Saturday, February 6, 2021

எதிர்காலம் பற்றிய எச்சரிக்கை

 எதிர்காலம் பற்றிய எச்சரிக்கை

-முஸ்டீன்-

சர்வதேச அரசியல் நகர்வு என்பது வெறுமனே தன்பாட்டில் நகர்ந்துகொண்டிருக்கும் ஒன்றல்ல. ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் உலக அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்க நினைக்கும் ஒவ்வொரு குழுவினதும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிநிரல் இருந்தேயாகும். பாதுகப்புக் கற்கைநெறியை மட்டுப்படுத்தப்பட்ட 'குளோல் சேர்கில் சிஸ்டத்தில்' படிக்கின்ற ஒவ்வாரு புலனாய்வுத் துறை அவதானிப்பாளனுக்கும் ஆய்வாளனுக்குமுள்ள விடுபட்டுப்போகாத சவால் இந்த நகர்வுகளுக்குப் பின்னால் உள்ள சக்திகளை அடையாளங்காண்பதாகும். 

உலகைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் விடப்படும் ஓட்டைகள் அல்லது திட்டத்தில் உள்ள குறைபாடுகள் அல்லது பூரணப்படுத்தலில் உள்ள விடுபாடுகள் என்ற புள்ளியினூடாகவே தேடல் செய்வோர் நுழைகின்றனர். முன்னொரு காலத்தில் அந்த நுழைவு மிகவும் சிக்கலுக்குரியதாக இருந்தது. ஆனால் இப்போதுள்ள நவீன தொழிநுட்ப வளர்ச்சி எதிரிக்குப் பக்கத்தில் நின்று கொண்டே அவனுக்கெதிரான திட்டமிடலை இலகுவாகச் செய்துவிட்டு ஆதாரங்களும் அடையாளங்களும் இன்றி நகர்ந்துவிட முடியும். தொழிநுட்ப அறிவு மிகுந்த மதிநுட்ப மூளைக்குச் சொந்தக்காரனால் மட்டுமே சில அடிப்படைகளைப் பிடிக்க முடியும் மற்றபடி விடைதெரியாத கேள்வி போன்றே அது நிலைபெற்றுவிடும்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் இது சர்வதேச பூகோள நகர்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமையப்பெற்றிருக்கின்றது. துரதிஸ்ட வசமாக இந்நாட்டின் பூகோள கேந்திர முக்கியத்துவத்தை உரிய முறையில் நிறுவி அதன் பலத்தை நிலைநாட்டும் சரியான அரசியல் தலைமை இதுவரையில் நமக்குக் கிடைக்கவில்லை. இந்நாட்டின் உயிர்துடிப்பும் முக்கியத்துவமும் கடல்பரப்பிலேயே தங்கியுள்ளது. கடற்பரப்பை வலுப்படுத்திட இதுவரை நம்நாடு போதிய கவனம் எடுக்கவே இல்லை. பாதுகாப்பு ஒரு பக்கம் இருக்கட்டும் இந்நாட்டின் கடற்பரப்பில் என்னென்ன வளம் கொட்டிக்கிடக்கின்றது என்பதையே நமக்கு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுதான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியிருக்கின்றது. ஏனெனில் நமது கடற்பரப்பில் என்ன இருக்கின்றது என்பதே இன்னும் நமக்குத் தெரியவில்லை. இந்தத் துரதிஸ்டத்தில் கடல்வளப் பாதுகாப்பூடாக நமது நாட்டின் இருப்பை ஸ்திரப்படுத்த நாம் யோசிக்க நீண்ட காலம் செல்லும்.

