Wednesday, May 29, 2019

மலையகத்து அறிவாளி

(நேற்று எனது முகநூல் விருப்புப் பக்கத்தில் இட்ட பதிவு)

இன்று அலைபேசியக்கு புதிய இலக்கமொன்றிலிருந்து அழைப்பொன்று வந்தது. அவர் ஒரு மலையகத்தின் தொழில் அதிபர் அவருடனான உரையாடலின் சுருக்கம் மட்டுமே இது.

முகநூலில் கடந்தவாரம் இனவாதமாக்கப்பட்டு வாதிக்கபட்ட விடயம் தொடர்பில் அவர் மிகத் தெளிவாகப் பேசினார்.

#அவர்: - குறித்த ஒரு பகுதியில் 25 பேர் வரை எனது பகுதிப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளீர்கள் அது உண்மையா?
#நான் : - ஆம் உண்மை
#அவர் : - அவர்கள் பற்றிய சரியான விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமா?

#நான் : - நீங்களே இரண்டு பேரை நியமித்தால் சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் அல்லது அவர்களையே அழைத்துப் பேசுவதற்கான ஒரு பொறிமுறையை நீங்களே நிறுவிக்கொள்ளவும் முடியும். பொலிசாரின் உதவியை இன்னின்ன முறையில் பெற்றுக் கொள்ள முடியும்

#அவர் : - சரி ஒரு பதினைந்து பேருக்கு நான் முழுமையான பன உவியைச் செய்கின்றேன். அவர்கள் வேறு தொழில் ஒன்றைத் தொடங்கவும் தமது வாழ்க்கை மேம்படுத்திக் கொள்ளவும் இச்சீரழிவில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் நான் உதவுகின்றேன் அதை எப்படிச் செய்யலாம் என்று உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கின்றதா?
#நான் : -
01. முதலில் அவர்களுக்கு என்ன தொழில் செய்ய முடியும் என்பதை இனங்கான வேண்டும். சுயதொழிலில் ஈடுபடும் ஆர்வமிருப்பின் அதிலுள்ள இயலுமையைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் அதற்கான முதலீடு எவ்வளவு என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அல்லது வேறு தொழில் நிறுவனங்களில் தொழில் செய்ய இயலுமாயின் உத்தரவாதப்படுத்தப்பட்ட தொழில் ஒன்றை அவர்களின் விருப்ப்புக்கேற்ப பெற்றுக்கொடுக்கவும் முடியும்.
02. அவர்களுக்கு உடனடியாகத் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் இருப்பின் அதை நிவர்த்தி செய்ய வேண்டும்
03. இப்போதுள்ள நிலைபற்றிய எவ்வித உளவியல் தாக்கத்தையும் அவர்கள் எதிர்கொள்ளாவண்ணம் கரிசனையுடன் அவர்களது குடும்பத்தவர்களிடம் பாரப்படுத்தப்படல் வேண்டும்.
04. உளவாற்றுப்படுத்தலினை பொறுப்புள்ள ஒரு தரமான உளஆற்றுப்படுத்துனர் ஊடாக வழங்க வேண்டும்.

#அவர் : - சரி இந்தத் திட்டத்தை உங்களால் பொறுப்பெடுத்துச் செய்யமுடியுமா? உங்களுக்கு அதற்குரிய ஊதியத்தைத் தருகின்றேன்

#நான் :-மன்னிக்க வேண்டும் அதை என்னால் பொறுப்பெடுக்க முடியாது ஆனால் இன்னின்ன நபர்கள் அதைப் பொறுப்புடனும் நேர்மையுடனும் செய்யக் கூடியவர்கள் (சில மலையக ஊடக நண்பர்களின் பெயர்களை அவருக்குப் பரிந்துரைத்தேன்). அவர்களோடு நீங்களே கூடப் பேசலாம்.

#அவர் : - நேரமிருந்தால் எனது அலுவலகத்துக்கு வர முடியுமா இன்னும் சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்

#நான் :-தாராளமாக. ஆனால் நான் ப்ரீயாக இருக்கும் நேரம் நீங்களும் ப்ரீயாக இருக்க வேண்டுமே.

ஒரு பொறுப்புள்ள தனவந்தராக அவர் தனது கடமைச்யைச் செய்யும் அழகு கண்டு வியந்து நிற்கின்றேன். 
சப்பைக்கட்டுக் கட்டிய ஊடகவியலாளர்களும் அமைச்சர்களும் இத்தகைய பொறுப்போடு செயற்பட்டிருந்தால்....

இனவாத முட்டுக்கொடுப்பு ஐந்து சதத்துக்கும் உதவாத வெறும் உணர்வுகளை மட்டுமே ஏற்படுத்திவிட்டு மறையும் என்பதை ஊடக ஜாம்பவான்கள் விளங்கிக் கொள்ளட்டும்.

பித்தளை மனிதன் செம்பு மனிதன் என்று உதார் விட்டவர்களுக்கும் அவருக்கு சொம்பு தூக்கியவர்களுக்கும் சேர்த்து இப்பதிவை சமர்ப்பிக்கின்றேன்.

No comments:

Post a Comment