Tuesday, April 24, 2012

குருடர்கள் யானை பார்த்த கதை -முஸ்டீன்-



இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தருணங்களில் பாடசாலை மாணவனாக இருக்கும் போது வகுப்பறையில் ஆசிரியர் சொன்ன கதைதான் இது. பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த கதை. தெரியாதவர்கள் ஒருவராவது இருக்கக்கூடும் என்பதால் மீண்டும் ஒருமுறை இந்தக் கதையைச் சொல்கிறேன்.

குருடர்கள் சிலர் யாணை பார்க்கப் புறப்பட்டார்கள். யாணை பார்த்த பின்னர் அவர்கள் யானை எப்படியானது என்பதைப் பற்றி விவரணஞ் செய்தார்கள். ஒருவன் யானை சுவர் போன்றது என்றான், மற்றவன் அதை மறுத்து யானை சுளகு போன்றது என்றான். அடுத்தவன் இல்லை இல்லை யானை துடைப்பம் போன்றது என்றான். இப்படி ஆளுக்கொரு கதை. சுவர் போன்றது என்று சொன்னவன் ஸ்பரிசித்தது யானையின் வயிற்றுப் பகுதியை, சுளகு என்று சொன்னவன் ஸ்பரிசித்தது யானையின் காதை, துடைப்பம் போன்றது என்று சொன்னவன் ஸ்பரிசித்தது யானையின் வாலை, எனவே எதையும் அரைகுறையாகப் பார்க்காமல் முழுமையாகப் பார்க்க வேண்டும் என்று  கூறிய ஆசிரியர் புத்தி சொல்லத் தொடங்கினார். அவர் சொன்ன புத்திகள் எல்லாம் மறந்து விட்டன. ஆனால் யானைக் கதை மனதில் நின்று வம்பு செய்தது, அதில் எனக்கு நிறையக் குறைகள் தென்பட்டன பின்னர் அதை அப்படியே ஓரத்தில் போட்டு விட்டேன்.

புத்தாயிரம் பிறந்தது, 21ஆம் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டின ஏதோவோர் பத்திரிகையில் யானைக் கதையை மீண்டும் படித்தேன். புத்தாயிரத்தை எப்படிக் கொண்டாடவும் திட்டமிடவும் பயன்படுத்தவும் வேண்டும் என்று எழுதத் தொடங்கி இடையே யானைக் கதையும் இருந்தது, அவர் எழுதிய அனைத்தும் மறந்து விட்டது யானைக்கதை மட்டும் மனதில் நின்றது. அந்தக்கதையில் ஏதோ சிக்கல் இருக்கிறது, அது என்ன என்பதை அந்நேரத்தில் உள்ளம் உணர்த்தியது, ஆயினும் சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்க  மூளை தாயாரில்லாது இருந்தது.

2012ஆம் ஆண்டு பிறந்தது எனக்கு ஒருமுறை எஸ்.பொ.வை படிக்க வேண்டும் என்று தோன்றியது கா.சிவத்தம்பி மரணித்த பின்னர் எஸ்.பொவைப் படிக்கும் போது வித்தியாசமாக ஏதும் எனக்குத் தோன்றுகிறதா? என்பதுதான் மனதில் அடிக்கோடிட்ட விசயம். அவரது எழுத்துக்களை உணர்வுடன் படித்தேன் அவை நிறையச் செய்திகளை என்னுள் விதைத்துச் சென்றன. தேவை: உண்மையின் உபாசகர்கள் என்ற அவரின் கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் அவரும் யானைக் கதை சொன்னார். வாசிப்பதை அப்படியே நிறுத்தினேன் மூளை யோசிக்க நீண்ட நேரத்தை ஒதுக்கித் தந்தது காரணம் நான் எஸ்பொவை நான் மீண்டும் படிக்கும் போது அது புதிய சூழல், இலங்கையின் ஆயுத விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு அபிவிருத்தியென்ற முழக்கம் ஓங்கியொலித்துக் கொண்டிருந்தது. நான் சிறைச்சாலையில் இருந்தேன்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்வதற்காக சர்வதேசத்தின், குறிப்பாக இந்தியாவிலுள்ள தமிழீழவிடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டேன் என்றும் அதற்காக இலங்கையில் செயற்பாட்டுத் தளத்தை நிறுவ முயன்றேன் என்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் என்னைக் கைது செய்தார்கள். அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவினை பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்று சிறையில் தள்ளினார்கள். அதற்கு வலு சேர்க்கும் விதமாக கிளிநொச்சியில் வைத்து எனது நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டர். அவர் தங்கியிருந்த வீடு பிரபாகரனின் புதல்வர் சாள்ஸ் அண்டனி யுத்தகாலத்தில் தங்கியிருந்த வீடாம்... இவையெல்லாம் கைது செய்தவர்களுக்கு வாய்ப்பாகப் போக, சிறைச்சாலை எனக்கு நீண்ட நிம்மதியையும் ஓய்வையும் தந்தது.