குறைந்தபட்சம் களவள ஆய்வுக்கு நமது நாடு போதிய முக்கியத்துவம் இதுவரையில் அளிக்கவில்லை. யுத்தம் இல்லாத இந்நிலையில் இந்த ஆய்வுக்கு கடற்படையைப்பயன்படுத்துவதும் அவர்களைப் பயிற்றுவிப்பதும் பயன்தரத்தக்கது. கடற்பரப்பு முழுமையாக நமது கட்டுப்பாட்டுக்குள்ளும் நூறுவீத பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தலுக்குள்ளும் வந்துவிட்டால் அடுத்த கட்டம் சர்வதேசக் கடற்பரப்பு மீதான ஆதிக்கத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு பாரிய பொருளாதாரத் தேவைப்பாடு இருக்கின்றது. ஆனால் நாம் வீணாக நிதியைச் செலவு செலவு செய்துகொண்டிருக்கின்றோம் உதாரணமாக ஓர் அமைச்சருக்கோ அல்லது ராஜாங்க அமைச்சருக்கோ ஐந்து செயலாளர்கள் முழு வசதியுடனும் நியமிக்கப்படுகின்றார்கள். அவ்வளவு செயலாளர்கள் அவசியமே இல்லை இப்போதுள்ள அமைச்சரக்ள எண்ணிக்கை ஒவ்வொருவர்க்கும் இரண்டு செயலாளர்களை நீக்கி அவர்களுக்கு வீணாகச் செலவு செய்யும் பணத்தை மீதப்படுத்தினால் குறைந்தது ஒரு வருடத்தில் 168 கோடி ரூபாய் மீதப்படுத்தலாம் ஒரு ஆட்சிக்காலத்தில் 840 கோடி இவை எமது கண்களுக்குப் புலப்படும் வீண் செலவு இது தவிர இன்னும் பல பில்லியன்கள் வீணாக அதிகாரிகளுக்கான சலுகைகள் என்ற அடிப்படையில் பயனின்றி விரயமாகின்றது. ஒரு ஆட்சிக்காலத்தில் அதை மிச்சப்படுத்தினால் வருடத்திற்கொரு சிறிய ரக விமான தாங்கிக் கப்பலே வாங்க முடியும்.

நாட்டின்பாதுகாப்பைப் பற்றிக்கவலைப்படாமல் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்டவிரோத செயல்களை அதன் பங்காளர்களாக மாறி அனுமதிக்கும் ஒரு வட்டம் இருக்கும் வரை  அந்தப் பேச்சு வீணானதுதான்.

கடற்பிராந்தியம் ஏன் முக்கியத்துவமடைகின்றதென்றால் அதற்குப்பின்னால் உள்ள சர்வதேச வகிபங்கும் தேவைப்பாடும் அத்தகையது இது அப்படியே இருக்கட்டும். நம்நாட்டுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் ஊடாக கனவுகளைச் சிதறடிக்கும் செயற்பாட்டுக்குப் பின்னால் இருக்கின்ற இலக்கு என்ன என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும். 

ஒருகாலத்தில் விடுதலைப் புலிகள் தனி நாடு கோரிய விடுதலை இயக்கமாகத் தொடங்கி பயங்கரவாத இயக்கமாக பரிணாமமடைகின்றது அதன் முடிவு எழுதப்படடு பத்துவருடங்களின் பின் முஸ்லிம்களைப் பயன்படுத்தி சர்வதே பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் தற்கொலைத் தாக்குதலில்தான் தொடங்கியது. அதன் தொடர்ச்சி எவ்வாறுஅமையும் என்பது இன்னும் நமக்குப் புலப்படவில்லை. இஸ்லாத்தின் பெயரிலான பயங்கரவாதம் அச்சுறுத்தல் இன்னும் இங்கு முடிவுறவில்லை. 

இப்போது சர்வதேச அளவில் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களை போராட்ட சிந்தனைக்குள் இழுத்து, பின்னர் அவர்களை தமது நலன்களுக்கப் பயன்படுத்திக் கொள்வது அவ்வளவு கஸ்டமான காரியம் கிடையாது. தலிபான்களை உருவாக்கியதும் அல்காயிதாவை உருவாக்கியதும் ஐஎஸ்ஐஎஸ் உருவாகியதும் இந்தப் பின்னணியில்தான். அது முடிவல்ல இன்னும் தொடரும். முழு உலக அசைவும் மொசாட்டின் விரல்களிடையேதான் வசப்பட்டிருக்கின்றது என்ற திருப்தி வரும்வரை அது அப்படித்தான் இருக்கும். 

