Sunday, May 17, 2015

சிவ பெருமானும் ஆதம் நபியும் ஒன்றே

சிவ பெருமானும் ஆதம் நபியும் ஒன்றே
கல்கி அவதாரமும் முஹம்மது நபியும் ஒன்றே

சிவன் - சக்தி, சிவனில்லாமல் சக்தி இல்லை, சிவனில் பாதி சக்தி, இவர்களில் இருந்தே முழு உலகின் மனிதர்களும் தோன்றினர். முழு மதற்கடவுள் சிவனே, மூலக்கடவுள் சிவனே. சைவ சமயத்தின் மூல கர்த்தாவும் சிவனே. சிவன்தான் அனைத்தினதும் தோற்றுவாய். இந்த விடயங்களை அறியாத சைவர்களே இருக்க மாட்டார்கள். 

ஆதம் - அவ்வா, ஆதமில்லாமல் அவ்வா இல்லை, ஆதமில் பாதி அவ்வா, இவர்களில் இருந்தே முழு உலகின் மனிதர்களும் தோன்றினார்கள். முதல் மனிதன் ஆதமே, மூல மனிதன் ஆதமே, முதல் நபியும் ஆதமே, இஸ்லாத்தின் மூல கர்த்தாவும் ஆதமே, ஆதம்தான் அனைவரினதும் தோற்றுவாய், இந்த விடயங்களை அறியாத முஸ்லிம்களே இருக்கமாட்டார்கள்.

ஆதாம் - ஏவாள், ஆதாமில்லாமல் ஏவாள் இல்லை, ஆதாமில் பாதி ஏவாள், இவர்களில் இருந்தே முழு உலகின் மனிதர்களும் தோன்றினார்கள். முதல் மனிதன் ஆதாமே, மூல மனிதன் ஆதாமே, முதல் வழிகாட்டியும் ஆதாமே, கிறித்தவத்தின் மூலவிதையும் ஆதாமே, ஆதாம்தான் அனைவரினதும் தோற்றுவாய், இந்த விடயங்களை அறியாத கிறிஸ்தவர்களே இருக்கமாட்டார்கள். 
(இயேசு நாதர் பிறந்தபின்னர்தான் கிறிஸ்தவம் ஆரம்பிக்கின்றது. கிறிஸ்தவத்திற்கு வயது வெறும் 2000தான் பைபில் என்ற வேதம் சொல்லும் சில அடிப்படைகள் நமது சிந்தனைக்கு உதவும் ஆயினும் பைபில் அதன் மூல வடிவத்தில் இப்போது இல்லை மாற்றியெழுதப்பட்டுவிட்டது)

எனவே கிறித்தவத்தையும் விட்டுவிடுவோம். பைபிலும் குர்ஆனும் ஒன்றுபட்ட பல கதைகளைச் சொல்லுகின்றன. இரு சமயங்களும் ஒத்த விடயங்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதனால் அதையும் நாம் கடந்து போவோம். பௌத்தத்திற்கும் பிறகுதான் கிறித்தவம் தோன்றியது. ஆனால் உலகின் மூல மதமாக இஸ்லாம் அறியப்படுகின்றது. அது போல சைவமும் அறியப்படுகின்றது. (இயேசுவை ஒரு முஸ்லிம் கட்டாயம் ஏற்றுக்  கொள்ள வேண்டும். கடவுளாக அல்ல கடவுளின் தூதுவராக) 

இதிலிருந்தான் எனது சிந்தனை எதையோ தேடியது. என்னில் அதன் அடிப்படைகளைத் திறந்துவிட்டது பாவா ஆதமலை என்றும் சிவனொளிபாத மலை என்றும் அழைக்கப்படும் மலைதான். ஆதம்- சிவன் என்ற இரு பெயர்களும் எப்படி ஒரு மலைக்கு வந்திருக்க முடியும்? இரு நபர்களும் ஒரு நபராக இருந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஆக சிவனும் ஆதமும் வேறு வேறல்ல. 
(ஸ்ரீபாத என்று பௌத்தர்கள் அம்மலையை அழைக்கின்றார்கள். கௌதம புத்தரும் பௌத்தமும் உலகில் தோன்றி 2600 வருடங்கள்தானாகின்றது. இங்கு நாம் அதற்கு முந்திய காலத்து விடயங்களை பேசுவாதால் அப்பெயரை இருப்புக்கான நிறுவுகை அரசியல் காரணியாகக் கருதி கடந்து சென்று விடுவோம்.) 

உலகின் ஆதி மொழி தமிழ்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆதம் என்ற சொல் அரபு மொழிச் சொல்லுமல்ல. (கல்கி என்றால் அர்த்தம் புகழுக்குரியவர், அது போல முஹம்மத் என்றால் அர்த்தம் புகுழுக்குரியவர்.) மேலே சொன்ன விடயங்களை
சிவம்- ஆதம் என்ற சொற்களைத் தேடும் போதும் ஆய்வு செய்யும் போதும் ஒரே பொருளைக் கொண்டனவாக இருக்கும். இந்த இரண்டு சொற்களும் தமிழில் உண்டு மங்கலம், களிப்பு, அன்பு, ஆதரவு என்று பொருள்பட மேலோட்ட அர்த்தம் உண்டு ஆயினும் ஆழமான ஆய்வுக்குட்படுத்தும் போது நிச்சயம் இரண்டு பெயர்களும் ஒரே அர்த்தமுடையவையாகவே இருக்கும். 

இருக்கு யசுர் சாமம் அதர்வனம் ஆகிய வேதங்கள் மிக முக்கியமானவை. அவற்றில் கடவுள் குறித்துத் தேடும் போது ஓரிறைக் கோட்பாடுதான் அடிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப் பார்க்கும் போது குர்ஆனுக்கும் இவ்வேதங்களுக்கும் கருத்தொற்றுமை நிறையவே இருக்கின்றது. குறிப்பாக தெய்வக் கொள்கை. அப்படிப் பார்க்கும் போது ஒரே இறைவனால்தான் இருக்கு, யசுர், சாமம், அதர்வனம், தொராத், பைபில், குர்ஆன் உட்பட வேதக்கட்டளைகள் ஆகமங்கள் அனைத்தும் மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக காலத்துக்குக் காலம் பல்வேறு மனித கோத்திரங்களுக்கு வௌ;வேறு மொழிகள் பேசிய மக்களை அடிப்படையாகக் கொண்டு அருளப் பட்டிருக்க வேண்டும் என்பதை மிக இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. 

இஸ்லாத்தின் கருத்துக்கள் படி ஆதம் என்ற முதல் மனிதரை இறைத்தூதரை பிற்காலத்தில் மக்கள் கடவுளாக வணங்கத் தொடங்கிவிட்டார்கள் அவர்களை மீண்டும் நேர்வழிப்படுத்த பெரும் போராட்டமும் பிரயத்தனமும் மேற்கொள்ளப்பட்டதாகவும் இருக்கின்றது. வைனவத்தை இந்த இடத்தில்தான் பொறுத்திப் பார்க்கவேண்டும். வைனவத்தின் போராட்டம் சிவ வழிபாட்டைத் தகர்ப்பதையே குறியாகக் கொண்டிருந்தது. 