நீதிமன்றை முழுமையாகநம்பினேன், எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்ளத் துணிந்தேன், கடைசியில் ஒரு கொலைக் குற்றச்சாட்டுடன் இன்னும் என் மீதான வழக்கு உயர்நீதிமன்றில் போய்க் கொண்டிருக்கிறது. சிறைச்சாலை அதிகாரிகளைப் பார்த்துச் சொன்னேன் 
'ஒருபூனையைப் பிடித்து புலியென்று அடைத்து வைத்திருக்கிறார்கள்;' என்று. 
எல்லோரும் சிரித்தார்கள், அவர்களால் இன மத குல மொழி பேதம் கடந்து சிரிக்க மட்டுமே முடிந்தது. சரி இனி விசயத்திற்கு வருவோம்.

நிறைய வாசித்து மகிழ நீண்ட காலத்திற்குப் பின்னர் கிடைத்த நேரத்தை சரியாகப் பயன்படுத்துவதுதானே ஒரு போராளிக்கும் புத்திசாலிக்கும் அழகு. அதற்காக நான் ஒன்றும் புலி வீரனும் கிடையாது, அதிபுத்திசாலியும் கிடையாது. எல்லாவற்றையும் மறந்து யானைக் கதை ஆட்டிலெறி தாக்குதல் களம் போலவும் மல்டி பெரல் அடி பெற்ற நிலம் போலவும் உள்ளம் அதிர்ந்து மௌனிக்க, எல்லாம் வெட்ட வெளியாகி பொட்டல் நிலமாகித் தெரிந்தது. எல்லாச் சிந்தனைகளும் எண்ணங்களும் உணர்வுகளும் அமைதி கொண்டன.

குருடன் யானை பார்க்கப் போனான். இது எப்படிச் சரியாகும். அவன் குருடன், எப்படி அவனால் யானை பார்க்க முடிந்தது? இது பிழையான விசயமல்லவோ, அப்படியிருக்க எல்லோரும் இதை குருடன் யானை பார்த்தான் என்றே எழுதுகின்றார்கள், சொல்கிறார்கள். சரி அதை, யானை பற்றி அறியப் போனார்கள் என்று நாம் மாற்றிக் கொள்வோம். அல்லது இலகுவாக விளங்கிக் கொள்வதற்காக 'பார்த்தல்' என்ற சொல் எடுத்தாளப்பட்டது என்று  அதைப் பெரிது படுத்தாது விட்டுவிடுவோம். யானையைப் பற்றி ஸ்பரிசித்துச் சொன்ன எல்லாக் குருடர்களும் மடையர்களா? அல்லது விசயம் தெரியாதவர்களா? குறைபுத்திக்காரர்களா?. எஸ்.பொவைப் போல 'அது அவர்களின் தவறல்ல அதாவது சுவர் போல என்றதோ சுளகு போல என்றதோ துடைப்பம் போல என்றதோ, அது அவர்களின் ஸ்பரிசம். அவர்கள் விளங்கிக் கொண்ட விதம் அப்படி' என்று மன்னித்துவிட என்னால் முடியவில்லை. மடையர்களின் கருத்தை மன்னித்து ஏற்றுக் கொள்ளலாமோ? மன்னிக்கலாம் ஆனால் எப்படி அதை ஏற்றுக் கொள்ள முடியும்?

யானை பற்றிய தேடல் செய்த குருடர்களில் ஒருவராவது புத்திசாலி இல்லையா? அல்லது ஒரு புத்திசாலிக் குருடன் கூட யானை 'பார்க்கப்' போகவில்லையா? எல்லாக் குருடனும் ஒரு பகுதியைத்தானா ஸ்பரிசிக்க வேண்டும். யானையின் காதைப் பிடித்தவன் சுளகு என்றான், செவியைப் பிடிக்கும் போது அதைத் தடவி உருவகப்படுத்திக் கொள்ளும் போது காதின் தொடர்ச்சியாக வரும் தலை, தந்தம், தும்பிக்கை எதையும் அவன் தடவிப் பார்க்க வில்லையா? சரி அவன்தான் அறிவில்லாதவன் மடையன். மற்றவன் கூட அந்தப் பெரிய யானையின் வாலை மட்டும்தானா ஸ்பரிசிக்க வேண்டும்? அதன் மேனியைத் தடவியவன் முன்னும் பின்னும் மேலும் கீழும் தடவ வாய்ப்பிருந்ததே அவனாலும் அதைச் செய்ய முடியாமற் போயிற்றா? ஆனாலும்; ஒரு விடயம் புரிந்தது, யானைக் கதை பொதுவாக முழுமையாகச் செய்யப்படாத ஒரு விடயத்தை அரைகுறையாக விளக்கும் செயற்பாட்டிற்கு உதாரணமாக பயன்படுத்தப் படுகின்ற முழுமை பெறாத அவசரத்தில் எடுத்தாளப்பட்டவொன்று, அப்போது யாரும் எதிர்க் கேள்வி கேட்காததால் பல முறைகளிலும் பிரயோகிக்கப்படலாயிற்று, இப்போதுள்ள நமது சட்டங்கள்போல.

யானையை ஸ்பரிசித்தவர்கள் அறிவிழிகள் என்று ஒரே வசனத்தில் நிராகரித்தாலும் அதற்குள்ளால் நாம் ஏதோவொன்றை நியாயப்படுத்திக் கொள்கின்றோம். அதுதான் அவனது அறிவுமட்டம், அதனால் மன்னித்து விடுவோம், என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்கின்றோம். அறிவிலிகள் பார்த்த யானை கூட இப்படித்தான் இருக்கும் சுளகு போலவும் சுவர் போலவும். அதற்கு குருடன் பார்க்கத் தேவையில்லை. இந்தக் கதையில் குருடனைப் பார்க்க வைத்த பெருமை நமக்குத்தான் உண்டு,

மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் எனது தம்பியொருவன் கேட்டான். அண்ணா உனக்கு குருடன் பார்த்த யானைக் கதை தெரியுமா? என்று. நான் ஆம் என்றேன். மீண்டும் அதே வேகத்தில் அவன் திருப்பிக் கேட்டான், குருடன் எப்படி பார்க்க முடியும்? என்று!. என்னிடம் விளக்கக் குறிப்புகள் இல்லை போலியான வார்த்தைகளால் அவனின் நியாயமான கேள்வியை வலுவிழக்கச் செய்ய நான் தயாரில்லை. 'அதுதானே குருடன் எப்படி பார்க்க முடியும்?' என்றேன். அவனுக்கோ ஏக திருப்தி. நான் கதை சொல்ல முன்னமே அவன் கதையை அறிந்திருக்கவும் கூடும் அல்லது தலைப்பே அவனது சிந்தனையைக் கிளறிவிட்டிருக்கவும் கூடும். என்ற பல்வேறு எண்ணங்கள் எனக்குள் முகாமிட்டது. சிலவேளை அவனுக்கு கதையே தெரியாமல் இருக்கவும் கூடும், ஏதோ... நான் உரையாடிக் கொண்டிருப்பது புத்தாயிரத்தில் பிறந்த ஒருவனுடன் அல்லவா என்னைவிட அவனது அறிவு வீச்சு கனதியாய்த்தான் இருக்கும்.

இப்போது நானும் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும், நான் கைது செய்யப்பட்ட விசயமும் யானை. நிறையக் குருடர்கள், அவர்கள் பல வடிவங்களில் புலனாய்வுக்காரர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமைக் காவலர்கள், மனித உரிமைப் போராளிகள், போலிசார், அரசாங்கம், பொதுமக்கள், எல்லாவற்றையும் தாண்டி எனது நண்பர்களும் உறவினர்களும், ஆகி தமது ஸ்பரிசத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். என்னைக் குத்திக் கிழிப்பதில்தான் எத்தனை சுகம் அவர்களுக்கு. 

சென்னைக்குப் போயிருந்த போது ஒரு நீண்ட உரையாடலுக்குப் பின்னர் அறிவுமதி சொன்னார் 'தம்பி கவனமாக இரு உன்னை நான் விளங்கிக் கொள்கின்றேன், நீ எங்கு போய் நிற்பாய் என்று விளங்குகிறது, உனக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் நீ நிறையச் செய்ய வேண்டியிருக்கு, உன்னைச் சூழ நிறைய மாயக் கண்கள் இருக்கின்றன. அவற்றை நீ அடையாளம் காணமுடியாது. அவற்றைக் கண்டு கொள்வது உனது புத்திசாலித்தனம். உனக்கு நான் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்'

அவுஸ்திரேலியாவிருந்து ஒருவர் வந்தார். அவரது பெயர் பிரோள் குரோசோவ். அவர் வந்தது வியாபார நிமித்தம். அவருடனான நீண்ட உரையாடலுக்குப் பின்னர் சொன்னார், சகோதரனே கவனமாக இரு காற்றைப் போல செயற்படு, காற்றின் அசைவை உணர முடியும் அடையாளத்தைக் காண முடியாது. உலகின் எல்லாவற்றையும் யாரோ எங்கிருந்தோ  தீர்மானிக்கிறார்கள் அவர்களின் அனைத்திற்கும் நாம் அசைந்தாக வேண்டும் என்றும் எதிர் பார்க்கிறார்கள். சர்வதேசம் என்பது என்னையும் உன்னையும் ஒதுக்கிவிட்டு திட்டமிடவில்லை, எனவேதான் கவனம் தேவை. வாழும் காலம் பெறுமதியானது அதைக் கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உனக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்.

உலகின் இரண்டு துருவங்களில் உள்ள மனிதர்கள் ஆனால் ஒரே சிந்தனை. மொழி, இனம், சமயம் கடந்து நல்ல உள்ளங்கள் எப்போதும் ஒரே மாதிரியாய்தான் சிந்திக்கும். இப்போது எனக்கு எங்கிருந்தோ பல்லாயிரம் பேரின் தைரியம் ஒருமித்து என்னில் குடிகொண்டது போன்ற உணர்வு. எதைப் பற்றிய பயமும் கொஞ்சம் கூட இல்லாத தன்மை, நான் யார்? இந்த உலகில் எனது பணியென்ன? எப்படிப்பட்ட ஒரு செயற்பாட்டுத் தளத்தை நான் தேர்ந்தெடுக்க வேண்டும்? எனது சிந்தணையை எப்படிக் கட்டமைக்க வேண்டும்? எப்படியான நபர்களை எனது இயங்கு தளத்தினுள் அனுமதிக்க வேண்டும்? இப்படி நிறையக் கேள்விகள் என்னை தொடர்ந்து பதில் தேடத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன.

மற்ற மனிதர்களைப் போல நான் ஒரு வரட்டுத்தளத்தில் நின்று கொண்டு எங்கெங்கோ இருந்து கிள்ளியெடுத்தவைகளைக் கோர்த்துக் கொண்டு அனுபவப்பட்டது மாதிரி கதை சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அது போல யாரோ எழுதியவைகளைப் படித்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டு உந்தித்தள்ளப்பட்டு களத்தைத் துணியாது மடமையில் காரியமாற்றவும் தயாரில்லை. என்னைச் சூழ என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாகவே நான் புரிந்து கொள்கின்றேன். எனவே எனது செயற்பாட்டுத் தளத்தைத் தீர்மானிப்பது ஒன்றும் கஷ்டமான காரியம் கிடையாது. சிறை வாழ்க்கை கற்றுத் தந்தவை மிக ஏறாளம். எனக்கு மிகவும் திருப்தியாய் ஒன்று புரிந்தது  நான் மரணிக்கச் சித்தமாக இருக்க வேண்டும் அது வரைக்கும் நானும் எனது செயற்பாடுகளும் யானை, பார்ப்பவர்களைப் பற்றிக் கவலையில்லை அவர்கள் குருடர்கள்.
21.01.2012- 22.00 மணி
முஸ்டீன்


4 comments:

  1. ஒரு நல்ல படைப்பாளிக்கு அவனுடைய அனுபவங்கள்தான் முக்கியம். உலகத்தின் எந்த மிகச்சிறந்த படைப்பை எடுத்துக்கிட்டாலும் படைப்பாளி அவனுடைய அனுபவத்தைத்தான் எழுதியிருப்பான். நாஜி கேம்ப் அனுபவங்கள் பத்தியெல்லாம் jewsகள் நிறைய எழுதிருக்கான். எல்லாம் அவங்களோட அனுபவங்கள். அவங்க யாரும் புத்தகம் வாசிச்சவங்க அல்ல. அதேபோல ஆப்ரிக்காவுல உள்ள வாழ்க்கையப் பத்தி நிறைய பேரு எழுதியிருக்கான். வாசிச்சதல்ல,அவங்களோட அனுபவங்கள். வெள்ளைக்கார சமூகத்திலேர்ந்து அவங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் , இம்சைகள் இதெல்லாம் தாங்க முடியாமதான் அவனுள்ளேர்ந்தே ஒரு எழுத்தாளன் உருவானான். அவன்தான் யதார்த்த படைப்பாளி. நாலு புத்தகம் படிச்சிட்டு அஞ்சாவது புத்தம் எழுதுறவன் எழுத்தாளன்தான், படைப்பாளியல்ல. படைப்பாளி என்பவன் அவனுடைய அனுபவத்திலேர்ந்து எழுதக்கூடியவன். எழுத்தாளன் என்பவன் வாசிச்சி எழுதக் கூடியவன்.
    அனுபவத்தை எழுதுங்கள் ஆயுள் கெட்டி...

    ReplyDelete
    Replies
    1. எழுதத் தோன்றும் போது எழுதி முடித்து விடுகிறேன். அப்போதுகளில் எழுத்துக்கள் சமரசம் செய்துகொள்... அது எதிலும் யாருக்காகவும் தயாரில்லாவையாக மாறிவிடுகிறது.
      தனியே அனுபவப் பதிவுகள் காத்திரமானவைதான் ஆயினும் வாசிப்பு எப்போதும் அனுபவ எழுத்தைக் கூட கனதிமிக்கதாயும் அழுத்தமிக்கதாயும் பட்டைதீட்டி ஜொலிக்கச் செய்துவிடும் என்பது எனது எண்ணம். எழுத்தாளனாக இருப்பதை விட படைப்பாளியாக இருப்பதில் நிறைய இஷ்டம். நன்றி அஸ்மின்

      Delete
  2. பல லட்சக் கணக்கான யூதர்களை, ஹிட்லர் கொன்றொழித்த‍தாகக் கூறப்ப‍டும் செய்தி, யூதர்கள் தமக்கென ஓர் அனுதாப அலையை உலகில் திரட்டிக் கொள்வதற்காக திட்டமிட்டுக் கட்டிவிட்ட‍ போலிக் கதை. இதனை ஆதாரபூர்வமாக நிரூபித்த‍ ஐரோப்பிய எழுத்தாளர்கள், கருத்துச் சுதந்திரத்தின் காவலர்களால் சிறைவைக்க‍ப்ப‍ட்டிருக்கிறார்கள். இஸ்லாத்தைப் பற்றி எழுதப்ப‍டும் அவதூறுகளுக்கு மட்டும் அக்காவலர்கள் கருத்துச் சுதந்திரத்தை வழங்குவார்கள். நாஜி கேம்ப் பற்றிய யூதர்களின் எழுத்துக்க‍ள், அவர்களது அனுபவங்களல்ல‍, அவர்களது கட்டுக்க‍தைகள் என்பதை முஸ்லிம்களாவது நம்புவீர்களாக.
    அஃதிருக்க‍,
    முஸ்டீன், உங்களையெண்ணி ஒரு காலத்தில் வியந்திருக்கிறேன். பின்ன‍ர் அதிர்ந்திருக்கிறேன். இப்போது பயந்து போயிருக்கிறேன். எங்கேயிருக்கிறீர்கள்? மனைவி பிள்ளைகள் சுகமா?

    ReplyDelete
  3. சபீர் உலகத்தில் புரிந்து கொள்ள முடியாத பல விடயங்கள் இருக்கின்றன அது போல நானும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாத சிக்கலான ஒரு குட்டிக் கவிதை புரிந்து கொள்ளப் படவில்லை என்பதற்காக கவிதையை குறை சொல்ல முடியாது .படிப்பவனின் அறிவு மட்டத்தை பொருத்தமைவது.உடலாலும் உள்ளத்தாலும் நலமாகவும் வளமாகவும் இருக்கிறேன். கொழும்பில் தான் இருக்கிறேன்.ஒரே ஒரு குழந்தை அவள் சுகமாக இருக்கிறாள் குழப்படி காரப் பிள்ளை.சரியான அடம் அது என் மனைவி

    ReplyDelete