நட்பு நாடுகள் என்ற வட்டம் இந்தக் கோணத்தின் இன்னொரு பகுதியில் இருந்து நோக்கப்பட வேண்டும். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளங்களைக் கட்டுப்படுத்தும் நீண்டகால நட்புடன் இணைந்த திட்டங்கள் திடீரென்று இராணுவ அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் அபிவிருத்திக்கான முதலீடுகளாக வந்தடைகின்ற போது இலக்கு வைத்துக் காததிருப்பவன் நிச்சயமாக அமைதியாக இருக்கப்போவதில்லை. பிராந்திய அதிகாரம் என்ற விடத்துக்குள் மறைந்திருக்கும் தனது பிடியை இறுக வைக்கும் நிலைப்பாட்டை மேற்சொன்ன முதலீட்டு வட்டம் ராஜதந்திரமாகச் செய்ய முயற்சிக்கும் அது அவ்வளவு வசப்படாத போது சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதனூடாக உதவிக்கு இன்னொரு கரம் தேவைப்படும் நிலையை உருவாக்கவல்லது. இப்போது இலங்கை என்ற கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்புக்கும் கடற்பரப்புக்கும் நடந்திருப்பது அதுதான். இப்போதைக்கு வெளிப்படையாகத் தெரியும் அது பயங்கரவாதம் குறிப்பாக இஸ்லாத்தின் பெயரிலான பயங்கரவாதம்.

இன்னும் இலகுவாக இந்த விடயத்தை விளங்கிக் கொள்ள வரலாற்றில் இருந்து சிறிய உதாரணத்தைச் சொல்ல முடியும். கொலனிய நாடுகள் பலவீண நாடுகளை ஆக்கிரமித்து அங்கிருக்கும் தோற்ற மக்களை அடிமைகளாகவும் மிகவும் மலிவான கூலிகளாகவும் பயன்படுத்தினார்கள் அது தமது பொருளாதார நலன்களை  மேம்படுத்திக்கொள்வதற்காகச் செய்யதது. ஆபிரிக்கர்கள் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் கொண்டு செல்லப்பட்டது போலவும். இந்தியர்கள் மொரீசியஸ், இலங்கை, மலேசியா என்று மலிவான கூலிகளாக அள்ளிச் செல்லப்பட்டதும் அந்தந்தக் காலத்துக்குப் பயன்படுத்த முடியுமான வளங்களை அதிகாரம் பயன்படுத்தும். இப்போது அவ்வதிகாரம் இதே மலிவான கூலிகளை சர்வதேசப் பயங்கரவாதத்துக்காகப் பயன்படுத்துகின்றது. 

இங்கு அமுல்படுத்தப்படும் திட்டங்களில் ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு கென்சப்ட் பிரயோகிக்கப்படும் தலிபான்கள் உருவர்கப்பட்ட போது இஸ்லாமிய நாடு, அல்காயிதா உருவாக்கப்பட்ட போது இஸ்லாத்துக்கெதிராக அனைத்து அதிகாரங்களையும் சக்திகளைம் சிதைத்தல், ஐசிஸ் உருவாக்கப்பட்டபோது கறுப்பு ஆடை அணிந்த மஹ்தியின் இராணுவம் என அந்தக் கென்சப்ட் பல்வேறு முறையில் மார்கெட் பண்ணப்பட்டது. ஆனால் துரதிஸ்டவசமாக அவை தோற்றுவிட்டன. இப்போது ஐசிசை உருவாக்கப் பயன்பட்ட மஹ்தியின் படை என்ற கென்சப்ட்டில் அப்டேட் வேர்சன் வரப்போகின்றது. அதுதான் ஜைஸ் அல் அத்ல்.

இப்றாஹிமிய மதங்களின்; நம்பிக்கைப்படி இந்த உலகம் அழிந்துவிடும் பின்னர் அவர்கள் எழுப்பப்பட்டு அவர்களுக்கு சுவர்க்கம் நரகம் வழங்கப்படும். உலக அழிவுக்கு முன்னர் ஏஞ்சல் ஒப் பீஸ் வருவார் என்பதும் ஜீசஸ் வருவார் என்பதும் இறுதி ஆட்சியாளராக மஹ்தி அலைஹிசலாம் வருவார்கள் என்பதும் யூத, கிறித்தவ, முஸ்லிம்களின் நம்பிக்கை அதன்பிரகாரம் நடக்கின்ற அதிகாரப் போராட்டம் காலாகாலமாக மதத்தின் பெயரால் இடம்பெற்று வருகின்ற யுத்தங்களுக்கும் அதிகாரத் தக்கவைப்புகளுடனும் ஒப்பிடும் ஆச்சரியமானதோ புதியதோ அல்ல.