இந்த விடயங்களையெல்லாம் வெறுமையான மனத்தோடு தெளிவா ஆராயும போது ஒன்று தோன்றும்.  சிவபெருமான் கடவுள் இல்லை அவர் மனிதர் ஆதி மனிதர். சிவனும் சக்தியும் இணைந்ததால்தான் இப்போதிருக்கும் நாமும் பிறந்திருக்கின்றோம்.  அத்தோடு சுவனத்திலிருந்து ஆதம் வெளியேற்றப்பட்டபின்னர் ஆதம் ஒற்றைக் காலில் நின்றுதான் பல்லாண்டுகள் இறைவனைப் பிராத்தித்தாராம். சிவனைச் சித்தரிக்கும் போது பெரும்பாலும் அவரை ஒற்றைக் காலிலேயே நிறுத்திவிடுவர். இந்த ஒற்றுமையும் கூட முக்கியமானது.  

இந்தச் சிந்தனை பிறந்த பின்னர் பல கட்டுரைகளைத் தேடிப் படித்தேன் சிலவற்றை நீங்களும் படித்துப் பாருங்கள்.

கட்டுரை - 01

இதில் பக்தி தளம் கூட இன்று பார்ப்பது போல் ஒற்றைபடையாக இருக்கவில்லை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பல் வேறு வழிபாட்டு முறைகள் இருந்திருக்கிறது. சைவம், வைனவம் என்பது இன்றும் கூட பெரும்பாலோருக்கு தெரிந்ததே. சைவம் சிவனை பிரதான தெய்வமாக கொண்ட வழிபாட்டு முறை. வைனவத்துக்கு விஷ்னுவே பிரதான தெய்வம். இந்த இரு தளங்களை கூட இன்று அவ்வளவு கட்டுபாட்டுடன் கடைபிடிக்கும் மக்கள் இல்லை. ஒரு காலத்தில் சைவ மரபை சேர்ந்தவர்கள் சைவ தெய்வங்களை தவிர வேறு தெய்வங்களை வணங்க மாட்டார்கள். அப்படியே வைனவத்திலும். நான் சொல்லும் காலம் அப்பரும், ஞான சபமந்தரும், ஆள்வார்களும் வாழ்ந்த காலம். கால போக்கில் இது கரைந்து மக்களிடையே எல்லா தெய்வங்களும் கலந்து போனது. 

இந்த சைவம் வைனவம் மரபுகள் தவிர வேறு மரபுகளும் இருந்தன. சாக்தம்இசக்தியே இதன் பிரதான தெய்வம், பெண் தெய்வங்களாளான மரபு. கௌமாரம், முருகனை பிரதான தெய்வமாக கொன்ட மரபு.காணபத்யம்இ கணபதியை பிரதானமாக கொன்ட மரபு. சூரியனை பிரதான தெய்வமாக கொன்ட மரபு சௌரம். இது போக தாந்திரிகம் என்ற வழிபாட்டு முறை உண்டு, குறியிட்டு வழிபாட்டு முறை. இது சாக்த்தத்தில் பெரும்பங்கு ஆற்றியது. 

பல்வேறு பகுதிகளில் இருந்த பழங்குடி வழிபாட்டு முறையிலிருந்து படி படியாக வளர்க்கப்பட்டது. இந்து மதம் தவிர இன்ன பிற மதங்களான சமனம், பெளத்தம் ஆகியவையுடனும் உரையாடி வளர்ந்தது. 

இப்படி எல்லா ஊருக்கும் பல நாட்டார் தெய்வங்கள் உள்ளன. சுடலை மாடன், பன்றி மாடன், கழு மாடன், இசக்கி, நீலி, சொறி முத்து, பாண்டி, அய்யனார், முனிஸ்வரன் என்று பல.

'நான் யார்?' 'உலகம் எப்படி உருவாகியது?' போன்ற அடிப்படையான ஆழமான கேள்விகளுக்கு பதில் தருவது அல்லது அது சார்ந்து சிந்திக்க செய்வது. அந்த தத்துவ தளத்தில் பல வகை உண்டு. வேதாந்தம், பூர்வ மிமாம்சம், சாங்கியம்இ, யோகம், வைசேஷிகம், நியாயம். வேதாந்தமும், பூர்வ மிமாம்சமும் வைதிக மரபுகள். பிற நான்கும் அவைதிக மரபில் அடங்கும். சார்வாகம் என்னும் கடவுளை மறுக்கும் நாத்திக மரபும் இந்து மதத்தில் அடக்கம்.

கட்டுரை - 02 

"இந்துமதம் என்ற இக்காலத்தில் வழங்கும் பெயர் பலசமயங்களுக்கும் பொதுவானது. அப்படி ஒரு தனிச் சமயம் இல்லை. ஆனாலும் சைவம் வைணவம் முதலிய சமயங்கள் பலவற்றிற்குப் பொதுவாக அந்தப் பெயர் அயல் நாட்டவரால் வழங்கப் பெற்று நாளடைவில் நாமும் வழங்கும்படியாயிற்று"

2. காங்கிரஸ் 15-7-1956 (ஜுன் வெளிவந்த பிலிம் இண்டியாத் தமிழாக்கம்) "ஆங்கிலச் சரித்திரப் பேராசிரியர்கள் தான் முகலாயர்கள் இந்தியருக்கு கொடுத்து வந்த 'இந்து' என்ற பெயரை எடுத்துக் கொண்டு மேலும் மேலும் அழுத்தமாக வற்புறுத்தி ........ பிரிவினையை ஏற்படுத்துவதற்குக் காரண கர்த்தர்க்களாக இருந்தார்கள். முகலாயர்கள் இந்தியாவைப் படையெடுப்பதற்கு முன்பு ஹிந்துக்கள் என்ற பெயரே கிடையாது"

3. பிரம வித்தியா பத்திரிகை (புத்தகம் 4, இலக்கம் 14, பக்கம் 201, 202.) பக்கம் -201 "ஹிந்து என்னுஞ் சொல் புதியதே. இதைச் சிலபாஷாகவிகள் உபயோகிக்கின்றனர். சில நவீனர் இது மகமதியரிட்ட பெயரென்றும் மற்றவர் யவணர் ஸிந்து நதிக்கரையில் வசிப்பவராதலின் ஹிந்துக்களெனப் பெயரிட்டா ரென்றும் வேறு சார்பினர் ·தறிஞர் பெயரென்றும் பிறர் ஓர்வகைச் சித்தாந்திகள் பெயரென்றும் மற்றவர் ஒதுக்கப் பட்டவர் பெயரென்றும் சிலர் பிரஷ்டர் பெயரென்றும் பலவழி சொல்லுகிறார்கள்." "இச் சொல் மகமதியர் விசேஷமாய் நெடுங்காலமாய் வியவகரிப்பதாய் ஆரட்ட பாஷை (அதாவது அரபிபாஷை). அதில் ஹிந்து என்று (அஞ்ஞானி என்னும் பொருளில்) இருக்கின்றது. அவர்கள் இந்த இந்தியா தேசத்தின் ஆக்ஷ¢யைக் கைக்கொண்ட பொழுது நம்மவர் ஞானிகளாகவும் மற்றவர் அஞ்ஞானிகளாகவும் எண்ணி இப்பெயரை இட்டார் என்பது."

