Friday, October 23, 2015

நேர் மறை - கவிஞர் சோலைக்கிளி பதில்கள்

தமிழ்மிரர் பத்திரிகை-  இலக்கியப் பக்கத்தின் நேர் மறை பகுதிக்காக கவிஞர் சோலைக்கிளி 15 கேள்விகளுக்கு அளித்த பதில்கள்


01. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
காலம் உருட்டி விட்ட ஒரு மண்ணாங்கட்டி .

02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
ஒருவருடன் அது நான்தான் .

03. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
அவர்களின் தாடிகளும் மீசைகளும்

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
நினைவில் இல்லை .

05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
இயற்கையைப்பற்றி ,மண் ,மழை ,மலை ,கடல் நதி கரப்பான்பூச்சி என்று .

06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்?
மீனுக்காக ஏங்கி நிற்கும் கொக்கை .அதனிடம் வன்முறை இல்லை .

07. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
பல பாட்டுப்புத்தகங்கள்

07. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
என் மனைவி .

09. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
இயற்கை
10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
அப்படி என்றால் இந்த உலகத்தை விற்றுத் தந்தாலும் போதாதே

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
பலர் கனவு காணும் கன்னிப்பெண்

12. உங்களுக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
இந்த உலகத்தில் இருக்கின்ற அத்தனை படைப்புகளின் மொழிகளிலும் .

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
ஒரு சமையல் அறை க்குள் கிடக்கின்ற ,உப்பு ,மிளகாய் ,வெங்காயக் கோது ,சீனி ,காய் கறி, மிளகு மாதிரி

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
இனிய குடும்பம் ,நான் எழுதப் போனால் ,தூ ங்கி உதவி செய்யும் மனைவி ,நான் ,பிள்ளைகள் ,வாசல் பெருக்கும் தும்புத்தடி என்று பலர் .

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
அப்படிச் செய் யப்போனால் ,இந்த இரு கைகளும் போதாது .ஆயிரம் முகங்கள் ,ஒருத்தனுக்கே பல முகங்கள் .

No comments:

Post a Comment