந்நூறு ரூபாய் போதாதுதான் ஆயினும் என்ன செய்வது? ஜனாதிபதிக்கே ஒரு நாளைக்கு இரண்டு கோடி ரூபாய் செலவுக்குப் போதாதென்று இன்னும் ஐம்பது லட்சம் அதிகரிக்க ஆலோசித்துக் கொண்டிருக்கும் போது சதாரான அடித்தட்டுக் குடிமகனான தனபாலவுக்கு ஐந்நூறு ரூபாய் எங்ஙனம்?? அதிலும் அயராது பாடுபட்டு உழைத்த அந்த ஐநூறில் வரியென்ற பெயரில் அரசாங்கம் எப்படியும் நூற்றியைம்பது ரூபாவைப் பிடுங்கிக் கொள்ளும். அப்பாவி அதெல்லாம் அவனுக்கெங்கே தெரியப் போகிறது.

மிகவும் அழகானதும் கவர்ச்சிகரமானதுமான ஆபரணங்களை அவன் தேங்காய்ச் சிரட்டையைக் கொண்டு செய்துவிடுவான். அதில் அவன் செய்யும் வேலைப்பாடுகள் இயல்பாகவே நம்மை அதன் பக்கம் ஈர்த்து விடும். அத்துடன் அவை சிரட்டையிலிருந்து செய்யப்ட்டவைதானா என்பதை அறியும் போது ஆச்சரியத்தால் நாம் வாய் பிளப்பதும் இயல்பாகவே நடந்து விடும். அவனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் கலை நுணுக்கத்துடனும் அவற்றைச் செய்வான். 

தேங்காய்ச் சிரட்டைகளை, இரும்பு அறுக்கப் பயன்படுத்தும் வாளால் தேவையான அளவுக்குச் சமமான துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்வான். சிறிய துண்டுகள் இரண்டையும் ஒன்றினைத்து சுப்பர் குளு பசை கொண்டு ஒட்டி அது காய்ந்த பின்னர் நடுவில் சிறிதாகத் துளையிட்டு அதைக் குடைந்து குடைந்து தேவையான அளவுக்கப் பெரிது படுத்திக் கொள்வான். அதன் பின்னர் கரடுமுரடான தரையில் அல்லது கல்லில் நன்றாகத் தேய்த்து சமப்படுத்திய பின்னர், மீண்டும் வட்டவடிவமாக அதைத் தேய்த்தே ஒழுங்கமைத்து விரலுக்கு அளவாக அமைத்துக் கொணட பின், சிரட்டையை வாளால் அறுக்கும் போது வந்த தூசுகளை சுப்பர்குளு பசை மூலம் முழுமையாக ஒட்டி அது நன்றாகக் காய்ந்த பின்னர் செப்புக் கம்பியால் அலங்காரம் செய்து கம்பியின் மீது நன்றாகப் பசையிட்டு மீண்டும் அதன் மீது சிரட்டைத் துகள்களைத் தூவி அதை பொலிசிங் பேப்பர் கொண்டு மெது மெதுவாகவும் பக்குவமாகவும் தேய்த்து எடுத்து, பின்னர் தரைகளுக்குப் பிடிக்கும் டைல்துண்டுகளில் இருந்து பெறப்பட்ட மா போன்ற துகள்களால் அழுத்தமாகப் பல முறை துடைத்துச் சுத்தப்படுத்திய பின்னர் அது ஒரு பளபளப்பான அற்புதமான மோதிரம். விலையுயர்ந்த கவர்ச்சி அதில் இருக்கும். இயல்பாகவே நாம் சொக்கிப் போவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி அவன் மோதிரம் மட்டுமல்ல எல்லாவிதமான ஆபரணங்களையும் அலுப்பின்றிச் செய்து கொண்டே இருப்பான்.

ரேணு அவனின் மூத்த மகள், பதினாறு வயதாகிறது, பெரிதாகச் சொல்லும் அளவுக்கு அவள் அழகும் கிடையாது சுண்டியிழுக்கும் நிறமும்  கிடையாது. ஆயினும் கவர்ச்சியான ஆடைகளும் தந்தையின் கைவண்ணத்தில் உருவான விதவிதமான ஆபரணங்களும் அவளை அலங்கரித்திருந்தன. வீட்டில் எப்போதும் மிகச் சாதாரணமான ஆடைகளுடன் கொஞ்சம் எடுப்பாகவே திரியும் அவளது பருத்த மார்புகளும் மெல்லிய இடையும் கொஞ்சம் உற்றுப் பார்க்கத் தூண்டும். மிகமிகக் குட்டையான பாவாடைகளையே அவள் அதிகம் விரும்பினாள். கொஞ்சம் குனிந்தால் கூட ஏடாகூடமாகிவிடும் ஆயினும் அதை அவள் பொருட்படுத்துவதில்லை. தாய் எப்போதும் இது குறித்து அவளுக்குச் சொல்லும் புத்திமதிகளை காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. தாயைவிடத் தந்தையின் மீதுதான் ஈர்ப்பு அதிகம். மொத்தத்தில் அவள் ஒரு டாடி செல்லம். என்னதான் பிரச்சினைகள் வந்தாலும் தந்தையை அனைத்துக் கொண்டிருந்தாலே போதும் அவளது பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்த மாதிரி உணர்வாள்.