4. தினமணி 10-3-1958 "ஹிந்தி என்ற வார்த்தையே இந்தியச் சொல் அல்ல என்று ராஜாஜி இங்கு தமிழர் அளித்த வரவேற்பில் பேசுகையில் கூறினார். பூர்வீக பாரசீகர் இந்தியாவுக்கு வந்தபோது இந்தியாவின் பூர்வீக குடிகள் பேசிய

மொழிக்கு ஹிந்தி என்று பெயரிட்டனர் என்று அவர் விளக்கினார்"

5. R.K.முகர்ஜி என்பவர் சென்னைக் கோகலே ஹாலில் 27.09.1941ல் நடந்த கூட்டமொன்றில் பிரசங்கித்தது. "India and Hinduism are Organically related like body and soul. The name HINDUISM was given to them by Persians"

6. படுக்கை யறையில் பாசாங்கு செய்த பங்கஜவல்லியின் கதை "கிறிஸ்து பிறந்த 1191 வது வருஷத்திலே சகாபுடீன் கோரி என்னப்பட்ட மகமதிய அரசன் டில்லி இராஜ்யத்தை ஜயித்து மகமதிய அரசை நிலைபெறச் செய்த போது இந்நாட்டவர்களாகிய ஆரியரை இந்துக்களென்று அழைக்கத் தொடங்கினர்.......இதனை இத்தேச புராதன சரித்திரமாகிய 'பாரத் பாகி' என்னப்பட்ட நூலிற் காணலாம்."

இந்தியாவில் பௌத்தம், சைவம், வைனவம், ஜைனம் என பல பிரிவுகளைக் கொண்ட மதங்கள் தனித்தனியாகத்தான் இயங்கிக் கொண்டு வந்தது. 1911இல் பிரிட்டிஷ் கணக்கெடுப்பிற்கு பின்தான் யார் இந்து என்ற கேள்விக்கு? யாரெல்லாம் இசுலாமியர்கள், கிறித்துவர்கள் இல்லையோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று வரையரை செய்துவிட்டனர்

கட்டுரை - 03 உலக மதங்களின் வேர்

சிவா,  சைவாசவாஷன் வாங்சைந்த் போன்ற போன்ற பெயர்கள் உலகெங்கும்  பயன்பட்டு வருகின்றன இந்த அத்தனை பெயருக்கும் ஒரே பொருள்Empty other wise God/Shiva/Allah   வணங்குபவர்கள்,
In India Shiva means Energy Holding god சக்தியை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு கடவுள்

சவா (shava) திபத்தியர்கள் என்றால் தன்னை மறந்த நிலைஇயற்கையோடு வாழும் நிலை,அனைத்திற்கு அப்பாற்பட்டு நிற்பதுஅனைத்தையும் தன்னுள் அடக்குவது,

Middle East     ஷான் வாங் தூய்மையான போதகர் (முற்றிலும் துறந்த துறவிஅடையாளம் இல்லாதவர் (இவரை மாதிரி என்று சொல்ல முடியாதவர்-உருவமில்லாதவர்) கவலையில்லாதவர் (அதாவது தான் படைத்தது ஆடுகிறது ஆடட்டும் இறுதியில் என்னிடம் தான் வரும்) (கூத்தும் இசையும் கூத்தின் முறையும் காட்டுபவர்)

Saint சைந்த் -இது ஆங்கிலத்திலும் சரி லத்தினிலும் சரி கீரிஸிலும் சரி மொத்தம் 1000மேற்பட்ட விளக்கங்கள் இருக்கிறன. அனைத்தும் சூரியன்மையமான ஒரு பொருள்அடக்கி ஆள்பவன் சூய்மையானவன்

 Asia Minor/ Eurasia     ஹிப்ருவில் சைன் என்றால் சூரியன் என்று பொருள் அதாவது சன் என்று சூரியனை குறிக்கும் சொல் கூட சைந்த என்பதன் கால மாற்ற சொல்,

திங்களை சூடியவன் என்று நாம் பொதுவாக சொல்கிறோம்திங்கள் எதற்குள் அடக்கம்ஞாயிறு இல்லை என்றால் திங்கள் உண்டா, இந்த வார்த்தைபடி பார்த்தால் திங்களை அடக்குவது ஞாயிறு துவக்கம் எங்கேபால் வழி மண்டலத்தின் ஒரு ஓரத்தில்பால்வெளி மண்டலம் பேரண்டம்பேரண்டம் பிரபஞ்சம்பிரபஞ்சம்சிவன்சிவன். சிவன் இருந்தும் இல்லாதவன்இதைத்தான்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகிஉண்மையுமாய் இம்மையுமாய்
கோனாகி யான் என (கோ-King)

 என்று குறிப்பிடுகிறார் வள்ளார் 

உலகில் இறைவனை குறிக்கும் அத்தனை சொற்களும் ஒன்றை மட்டுமே மையமாக வைத்து இருக்கிறன. அதாவது ஒன்றுமில்லாததுஆனால் அதில் அனைத்தும் அடங்குவது. எளிமையாக சொல்லப்போனால் தீபத்தை பாருங்கள் மஞ்சள் ஒளிஅதன் கீழே இளம் சிவப்பு அதன் மெல்லிய மஞ்சள் அதன் பிறகு கரிய நிற திரிஇந்த திரி இல்லை என்றால் எண்ணை/நெய் இருந்து என்ன பயன்.

தற்கால அறிவியல் என்ன சொல்கிறது block hole  தத்துவம் சொல்கிறது. பிரபஞ்சம் முழுவதும் 90% கருமை வெறும் 10% மட்டும் தான் ஒளி என்கிறது. அதாவது நமது விளக்கு தத்துவம்.

ஹராப்பா காலமானாலும் சரிமாயா யுகமானாலும் சரிஎகிப்திய நாகரீகமானாலும்சரி அல்லது கிரேக்கர்களின் இரும்பு ஆட்சி ஆனாலும் சரி இந்த அத்தனை நாகரீக யுகத்திலும் ஒன்று மையமாக இருந்தது அதை அவர்கள் பின் பற்றி வந்தார்கள் (கும்பிட்டு வந்தார்கள்) ஹரப்பாவில் தோன்றிய சூரிய வழிபாடு இன்று பொங்கலாக மாறி இருக்கிறது. எகிப்தின் பிரபல சூரிய கோவில் தான் முதல் முதலில் கட்டிய கோவில்ஸிபிங்ஸ் அனைத்தின் முகங்களும் சூரியனை நோக்கித்தான் இருக்கிறன. மாயா நாகரீகத்தில் சூரிய கோவில் தான் பிரதானம் இறந்தவர்களை கூட கிழக்கு நோக்கித்தான் புதைத்தனர். கிரேக்கர்களின் சன் கடவுள் தான் இன்று சன்டேவாக மாறி இருக்கிறது.
இந்துக்களின் கொள்கையின் படி
உலகமே சிவமயம் சிவமே உலக மயன் என்றால் சிவன் உருவமில்லாதவரா என்றால் இல்லைசிவன் என்பது இல்லாதது மாற்றமில்லாது         (true-eternal/everlasting/never changing)             சும்மா ஒன்றுமில்லாத பொருளுக்கு மதிப்பு உண்டா என்றால் இல்லை,அப்படி என்றால் அந்த ஒன்றுமில்லாத பொருளில் என்ன இருக்கிறது சக்தி .

