Friday, November 30, 2012

நியாயப்படுத்தலின் தாக்கம்



நம்பிக்கை தொலை தூரமாகிப் போக
நான் குழம்பிப் போகிறேன்
யார் வார்த்தைகளை நம்புவது?
எல்லோருமே உறுதியோடுதான் சொல்கிறார்கள்
தங்களை மட்டும் நியாயப்படுத்தியபடி
எல்லோர் வார்த்தைகளும்
தடங்கலின்றியே ஒலிக்கின்றன

எல்லோரும் நியாயப்படுத்த
தவறுகளே இல்லையென்றானது
தாயும் புனிதமாகிறாள்
மனைவியும் புனிதமாகிறாள்
உறவுகளும் நண்பர்களும் கூட

உணர்ச்சிவசப்பட்டபோது
அவர்கள் வெளிப்படுத்திய
கொடூரமான வார்த்தைகள் அனைத்தையும்
அமைதி கொண்டபோது
மறந்துவிட்டார்கள்

தங்களையே நியாயப்படுத்தும்
அனைவருக்கும் மத்தியில்
புன்னகைத்தபடி இருக்கவும்
பொறுமையோடு அனைத்தையும்
செவிமடுக்கவும் பழகிக் கொண்டேன்

விரைவில் ஒரு நாள்
உண்iமைகள் தெளிவாகிட
எனது கணிப்புக்களும் சரியாக இருக்கும்
அப்போதும் நான்
புன்னகைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment