Sunday, April 29, 2012

வாழ்க்கை என்ற வண்டி




மனதில் தோன்றும் போது
எல்லாமும் அர்த்தம்
பெற்று விடுகிறது.

இந்த வண்டிக்கு
ஒரு வருடமாகிறது
நகர்ந்தும் நகராமலும்
மணல் பாதைகள்
மலை மேடுகள்
பெரும் பள்ளங்கள்
அடர்ந்த காடுகள்
அலை கடலோரங்கள்
அலைந்து திரிந்து
அலுத்துப்போயிற்று.
ஆனாலும் வாழ்க்கை
இன்னும் உயிர்ப்போடுதான்.

மனைவி என்ற
அச்சாணியின்
இறுக்கமான பற்றுதலோடும்
நகர்ந்தும் நகராமலும்
ஆத்ம சுகம்

அவள் தான் எல்லாம்
என்றாகிப் போன பின்னர் 
வண்டி நகர்ந்தாலென்ன?
நகராவிட்டால் தான் என்ன?

No comments:

Post a Comment