சூரியனை எடுத்து கொண்டால் நெருப்பு வட்டம் நமது கண்ணுக்கு தெரிகிறது. அதனுள் ஹைட்ரஜன் அணுக்கள் பிரளயம் ஹீலியம் பிறகு ஹைட்ரஜன் என சுழற்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சுழற்ச்சி தான் சக்தி (எனர்ஜி) இந்த சக்தி எனர்ஜி இல்லாமல் சூரியன் ஒரு காற்று போன பலூனாக போய்விடும். ஆனால் சூரியனின் இந்த சுழற்சி ஒரு நாள் முடிவடையும் அப்போது என்ன நிகழும் நாம் பார்க்கிறோமே கிழக்கு பகுதியில் வியற்காலையில் சிவப்பான அழகான ஒளிவட்டம் அது பல்லாயிரம் மடங்கு பெரிய உருவமான மாறிவிடும் (Dead star) அதை பார்க்க நாமெல்லாம் இருக்கமாட்டோம் ஏன் என்றால்  பூமியே இருக்காது .

சூரியன் தனது குடும்ப உறுப்பினர் அனைவரையும் தன்னுள் இழுத்துவிடுவான்.  பிறகு பெரிய வெடிப்பு ஒன்று நிகழும் தன்னுள் இழுத்த அனைத்து பொருட்களும் (Energy/Mass)அண்டவெளியில் வீசி எரியப்படும். இது வந்து ஒரு உதாரனம் தான் சூரியன் பிரபஞ்சம் என்று இந்த இடத்தில் வைத்து கொண்டால் இது தான் பெருவெடிப்பு கொள்கை (big bong theoryஎரிய பட்ட பொருட்கள் அனைத்தும் மீண்டும் ஒன்று சேரும்பிறகு கேலக்ஸிஅதன் தூசுகள்தூசுகள் இணைந்து அழுத்ததில் வெப்பமடைந்து உருவாவது நட்சத்திரம்பிறகு மீண்டும் ஒரு உலகம்.

சிவம் பிரபஞ்சம் சக்தி அதன் துகள்கள்இதைதான் நாம் சக்தியில்லையேல் சிவமில்லை சிவமில்லையேல் சக்தியில்லை என்கிறோம். அப்படி என்றால் சிவன் இமயமலைக்கு ஏன் வந்தார். இந்தியாவில் மட்டும் ஏன் கும்பிட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் முதலில் கெடுத்து இருக்கும் பல மொழி விளக்கம். வார்த்தை வேறு வேறு ஆனால் அதன் பொருள் ஒன்றுதான்.

பிறகு ஏன் சுடுகாட்டு சாமியார் என்கிறார்கள். பேய்களுடன் உலவுகிறவன் என்கிறார்கள் என்ற கேள்விக்கு எளிய பதில் சுடு+காடு= சுடுகாடுபிணங்களை சுடும் காடு என்று இதன் பொருள் என சின்ன குழந்தை கூட சொல்லிவிடும் ஆனால் உண்மை அதுவல்ல சூடான இடம் என்று உண்மை பொருள். பசி துகள்கள் சூடான பிறகுதானே நட்சத்திரம் உருவாகிறது. தாயின் கற்பம் என்ன -டிகிரி செல்சியஸிலா இருக்கிறது. தாயின் கற்பத்தில் 9மாதம் இருந்த நாம் அதே அளவு சூடுடைய ஒரு அறையில் ஒரு மணிநேரம் இருந்து பாருங்கள். ஆரம்ப இடமும் சுட்டான காடுதான் (கர்ப்பபை) இறுதியில் சேரும் இடமும் சுடுகாடுதான்.

இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள வாழ்க்கை அதில் ஆட்ட ஓட்ட சிரிப்பு அழுகை கூப்பாடு கொண்டாட்டம்எல்லாம் யாருக்கு உட்பட்டது.

சிவன் எப்பயுமே கஞ்சா அடிக்கும் சாமி ஆமா கஞ்சா என்பது ஒரு போதைப்போருள் அதை இந்தியாவில் உள்ள (சோம்பேரிகள் உழைக்க பயந்து பிச்சை எடுப்பவர்கள்) சாமியார்கள் வெறுமனே இருந்தா போரடிக்கும் சாமி பேரசொல்லி கஞ்சாவாவது அடிக்கலாமே என்று இவர்களாகவே கஞ்சாவை தேர்தெடுத்தார்கள். எங்க ஊர் உய்க்காட்டன் சாமிமாடன்,சுடலை  எல்லாம் பட்டை சாராயம் அடிக்கும் (இப்ப டாஸ் மாக்).

நரம்புகளை மழுங்க அடிக்கும் வேதி குணங்கள் கலந்த திரவம்மற்றும் இயற்கையிலேயே சில இலைகளின் வேதியல் குணங்கள் அந்த இலைகளை உண்பதை விட அந்த இலைகளை எரித்து அதன் புகையை சுவாசித்தால் நரம்புகள் தங்களின் இறுக்கத்தை தளர்த்தி உடலுக்கு ஒரு வித உற்சாகமான நிலையை தரும். (போதை) இதைத்தான் திபெத்தியர்கள் சவா நிலை என்பார்கள்.

நம்ம ஊர்களிலும் சொல்வார்கள் குடிச்சு புட்டு சவம் மாதிரி கிடக்கிறான் என்று. சவா நிலையில் இருந்தாலும் உள்ளுள்ள பொருட்கள் எல்லாம் அது அதன் பணியை செய்து கொண்டு இருக்கும் சிந்தனையை தவிர சிவன் சிந்திக்க மாட்டான்.

சிந்திப்பதற்கு என்ன இருக்கிறது அதுதான் சக்தி செய்து கொண்டு இருக்கிறதேஅதாவது நம்முள் சிந்தனையாக இருப்பதுதான் சிவன் மற்றதெல்லாம் சக்தி. சிந்தனை என்பது மனது மனதில் இருக்கும் மனசாட்சி இதை சிலர் ஆண்மா என்றும் கூறுவார். பிரம்ம சக்தி என்ன சொல்கிறது நமது நெற்றியின் மத்தியில் எல்லாம் அடக்கம் என்கிறார்கள். நாம் அங்கே தானே பொட்டு வைக்கிறோம்நமது சிந்தைனையில் இறைவன் இருக்கிறார். உடலின் எந்த பகுதியில் சிந்தனை இருக்கிறதென்று தெரியாத காலம் அதனால் பொதுவாக நெற்றியை தேர்ந்தெடுத்தார்கள். ஏன் என்றால் தூங்கும் போதும் இதயம் இயங்குகிறது இயங்கும் பொருளில் சக்தி இருக்கும்(energy) 

ஆனால் ஆண்மா அமைதியாகி விடுகிறது. அதனால் அவர்கள் நெற்றியை தேர்ந்தெடுத்தார்கள். சமீப ஆய்வுகளின் படி சிந்தனையை தூண்டும் நரம்பு முடிச்சுகள்,வலப்புற மூளை நீள்வேட்டு பாகத்தின் முன்னால் உள்ள கொழுப்பு படிவங்களில் இருந்து துவங்குகிறது என்று கண்டறிந்து விட்டனர். அதாவது நமது நெற்றியின் நேர் கோட்டு பகுதியின் பின்புறம்.

