Thursday, November 12, 2015

நேர் மறை 15 கேள்விகளுக்கு ஆர்.எம்.நௌசாத் (தீரன்) பதில்கள்


தமிழ்மிரர் 06 நவம்பர் 2015

01. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?


என் பட்டோலைகளை  மீசானில்  போட்டுள்ளேன். காலம் மறு தட்டில்  படிக் கற்களை வைத்துக் கொண்டிருக்கிறது. எடை போட தாமதமாகும்


02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?

ஒரே ஒருவருடன்.... நபசுல் அம்மாராவுடன் மட்டுமே.


03. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
இலக்கிய மேடைகளில்  அவர்களின்  ஓரங்க ஈரங்க நாடகக்  கூத்துக்கள் என்னை  மிகவும்  கவர்வதுண்டு,

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
இதற்குப் பிறகு  எழதவே  மாட்டார்களா.!!!

05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
விரல் விட்டு எண்ணி விடலாம்

06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
தீரன் என்ற உள் மனிதனை

07. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
நட்டுமை நாவலை  வாசிக்கும் போது 

08. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
நட்டுமை நாவலை  வாசிக்கும் போது

09. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
தூது

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
சாகித்திய விருதுக்காக  ரூபா 55000- தந்தார்கள்

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
நாய்க்கு  ஏன்  தோல் தேங்காய்..?

12. உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
பழங்கால  சுரியானி  மொழியில்..

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
ஒவ்வொரு  இணையக்  கடையாக ஏறி ஒன்றும்  வாங்கப் பிடிக்காமல் இறங்கிக் கொண்டிருக்கிறேன் ..

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
சரியாக கேட்டீர்கள் ஐந்தாறு  வரிகளில் என்று-  ஆறே பேர்தாம். நான்-- மனைவி- மூன்று பிள்ளைகள்—ஒரு  வரிப் பூனைகுட்டி

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
தானே  அச்சடித்த தனது  நூல் வெளியீட்டு  விழா  அழைப்பிதழில் தன பெயருக்கு முன்னால்   பிரபல எழுத்தாளர் என்ற அடைமொழி சேர்த்தவனை  இப்போதும்  தேடிக் கொண்டிருக்கிறேன் ...

No comments:

Post a Comment