தனபாலவின் மனைவி மிகவும் அழகானவள். அவளுடன் ஊரிலுள்ள எல்லா ஆண்களும் கதைக்க வேண்டும் என்று ஆசைப்படுவர். இளவயதிலேயே திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றதோடு அவளுக்கும் கணவனுக்குமிடையிலான உடலியல் இடைவெளி அதிகரித்து விட்டது. தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும் வம்பளக்க அயல்வீடுகளுக்குச் செல்வதிலும்தான் அவளுக்கு நாட்டம் அதிகம். மிக இள வயதில் திருமணம் முடித்தமையும் அவளது மன அளவில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியே இருந்தது. முதல் வருடத்திலேயே முதல் குழந்தை பெண்ணாகக் கிடைத்தது, அடுத்த மூன்றாவது வருடத்தில் இரண்டாவது குழந்தை ஆணாகக் கிடைத்தது. இருபத்தைந்து வயதாகும் போதே அவள் உடலுறவு விடயத்தில் களைத்துப் போனாள். ஆனால் தனபாலவுக்கோ அதன் பின்னர்தான் மனைவி மீதான ஈர்ப்பும் உறவின் மீதான நாட்டமும் அதிகரித்தது. 

அவனிடம் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. தனது உழைப்பில் வாழ்ந்தான். குடும்பத்தைப் பராமரிப்தற்காக ஓய்வில்லாது உழைத்தான். ஒருநாள் கூட அவன் தனது மனைவி பிள்ளைகளைப் பட்டிணி போட்டது கிடையாது. ஆடம்பரமாக பணக்கார வாழ்க்கை வாழக் கொடுத்து வைக்கவில்லை அவ்வளவுதான், மற்றபடி நிம்மதியான வாழ்க்கை. பௌத்தத் தர்மத்தின் மீது அவனுக்கு அளவுகடந்த நம்பிக்கை இருந்தது. அதனால் மதுவை ஒரு போதும் அவன் நாடியது கிடையாது. சும்மா விளையாட்டுக்காகவேணும் அவன் குடித்துப்பார்த்ததும் கிடையாது. அவன் நல்ல ஆரோக்கியமாக இருந்தான். தனது பொறுப்புக்களை நிறைவாகச் செய்த அவனால் தனது மனைவி ஊர் சுற்றப் போவதை மட்டும் தடுக்கவோ அல்லது அவளைக் கடடுப்படுத்தவோ முடியவில்லை. சாடைமாடையாக அதை அவளுக்கு உணர்த்திய போது அவளும் 'வாழ்க்கையில் எதைத்தான் பெரிதாக அனுபவித்து விட்டோம், இது மட்டும்தான் எனக்கு நிம்மதி' என்றவாறு கிளம்பிச் சென்றுவிட்டாள். அதன்பிறகு அவன் இது குறித்து ஒரு வார்த்தை பேசுவதில்லை.

ஒரு மாலை வேளை தனபால தனது வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு மிகுந்த அசதியுடன் வீட்டுக்கு வந்தான். அப்போது ஒரு பிளேன்ரீ குடித்தால் அசதியைப் போக்கித் தெம்பாக இருக்கலாம் என்று நினைத்தான். ஆயினும் அவசியமானபோது ஒரு தேயிலைத் தண்ணி ஊற்றிக்கொடுக்கவும் ஆள் இல்லை. மனைவி வழமைபோல ஊர்வம்பளக்க வெளியே சென்றிருந்தாள். மகனைக் காணவில்லை, முத்தவள் தூங்கிக் கொண்டிருந்தாள். தானே குசினிக்குள் நுளைந்து தேநீர் தயாரித்துக் குடித்தான். புதுத் தெம்பு பிறந்தது, உடைகளைக் களைந்;துவிட்டு குளிக்கலாம் என்று மாற்றுடைகளை எடுத்துக் கொண்டு கிணற்றடிக்குச் செல்ல வெளிக்கிட்டவன் மகளின் அறைக்கு முன்னால் அப்படியே பேயறைந்தவன் போல நின்றான். 

மகள் நல்ல நித்திரை, அவள் அறைகுறை ஆடையோடு உள்ரங்கமெல்லாம் வெளியே தெரிய அப்பாவியாய்த் தூங்கிக் கொண்டிருந்தாள். அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டுபுட்டென்று கதவுகளையெல்லாம் சாத்தினான். மகளின் அறைக்குள் நுளைந்தான் பிரமிப்போடு அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் கவர்ச்சி அவனை என்னவோ பண்ணியது. அவனுக்குள் உறங்கிக்கிடந்த பாலியல் மிருகம் விழித்துக் கொண்டது. தன்னை நிர்வானப்படுத்திக் கொண்டு வெறியோடு மகளை அனைத்தான் அவளின் ஆடைகள் கிழிந்து பறந்தன. தனக்கு என்ன நடக்கிறது என்பதையே அனுமானிப்பதற்கு அவகாசமே இருக்கவில்லை ஆயினும் அவள் பலங்கொண்ட மட்டும் கதறினாள். அந்த மிருகம் எதையும் இழக்கத் தயாரில்லை, மூச்சுத் திணறி அவள் அசையாது  மூர்ச்சையானாள். தனபால பிணம் தின்று கொண்டிருந்தான்.
வெளியே கதவு பலமாகத் தட்டப்பட