இதைத்தானெ ஔவை பாட்டி சிவன் தொண்டர் உள்ளங்களில் அடங்குவர் என்று சொல்லி இருக்கிறார்.

சிவனின் ஆரம்ப உருவம் லிங்கம்சிவனுக்கு உருவம் கொடுக்க முடியாது.  லிங்க உருவம் ஏன் தந்தார்கள். சிலர் மட்டமான உவமை சொல்வார்கள். ஆனல் உண்மை ~ஒரு நுலை எடுத்து கொள்ளுங்கள் சிவலிங்கத்தின் ஆரம்பம் என்பது லிங்கம் தாங்கும் வளையத்தின் உள்ளே இருக்கிறது. அதாவது அதன் அடி தெரியாது அதனால் லிங்கம் வெளியில் தெரியும் பகுதியில் இருந்து நூலை இணைத்து அதனை லிங்கத்தின் மீது கொண்டு வாருங்கள் முடிவு எங்கே நூல் நேராக மறுமுனைக்கு லிங்கம் தாங்கும் பகுதியில் முடிகிறது. அதாவது அதன் அடியையும் நம்மால் காணமுடியவில்லை முடியின் எல்லையையும் நாம் காணமுடியவில்லை.

இதைதான் அடி முடிகான அந்தகாரா (நர்மதா நதி தோன்றும்) இடத்தில் உள்ள சிவலிக்கத்தின் பெயர் அந்தகாரேஸ்வர். இந்த அந்தாகாரேஸ்வர் சன்னதியில் தான் தாழம்பு அண்ணவடிவில் முடியை காண சென்ற பிரம்மனை சந்தித்தாக சொல்கிறார்கள்.

உலகம் எங்கும் நாகரீகம் தோன்றிய உடன் பிரபஞ்சத்தின் சக்தியை மக்கள் உணர்ந்து கொண்டனர்.  இதனால் தான் உலகம் எங்கும் இறைவனுக்கு உருவம் தராமல் உருவமற்ற வழிபாடு தோன்றியது தோன்றியது.

இந்த நிலையில் தான் இந்தியாவில் (உருவமற்ற வழிபாடு) சிவகோட்பாட்டிற்கு எதிரான புதிய கோட்பாடு உறுவானது. இந்த கோடுபாடு ஏன் உறுவானது என்பதற்கு சரியான விடை கிடைக்கவில்லை. ஆனால் எளிதான ஒரு உதாரணம் என்ன வென்றால் ஒரு பிரபல கட்சி இருக்கிறதுஅதில் சில பொறுப்புகளை முக்கிமானவர்கள் எதிர்பார்க்கின்றனர்அது கிடைக்காமல் போகவே தனியாக பிய்த்துகொண்டு அந்த கட்சியின் கொள்கைகளை தங்களது கொள்கைகளாக மாற்றி அதில் சில மசாலாக்களை சேர்த்து நாங்கள் தான் உண்மையான அந்த கட்சி என்கிறார்கள். பிறகு தாங்களுக்குள்ளே அடித்து கொள்கின்றனர்,(Encyclopedia of ethics and world  religion: Volume 12 (Se – Vn)) வைனவம் இப்படி தோன்றியதாகத்தான் இருக்கும் என்று இந்த புத்தகம் சொல்கிறது.. 

இதை நிறுபிக்கும் விதமாக வைணவம் தழைத்தபிறகு சிவ கோட்ப்பாடுகளை உடைக்கும் பணி கடுமையாக நடந்து கொண்டு இருந்தன. ஆனால் இல்லாத ஒன்றை எப்படி உடைக்க முடியும் அதனால் அதை பின்பற்றும் மக்களை குழப்பும் வேலை ஜரூராக நடந்து வந்தது. சுமார் கி.மு 1200-இருந்து 900 வரைக்குள் வைணவ கோட்பாடுகள் இயற்றபட்டன. சிவ கோட்பாட்டை அறியமுடியாமல் அந்த கோட்பாட்டை தனதாக்கிகொள்ள முற்பட்டனர் ஆனால் அது இன்றுவரை முடியவில்லை.

கீதையில் கூட நானே அனைத்திலும் உடையவன் என்றார் கிருஸ்னர் ஆனால் அவர் எதில் என்று கூறவில்லை அதாவது பிரம்மனை படைத்ததும் நானே என்று சொன்னவர் அந்தபடைக்கும் திறன் எனக்குள் எங்கிருந்து வந்தது என்று குறிப்பிடவில்லை. காரணம் எழுதியவருக்கு அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை. பழைய ஏற்பாடு போலவே

ஆதியில் எங்கும் இருளாக இருந்தது இறைவன் வெளிச்சம் வரக்கடவது என்றார் ( ஜான் 1:1~9) என்று வருமேஅந்த இடத்தில் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் இல்லை அதாவது அந்த இறைவன் எங்கிருந்து வந்தார்.

இதைபோல் தான் கீதையும் நானே அனைத்தையும் படைத்தேன் நானே அனைத்திலும் உள்ளேன் உன்னை யார் படைத்தது என்ற கேள்விக்கு அங்கு பதில் இல்லை.

அனைத்தும் என்னுள் இருந்து வந்தது நான் யார் என்று கண்ணனால் சொல்ல முடியவில்லை அப்படி சொன்னால் அது சிவ கோட்பாடு,

அதை விட்டு வேறு ஒன்று புதுமையாக எழுத முயன்றார்கள் இதனால் தான் 9அவதாரங்களை எழுதி பார்த்தார்கள் ஆனால் இறுதிவரை முடியவில்லை.

வைணவ கோட்பாடு உண்மைக்கும் பொய்மைக்கும் (தர்மம்-அதர்மம்) உள்ள வேறுபாடுகளை விளக்கவந்தது. ஆனால் அதை பிறகு சிவ கோட்பாட்டிற்கு எதிராக திருப்பிவிட்டார்கள் என்றும் சொல்பவருண்டு.

