Thursday, November 5, 2015

அஷ்ரப் சிஹாப்தீனுடன் ஒரு நிமிடம்


றேர் மறை 15 கேள்விகள்

01. உங்களைப் பற்றியஉங்களின் மதிப்பீடுஎன்ன?
எனது பலவீனங்களைப் புரிந்து வைத்திருக்கிறேன்.

02. நீங்கள் எத்தனைபேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
நமக்குநாமேமுரண்பட்டுக்கொள்ளும் போதுஆங்காங்கேசிலருடன் அவ்வப்போதுமுரண் பட்டுக்கொள்ளவேண்டித்தான் இருக்கிறது. ஆனால் எத்தனைபேர் என்றுகணக்குச் சொல்லமுடியவில்லை.

03. இலக்கியவாதிகளுக்கிடையேயானமுரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்தநிகழ்வுஎது? 
இலக்கியவாதிகளுக்கிடையிலான முரண்பாடுகள் கவரும் விதமாகவா இருக்கிறது?

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர்விபரங்களுடன்?
ஏன்னைப் பற்றித் தனியேயாரும் எழுதியதுகிடையாது. எனதுஅறபுச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூலான'ஒருசுறங்கைப் பேரீச்சம் பழங்கள்'தொகுதிக்குமதிப்புரைவழங்கியசகோதரிலரீனாஅப்துல் ஹக் அதில் ஒருபகுதியில் என்னைப் பற்றியும் எழுதியுள்ளார். அதையேஎனதுஅறிமுகத்தையாராவதுகேட்டால் அனுப்பியும் வைக்கிறேன்.

05. நீங்கள் யார் யாரைப் பற்றிஅல்லதுபடைப்புக்களைப் பற்றிஎழுதியிருக்கின்றீர்கள்?
'யாத்ரா'சஞ்சிகைகளைப் பார்த்தீர்களானால் பலரைப் பற்றியும் நான் எழுதியிருப்பதைக் காணலாம். அதுபட்டியல் வரும். யுhத்ராவைஒலிச் சஞ்சிகையாகமாற்றியபிறகும் கூட அதில் சிலரைநேர்கண்டிருக்கிறேன். இப்போதும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் இலக்கியமஞ்சரிநிகழ்ச்சியிலும் இலக்கியவாதிகளைநேர் கண்டு (அவர்களைப் பற்றியமுக்கியவிபரங்களை) ஒலிபரப்பிவருகிறேன்.தவிரபலரது நூல்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். புட்டியல் தரவ hய்ப்புமில்லை,அவற்றைநான் குறித்துவைத்துக் கொள்வதுமில்லை.

06. யாரைமிகவும் மதிக்கின்றீர்கள்?
தன்னையேஎல்லோரும் புகழவேண்டும்,தான் சொல்வதேவேதவாக்கு,நான் எழுதுவதே இலக்கியம்,என்னுடையசிஷ்யக் குஞ்சுகளே சிறந்தவர்கள்,மாலையும் மரியாதைக்கும் பொருத்தமுள்ளவன் நான் மட்டுமேஎன்றெல்லாம் நினைக்கும் குப்பைமனிதர்களைத் தவிரமற்றவர்கள் அனைவரையும் பிடிக்கும்.

07. இதெல்லாம் ஒருபுத்தகமாஎன்றுஎதைவாசிக்கும் போதுதோன்றியது?
ஒருபுத்தகத்தைப் பற்றித்தான் கேட்கிறீர்கள். என்னிடம் அவ்வாறானபுத்தகங்கள் ஒருகும்பம் கிடக்குது. அவற்றையாருக்கும் வாசிக்கக் கொடுக்கும் எண்ணம் கூட எனக்குக் கிடையாது.

08. இதுவல்லவோபுத்தகம் என்றுஎதைவாசிக்கும் போதுதோன்றியது?
எச்.ஏ.எல். கிரெய்க் எழுதி - அல் அஸூமத் மொழிபெயர்த்த'பிலால்'

09. உங்களுக்குப் பிடித்த இலக்கியசஞ்சிகை?
எனக்குப் பிடித்த இலக்கியசஞ்சிகையாத்ரா!

10. உங்கள் எழுத்தின் பொருளாதாரமதிப்புஎன்ன? ஒருகவிதைக்கு,சிறுகதைக்கு,ஆய்வுக்குஅல்லதுவேறேதுமொருபடைப்புக்கானவிலைஎன்ன? 
எனக்கு இலக்கியத்தைப் பொருளாதாரரீதியாகமதிப்பிடத் தெரியவில்லை.

11. இலக்கியத்துக்கானநோபல் பரிசுபற்றியதங்களின் அபிப்பிராயம்?
நோபல் பரிசுக்குப் பின்னும் அரசியல் என்றஒன்று இருந்தாலும் தெரிவுசெய்யப்படுபவைமோசமானவைஎன்றுசொல்லமுடியாதுஎன்றுஎண்ணுகிறேன்.

12. உங்களுக்குஎன்னென்னமொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
எனக்குஒருமொழியிலுமேபாண்டித்தியம் கிடையாது.

13. முகநூல்,வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
கிள்ளி எடுக்கவும்! அள்ளி வீசவும்!

14. உங்களின் குடும்பம் பற்றிமிகச் சுருக்கமாகஐந்தாறுவரிகளில்?
நான்,மனைவி,மகள், இரு மகன்கள்,மருமகன்!

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்தவேண்டும் என்றுதோன்றும்?
ஒரு சில முகங்கள் இருக்கின்றன. குத்தினால் ஏழுமுறை கையைக் கழுவிக் கொள்ளலாம்தான். ஆனால் காலமெல்லாம் நினைவில் வந்து அருவருப்புத் தரும் என்பதால் சும்மா இருக்கிறேன்.

No comments:

Post a Comment