#      #      #     #           #         #


மிருகம் - 02

நிசாந்த ஒரு கூலித் தொழிலாளி, அவனது வருமானம் சாப்பாட்டிற்கு மட்டுமே சரியாக இருந்தது. ஏனைய எந்தத் தேவைகளைக் கவணிக்கவும் அது போதவில்லை. அவன் முன்னேறுவதற்கும் கை நிறையச் சம்பாதிப்பதற்கும் எவ்வளவோ முயன்றான், ஆயினும் முடியவில்லை. முதலாளி வர்க்கத்தின் கருணைப் பார்வை அவன் மீது விழவேயில்லை. பத்து மாடுகளுக்குச் சமமாக உழைத்தான். இருந்தும் என்ன பயன் அவனது உழைப்புக்கேற்ற போதிய கூலியைக் கொடுப்பதில் முதலாளிக்கு தாராளமனம் இருக்கவுமில்லை மனிதபிமானம் இருக்கவுமில்லை. உழைப்பதில் சரிபாதி மது குடிப்பதற்கே சரியாக இருந்தது. உழைத்துக் களைத்து அசதியுடன் வரும் அவனுக்கு கஷ்டங்கள் அனைத்தையும் மறந்து நிம்மதியாகத் தூங்க அது தேவைப்பட்டது. அவன் படுகின்ற கஸ்டங்களையெல்லாம் தெரிந்த மனைவி அவனைத் தடுக்கவுமில்லை. அவனது மனைவி எல்லாத் துன்பங்களின் போதும் அவனுக்கு உறுதுணையாகவே இருந்தாள். 

வாழ்க்கை என்பது இரு மனம் ஒத்திணைந்திருந்தால் எல்லாமே இன்பம்தான், அது வறுமையாயினும் கூட என்பதைத் தெளிவாக அறிவிக்கும் வகையிலான வாழ்க்கையை இருவரும் அனுவித்ததன் அடையாளச் சின்னமாக அவர்களுக்கு எட்டுவயது மகள் இருந்தாள். அவள் படுசுட்டி, படிப்பில் அவள்தான் முதலிடம், அறிவிலும் ஆற்றலிலும் தேர்ந்தவள், வயதை மிஞ்சிய புத்தி, அவளது கல்வி மற்றும் இதர தேவைகளைக் கவணிக்க போதிய பணம் இல்லை, இனியும் இப்படியே இருந்தால் மகளின் சுபீட்சமான எதிர்காலம் கேள்விக்குறியாகிப் போகுமோ என இருவரும் பயந்தார்கள். 

நிசாந்தவின் வருமானம், முழுமையாக அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றப் போதாது என்பதில் இருவரும் மனமொத்து உடன் பட்டனர், அப்படியாயின் வருமானத்திற்கு அடுத்து என்ன வழி? என்ற கேள்வி இருவரையும் குடைந்து கொண்டிருக்கும் போதே அவள் சொன்னாள்
'நான் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு வேலைக்குப் போறன், நானும் உழைக்கிறன் ஒரு ரெண்டு வருசம் பல்லைக்கடிச்சிக்கிட்டு இருங்க, இஞ்ச எல்லாத்தையும் நீங்க பாத்துக் கொள்ளுங்க, ஒரு ஸ்திரமான நிலைக்கு வந்துட்டா அப்புறம் நாம யாரையும் எதிர்பார்க்காம வாழலாம் தானே'
'நீ சொல்றதும் சரிதான், எக்காரணம் கொண்டும் ரெண்டு வருசத்துக்கு மேல நீ இருக்கக் கூடா. என்ன செய்றது நம்ம நிலம அப்பிடி இருக்கு. நீயும் கஸ்டப்பட்டு நானும் கஸ்டப்பட்டுத்தான் நம்ம வாழ்க்கைய நிமிர்த்த வேண்டி இருக்கும்...'
அவன் பெருமூச்சு விட்டான். அவள் தன் மீது வைத்திருந்த அன்பு அவனை என்வோ செய்தது அப்படியே மனைவியை வாரி அனைத்துக் கொண்டான் பாசப் பெருக்கோடு முத்தமிட்டபடி...

இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன, மகளும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தாள். தனது மனைவியை நாடு திரும்பும்படி அவன் வேண்டினான். தனது உழைப்பு எல்லாவற்றுக்கும் போதும் என்றும் அறிவித்தான். ஆயினும் அவனது  மனைவி இன்னும் இரண்டு வருடங்கள் மேலதிகமாக உழைத்துவிட்டு நாடு திரும்புவதாக அறிவித்தாள்.  நிசாந்தவின் வாழ்க்கை ஒழுங்கு மாறியிருந்தது. உடல் அசதி தெரியாமல் இருக்கக் குடித்த மதுவுக்கு அவன் அடிமையாகவிருந்தான். மதுவில்லாமல் அவனில்லை என்ற நிலைக்கு எல்லாம் மாறிவிட்டிருந்தது. போயா தினங்களில் கூட வீட்டில் எடுத்து வைத்திருந்து குடித்தான். அவனது தொழிலிலும் ஓரளவு முன்னேற்றம் தெரிந்தது. முன்னரை விட இருமடங்கு சம்பாதித்தான். தனது சம்பாத்தியத்தில் வீட்டுத் தேவைகள் அனைத்தையும் கவனித்தான், மகளின் பெரும்பாலான தேவைகளை அவனது பணத்திலிருந்தே நிறைவேற்றினான். மனைவி அனுப்பும் பணத்தினை அவளது பெயரிலேயே சேமித்தான். அவளது உழைப்பில் ஒரு சிறு தொகை மட்டுமே செலவுக்காக எடுத்துக் கொண்டான். அதுவும் மகளின் தேவைகளுக்காக மட்டும். அதுமட்டுமல்லாது மகளின் பெயரிலும் நிறையவே சேமித்தான்.

ஆறு வருடங்களாயிற்று அப்போதும் மனைவி வரவில்லை, மகள் பெரிய பிள்ளையான போது கூட தாய் பக்கத்தில் இல்லையென்ற குறை அவனை மட்டுமல்ல மகளையும் பாதித்திருந்தது. அவள் உழைப்பில் பெரும்பாலும் வெற்றி பெற்றாள். அவனும் வாழ்வில் வெற்றி பெற்றான் அந்த வெற்றி பொருளாதாரத்தினால் கட்டமைக்கப்பட்டது. குடிசை வீடு, அளவானதும் அழகானதுமான கல்வீடாக மாறியது, வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் அவன் வாங்கியிருந்தன், அத்தியவசியப் பொருட்கள் என்றில்லாமல் ஆடம்பரப் பொருட்களும் கூடவே வீட்டை மேலும் அலங்கரித்தன. மகளின் பெயரிலும், மனைவியின் பெயரிலும் வங்கியில் சேமிப்பு பல லட்சங்களைத் தாண்டியிருந்தது. 

மேம்பட்டவாழ்க்கைத் தரத்தின் வெகுமதிகளை மகள் மட்டுமல்ல அவனும் அனுபவித்தான். அவனது விடாமுயற்சியும் பிடிவாதமும் அவனைத் தூக்கி நிறுத்தியிருந்தன, மனைவியை பலமுறை வருமாறு அழைத்துவிட்டான் ஆயினும் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று அவள் வெளிநாட்டு வாழ்க்கையில் முழுமையாக ஐக்கியமாகினாள். ஆயினும் இரண்டு மாதத்திற்கொருமுறை தவறாமல் பெருந்தொகைப் பணம் அனுப்பிக் கொண்டே இருந்தாள். அவனும் மனைவியை அலட்டிக் கொள்ளாமல் வாழத் தொடங்கினான். வீட்டோடு ஒட்டியபடி பலசரக்குக் கடையொன்றைப் போட்டான், கூடவே சொந்தமாக தரமான கரவை மாடுகளை வாங்கி பால் விற்றான், தயிர் செய்து விற்றான், நெய் உற்பத்தியிலும் வெற்றிபெற்றான். நல்ல வேளை ரஜணியின்அன்னாமலைத் திரைப்படத்தை அதிஸ்டவசமாகப் பார்க்காமல் விட்டிருந்தான். மொழி அவனைக் காப்பாற்றி இருக்கக் கூடும்.

மனைவி எட்டு வருடங்கள் கழித்து நாட்டுக்கு மீண்டாள், அவளின் நடையுடை பாவனை பேச்சு பழக்கவழக்கம் எல்லாமே மாறியிருந்தன, எந்நேரமும் தெலைபேசியில் உரையாடிக் கொண்டே இருந்தாள், தனது நகைகளையும் ஆடம்பரத்தையும் மற்றவர்களுக்குக் காட்ட வேண்டும் என்றே எல்லா இடங்களுக்கும் உறவினர்களைத் தேடித் தேடிப் போனாள். கணவனும் மகளும் தன்னோடு பெரிய ஈர்ப்புடன் கதைக்காதது கூட அவளுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை,  மகள் பாடசாலைக்குப் போவதை நிறுத்தி பல வருடங்கள் ஆகியிருந்தன. ஏன் எனக் கேட்ட போது நிசாந்த ஆயிரம் காரணங்கள் சொன்னான்.  நிசாந்தவும்  வீட்டோடே இருந்தான். கனவனை நினைத்து அவள் மிகவும் பெருமைப்பட்டாள். இன்னும் இரண்டு மாதத்தில் மீண்டும் தான் வெளிநாடு  போய்விட வேண்டும் என்று பக்குவமாக அறிவித்தாள். ஆனாலும் அதையும் கூட அவன் அலட்டிக் கொள்ளவில்லை.
குடும்பங்களுடன் உறவு கொண்டாடப் போய்விட்டு நன்கு இருட்டியிருந்த வேளை வீட்டுக்குத் திரும்பிய அவள் அதிர்ச்சியோடு உறைந்து போய் நின்றாள்..