உலகின் மற்ற நாடுகளில் இந்த (சி வாசை வாச வாஷன் வாங்சைந்த்) கோட்பாடுகளை மாற்ற விரும்பவில்லை. ஆனால் அந்த கோட்ப்பாட்டின் கிளைகளை உருவாக்கினார்கள். இதுதான் கிருஸ்தவம்யூதம்இஸ்லாம்,கான்பூஸியஸ்,ஹிண்டோயிசம்சு பியிஸம்,அதனால் தான் அந்த இவை இயற்கையின் கோட்பாட்டை விட்டு வெளியே சென்ற மக்களை குழப்பவில்லை,

திருமறையில் ஒரு வாக்கியம் வரும்

நீங்கள் அறிந்து கொண்ட உண்மையில் பொய்யை கலக்காதீர்கள்உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் (அல்பகரா பகுதி 1 அத்தியாயம் 2:42)

திருக்குரானின் இந்த ஒரு அத்தியாயமே போதும் அதாவது உண்மை நமக்கு தெரியும்,நம்மால் அறிய முடியாது. நாம் இருக்கும்

ஜனனத்தில் இருந்து மரணம் வரை இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் நடக்கும் நன்மை தீமைகளை விளக்குவதற்காக தோன்றிய வைணவ பிற்காலத்தில் சிவ கோட்பாட்டை உடைக்க முயல இன்று இந்திய துணைகண்டம் முழுவதும் மத ஸ்தரமின்மை இன்றும் நடந்து வருகிறது. ஆரம்ப காலங்களில் சைவ வைணவர்கள் அடித்து கொண்டார்கள். அதன் பிறகு சமனர்களுடன் அடித்து கொண்டார்கள். அதன் பிறகு கி.பி க்குபிறகு வந்த மதங்களுடன் அடித்து கொள்கின்றனர். 

Wednesday, March 18, 2015

முஸ்லிம்களின் தனித்துவ ஊடகக் கனவு செரண்டிப் தொலைக்காட்சியை முன்னிறுத்தியும் இன்னும் சிலவற்றை உள்வாங்கியும்.

முஸ்லிம்களுக்கான தனித்துவ ஊடகம் என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் இருந்த ஒருகாலத்தில் அதையே லட்சியமாகக் கொண்டு திரிந்தவர்களில் நானும் ஒருவன். பத்திரிகை வானொலி தொலைக்காட்சி பலமானதொரு இணையதளம் என்று விரிந்து சென்ற எதிர்பார்ப்புகள் ஆயிரமாயிரம் திட்டங்கள் எல்லாமே இப்போதும் வளச்சியின் போக்கிலேயே ஆரோக்கியமாக எதிர்பார்ப்புகளாக மட்டும் அப்படியே இருக்கின்றன. ஆயினும் காலம் செல்லச் செல்ல உலகில் இயல்பாய் இடம்பெறும் மாற்றங்கள் சில விடயங்களை அப்படியே வலுவிழக்கச் செய்துது பிரிதோர் கோணத்தில் அத்தேவைகளை நிறைவேற்றிச் செல்வதையே இப்போதும் நிதர்சனமாகக் காண்கின்றேன். 

நமக்கான தனித்துவ ஊடகம் என்ற கொள்கையைக் கொக்கரிக்காத முஸ்லிம் ஊடகவியலாளர்களே கிடையாது, சிலர் ஏறும் மேடைகளில் எல்லாம் இத்தேவை குறித்து வெறுமனே பேசுபவர்களாகவே இருந்து வந்தததையும் அவதானித்து இருக்கின்றேன். அரசியல் வாதிகளின் கொடும்பிடிக்குள்ளும், தஃவா என்ற போர்வையில் குழாயடிச் சண்டை போடும் இஸ்லாமிய இயக்க வெறியர்களின் யாவாரத்திலும் ஒரு பங்குப் பிரிவாக இவ்வூடகத் தேவை சிக்கிக் கொண்டு குற்றுயிரும் குறையுயிருமாக அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த போது இப்போது அப்பிரமாண்டத் தேவையில் அதிரடி மாற்றங்கள் பல இடம்பெற்று வருகின்றமை மிகவும் வருந்தத் தக்க விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தி விடுமோ என்ற ஏக்கம் அன்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

முஸ்லிம் இயக்கங்களைப் பொறுத்தவரைக்கும் அவை தமக்காகக் கீறிக் கொண்டுள்ள குறுகிய வட்டத்திற்குள்ளிருந்து வெளியில் வரத் தயாரில்லை. அல்லாவின் பாதையில் செல்வதும், தீனில் முக்திநிலையடைவதும், பித்அத்துகளை ஒழித்து தூய இஸ்லாமாக்கலும், கிலாபத்தை ஏற்படுத்தலும் அவர்கள் கீறிக் கொண்டுள்ள சிறுவட்டத்தினுள் ஜோராக நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அங்கு யாவாரம் களைகட்டி பலதசாப்தங்கள் கழிந்துவிட்டன. இன்னும் பல தசாப்தங்களுக்கு இவர்கள் இதையேதான் செய்து கொண்டிருப்பார்கள் அதனால் அவர்களை அப்படியே அவர்கள் பாட்டில் அவர்களது யாவாரத்தில் கவனம் செலுத்தும்படி மெல்லமாய் விட்டுவிட்டு நகர்வோம்.

முஸ்லிம் ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் பொழப்பு கெட்டுப் போகாத வண்ணமொரு தேவைப்பாடு இப்போதும் இருக்கின்றது. தனித்துவ ஊடகத் தேவை என்ற பிரமாண்டமாக இருந்த கனவுகளை கண்ணைக் கட்டி தலையைச் சுற்றிக் காட்டில் விட்டவர்களும் இவர்கள்தான். கிடைக்கின்ற வாய்ப்புகளை சில்லறைத்தனங்களால் நிராசையாக்கிவர்களும் இவர்கள்தான். தம்மைப் பிரமாண்டமாகக் கட்டமைத்துக் கொண்டு எவ்விதமான மேம்படுத்தலுமின்றி இன்றும் பிரமாண்டங்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவராசிகள். ஊடகத் தேவை என்ற விடயத்தில் இந்த ஜீவராசிகளைத் தவிர்த்துவிட்டுச் செல்ல முடியாத இக்கட்டுகுள் இருப்பதையும் வருத்தத்துடன் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். ஒழுக்கமில்லாத இஸ்லாமில்லாத மதுவுக்கும் மாதுவுக்கும் பின்னால் பலநாள் பட்டினியில் நாக்கைத் தொங்கப் போட்டுக் கோண்டு அழையும் தெரு நாய்களுக்கு ஒப்பாக இவர்களில் பலரின் தனிப்பட்ட பரிதாபகரமான நிலையில்தான் இவர்களை வைத்து இஸ்லாமிய தனித்துவ ஊடகத்தேவையை நிறைவு செய்தல் வேண்டும்  என்ற துரதிஷ்டத்தை அவ்வளவு எளிதில் கடந்து போக முடியாதுதான் எனினும் அதுதான் நமது விதி. 