யூதர்களின் சமாதானத்தின் தூவரின் வருகையை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கின்றனர் அது தஜ்ஜால் என்பது தெளிவு. அதேபோன்று கிறித்தவர்களின் 'ஜீசஸ் கமிங் சூன்' என்ற நம்பிக்கையையும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இயேசு மீண்டும் வருவார் அவர் தமது இறுதி இமாமான மஹ்தியுடன் இணைந்துகொள்வார்  இருவரும் இணைந்து யூதர்களின் ஏஞ்சல் ஒப் பீஸ் என்ற தஜ்ஜாலைக் கொன்று உலகைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்கள். மஹ்தியே இறுதியாக உலகை ஆளப் போகும் ஆட்சியாளர் என்பது கொஞ்சமும் தகர்க்கமுடியாத முஸ்லிம்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் இருந்துதான் அதிகாரப் போராட்டம் உலக பயங்கரவாதத்துக்கான உக்திகளைக் கண்டுபிடித்து அமுல்படுத்தி வருகின்றது.

ஜைஸ் அல் அத்ல் என்பது நபிகள் சல்லல்லாகு அலைகிவசல்லம் மஹ்தி அலைஹிசலாமின் படைக்கு நேரடியாகச் சூட்டிய பெயர். நீதியின் படையணி அல்லது நீதியின் இராணுவம் என்பது இதன் அர்த்தம். அடுத்து உலகம் எதிர்கொள்ளப் போகும் முக்கிய ஹொட் நியுஸ் இதிலிருந்துதான் உருவாகும். இங்குள்ள தெளிவுபடுத்தப்பட வேண்டிய சந்தேகம் யார் இதை வெற்றிகரமாக பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப் போகின்றார் என்பதிலும் அல்லது நம்பிக்கைப்படி மஹ்தியின் படை வந்துவிட்டால் அடுத்து என்னவாகப் போகின்றது என்பதிலும்தான் தங்கியிருக்கின்றது.

இலங்கைக்கும் இதற்குமிடையிலான தொடர்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் முன்னர் சொல்லிய பல விடயங்களுக்கான தயார்படுத்தல்களைச் செய்வதற்கு உலகில் மிகவும் பாதுகாப்பான இடம் ஒவ்வொரு கொள்கைவகுப்பாளருக்கும் திட்டமிடளாளருக்கும் தேவைப்படும். துருக்கிக்கு எதிரான வளங்களைத்திரட்டவும் திட்டமிடவும் இலங்கை பயன்படுத்தப்பட்டது நம்மில் எத்தனை பேருக்கத் தெரியும். ஏனெனில் இந்நாட்டில் சுற்றுலாப் பயணிகளை யாருமே சந்தேகத்தோடு பார்ப்பதில்லை. அவர்கள் இந்நாட்டின் கௌரவமான நபர்களகவே கருதப்படுகின்றார்கள். அவர்களிடமிருந்து திருப்திகரமான ஒரு பொருளாதார உதவி கிடைத்தால் மிக சிம்பிளாக இந்நாட்டில் உள்ள சிங்களவரும் சரி, தமிழரும் சரி முஸ்லிமும் சரி நாட்டைக் காட்டிக் கொடுப்பதை அவர்களையறியாமலேயே செய்துவிடுவார்கள். வடகொரியாவில் சர்வதேச சக்திகளின் எதுவுமே எடுபடாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே அங்கு அந்நியர்கள் நினைத்தபடி உலாவ முடியாது. ரஸ்யாவில் உங்கள் பார்வையில் ஒரு தடுமாற்றம் இருந்தாலே போதுமான புலனாய்வுத்துறையின் கண்கானிப்புக் கீழ் உங்களையறியாமல் வந்துவிடுவீர்கள். ஆனால் இங்கு ரஸ்யர்கள் வந்தால் அவர்களை இம்மியளவும் சந்தேகங்கொண்டு பார்க்கமாட்டோம் சுற்றுலாப்பயணிகளாகவே எமது மாறாத பார்வை இருக்கும். இந்த வாய்ப்பைத்தான் அனைவரும் பயன்படுத்துகின்றார்கள். ஏனெனில் சுற்றலாத்துறை வருமானம் நமது நாட்டின் பொருளாதார ஜீவ நாடி.