அவள் கண்ட காட்சி, இதயமே வெடித்துவிடும்போல இருந்தது. தனது கணவனும் மகளுமா? இப்படி!! அவளால் எதையுமே நம்ப முடியவில்லை, சுயநினைவுக்கு வர நீண்ட நேரமானது. கடந்த பல வருடங்களாக அவன் மகளுடன் குடும்பம் நடாத்துவதை அறியாமல் அவள் சிலையாக நிற்க நிசாந்த பிணம் தின்பதில் குறியாக இருந்தான்...

#       #      #      #      # 

மிருகம் - 03

நதீஷா நல்ல அழகி. யாரோடும் பெரிதாகப் பேசமாட்டாள், எந்த வம்பு தும்புக்கும் போகவும் மாட்டாள். அவளைப் பொறுத்தவரைக்கும் தாய், தந்தை, வீடு, பாடசாலை இதுதான் அவளது உலகம், பணத்திற்குப் பஞ்சமில்லை, தந்தை மத்தியகிழக்கில் வேலை செய்கிறார். ஒரு சாரதியாகச்  சென்று இப்போது ஒரு அமைச்சரின் அளவுக்குச் சம்பாதிக்கிறான். பணம் சம்பாதிக்க வேண்டும் அவ்வளவுதான் அவனது கொள்கை. அது எப்படி என்றெல்லாம் இல்லை, யாருக்கு என்ன நடந்தாலும் பறவாயில்லை பணம் சம்பாதிக்க வேண்டும் அவ்வளவுதான். ரோஜர் என்ற பெயரை அவனே தனக்குச் சூட்டிக் கொண்டான். ரோஜர் என்று சொன்னால்தான் யாருக்கும் அவனைத் தெரியும். 

இப்போது ரோஜர் ஒரு முக்கிய புள்ளி, அவன்தான் ஊரில் உள்ள நிறையப் பேருக்கு மத்திய கிழக்கில் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுத்தான். அதிகம் இளம் பெண்களுக்கு அவன்தான் வீசா அனுப்பி வைத்திருந்தான். அவர்களெல்லாம் இப்போது அமோகமாகச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள் எப்படி என்றெல்லாம் யாரும் கேட்கக் கூடாது அது ஹீரோ ரோஜரின் சாமர்த்தியமும் கைங்கரியமும். அப்பெண்களுக்கெல்லாம் அவன்தான் போஸ். மொத்தத்தில் ஊரில் பலருக்கு அவனது முகமே ஞாபகமில்லை ஆயினும் அவனது பெயர் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அவனது வீடு கூட ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மாதிரிச் செயற்பட்டது. சொன்னால் சொன்னதுதான் பேச்சு மாறமாட்டான். அதனால் அவன் மீது அபிமானமும் நம்பிக்கையும் மிகைத்து இருந்தது.

அவன் வெளிநாடு செல்லும் போது நதீஷா மூன்று வயதுச் சிறுமி, பதினைந்து வருடங்களாயிற்று இன்னும் தந்தையின் குரலை மட்டும்தான் கேட்டுக் கொண்டிருக்கிறாள். எப்போதும் அவன் தவறாமல் அவளுடன் கதைப்பான். தந்தைதான் அவளுக்கு எல்லாமே. அவள் கேட்ட எதையும் உடனே கிடைக்கச் செய்து விடுவான். உடை, நகை, உட்பட அனைத்து ஆடம்பரப் பொருட்களையும் அவள் நினைத்தவுடனேயே பெற்றுக் கொள்வாள். தானும் ஒரு ரோயல் பெமிலிப் பிள்ளை என்பதை அவள் பெருமையுடன் சொல்லிக் கொள்வாள்.

ஆடை விடயத்தில் அவள் அதிக ஆடம்பரத்தைக் காட்டினாள். அதற்காகவே பல லட்சங்களை மாதாமாதம் செலவு செய்தாள். மிக விலையுயர்ந்த மெல்லிய ஆடைகளின் மீதான அவளது விருப்பம் அதீதமானது. அவளை ஒரு அழகு ராணியாக்கிப் பார்க்க வேண்டும் என்பது அவளது தாயின் வெகுநாளைய ஆசை அதனால் மகளை விதவிதமாக அலங்கரித்துப் பார்ப்பதில் அவளுக்கும் கொள்ளைப் பிரியம். அழகு ராணிக் கனவினை தனது கணவனோடு கலந்தாலோசித்த பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்று கருதிக் கொண்டாள். ஆக மொத்தத்தில் நதீஷாவின் வாழ்க்கை எந்தப் பிரச்சினைகளையும் எதிர் கொள்ளாமல் மகிழச்சியை மட்டுமே அனுபவித்துக் கழிந்தது.