விடுதலைப் புலிகள் அரசோச்சிய காலத்தில் முஸ்லிம்களின் ஊடகத் தேவை என்பது மிகவும் அத்தியவசியத் தேவையாகக் காணப்பட்டமையை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். இலங்கையில் உள்ள தினசரிப் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மையை மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு சில சம்பவங்களைச் சொல்கின்றேன் அவற்றைத் தேடிப் பாருங்கள் 

01. 1985 ஏப்ரல் 29ஆம் திகதி வாழைச்சேனை – மூக்கர்கல் எனும் பிரதேசத்தில் வைத்து போஸ்ட் மாஸ்டர் முகைதீன் அப்துல் காதர், சீனிமுகம்மது சேகு இஸ்மாயீல் உட்பட்ட எட்டு முஸ்லிம்கள் கடத்தப்பட்டு தமிழ்விடுதலை ஆயுத இயக்கம் ஒன்றினால் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். (அவ்வியக்க ஊறுப்பினர்கள் பின்னாளில் விடுதலைப் புலிகளானார்கள்)

02. காத்தான்குடி, அக்கரைப்பற்று, ஏறாவூர்ப் படுகொலைகள் நிகழ்ந்த 1990 ஆகஸ்ட் 03, 04, 12 திகதிய விடயங்கள்.

03. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் திட்டமிட்டு படிப்படியாக 1990 ஒக்டோபர் 18 ஆம் திகதியிலிருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டமை

04. அழிஞ்சிப் பொத்தானை மற்றும் பள்ளித்திடலில் 1992 ஏப்ரல் 29 மற்றும் ஆகஸ்ட் 12 ஆகிய திகதிகளில் நிகழ்ந்த விடயங்கள்

05. போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த காலத்தில் 2002 ஆம் ஆண்டு கிண்ணியா, மூதூர், வாழைச்சேனைப் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் அப்பட்டமாக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், துன்புறுத்தல்கள், கடையெரிப்பு சம்பவங்கள் இதில் உச்சகட்டமடைந்த ஜூன் 27,28,29ஆம் திகதிகளில் நிகழ்ந்த விடயங்கள்

இவை வெறும் உதாரணத்துக்காக சொல்லப்பட்ட மாபெரும் சம்பவங்கள். இவை குறித்து அப்போதைய தினசரிகள் எதிலும் முழுமையாக உண்மையான நேர்மையான பதிவுகள் இருக்காது. தலைப்புச் செய்தியாக, ஆசியர் தலையங்கமாக மாறியிருக்க வேண்டிய விடயங்கள் ஆனால் அவை புறந்தள்ளப்பட்டிருக்கும். புறந்தள்ளியது வேற்றுக் கிரக வாசிகள் கிடையாது, தமிழ் மொழியையே பேசும் சகோதர இனம்தான். அப்போது சிதைக்கப்பட்ட நம்பிக்கைகளின் மீது மீளவும் பையப் பைய எழும் நல்லுறவுகள் இப்போது ஊடகத் தேவையில் செலுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் தர்க்கமாக சில விடயங்களையே இங்கு பகிர்ந்து கொள்ள இருந்தேன். 

செரண்டிப் தொலைக் காட்சியை முன்னிறுத்தி அந்த அறிவிப்பைச் செய்த போது பல நண்பர்கள் பலவிதமான விடயங்களையும் தனிப்பட்ட ரீதியில் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் சிலர் மொத்தத்தில் இதை எழுதாமலேயே விடலாமே என்றார்கள். அதை ஏற்றுக் கொண்டாலும் நீண்ட யோசனையின் பின் சிலகுறிப்புக்களை மட்டும் அதுவும் வெறும் ஆதங்கத்தினை மட்டும் வெளிப்படுத்த விளைகின்றேன். அதற்கு எனக்கு உரிமையிருக்கின்றது என்பதால். அதுமட்டுமல்ல இந்த ஊடகக் கனவைச் இன்னும் உயிர்ப்புடன் சுமந்து இருப்பதால் அது குறித்து நான் எழுதத் தகுதியுடையோன்தான் என்று நம்புகின்றேன்.

எமது நூற்றாண்டு காலத்தவம் என்ற நாமத்தோடு இலங்கையின் முதலாவது முஸ்லிம் தொலைக்காட்சியாக பரிணமிக்கின்றது செரண்டிப் தொலைக்காட்சி என்ற விடயத்தை அறிந்த போது மிகவும் அகமகிழ்ந்தேன். டான் ரீவிதான் செரண்டிப் ரீவியாக மாறி இருக்கின்றது என்று இன்னுமொரு தகவல் வந்த போது யாரோ சொல்லி அதை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் இல்லாததால் உண்மையைக் கண்டறிய நானே களத்தில் குதித்தேன். நேரடியாக அனைவரோடும் தொடர்புபட்டேன், டான் ரீவியின் நிறுவனர் குகன் ஐயா குறித்து ஏலவே பதியப் பெற்றிருந்த தகவல்கள் கொஞ்சம் நெருடலாகத் தெரிந்தது. ஆயினும் அவருடன் நெருக்கமான தொடர்புகள் எனக்கு இருக்கவில்லை. அதனால் யாரோ சொல்லும் தகவல்களை வைத்து அவரை எடை போடவும் முடியவில்லை அவர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக இருந்து பின்னர் புலிகளின் எதிரியாகி பின்னர் சவுதி அரேபியாவின் ஒரு செல்வந்தரின் ஒரு மில்லியன் யூரோ பங்களிப்புடன் தன்னை மீண்டும் கட்டமைக்கத் துவங்கி பின்னர் இந்தியாவைத் தளமாகக் கொண்டு இயங்கி  புலியெதிர்ப்பை முதலீடாக்கி இருக்கின்றார் என்று அவரிடமே சம்பளம் பெற்றுக் கொண்டு பணியாற்றும்  பஹாதின் அறிவிப்பை புறந்தள்ளவும் முடியாத பொழுதில்தான் செரண்டிப் தொலைக்காட்சி என்ற முஸ்லிம் குழந்தை அவருக்குப் பிறக்கின்றது. அதுவும் செற்லைட் குழந்தை. அவரின் கேபிள் நெற்வேர்க்கில் மட்டுமே நடைபயிலும் தன்மையைக் கொண்டது. அது பெரிய பிரச்சினையில்லை டிஜிட்டல் ஊடக உலகில் இன்னும் சில வருடங்களில் நாம் அனைவரும் சஞ்சரிக்கப் போகின்றோம். ஆனால் இங்கு எழுகின்ற முதல் சிக்கலுக்குரிய கேள்வி ஓர் அலைவரிசையை உருவாக்கி அதற்குப் பிரதானியாக நம்பிக்கைக்குரிய ஒருவரை நியமித்த பின்னர் அதே நம்பிக்கைக்குரிய நபர் தருகின்ற சிக்கலான தகவலை அடிப்படையாக வைத்து நாம் எடைபோடும் விடயம் என்ன என்பதுதான் இங்கு முக்கியமானது.

ஒரு பென்ட்ரைவ் கூட சொந்தமாக இல்லாத நிலையில் உலகில் இயங்கும் ஒரோயொரு தொலைக்காட்சி செரண்டிப் தொலைக்காட்சிதான். இப்படிப்பட்ட ஏழ்மை நிலையில் உத்தியோகபூர்வமாக ஒருமுறை நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இரண்டு முறை அங்குரார்ப்பண விழாக்களை நடாத்திய துரதிஷ்டமும் இத்தொலைக்காட்சியயே சாரும். ஊடகத்துறையில் கத்துக்குட்டிகளாக இருக்கும் நான்கு பேரை வைத்துக் கொண்டு வெற்றி நடைபோடும் செரண்டிப் இதுவரையில் தனது லட்சியங்கள் எதையுமே அடையவில்லை. எந்த இடத்தில் ஆரம்பித்ததோ அதே இடத்தில்தான் இன்னும் நின்று நூற்றாண்டுகாலத் தவமென்று புலம்பிக் கொண்டிருக்கின்றது. 