ஜைஸ் அல் அத்ல என்ற பெயரில் உண்மையான மஹ்தியின் படைக்குப் பதிலாக வருகின்ற படை நிச்சயம் அடுத்துவரும் இரண்டு தசாப்தங்களுக்கு உலகை மிகப் பயங்கரமாக உலுக்கப் போகும் பயங்கரவாத அச்சுறுத்தல் மிகுந்த சிந்தனைத்தளமாகவ இருக்கும். அதற்குள் முஸ்லிம்கள் மிகவும் இலகுவாக உள்ளீர்க்கப்படுவார்கள். அந்த சிந்தனையில் இருந்து வருகின்ற ட்ரைல் வேர்சன்தான் 'சுப்பர் முஸ்லிம்' 

'சுப்பர் முஸ்லிம்' என்ற பெயர் இன்னும் கொஞ்சக் காலத்தில் எல்லாருக்கும் பரிச்சயமான பெயராகிவிடும். உலகப் பிரச்சனைக்கான தயார் படுத்தல் இனி இலங்கையில் மேவி நிற்கின்ற இனவாதச் செயற்பாடுகளால் இலகுவாக பொலிஷ் பண்ணபட்டுவிடும் என்பதில் சந்தேகம் கிடையாது. இதன் ஆரம்பம் பற்றியோ அதன் நகர்வு பற்றியோ பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில் ஏனெனில் ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரால் சஹ்ரானைப் பயன்படுத்திச் செய்ய எத்தனிக்கப்பட்ட அனைத்தும் இனி இந்தச் சிந்தனைத்தளத்தில் மிக இலகுவாகச் சாத்தியப்படுத்தக்கூடிய நிலவரத்தை இப்போதுள்ள நாட்டு நிலவரம் உருவாக்கிக் கொடுத்துவிட்டது. 

இந்தச் செயற்றளம் தொடர்பில் இலங்கைச் சூழலில் பத்திரிகைகள் வெளிப்படுத்துகின்ற கருத்துகள் ஆய்வுத்தன்மையோ ஆழமான அவதானமோ அற்றவை. மேலோட்டமாக வெறுமனே இனவாத அடிப்படைகளை மட்டும் கொண்டு செய்யப்படுகின்ற பூச்சு வேலையாகவே கொள்ள முடியும்.

அடுத்துவரும் கலாங்களில் இந்தச் சிந்தனைப்பரப்பு என்னவிதமான தாக்கங்களை ஏற்படுத்த முடியும் என்பது குறித்து எனது மேலோட்டமான தேடலின் சிறுகுறிப்புகளை மட்டும் இங்கு பதிவு செய்வது ஆபத்தகளில் இருந்து பாதுகாத்தக்கெர்ள இலகுவாக இருக்கும். ஏனெனில் நான் இது குறித்து ஆழமாகத் தேடி ஆய்வு செய்து எனது நேரத்தை அதற்காகச் செலவு செய்ய முடியாத நிலையில் சமூகத்தையும் பாதுகாப்பு தரப்பையும் பகிரங்கமாக இவற்றின்பால் கவனங்கொள்ளும்படி வேண்டுதல் விடுப்பதற்காக மட்டுமே இப்பதிவு அமைகின்றது. இதை சீரியசாக எடுத்துக் கொள்வதும் கண்டுகொள்ளாமல் கடந்துசெல்வதும் அவரவரைப் பொறுத்தது.

01. முஸ்லிம் சமுகத்துக்கு வெளியில் இருந்து இந்தப் பரப்பை விளங்கிக் கொள்ள முடியாது. 

02. இந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் தேடலின் ஆரம்ப காலத்தில் அனுமானிக்க முடியாமல் இருந்தது ஆனால் இப்போது நிலமை அவ்வாறல்ல. இனவாதச் செயற்பாடாக நிறுவப்படுகின்ற ஜனாசா எரிப்பு ஏற்படுத்திய தாக்கம் அவ்வளவு இலகுவானதல்ல.

