Friday, November 30, 2012

மகா கொலைகாரன்



எனக்கு ஒரு துப்பாக்கி வேண்டும்
அதில் பல்லாயிரம் குண்டுகள் இருக்க வேண்டும்
சமூகத்தின் பெயரால் வாழும்
அயோக்கியர்களையும் தலைவர்களையும்
பகிரங்கமாகச் சுட்டுக் கொன்று
நடுவீதியில் வீச வேண்டும்

மற்றவன் கண்ணீரில் வாழ்பவனும்
மாற்றான் மனைவியைத் தீண்டுபவனும்
மதபோதகராய் வேசமிட்டு
சிறுவர்களுன் சேர்க்கை செய்யும்
மார்க்கம் போதிப்பதாய் ஓலமிடும் ஆசாமிகளையும்

தலைவன் எனச் சொல்லிக் கொண்டு
தான்தோன்றித் தனமாய் வாழும்
குடிகாரத் தறுதலைகளையும்
எனது கையால் கொல்ல வேண்டும்

உத்தம வேசம் போட்ட வீர புருஷர்களையும்
களவானிப் பயல் கூட்டத்தையும்
எல்லோரையும்
எல்லோரையும்

கனவொன்று கண்டேன்
துப்பாக்கி வீரனாகவும்
வாள்வீரனாகவும்
போர்வீரனாகவும்
வலம் வருவது போல

அடுத்த தலைமுறையிலேனும்
தென்றல் வீசட்டும்.

No comments:

Post a Comment