இந்தப் புலம்பல் முஸ்லிம்களுக்கான உண்மையான ஒரு தொலைக்காட்சியின் வருகையைச் செல்லாக்காசாக்கி பலவீனப்படுத்தி விடுமோ என்று எண்ணும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கின்றது.  நிகழ்ச்சி வடிவமைப்பாளர்கள், சிறந்த தயாரிப்பாளர்கள், கவர்ச்சிகரமான ஈர்ப்புமிக்க தொகுப்பாளர்களும் வழங்குனர்களும் இல்லாமல் ஒரு தொலைக்காட்சியை வெற்றிகரமாகக் கொண்டு நடாத்த முடியாது எனும் பாடத்தை இன்னும் செரண்டிப் ரீவி கற்றுக்கொள்ளவில்லை. செரண்டிப் ரீவி தன்னைத் தரமாகக் கட்டமைக்கவில்லையென்றால் இந்தத் துரதிஷ்டம் தொடரும். அதே நேரம் முஸ்லிம் தொலைக்காட்சி பற்றிய எம்போன்றவர்களின் அவாவில் அது மண்ணள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கும். போசாக்கற்ற குழந்தை போன்ற நிலையிருந்து விடுபட்டு ஆரோக்கியமான பாதையில் செரண்டிப் நடைபோட போட வேண்டும் என்துதான் என் போன்றவர்களின் எதிர்பார்ப்பு.

இலங்கையில் மட்டும்தான் முஸ்லிம்களுக்குப் பல தேசியத் தலைவர்கள் இருக்கின்றார்கள் மாடு, மரம், மயில், குதிரை, கழுதை என்று எல்லாமே தேசியத் தலைகள்தான். அப்படிப்பட்ட ஒரு தேசியத் தலைதான் ரிசாத் பதியுதீன். இந்தத் தேசியத் தலைக்கு ஒழுங்காக அரசியலே செய்யத் தெரியவில்லை அதற்குள் ஊடகத்தைக் கொண்டு நடாத்தும் வலிமை இருப்பதாக நான் நினைக்கவில்லை. முஸ்லிம்களுக்கான ஊடகத்தை நிறுவுதல் என்ற மாபெரும் கனவை நனவாக்குவதற்கு உழைத்தல் என்ற உயரியமுயற்சியை நான் மலினப்படுத்த விரும்பவில்லை. அது எல்லோரினதும் கடமை. அந்தக் கடமையைச் செய்யும் மனிதன் யார் என்ற கேள்விக்கப்பால் அவரை ஆதரிக்க வேண்டியது தார்மீகக் கடன். இது அப்படியே இருக்கட்டும். ரிசாத் பதியுதீனின் அரசியல் அதிகாரத்திற்கு சில விடயங்கள் இலகுவாக வசப்பட்டுப் போயின. அந்த அடிப்படையில் செரண்டிப் என்ற பெயரில் தினசரிப் பத்திரிகை வானொலியோடு குகன் ஐயாவின் தொலைக்காட்சியும் இணைந்து கொண்டது. 

அன்றைய அங்குரார்ப்பன நிகழ்விற்கும் ஒரு பார்வையாளனாக நான் சென்றிருந்தபோது சின்னப் பிள்ளையாக இருக்கும் காலத்தில் சிரட்டையால் மணல் அப்பம் சுட்டு குஞ்சூடு விளையாடியது ஞாபகத்துக்கு வந்தது. அன்றைய தினம் செரண்டிப் ரீவி இரண்டாவது முறையாக அங்குராப்பனம் செய்து வைக்கப்பட்ட அதிசயம் நிகழ்ந்தது. கட்சிப் பத்திரிகையும் வானொலியும் தொலைக்காட்சியுமல்ல முஸ்லிம் சமுகத்தின் எதிர்பார்ப்பு என்பதை அவர் தெளிவாக விளங்கிக் கொண்டு பணிகளை ஆரம்பித்திருந்தால் நாங்கள் ஏன் விமர்சிக்கப் போகின்றோம்.  வெறுமனே பொருளாதார உதவி வழங்குனராக மட்டுமே ரிசாத் நின்று கொண்டிருந்தால் ஓரளவுக்கு இப்போதுவரையும் கண்மண் தெரியாமல் புலங்கிக் கொண்டிருக்கும் வேசை வீட்டு வெற்றிலைப்பெட்டியாக இந்த ஊடகக் கனவு சிதைந்து போயிருக்காது. வெறுமனே பணம் மட்டும் எல்லாவற்றையும் முழுமைப்படுத்திவிடும் என்பது தப்பானது. அதை ரிசாத் மட்டுமல்ல இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும். 

தேவையில்லை என்று தவிர்ந்து கொள்வதால் செரண்டிப் தொலைக்காட்சியை முன்னிறுத்தி இடம்பெற்ற பணத்தை மட்டுமே எதிர்பார்ப்பாகக் கொண்ட முஸ்லிம் தொலைக்காட்சி என்ற சீரழிவுகளையும் கழிசடைத் தனத்தையும் எழுதாமல் தவிர்ந்து கொள்கின்றேன். 

முதல் இதழை வெளியிட்ட பின்னர் காணாமல் போய் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் மீண்டும் வெளிவரத் தொடங்கியிருக்கும் முஸ்லிம்களுக்கான செரண்டிப் தினசரிப் பத்திரிகை இனித் தொடர்ந்து வரும் என்ற நம்பிக்கை துளிர்விட்டபோது எக்ஸ்பிரஸ் நியுஸ் பேப்பர்ஸ் நிறுவன வீரகேசரி பத்திரகையின் முஸ்லிம்களுக்கான சகோதர பத்திரிகையான விடிவெள்ளி வார இதழ் தடபுடலாக தினசரியாகிப் போனது. ஊடகப் போட்டி என்பது அப்படித்தானே. விடிவெள்ளி முஸ்லிம் காப்பாளர்களைக் கொண்டிருந்தாலும் அது முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்த குழந்தையில்லையே என்ற ஆதங்கத்தை முன்வைக்கும் பலரையும் சந்தித்துவிட்டேன். அதே போல செரண்டிப் அரசியல்வாதியின் ஊதுகுழல் என்ற வாதத்தையுடையோரையும் சந்தித்துவிட்டேன். 

ஆக மொத்தத்தில் இன்னும் முஸ்லிம்களுக்கான தனித்துவ ஊடகத் தேவை நிறைவு செய்யப்படாமல் அப்படியே கனவாக இருக்கின்றது இவர்கள் எல்லோரும் அதைக் கலைத்துவிடாமல் இருந்தால் சரி. 

தூய்மையற்ற எந்தவொரு செயல்பாடும் இறுதியில் தோற்றுத்தான் போகும்.