03. நேரடியாக ஆயும் ஏந்திப் போராடும் ஒரு குழுவாக அடையாளப்படுத்த முடியாது. தொழிநுட்பம் சார்ந்த செயற்பாட்டுத்தளம் மிகவும் நேர்த்தியாகக் கையாளக் கூடிய நபர்களால் வழிநடாத்தப்படுவதாகவே நான் உணர்கின்றேன்.

04. இந்தியாவில் இருந்து முகநூல் வாயிலாக இதே பெயருடன் செயற்படுகின்ற நபர்கள் அல்லது சமூகசவலைத்தளப் பக்கங்கள் வெறுமனே கவனக் கலைப்பான்களே தவிர அவை இந்தச் செயற்பாட்டுத்தளத்தின் நேரடிப் பங்காளர்களல்ல. அவர்களை மாத்திரம் உற்றுக் கவனித்தால் சில பொறிகள் கிடைக்கும் அதை வைத்து எப்படிப் பயணிப்பது என்தற்கு கூடுதல் சமய அறிவு தேவைப்படும். இந்த்திட்டமிடல் வெளிப்படையாக மெஜிக் செய்வதற்கு நிகரானது. ஆர்ஏடப்ளியு பயன்படுத்தும் ஒரு ஸ்டடஜி. புரிந்துகொள்வது சிக்கலானது புரிந்துகொண்டால் பிடித்துப் பயணிப்பது குழப்பங்களுக்கு மத்தியில் தெளிவாகத் தெரியும்.

05. தொடர்பாடலுக்கு மாத்திரம் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி எதிரிகளை மொத்தமாகத் தாக்கும் பொறிமுறையைக் கையாளும் நிலைக்குச் செல்லக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அடையாளப்படுத்தலை முதலில் செய்து முடித்தல் ஜேர்மனியில் ஹிட்லரின் காலத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவர்களைக் கொன்றவர்களைப் பழிவாங்கப் பயன்படுத்தப்பட்ட பொறிமுறைதான் இதன் மூல வேர்சன். அப்போதிருந்த அவர்கள் தகவல் சேகரிக்கப்ப பயன்படுத்திய செயற்றளத்தை இப்போதுள்ள சமூகவலைத்தளங்கள் மிக இலகுவாகச் செய்துகொடுத்துக் கொண்டிருக்கின்றன.

06. முஸ்லிம் சமூகத்தின் இருப்பு சவாலாக இருக்கின்ற பிற இனவாதச் செயற்பாட்டாளர்களாகக் கருதப்படுகின்றவர்களை பயங்கரவாதத் செயற்பாடுகளால் அனுகும் அபாயம் நிகழக்கூடும். ஏனெனில் ஒருவரைத் தயார்படுத்தல் என்பது மிகவும் முக்கியமானது. எந்த அடிப்படையில் தயார்படுத்தல் நிகழ்கின்றது என்பதன் அடிப்படையில் அது மையங்கொள்ளும் கிறித்தவம் ஒரு காலத்தில் வைத்திருந்த உள்ளக அமுக்கக் குழுக்களுக்கு நிகரான சிந்தனை மாற்றக் குறிப்புகளை காணக்கிடைக்கின்றமை இந்த அபாயத்தை உணர்த்தப் போதுமானது.

07. அச்சம் விளைவித்தல் மிக முக்கியமானதாக இருக்கும். ஏனெனில் எல்லாரும் திரும்பிப் பார்க்கும் வண்ணம் செய்யப்படும் நிகழ்வுகளுக்கு மாத்திரமே இப்போதுள்ள அவசர சோசியல் மீடியா உலகில் விளம்பரப்படுத்தல் கிடைக்கும். அந்தத் தளத்தை வெகுவாகப் பயன்படுத்தும் போது திட்டமிடல் சூத்திரதாரிகளாகச் செயற்படும் யாரையும் இலக்குவைத்து எளிதில் நெருங்க முடியாது. 

08. கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் தம்மை அர்ப்பணித்து கொண்ட கொள்கைக்காக அர்ப்பணிப்போடு செயற்படுதல் என்றால் அது எப்பஎடி இருக்கும் என்பதைக் கற்பனை பண்ணிப் பாருங்கள். ஆர் எஸ்எஸ் அப்படித் தேர்தெடுக்கப்பட்ட நபர்களைப் பயிற்றுவிக்கும் விதத்துக்கும் இங்கு தேடலின் போது கிடைக்கும் மிக சொற்பமான குறிப்புகளுக்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை. எனவே தெர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இந்த உலகில் ஏற்படுத்தும் ஆபத்து மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

09. ஆட்கவர்ச்சி இங்கு முக்கியமானது. இது கூட்டுச் செயற்பாடாக நிச்சயம் அமைய வாய்ப்புகள் குறைவு சில வேளை அப்படி இருக்கவும் கூடும். அது நிச்சயம் பொதுமக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் மன உலைச்சலுக்கு ஒத்தடம் கொடுப்பது போன்ற ஒரு படிமத்தை ஏற்படுத்தும் அடிப்படையினைக் கொண்ட செயற்றளத்தில் இருந்து ஆட்கவர்ச்சியை இலக்கு வைக்கும். ஆட்கள் கவரப்படுதல் ரகசிய வேலைத்திட்மாக இருக்காது. எனெனில் ஐசிஸ் இதில் கடைசி கட்டத்தில் தோற்றுப் போனது. எனவே அதே வழிமுறை நிச்சயம் இங்கு பின்பற்றப்பட வாய்ப்பு மிகவும் குறைவு.

10. வாழ்க்கையில் தோற்றுப் போன உணர்வுடன் ஓரமாகத் தொடங்கும் இளைஞர்கள் அவர்களுக்குரிய வாய்ப்பை மிக இலகுவாகப் பெற்றுக் கொள்வார்கள். அவர்களே செயற்றளத்தின் முக்கிய பங்காற்றுகையர்களாகத் திகழ்வர். அணையப் போகும் சுடர் ஒருமுறை ஜோராக எரிந்து காட்டுமே. எப்படியும் அனாவசியமாகப் போகின்ற ஒன்றை ஏதாவது ஒரு பயன்பாட்டுக்குப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிதல். 

11. இலகு இலக்குகளை அல்லது எளிதான சவால்களை முன்னரே எதிர்கொள்ளல். ஓநாய்கள் என்ற சிம்பல் மிகவும் முக்கியமானது. இது ஒரு முக்கியமான தொடர்பாடல் முறையும் கூட. இராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது தமது நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் போராடியவர்களின் தொடர்பாடல் முழுமையாக அமெரிக்கப் படைகளால் உள்வாங்கப்பட்டது. ஆனால் பலூஜா தாக்குதலில் அவர்களால் அதை உள்வாங்க முடியவில்லை காரணம் அங்கு போராட்டக் களத்தில் இருந்தவர்கள் புதிய தொடர்பாடல் முறையில் தகவல் பரிமாற்றம் செய்தனர். அது பகிரங்மாக இருந்தது. ஆனால் அவ்வளவு எளிதில் அதைப் புரிந்துகொள்ள முடியாது. இஸ்ரேலிய உளவுத்துறை அதை கண்டுபிடித்தது. அதிலிருந்து மேம்பட்ட தனித்த இலக்கைக் குறி வைத்தல் அதைத்தான் இப்போது மொசாட் இரானில் அமுல்படுத்துகின்றது. சுப்பர் முஸ்லிம் கதையாடலுக்குள் இந்தக் குறியீடுகள் தென்படுதல் மிகப் பெரிய ஆபத்துகளை உணர்த்தப் போதுமானவை.

12. போதை மாத்திரைகளுக்கு இளைஞர்கள் குறிப்பாக பாடசாலை மாணவர்களில் கல்வியில் நாட்டமற்றவர்கள் இதற்கு அடிமையாக்கப்படுதல் அவ்வளவு எளிதில் கடந்து போக முடியாது. நளிவுற்றவற்றவனை சுப்பர் முஸ்லிமாக மாற்றுதல் என்ற வேலைத்திட்டம் ஒரு சமூக செயற்பாடும்கூட. போதை மாத்திரைகளின் விநியோகத்துக்குப் பின்னால் இருக்கின்ற சர்வதேச சக்தி அல்லது விநியோகஸ்தன் யார் என்பதைக் கண்டுபிடிப்பது முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடாகும். அங்கிருந்து பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும். குறிப்பாக முஸ்லிம்பகுதிகளை இலக்க வைத்து விநியோகிக்கப்படும் போதை மாத்திரை விற்பனை வலையத்தை வெறுமன போதைப் பொருள் விற்பனையாக மட்டும் பார்க்கத் தலைப்படக்கூடாது. அது எதிர்கால பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கான மலிவான கூலிகளை அடிமைகளாகத் தயார்படுத்தும் வேலைத்திட்டமாகும்.

13. மார்க்க உபதேசம் செய்யும் தரமற்ற அனைவர் மீதும் இரண்டு கண்களை நேரடியாகவும் ஒரு கண்ணை மறைமுகமாகவும் வைக்க வேண்டிய கடப்பாடு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நினைக்கின்ற சமூகத்துக்கு மிகவும் முக்கியமானது. அரசாங்கம் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பொறுப்பற்று விலகிச் செல்ல முனைகின்ற சமூகம் அதன் பின்னர் வருகின்ற விளைவுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

14. வேண்டாத விடயங்களைப் பேசுபொருளாக்கி அனைத்தையும் முஸ்லிம் சமூகத்தின் மீதான இனவாத அடக்குமுறைச் சயெற்பாடுகளாகச் சித்தரிக்கச் செய்கின்ற செயன்முறையில் சிறிய சிறிய விடயங்களை பொதுத்தளத்துக்கு வாதத்துக்கென்று உருவாக்குபவன் மீதும் அதனைக் காவிச் செல்கின்றவன் அதை சமூக மயப்படுத்துபவர்கள் என்ற இந்த மூன்று தரப்பிலும் அரச புலனாய்வுத்துறை கூடுதல் சிரத்தையெடுத்துக் கொள்ள வேண்டும். வெறுமனே பிரபல்யத்துக்காக அல்லது மதப்பற்றையும் இனப்பற்றையும் வெளிப்படுத்துவதற்காக அவர்கள் செயற்படாமல் யாரோ ஒருவரின் அஜந்தாவுக்கு இயங்குகின்றவர்களாக இருக்கவும் கூடும் குறிப்பாக தேசப்பிரேமிகள். இத்தகைய தேசப்பிரேமிகள் தேசவிரோதிகள் என்ற தெளிவு இல்லாதவிடத்து ஆபத்தை நாமாக தக்கவைத்துக்கொண்டதாக முடியும்.

15. அரசியல் ரீதியிலும் சமய ரீதியிலும் முஸ்லிம் சமூகம் தன்னை மீள ஒழுங்குபடுத்திக் கொள்ளாவிட்டால் இந்தப்பீடை அதைத் தாக்குவது மிகவும் எளிதானது. புத்தியுள்ள சிந்திக்கக் கூடிய இளைய தலைமுறை இளைஞர்களில் இருந்து முஸ்லிம்கள் தங்களின் தலைமைத்துவத்தைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். ஆபத்து பலவீணமான பகுதியால் இலகுவாக நுழையும் முஸ்லிம் சமூகத்தின் அரசியலும் சமயமும் மிகப் பலவீணமான இரு வாயில்களாகும். பயங்கரவாத சக்திகள் மார்க்கத்தின் பெயரால் இருப்புக்கொண்டு அரசியலின் பாதுகாப்புடன் சுதந்திரமாக இயங்கும் நிலையைத்தவிர்க்க மேற்கூறிய மாற்றம் மிகவும் முக்கியமானது.

இறுதியாக சுந்தரமான இந்நாடு மனிதர்களை மனிதர்களாக மதித்து பலமான இராணுவ கடல் பாதுகாப்புக் கட்டமைப்போடு தன்னை நிலைநிறுத்திக் கொண்டு இம்மண்ணின் சகவாழ்வைச் சிதைக்கின்ற அனைத்து நச்சுச் செடிகளையும் முளையிலேயே பிடுங்கி எறியத் தயாராக இருக்க வேண்டும். நிம்மதி என்பது இனம் மாதம் சார்ந்தது அல்ல அது மனித விழுமியங்களினதும் ஒருவரின் தனித்துவத்தையும் கலாசாரத்தையும் சுயமரியாதையையும் மதித்தலில் இருந்து துளிர் விடுகின்றது. அதுதான் ஆரோக்கியமானதும் பாதுகாப்பதுமான நாட்டை உருவாக்கத் துணைசெய்யும்.



No comments:

Post a Comment