யாரோடும் அதிகம் பேசாத அவளது குணத்தின் பயனாய் யாரும் அவளை அவ்வளவு எளிதில் நெருங்க மாட்டார்கள். அத்துடன் ரோஜர் என்ற நாமம் எல்லோரையும் பெரிய இடம் என்ற மனோநிலையில் கட்டிப் போட்டிருந்ததால் பத்தடி தள்ளியே லொள்ளு விடும் பசங்க எல்லோரும் ஜொல்லு விட்டபடி நின்றார்கள். உயர் தரப் பரீட்சை முடிந்ததும் நதீஷாவின் உலகம் வீடே என்றானது. அவள் படிப்பில் அவ்வளவு பெரிதாக கெட்டிக்காரி கிடையாது, தன்னை அலங்கரித்துக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை அவளால் படிப்பதில் காட்ட முடியவில்லை, தேசியமட்டத்தில் எதுவும் சாதிக்கப் போவதில்லை அத்துடன் பல்கலைக்கழகத்திற்கும் அவள் தகுதிபெறப் போவதுமில்லை, ஏதோ பரீட்சையில் சித்தி அத்தோடு முடிந்தது. வாழ்க்கை வசதிகள் மிகத்தாராளமாக இருக்கும் போது கல்வியும் தராதரமும் எதற்கவளுக்கு? அதனால் எதையுமே அவள் அலட்டிக் கொள்ளவில்லை. 

நதீஷா மிகுந்த கொண்டாட்டத்தில் இருந்தாள். அவளின் ஹீரோ நாட்டுக்கு வருகின்றார். வெளிநாடுகளைச் சுற்றிப் பார்க்க வேண்டும்.ஒரு முறையாவது மலேசியாவுக்குச் செல்ல வேண்டும். மஹாதீர் முஹம்மதுவின் சாதனைகளைப் பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் உலகின் மிக உயர்ந்த போபுரம் என்ற பெயரைப் பெற்றிருந்த மலேசியாவின் இரட்டைக் கோபுரங்களைப் பார்க்க வேண்டும். இரண்டு கோபுரங்களுக்கும் நடுவில் போடப்பட்டுள்ள பாலத்தில் நடைபயில வேண்டும் அதில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதெல்லாம் அவளின் மனதில் எப்போதும் அலைபாயும் எண்ணம். தந்தையைக் கண்டதும் நலம் விசாரித்த பின்னர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பார் யோசிக்காமல் மலேசியாவுக்குப் போக வேண்டும் என்று சொல்லிட வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தாள். தாயுடன் விமாநிலையம் நோக்கிப் புறப்பட்டாள்.

ரோஜர் வந்திறங்கினான். கோட்டு சூட்டுடன் பார்ப்தற்கு அப்படியொரு கம்பீரம். அவனது மனைவியாலேயே அவனை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடிக்கவில்லையென்றால் கேட்கவா வேண்டும். நீண்ட நாள் பிரிவின் பின்னரான சந்திப்பின் அழுத்தத்தைத் தயங்காமல் மனைவி வெளிப்படுத்தியதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவேயில்லை. நதீஷாவை ஆச்சரியமாகப பார்த்தான். இத்தனை அழகு மகளா என்று வாரி அனைத்துக் கொண்டான். முத்தமிட்டுக் கொண்டே கேட்டான் உனக்கு என்ன வேண்டும் என்று. அவளும் தயங்காமல் மலேசியா மேட்டரை பட்டென்று உடைத்துவிட்டாள். அவனும் டபள் ஓகே சொன்னான் அவளுக்கோ அளவில்லாத குஷி.

ஐந்தாறு நாட்களாயிற்று நதீஷா தன்னைப் படுகவர்ச்சியாக அலங்கரித்துக் கொண்டாள். ஆடையின் மெல்லிய தன்மையினை அளவீடு செய்ய ஒரேயொரு உதாரணம், அப்படியே பார்த்தால் மார்புக்கச்சையின் நிறம் என்ன என்று இலகுவாகச் சொல்லிவிடலாம். வெளியில் எங்கோ சென்று திரும்பிய ரோஜர் அம்மா எங்கே என்று கேட்டான் அவள் வெளியே போயிருப்பதாகச் சொன்னாள். கொஞ்சமும் தாமதிக்காமல் மகளைக் கட்டியனைத்து முத்தமிட்டான். அப்படியே அவளை அள்ளிக் கொண்டு போய்க் கட்டிலில் கிடத்தினான். அவனுக்குள் இருந்த காமப்பிசாசு விழித்துக் கொண்டு வெறியாட்டம் ஆடியது. அவளுக்கு எதையும் உணர்ந்து கொள்ளும் அவகாசம் இருக்கவில்லை. வெறித்தனமாக அவன் என்னவெல்லாமோ செய்தான் அவள் அசைவற்றுக் கிடந்தாள். அவனது மனைவி வீட்டுக்கு வந்தாள். அதிர்ச்சியோடு அப்படியே நின்றாள். அவன் பிணம் தின்று கொண்டிருந்தான்.

#       #       #     #

மிருகம் -  04

விக்ரமபால ஒரு விவசாயி, நாற்பத்தெட்டு வயதாகிறது அவனுக்கு. ஐந்து பிள்ளைகளின் தந்தை. சொந்தமாக மூன்று ஏக்கர் வயல் நிலம் இருக்கிறது. அதில்தான் அவனது பெரும்பகுதி நேரம் கழியும். அவனே வயலை உழுது வரம்பு கட்டி, போர்ப்பலகை அடித்து நிலத்தைச் சமப்படுத்தி அலக்கொத்தி தேவைக்கதிகமான நீரை வெளியேற்றி, கைப்பலகை இழுத்து சின்னஞ்சிறிய பள்ளங்களையும் நீர் தேங்காத முறையில் நேர்த்தியாக்கி, விட்டுத்தான் விதை நெல்லை முளை கட்டப் போடுவான்.

கைப்பலகை இழுப்பதில் விக்ரமபால மிகத் தேர்ச்சி பெற்றவன். முளைவிட்டிருக்கும் விதை நெல்லைத் தூவுவதற்கு முன்னர் கைப்பலகை இழுப்பது மிகவும் முக்கியமானது. அல்லாதபட்சத்தில் அங்கிருக்கும் சிறுசிறு குழிகளில் நீர் தேங்கி நிற்கும் நிலையில் முளைநெல்லைத் தூவினால் ஏழு நாட்களில் அந்த முளை நெல்லு அழுகிப் போகும். அதனால் விதைப்பு தோல்விதான். 

கொத்திய அலைகளுக்குள் கைப்பலகையை லாவகமாகப் போட்டு இழுப்பதில் அவன் மிகத் தேர்ச்சி பெற்றிருந்தமையால் மிக வேகமாக அந்தப் பணியை நிறைவு செய்துவிடுவான். அவனது வயலில் மட்டுமல்ல நல்ல சம்பளத்தில் பலருக்கும் அவன் கைப்பலகை இழுத்துக் கொடுப்பான். விக்ரமபால கைப்பலகை இழுத்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது பலரது நம்பிக்கை. 

விதை நெல்லுத் தூவி ஏழாவது நாள் தொடக்கம் பன்னிரெண்டாவது நாளைக்குள் த்ரீபிளஸ் டீபீஏ எண்ணெய் அடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நெல்லுடன் சேர்ந்து கொஜரா, மற்றும் கோரை வகைப் புற்களும் முளைத்துவிடும். எண்ணெய் அடித்த மூன்றாவது நாள் இரண்டு அங்குலத்திற்கு நீர் கட்ட வேண்டும். அந்நீர் தேங்கி நிற்கும் மூன்று நாட்களில் புல்லு இனங்களெல்லாம் அழுகி நெல்லு மட்டும் தலைநிமிர்ந்து கம்பீரமாக நிற்கும். அந்தக் காட்சியைக் கண்குளிக் கண்ட பின்னர்தான் அவனுக்கு நிம்மதி. அதிலிருந்து இருபத்தியொரு நட்களும் மிக முக்கியமானவை, பிறந்த குழந்தையைப் பராமரிப்பது போலத்தான் தேவையானளவு தண்ணீர் விட்டுப் பராமரிக்க வேண்டும். 

அந்த இருபத்தியொரு நாட்களின் பின்னரும் கூடுதல் அவதானம் தேவை, காரணம் பல்வேறு விதமாக புழு வகைகள் தோற்றம் பெறுவதற்கு இடமிருக்கிறது. அப்படிப் புழுக்கள் தோன்றினால் வேளான்மை மிகவும் சோர்வாக இருக்கும். அவை வேளான்மையின் பலத்தை இழக்கச் செய்துவிடுவதால் அப்படியாகும். அதைக்கண்டால் உடனே புழுக்களைக் கொல்ல பூச்சுமருந்தும் கிருமி நாசினிகளும் பயன்படுத்த வேண்டும். பின்னர் வேளான்மையின் வளர்ச்சியைப் பொறுத்து நீரும் பசளையும் இட வேண்டும்.  

இடையே குருத்து நோய், தண்டரிப்பு நோய் போன்றவை வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். அத்தோடு அறக்கொட்டியான்கள் தோன்றி வேளான்மையின் பச்சயத்தை உறுஞ்சிக் குடித்துவிடவும் கூடும். அது மட்டுமா நெல் விளையும் காலத்தில் ஈப்பூச்சிகள் தோன்றி நெல்லில் இருக்கும் பாலை உறுஞ்சிக் குடித்துவிட்டால் நெல்லு பதராகிப் போகும்.  விளைந்த காலத்திலும் அறக்கொட்டியான்களின் தொல்லை இருக்கவே செய்யும். அவையனைத்திலும் கவனமாக இருந்தால் மட்டுமே நல்லதொரு அறுவடையைக் காணமுடியும். கண்ணும் கருத்துமாக இருந்தால் மட்டுமே வெல்லமுடியும், அவன் தேர்ந்த விவசாயி என்பதால் அவன்தான் ஊரில் ஒரு விவசாயப் போதனா  ஆசிரியர் போன்று செயற்பட்டான். எல்லோரும் அவனிடமே சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளத் தேடிவருவர். அவ்வளவு அனுபவம். 

வயலே கதியென்று கிடக்கும் அவன் எப்போதாவதுதான் வீட்டுக்கே செல்வான். அவனுக்குத் தேவையான அனைத்தையும் அவனது மனைவியே சுமந்து கொண்டு வயலுக்கு வந்துவிடுவாள். பிள்ளைகள் மூன்றுபேர் திருமணம் முடித்து அவரவர் வாழ்க்கiயில் செட்டிலாகி விட்டார்கள் நான்காமவன் சாதாரணதரம் படித்துக் கொண்டிருந்தான், கடைக்குட்டி செல்லப் பிள்ளை பதின்மூன்று வயது. அவள் ஏழாம் தரத்தில் இரண்டாவது முறையாகவும் படித்துக் கொண்டிருந்தாள். அவ்வளவு கெட்டித்தனம்.

 சிறுபோகச் செய்கையில் விக்ரம ஈடுபாட்டுடன் உழைத்துக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட அறுவடைக்காலம் நெருங்கிவிட்டது. அமோக விளைச்சல் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்த்தான். இத்தனை வருட காலத்தில் அவன்கடையில் அரிசி வாங்கியதாக ஞாபகமில்லை. அவனது பாட்டனின் காலத்திலிருந்தே அவன் வயலில்தான் கிடக்கிறான். ஒருநாள் கூட சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடந்தது கிடையாது ஆயினும் அவன் ஏழை. ஒரேயொரு துவிச்சக்கரவண்டிக்குச் சொந்தக்காரன். அது தவிர சின்னதாய் ஒரு களிமன் வீடு, அது அவனது தந்தை கட்டியது. அவனால் முடிந்தளவு பிள்ளைகளைப்படிக்க வைத்தான். அதுவே அவன் அவர்களுக்குச் செய்த பேருபகாரமாக இருந்தது. 

மனைவி வயலுக்குச் சாப்பாடு கொண்டு வந்திருந்தாள். அவசர வேலையாக வெளியே சென்றுவர வேண்டியிருந்துது. உடனே வெளிக்கிட்டவன் வேலையை முடித்துவிட்டு எதற்காகவோ வீட்டுக்குச் சென்றான். பழைய உரப் பைகளையும் கயிற்று முடிச்சுக்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பியபோதுதான் தன் செல்லக்கடைக்குட்டி மகளைக் கண்டான். அவள் குளித்துவிட்டு உள்ளே பாட்டுப்பாடியவண்ணம் உடைமாற்றிக் கொண்டிருந்தாள். அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ தெரியாது ஒரேயடியாக வீட்டினுள் புகுந்தான் அவளைக் கட்டியனைத்தான் வெறிகொண்ட மிருகமாய் மாறினான். அவளின் கதறல் எல்லாப் பக்கமும் எதிரொலித்தது, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் ஓடிவருகையில் அவன் பிணம் தின்று கொண்டிருந்தான்.

சூ சூ சூ சூ சூ


சிறைச்சாலை

தனபால, நிஸாந்த ரோஜர், விக்ரம எல்லோரும் அங்கு பினை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துக் கிடந்தார்கள்.  கொள்ளைக்காரனுக்குக் கூட மதிப்பிருந்தது. ஆனால் அங்கு இந்த ஈனப் பிறவிகளுக்கு துளியும் மதிப்பிருக்கவில்லை, மொத்தம் முன்னூறு கைதிகளில் இருபத்தைந்து பேர் தனது மகளைக் காம வேட்டையாடிய மிருகங்கள். திருடனையும்,கொள்ளைக்காரனையும் அங்கீகரித்த சமூகம் பிணந்தின்னிகளை அசிங்கமாகவே பார்த்திற்று.
'சவுதியில போல இவனுகள நடு ரோட்டில வெச்சி கழுத்த வெட்டனும்' சொன்னது கஞ்சா வியாபாரி, 
'ஈரான்ல போல பப்ளிக்ல தூக்குல போடனும்' சொன்னது தூள் பாவித்து அகப்பட்டுக்கொண்டவன்
'எப்பிடிடா மனசு வந்திச்சி உனக்கெல்லாம் சொந்தமகள... ச்சீ வெக்கமாயில்ல'  சொன்னவன் குடிகாரன்
'இவெனல்லாம் திருந்தவே மாட்டானுகள், அவன டொய்லெட் கிட்டத்தான் படுக்கப் போடனும்' சொன்னது திருடன்
அப்போது ஒருவன் ஒரு செய்தி கொண்டு வந்தான்
'மச்சான் செய்தி தெரியுமா?'
'சொன்னாத்தானெ தெரியும்'
'பொண்டாட்டிய வெளிநாட்டுக்கு அனுப்பிட்டு மகளுக்கு வேலபாத்த நிசாந்தவுக்கு புள்ள கிடச்சிரிக்கிதாம். அவன்ட மகளுக்குப் பிறந்த புள்ள, அவன் மூலமாப் பிறந்ததுதானாம் டீஎன்ஏ ரிப்போட் மூலமா புரூப் ஆகிட்டு கடைசி வரையும் நீதிபதி பின குடுக்கமாட்டாரு போலத்தான் தெரியிது' 
'இவனுகளுக்குப் பின குடுத்து என்னதான் செய்ய'
ஏங்கிப் போய் இருந்த நிசாந்தவைப் பார்த்து ஒருவன் சொன்னான்
'நீ கவலப்படாத மச்சான், மிஞ்சிப் போனா பத்து வருசம் கிடைக்கும் அதுக்கிடையில எத்தனையோ பொது மன்னிப்புக்காலம் வரும் அப்பிடியும் இப்பிடியுமா ஒரு அஞ்சி இல்லாட்டி ஆறு வருசம்தான் உள்ள இரிக்க வேண்டி வரும் டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி...' 
அவன் புன்னகைத்துக் கொண்டான்
காலம் நம் நாட்டுச் சட்டத்தைப் பார்த்து எக்காளமிட்டுச் சிரித்தது.

-2011-