Monday, March 24, 2014

அனார் கவிதைகளில் இஸ்லாம்

அனார் கவிதைகளில் இஸ்லாம்

01. சம்பந்தமில்லாத பந்தி
02. அனார் பற்றிய அறிமுகக் குறிப்பு
03. முஸ்லிம் சமுதாயத்தின் அடக்குமுறைக்குள் இருந்து அனார் எப்படி மீண்டார்
04. அனார் கவிதைகளில் தொனிக்கும் இஸ்லாம்
    A. கடவுள் பற்றிய அனாரின் நிலைப்பாடு
    B. வணக்கவழிபாடுகள் பற்றிய அனாரின் நிலைப்பாடு
    C. வானவர்கள் பற்றிய அனாரின் நிலைப்பாடு
    D. ஹவ்வாவின் படைப்பு பற்றிய அன்னாரின் நிலைப்பாடு
    E. ஓரினச் சேர்க்கை பற்றிய அனாரின் நிலைப்பாடு (பெண்ணும்- பெண்ணும்) 
    F. மது அருந்துதல் தொடர்பில் அனாரின் நிலைப்பாடு
    G. விபச்சாரம் பற்றிய அனாரின் நிலைப்பாடு
    H. பிற ஆடவருடனான தொடர்பு குறித்த அனாரின் நிலைப்பாடு
05. அனாரின் கவிதைகள் பற்றிய எனது தனிப்பட்ட கருத்துக்கள்
06. அனாரின் அரிய புகைப்படங்கள்
07. பின்ணினைப்பு – விஷேட பகுதி

01
சம்பந்தமில்லாத ஒரு பந்தி :

ஒரு தேவாங்கு தேவையில்லமால் என்னோடு மோதி என் கோபத்தினைத் தூண்டிவிட்டது, அந்தத் தூண்டலின் விளைவாக எனது கோபத்தின் ஒரு துளி கட்டுக்கடங்காமல் சிந்தியது, அதன் விளைவுகளை அந்தத் தேவாங்கே அனுபவிக்க வேண்டும்.

பிஞ்சிலேயே பழுத்து உம்மா வாப்பாவை உதறித்தள்ளிவிட்டு ஓடிப்போன  ஒழுக்கமில்லாத கழுதைகளுடன் நான் சண்டைக்குச் செல்வதில்லை,
அத்தோடு நாற்பது வயது கடந்த கிழடுகளோடு மல்லுக்கட்டும் வயதா இது?
ஏற்கனவே எழுபது கடந்த ஒரு மனநோயாளியோடு மல்லுக்கட்டி பல்லைப்பிடுங்கி படுத்த படுக்கையாக்கிவிட்டதோடு நான் எடுத்த முடிவு,

இனி எந்த எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளோடும் மல்லுக்குச் செல்வதில்லை யென்பது தான்.
ஆனாலும் இந்தக் கிருமிகள்

'எப்படா நாம அடுத்தவன் குடியக் கெடுப்பது?'
என்ற நோக்கத்துடனேயே அலைந்து கொண்டிருக்கின்றன.

எச்ஐவி  வைரஸ்களைக் கட்டுப்படுத்தும் மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லைதானே, அதனால் இந்த வைரஸ்களின் தொல்லை தொடரவே செய்யும்.
முறையற்ற பாலியல் தொடர்புதான் பெரும்பாலும் இந்த வைரஸ்கள் பரவக் காரணம்.

அதுமாத்திரமன்றி பெண்ணும் பெண்ணும் இணையும் லெஸ்பியன்களிடமும்
ஆணும் ஆணும் இணையும் கேய் ஆகிய
ஹோமோ செக்ஸ்காரர்களிடமும்தான் இந்தக் கிருமி விரைவாகத் தொற்றுமாம் என்று விஞ்ஞாணம் நிரூபித்திருக்கிறது.

இந்தத் தொற்றுள்ளவர்களைக் கட்டிப் பிடிப்பதாலோ, முத்தமிடுவதாலோ வைரஸ் பரவுவதில்லை என்பது, பலருக்கும் ஆறுதல் தரும் விடயம். பிரெஞ் கிஸ் அடிக்கும் அளவுக்கு நெருக்கத்தைத் தவிர்த்துக் கொள்வது என்பதுதான் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் ஒன்று, அனைத்தையும் மூடிக் கொண்டு பட்டினி கிடப்பது போல, திறந்து போடுவதும் நல்லதல்லவே,

அதனால்தான் ஆங்காங்கே தெரியும் பாகங்களை ரசிப்பதற்கு பல நாள் பட்டினிகிடந்த நாய்கள் எலும்புத் துண்டைக் கண்டால் வாயில் ஈழை வடிய எல்லாவற்றையும் இழந்து பாய்ந்து செல்வது போலத் திரிகின்றன.
அடுத்தது நாய்களிடம் மரியாதையை எதிர்பார்க்க முடியாதுதானே.

எப்பவோ யாரோ போட்ட முள்ளுத் துண்டுக்காக வால் அறுந்துவிழும் அளவுக்கு ஆட்டிப் பொளைக்கும் பண்பும் நாய்களிடம் தானே இருக்கின்றது.
பல பொழுதுகளில் எஜமான் சும்மா இருக்கும் போது யாராவது உசிக்காட்டினால் நாய்கள் விடாமல் தொண்டை நீர் வற்றக் குரைக்கும் தானே.
சில நாய்களுக்கு வெளவால்கள் போல பகலில் கண் தெரிவதில்லை,

இரவில் தான் வெளவால்களுக்குக் கண்தெரியும்
அப்படி இரவில் பார்வை தெரிவதால் உள்ள பலன் என்ன தெரியுமா?
அப்போதுதான் இரவில் யாருக்கும் தெரியாமல் அடுத்தவன் தோட்டத்திற்கு மேயச் செல்லாம்.
வீட்டுக் கனியைச் சுவைப்பதை விட பலருக்கு பக்கத்து வீட்டுக்கனியைச் சுவைப்பதில் தானே ஆர்வம் அதிகம்.
சுவைக்கக் கிடைக்காவிட்டாலும் பறவாயில்லை ரசிக்கக் கிடைத்தாலும் போதும் என்றுதானே கருவாடும் தேன் போத்தலும் சுமந்து கொண்டு சில பிசாசுகள் அலைகின்றன.
பிசாசுகளுக்கு மோகினிகள் மீதுதான் ஈர்ப்பு அதிகம் என்று கதைகளில் படித்திருக்கிறேன்.

மோகினிகள் ஆண்களைச் சிரித்தே ஏமாற்றி விடுமாம்.
அதனால் ரொம்பவும் கெயார்புல்லாக ஆண்கள் இருக்க வேண்டுமாம்.
அப்பம் சுட்டுப் பழகினால் இதெல்லாம் பெரிய பிரச்சினையே கிடையாது. நான் அ..ந்..த.. அப்பம் சுடும் கெட்டவிடயத்தைச் சொல்லவில்லை.

அப்பம் சுடுவதொன்றும் அவ்வளவு இலகும் கிடையாது அதற்கு இரண்டு சட்டிகள் தேவை.
பாலப்பம் சுடுவது. மேலயும் சட்டி கீழயும் சட்டி ரெண்டு பக்கமும் ஜாம் ஜாம் நெருப்பு வேறு, பாலப்பத்தைச் சுட்டுத்தான் எடுக்க முடியும்.

வண்டப்பம், இடியப்பம் வகையறாக்கள் அவிப்பது.
இதெல்லாம் கெட்ட வார்த்தைகள் என்று இரட்டை அர்த்தத்தில் யாரேனும் எடுத்துக் கொண்டால் அதற்கு அடியேன் பொறுப்பல்ல.

அப்பம் சுடத் தெரிந்தவர்களெல்லாம் கவிதை எழுதத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
ஆனால் கவிதை எழுதத் தெரிந்த பலருக்கு இலகுவாக அப்பம் சுடவும் தெரிந்திருக்கிறது.

ஏன் மிக மிக இலகுவாக கவிதையிலேயே அப்பம் சுட்டு விடும் திறமையான, கவிதை எழுதும் பல தூரிகைகள் கிழக்கு மாகாணத்தில் ஓவியமேதும் வரையாமல் இருக்கிறன.  பலவற்றுக்கு ஓவியம் வரையத் தெரியாதுதான் ஆயினும் தனக்கும் கவிதையால் ஆன ஒரு முகம் இருப்பதாகப் பெருங்கடலையைச் சாப்பிட்டபடி வானம் பச்சை என்று சொல்லிக் கொள்ளும்.

ஏபிசீடி தெரியாவிட்டாலும் ஆங்கிலக் கவிதைகள் பற்றியும் மொழிபெயர்ப்புக் கவிதைகள் பற்றியும் சிலாகித்துச் சொல்லும் அபார ஆற்றல் படைத்த படைப்பாளிகள் வாழும் பகுதியில் இதென்ன பெரிய விடயமா?

ஓஹ்!! கவிதையென்று சொல்லும் போதுதான் அது பற்றிக் கொஞ்சம் கதைக்க வேண்டும். எனக்கு ஒரு லைலாவைத் தெரியும் அவளும் கவிதகிவிதயெல்லாம் எழுதுவாளாம். லைலா ஒரு மரங்கொத்தி போல சாதுவான பெண். அவள் சில நாடுகளுக்குச் சென்று அப்படியும் இப்படியுமாகப் பலரது கால், கைகளைப் பிடித்து பல விதமான மரங்களையும் கொத்திப் பார்த்தாளாம் தன்னால் எப்பேர்ப்பட்ட மரத்தையும் கொத்த முடியும் என்ற திமிருடன் பறந்து பறந்து கடைசியில் பாலை மரத்தையும் கொத்தி வெற்றிக் களிப்பிலும் கர்வத்திலும் அதற்குப் பக்கத்தில் நின்ற வாழை மரத்தையும் கொத்திப் போட்டாளாம். பாவம் சொண்டு இறுகி, இப்போது வரையும் அதை எடுத்துக்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டு நிற்கிறாளாம். லைலாவைக் காப்பாற்ற எத்தனையோ கிருஷ்ணர்கள் படையெடுத்தார்களாம், ஆயினும் அந்தக் கிருஷ்ணர்கள் எவராலும் லைலாவைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த இடத்தில் அந்த வாழை மரத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.

பல துப்பாக்கிகளும், அரிவாள்களும், விசம்கலந்த தண்ணீரும், என்று அந்த வாழை மரத்தை வீழ்த்தப் பல்வேறு முயற்சிகள். அதை விட எப்படியாவது ஹைவோல்டேஜ் மின்சாரத்தைச் செலுத்தி  இலகுவாக வீழ்த்திடலாம் என்று  கூட முயன்றும் அந்த வாழை மரத்தை வீழ்த்த முடியவில்லையாம்.
முடியாமல் சூனியம் செய்துபார்த்தார்களாம் அப்போதும் அந்த வாழை செழித்துத்தான் வளர்ந்ததாம்

கடைசியாக பட்டாநி என்ற பன்னாடையின் எலும்புக்கூடு கொண்டேனும் அழித்துவிடலாம் என்று தீவிரவாத முத்திரை குத்தி அரசனின் அங்கீகாரத்துடன் சேவகர்கள் முயன்றார்களாம் அப்போதும் அந்த வாழை சாயவில்லை அப்படிப்பட்ட வாழை மரத்தை லைலா என்ற மரங்கொத்தி திமிருடன் கொத்திவிட்டுத் தன்னைக் காத்துக் கொள்ள பொலிசாரின் உதவியை நாடியும் பலனில்லாமல் போக காக்க வந்த கிருஷ்ணர்களே லைலாவுக்கு ஆப்பு வைத்து பின்னர் பச்சாதாபப் பட்டு இப்போது முகத்திரைகள் போட்டுக் கொண்டு முகபுக்கில் உள்டப்பியில் விமோசனம் தேடி மோசமாக செய்தி பரப்புகின்றனராம்.
ஐயோ பேச வந்த விசயமே மாறிப் போயிடுச்சி.

லைலாவுக்கு கவிதைப் பித்துத் தலைக்கேறி வெறியாட்டம் ஆடியதால் அவள் ஆக்ரோஷத்துடன் சொன்னாள் 'எந்த ஆம்புளப் புண்..h.. மகனாயினும் எனக்கு முன்னால் வருவதாக இருந்தால் ஒரு கவிதைப் புத்தகத்துடன் வந்து நிற்கட்டும், இந்தப் பறக் கூ...ற மக்களுக்கு அதச்செய்ய ஏலாம என்ட புண்....ய நோண்ட வந்திட்டாங்க...' அத்தோடு எல்லாம் முடிந்தது. பாவம் கிருஷ்னர்கள் அவர்களால் லைலா அளவுக்கு வழிசக் கவிதைகள் எழுத முடியாதல்லவா. ஆனால் எல்லாக் கிருஷ்னர்களும் தனது அதை நோண்டத்தான் வருகின்றார்கள் என்பது லைலாவின் எண்ணம். கடல் கடந்து நாகரின்; கோயிலுக்குத் தரிசனத்திற்காகச் சென்று திரும்பிய லைலா  காலம் தாண்டிச் சுவடு பதித்து தனது இருப்பை நிறுவிக் கொண்டாள். தனது நூல்களைச் சுவட்டின் அனுக்கிரகத்தில் கண்டாள். பாவம் அங்கிருந்த கிருஷ்ணனைப் பற்றி லைலா இழிவாகப் பேசியதை கிருஷ்ணன் அறிந்திருக்கவில்லை, கிருஷ்னர் ஒரு மார்க்கமான ஆள் என்று லைலா பரப்புரை செய்ததையும் அவர் அறிந்திருக்கவில்லை. ஒரு காலத்தில் கிருஷ்ணன் அதை அறிந்தாலும் ஓ ஹரி கிருஷ்ணா மாயக் கண்ணா லைலாவைக் கைவிட்டுவிடாதேயும்!
ம்ஹ் இதெல்லாம் பலருக்குப் புரியாது சிலருக்கு மட்டுமே புரியும்.

லைலாவுடன் யாரும் வம்புக்குப் போக வேண்டாம், பொலிசாருக்கும் லைலாவுக்குமான நெருக்கம் அதுக்கும் அதுக்கும் மாதிரியாம். என்று பயமுறுத்துகிறார்கள். ஆனாலும் லைலா  பாவம்.

இனி லைலாவைக் காப்பாற்றுவதென்றால் நெப்ரியூனுக்குக் கொண்டுபோய் சுப்பர் மேனிடம்தான் பாரம் கொடுக்க வேண்டும். லைலாவுக்குப் பிடித்திருக்கும் அந்த வருத்தத்தைச் சுகப்படுத்த மருந்து புளூட்டொவில் இருக்கிறதாம், அதை சுப்பர் மேனால் மட்டும்தான் மின்னல் வேகத்தில் பறந்து போய் எடுத்துவர முடியும். சுப்பர் மேனுக்கும் தன் மீது ஒரு கண் இருக்கிறது என்று லைலா சொல்லாவிட்டால் சரி.

சம்பந்தமில்லாத பந்தியைக் குந்திருந்து படித்த அனைவருக்கும் நன்றிகள்.
இனி அனார் பற்றிய அறிமுகக் குறிப்பைப் பார்த்துவிடுதல் நல்லது

02. அனார் பற்றிய அறிமுகக் குறிப்பு

1974ம் ஆண்டு ஆசாரமான மௌலவிக்குப் புதல்வியாகப் பிறந்தார், கவிதையில் சிங்கம், புலி, கரடி, நரி எல்லாமே அனார்தான் அவ்வளவு ஆற்றல் வாய்க்கப்பெற்ற இந்த நூற்றாண்டின் சிறந்த கவிஞர் அனார். இவரது சொந்தப் பெயர் இஸ்ஸத் ரிஹானா. கவிதைக்காகச் சூடிக்கொண்ட பெயர்தான் அனார். அனார் என்றால் தீப்பிழம்பு என்று ஜின்கள் பாஷையில் அர்த்தமாம் என்று கனவில் இப்லீசு தோன்றிச் சொன்னான். ஆனாலும் நான் அதை நம்பவில்லை அனார் என்றால் கஸ்தூரி வாடை, சுவனத்து மனம், என்றுதான் அர்த்தம் இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன்.

மிகவும் ஒழுக்கம் நிறைந்த சமூகப்பற்றும் இஸ்லாமியப்பற்றும் கொண்ட குடும்பத்தில் பிறந்த அனார் ஒரு புரட்சிப் பெண். குடும்பம் தனது காதலுக்கும் முன்னேற்றத்துக்குப் போட்ட அனைத்துத் தடைகளையும் உடைத்துத் தகர்த்தெறிந்து வாழ்க்கையில் தனது துணையுடன் ஐக்கியமானவர். அவரது ஆயுதமே கவிதைதான். இந்த நூற்றாண்டின் சிறந்த கவிதைக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டுமென்றால் அது அனாருக்குக் கிடைக்கவேண்டும். 'இரண்டு  பெண்கள்' என்ற கவிதைக்காக அது கொடுக்கப்பட வேண்டும்.

இக்கவிதை உடல்பச்சைவானம் எனும் கவிதைத் தொகுதியில் இடம்பெற்றிருக்கிறது. ரவீந்திரநாத் தாகூருக்கும் பாரதியாருக்கும் அடுத்தபடியாக சிறந்த கவிதைகளை உலகளவில் எழுதுபவர் அனார். உலகளவில் பிரசித்தம் பெற்றவரும் கூட. ஒரு பத்திரிகை நண்பர் எழுத்தாளர்களைப் பற்றிப் பத்திரிகையில் தொடராக அறிமுகக் குறிப்புகள் எழுதினாராம் அப்படியே அனாரைப் பற்றியும் ஒரு குறிப்பு எழுதிவிட்டு அவரிடம் ஒரு புகைப்படம் கேட்டாராம் அப்போது அனார் சொன்ன பதில்

'போட்டோ போடத் தேவையில்லை அனார் என்றால் உலகத்திற்கே தெரியும், அதால நீங்க அனார் என்டு மட்டும் போடுங்க' சரியாப் போச்சு.
அதனால்தான்; சொன்னேன் அனார் உலகளவில் பிரசித்தம் என்று

03. முஸ்லிம் சமுதாயத்தின் அடக்குமுறைக்குள் இருந்து அனார் எப்படி மீண்டார்

அன்மையில் இந்தியாவில் நடந்த ஒரு மாநாட்டில் அனார் வாசித்த ஒரு கட்டுரையின் சில பகுதிகளை மட்டும் இங்கு கொண்டு வருகின்றேன்.

'...கட்டுப்பாடுகள் பாரம்பரியம் பண்பாடுகள் மிக்க எனது குடும்பத்தில் ஆண்களால் ஏற்படுத்தப்பட்ட வலுவான சட்டதிட்டங்கள் பெண்களை பூட்டிய கதவுகளுக்குப் பின்னே வைத்திருந்தது அத்தகைய உக்கிரமான நடைமுறைகளுக்கு உட்பட ஆசிரியரும் எங்களுர் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவராகவும் மற்றும் மார்க்கக் கல்வியை நன்கு பயின்ற உலமாவாகவும் இருந்த எனது தந்தை எனது மூத்த இரு சகோதரிகளைப் பாடசாலைக் கல்வியைவிட்டு இடை நிறுத்தியது போலவே பதினோராம் வகுப்புவரை மல்லுக்கட்டிப் பயின்ற என்னையும் இடைநிறுத்தினார்...'
(தாயகம் கடந்த தமிழ் - தொகுப்பு மாலன் - பக் 158)

இங்கு அனார் சொல்லவரும் சமுகத்தின் அகக்காரணிகள் பல்வேறு புறக் காரணிகளால் தீர்மாணிக்கப்பட்டிருந்தன. இலங்கையில் முஸ்லிம்கள் ஆரம்பத்தில் கல்விச் சமுகமாக இருக்கவில்லை, அதில் ஆர்வம் செலுத்தி ஒரு கல்விசார் சமுகக் கட்டமைப்பை உருவாக்கம் திறனும் இருக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் இறுக்கமான மடமைச் சமுகமாக முஸ்லிம்கள் இருந்ததை ஏற்றுத்தானாக வேண்டும். ஒழுக்கம் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. 2000மாம் ஆண்டு வரை கிழக்கு கல்வியில் ஒருவிதமான இடர்பாடுகளுக்குள் சிக்கித்தவித்தது. அதற்கு முஸ்லிம்கள் மட்டும் விதிவிலக்கல்ல, யுத்தம் கல்வியின் பக்கம் முஸ்லிம்களை இழுத்துச் சென்றது, அதற்காக தமிழ் விடுதலைவேண்டிப் போராடிய அனைத்து ஆயுததாரிகளுக்கும் முஸ்லிம் சமுதாயம் நன்றி சொல்ல வேண்டும். காரணம் அவர்கள்தான் கல்வியின் பக்கம் முஸ்லிம்களைத்துரத்தி விட்டார்கள்.

அனாரின் குடும்பத்தில் அப்போதே அவரது தந்தை கல்வியின் பக்கம் நாட்டமுடையவராகவும் ஆலிமாகவும் இருந்திருக்கிறார் என்றால் நிச்சயம் அவர் தனது பிள்ளைகள் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்குத் தடைவிதித்திருக்கமுடியாது. ஒரு நல்ல ஆசன் அல்லது ஒரு நல்ல ஆலிம் தனது பிள்ளைகள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதைத்தான் எப்போதுமே விரும்புவார். அப்படியிருக்க படிக்கும் காலத்தில் படிப்பதைவிட்டுவிட்டு காதலில் விழுந்து விட்டால் எந்தத் தந்தைதான் அதை அங்கீகரிப்பார். அப்போதைய சூழலில் காதலிப்பதும் ஓடிப் போவதும் அவமானத்தின் உச்சமாகப் பார்க்கப்பட்டது, ஆயினும் பருவ வயதை அடைந்து சிறுவர் என்ற எல்லைக் கோட்டைத் தாண்டிய பின்னர் வருகின்ற காதலுக்கு பெரும்பாலும் பெற்றோர் எதிர்ப்பு என்பது மிகவும் அரிதாகவே இருந்திருக்கிறது. டீன் ஏஜ் காலத்தில் காதலிக்கும் பிள்ளைகள் அவர்களது வயதுக் கோளாருக்கு ஏற்ப எதிர்ப்பால் ஈர்ப்பில் அதிகம் இழுபட்டுச் செல்வதை இன்றைய உளவியலாளர்கள் தெளிவாக நிரூபித்திருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் அனாரின் டீன் ஏஜ் காதல் விவகாரத்திற்கு அவரது மௌலவித் தந்தை எதிர்ப்புத் தெரிவித்தது ஒரு விதத்தில் நியாயமானது. அதுவே டீன் ஏஜ் தாண்டியிருந்தால் நிச்சயம் அந்த எதிர்ப்பில் மாற்றம் நிகழ்ந்திருக்கும். தந்தையின் எதிர்ப்புக்கு ஓடிப் போதல் தான் தீர்வென்றால் அதை எப்படி நியாயப்படுத்த முடியும்;?


உங்கள் வயதையொத்த பல ஒழுக்கமுள்ள பெண்கள் உங்கள் மாவட்டத்தில் எத்தனை பேர் கல்வியில் சாதித்து இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் புள்ளி விபரங்களுடன்தான் காட்ட வேண்டும் அப்போது அனைவரும் புரிந்து கொள்வார்கள் கோளாறு எங்கே இருந்திருக்கும் என்று. பெண்களுக்கு எந்தச் சுதந்திரமும் இல்லாது அறைகளுக்குள் அடைத்து வைத்திருந்தார்கள் என்பது போலல்லவா நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். அமெரிக்காவால் உருவாக்கப்பட்டு போஷிக்கப்பட்ட தாலிபான்கள் நடைமுறைப்படுத்திய இஸ்லாத்தை கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்தினார்கள் என்பது போன்ற மாயத்தை உங்கள் வார்த்தைகள் ஏற்படுத்துகின்றன. அதை எப்படியென்று நீங்கள்தான் தெளிவு படுத்த வேண்டும். சும்மா ரெண்டு வசனங்களைச் சொல்லிவிட்டுத் தப்பிக்க முடியாது

நீங்கள் இந்தக் கட்டுரை வரிகளை வாசித்த போது எல்லோரும் எழுந்து நின்று கைதட்டும் போதே ஒரு சமயப்பற்றுள்ள புத்திசாலிக்கு விபரீதம் விளங்கியிருக்க வேண்டும், உங்களுக்கு விளங்காமல போனது துரதிஷ்டம்.

அடுத்தது உங்கள் தனிப்பட்ட பிரச்சினையை சமுக மயப்படுத்தி நீங்கள் உங்கள் தந்தையினதும் தாயினதும் முகத்தில் பூசிய கரியை மொத்த முஸ்லிம் சமுகத்தின் மீதும் பூச முயல்வது அபத்தமானது. அதை சமுகம் ஏற்றுக் கொள்ளும் அல்லது அமைதி காத்து கண்டு கொள்ளாது விடும் என்று நினைப்பது எப்படிச் சரியாகும்?


'...எல்லாவிதக் கட்டாயத் தினிப்புக்களில் இருந்தும் கல்வியோ காதலோ கிடையாத உலகத்தில் இருந்தும் வெளியேற விரும்பினேன். யாரையேனும் இதற்காக தண்டிக்க வேண்டுமென நினைத்தேன், குறைந்தபட்சமாகக் கடவுளையேனும்...'
(தாயகம் கடந்த தமிழ் - தொகுப்பு மாலன் - பக் 160)

அனாருடைய இந்த வார்த்தைகள் அவரது குடும்பத்தை மட்டுமல்ல முஸ்லிம் சமுகத்தையும் நோக்கி வீசப்படுகின்றது. 'கட்டாயத் திணிப்புக்கள்' என்பதைப் பற்றி அனார் விளக்கியாக வேண்டும். ஒரு முஸ்லிம் குடும்பத்தில் இலங்கைச் சூழலில் என்னவிதமான கடடாயத் தினிப்புக்கள் இருந்தன? அது இஸ்லாம் சார்ந்ததா அல்லது வேறு ஏதுமா?

யூதர்கள்போல பிடிவாதமாக அனாருக்கு பைத்தியம் முத்தி விட்தோ என்றுதான் தோன்றுகின்றது. யாரைத் திரப்திப்டுபடுத்துவதற்காக கடவுளைத் தண்டிக்க வேண்டும் என்று நாடுகின்றீர்கள், அது உன்னால் முடியுமான காரியமா? இப்படிச் சொல்ல இஸ்லாத்தில் சௌகரியமான எந்த இடத்தைத் தேர்ந்து கொண்டீர்கள்?.

வட் எ பியூட்டி ஜோக். ஜோக் அடிக்க நேரங்காலம் வாணாமா!! ஒரு பக்கம் கடடாயத் தினிப்பாம் மறுபக்கம் கடவுளைச் தண்டிக்க வேண்டுமாம்.
 (இப்பிடிச் சொல்லித் திரிந்த பலர் காணாமல் போய் ரொம்ப நாளாயிற்று)


'...முஸ்லிம் பெண் அடையாளத்தைப் பேணிக் கொண்டு  கவிதை எழுதும் பெண்கள் தங்களுடைய சமுதாயத்தின் முன்பு எதிர்கொள்ளக் கூடிய பிரச்சினைகள் மன நெருக்கடிகள் ஆழ்ந்த வலியைத் தரக் கூடியவை, கவிதை எழுதுகிற ஒரு முஸ்லிம் பெண் என்ற அடையாளத்திற்காக மாத்திரம் நேர் கொள்கின்ற இத்தகைய அசௌகரியங்களையும் தாக்குதல்களையும் பொறுத்தவர்களாகவே தொடர்ந்தும் கவிதைத் துறையில் ஈடுபட வேண்டியிருக்கிறது. நானும் பிற பெண்களும் சிக்கலான பல தருணங்களை எதிர்ப்புகளை அதிகம் எதிர் கொண்டே வருகின்றோம். ஆண்களுடைய ஆதிக்கமானது பெண் எழுத்துக்களின் குரல்வளையை நசுக்குவதற்கான முன்னெடுப்புக்களை இடைவிடாது மேற்கொள்கினறது...'
(தாயகம் கடந்த தமிழ் - தொகுப்பு மாலன் - பக் 176)

இலங்கைச் சூழலில் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணம் கவிதை எழுதுகின்றாள் எண்பதற்காக எந்தத் தரப்பில் இருந்தும் நெருக்கப்படவில்லை. அப்படியென்றால் அனார் தனது கூற்றுக்கான தரவுகளைத் தரவேண்டும் ஆதாரங்களை முன்வைத்துப் பேச வேண்டும்.
இலங்கையில் எந்த முஸ்லிம் பெண்? எப்போது? யாரால் ? கவிதை எழுதுகின்றார் என்பதற்காக அசௌகரியங்களையும் தாக்குதல்களையும் எதிர் கொண்டார் நிரூபிக்க முடியுமா?
கவிதை எழுதும் அனைத்து முஸ்லிம் பெண்களின் தரவுகளையும் நான் தருகின்றேன் அதில்  குரல்வளை நசுக்கப்பட்டவர்களை அடையாளப்படுத்தங்கள்.
குறைந்தபட்சம் ஒரு முஸ்லிம் பெண் அணியவேண்டுமென்று இஸ்லாம் எதிர்பார்க்கின்ற ஆடை அமைப்பையே கடைப்பிடிக்காத அனாருக்கு அது குறித்தாவது நெருக்குதல் வந்திருக்கிறதா? நீங்கள் நைட்டியோடு இருக்கும் போட்டோக்களை முகநூலில் போட்ட போது கூட அதை லைக் பண்ணிய ஆண்களைத்தான் கண்டேன். குறைந்த பட்சம் மார்க்கத்தின் பெயரால் ஒழுக்கம் பேசும் ஆண்கள் அதைக் கடந்து சென்றார்களே தவிர யாரும் தமது கண்டனத்தையோ விமர்சனத்தையோ பதிவு செய்யவில்லை  நீங்கள் சொல்லும் நெருக்குதலை நீங்கள் தான் நிரூபிக்க வேண்டும்.
இதெற்கெல்லாம் பதில் சொல்லமல் தப்பித்துக் கொள்ள நினைக்கும் போதுதான் நீங்கள் சுயநலமுள்ள தன்னைப் பிரபலபடுத்திக் கொள்ள எந்த கீழ்தரமான கதையையும் இட்டுக்கட்டிச் சொல்லக் கூடிய ஒருவர் என்பதை நான் நிறுவ வேண்டி வரலாம்.
தர்மம் அல்லது எழுத்து நியாயம் என்ற ஒன்று இருப்பதை மறக்கக் கூடாது.

உலகம் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று சல்மா ஷ்டைலில் அறிக்கை சமர்ப்பித்து தப்பிக் கொள்ள முடியும் என்றும் இதையெல்லாம் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்றும் நீங்கள் கருதியது தப்பு

இனி அனார் கவிதைகளில் தொனிக்கும் இஸ்லாம் எனும் தலைப்பில் சில விடயங்களைப் பார்ப்போம்.

04. அனார் கவிதைகளில் தொனிக்கும் இஸ்லாம்
01. கடவுள் பற்றிய அனாரின் நிலைப்பாடு
02. வணக்கவழிபாடுகள் பற்றிய அனாரின் நிலைப்பாடு
03. வானவர்கள் பற்றிய அனாரின் நிலைப்பாடு
04. ஹவ்வாவின் படைப்பு பற்றிய அன்னாரின் நிலைப்பாடு
05. ஓரினச் சேர்க்கை பற்றிய அனாரின் நிலைப்பாடு (பெண்ணும்- பெண்ணும்)
06. மது அருந்துதல் தொடர்பில் அனாரின் நிலைப்பாடு
07. விபச்சாரம் பற்றிய அனாரின் நிலைப்பாடு
08. பிற ஆடவருடனான தொடர்பு குறித்த அனாரின் நிலைப்பாடு

'கடவுளின் கனவென வடிவங்கள் வௌ;வேறு எடுத்து'

இந்த வரி மிகவும் கவனமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயம். இலாஹ் என்றால் கடவுள், வணக்கத்திற்குரிய கடவுள் அல்லாவைத் தவிர வேறு யாரும் கிடையாது என்பது இஸ்லாத்தின் அடிப்படையான அம்சம். அந்த அம்சத்தில் யார் கை வைக்கிறார்களோ அவர் இஸ்லாத்தைவிட்டும் வெளியேறியவராவார். அதில் நெளிவு சுழிவோ விட்டுக்கொடுப்போ கிடையாது. கடவுள் விசயத்தில் கையடிக்க எந்த மனிதருக்கும் தகுதியும் இல்லை  உரிமையும் இல்லை.
'அல்லாஹ்வின் படைப்புக்களைப் பற்றிச் சிந்தித்து அவனது மாண்புகளை உணருங்கள் அவனைப் பற்றிச் சிந்திக்காதீர்கள் (தபக்குறூ கல்க்கில்லாஹ் வலா தபக்குறூல்லாஹ்) என்பது பெரியோர் வாக்கு.

இங்கு அனார் கடவுளைப் பற்றிச் சிந்திக்கிறார். அவர் சொல்லும் விடயம் 'கடவுளின் கனவு' பற்றியது. கனவு கான்பதென்றால் தூங்க வேண்டும், தூங்கினால்தான் வௌ;வேறு வடிவங்களில் கனவு வரும். இங்கு அல்லாஹ் தூங்குகின்றான் என்று அனார் சொல்லவருவது அல்குர்ஆனுக்கே முரணானதாகும்.

அவனைச் சிறுதூக்கமேனும் பிடிக்காது என்பது சூராபகராவின் 256வது வசனம் அடித்துச் சொல்லும் விடயம், அத்துடன் அனாரின் வரிகள் இறைவனின் ஃதாத்துகள் சிஃபத்துகள் பற்றிய இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானதானகும், சவால் விடுவதாகும்.

இறைவனுக்கு இணை கற்பித்தல் என்பது, சொல் செயல் நடத்தை என்று வேறுபடும் இங்கு எழுதுதல் என்பது, சொல்வதற்கு ஒப்பானது. அனார் கடவுள்  பலவடிவங்களில் கனவு கண்டது போல என்று சர்வசாதாரணமாக எழுதிவிட்டு அமைதியாக இருப்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. இப்படி எழுதினால் இஸ்லாத்தின் விரோதிகள் விதந்து பாராட்டாமல் என்ன செய்வார்கள்?

கடவுள் கொள்கை தொடர்பில் ஒவ்வொரு சமயத்திற்கும் வௌ;வேறு அளவுகோள்களும் கோட்பாடுகளும் இருக்கின்றன. இந்து சமயத்தில் இருக்கும் கடவுள் கோட்பாட்டோடு, இஸ்லாமியக் கடவுள் கோட்பாடு முழுமையாக வேறுபடுகின்றது. கடவுளை ஏசியும் திட்டியும் வாய்க்குவந்தபடியெல்லாம் வர்ணித்தும் ஒரு இந்து சமயத்தவர் எழுத முடியும் அதன்மீது அச்சமயத்தவர் பாய்வதில்லை, காரணம் அது அவர்களின் நம்பிக்கை சார்ந்தது. எல்லாவற்றையும் கடவுளாகப் பார்க்கும் கோட்பாடு அவர்களுக்கானது

(யசுர், சாமம்,இறுக்கு, அதர்வனம் போன்ற நான்கு வேதங்களும், 18 ஆகமங்களும் சொல்லும் கடவுள் கோட்பாடு இப்போதைய இந்துக்கடவுள் கோட்பாட்டிலிருந்து மிகவும் மாறுபட்டது என்பது வேறு விடயம்)

ஆனால் ஒரு முஸ்லிம் இப்படி எழுத முடியாது, அப்படி எழுதினால் அவன் முஸ்லிமும் கிடையாது. கடவுள் என்பது அல்லாஹ் மட்டுமே என்ற அடிப்படைக்கு எதிராக ஒரு துரும்புத் துண்டளவு தூக்கிப் போட்டாலும் அவருக்கும் இஸ்லாத்துக்குமான அடிப்படையில் பிளவு ஏற்படுகின்றது. தாயைப் பார்த்து ஒரு முஸ்லிம் தெய்வம் என்று சொல்ல முடியாது, அது போல சூரியனை சந்திரனை தண்ணீரை, ஆகாயத்தை, நிலத்தை நெருப்பை எதையுமே ஒரு முஸ்லிம் கடவுளாக வர்ணிக்க முடியாது

'தண்ணீர்
எதனாலும் தண்டிக்க முடியாத கடவுளாகி விடுகின்றது'

என்று தண்ணீரைக் கடவுள் என்று சொல்ல அனாருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? மேலும் அதன் பண்புகள் பற்றிச் சொல்லும் போது,

'நித்தியம்
கீழ்ப்படியும் அழகு'

இங்கு அல்லாவுக்கேயுரிய சிபஃத்தை – (நித்தியமானவன்) தண்ணீரைக் கடவுளாக்கி அதற்குச் சூட்டிப் பார்க்கும் அனார் இஸ்லாத்தின் எந்தப் பகுதியில் வசிக்கிறார் என்பதைத் தெளிவு படுத்த வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் நித்தியம் கிடையாது எதுவும் நிலைத்திருக்கவும் முடியாது, முழுவதும் அழிந்து போன பின்னர் அல்லாஹ் கேட்பான் இன்று ஆட்சியதிகாரம் யாருக்குரியது? யாரேனும் சவால் விடக்கூடியவர்கள் உண்டா? அப்போது பதில் அளிக்க அங்கு தண்ணீர் இருக்குமா?
அனார் சொல்லுகின்ற, எதனாலும் தண்டிக்க முடியாத கடவுளான நித்தியமிக்க தண்ணீர் அல்லாஹ்வுக்கு முன்னால் எழுந்து நிற்குமா? நிற்க முடியுமா?

அடுத்தது இதனோடினைந்ததே வணக்க வழிபாடுகள், வணங்கி வழிபடத் தகுந்த கடவுள் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் கிடையாது என்பது இஸ்லாத்தின் முதன்மையான அம்சம். ஒரு முஸ்லிம் தினமும் தொழுகையில் ஐந்து நேரமும் சொல்லும் விடயம்
எனது தொழுகையும் வணக்கவழிபாடுகளும், எனது வாழ்வும், எனது மரணமும் பிரபஞ்சத்தைப் படைத்த இறைவனான அல்லாஹ்வுக்கே உரியது என்பதாகும். ஆனால் இங்கே அனார் இறைவனுக்கே சவால் விடும் இன்னும் சில வரிகளைப் பார்ப்போம்.

'உன்னை வழிபடவும்
உன்னைப் பின்பற்றவும்
உனக்கே அனைத்தையும்
தாரை வார்க்கவும்
வற்புறுத்தாதே
முழுவதையும் உறுஞ்சிவிட்டு
வெற்றுக் கோதாகி
குப்பையோடு குப்பையாகும்
பைத்தியகாரத் தியாகத்தை
நான் வெறுக்கிறேன்'


ஒரு மனிதன் இறைவனுக்கு அர்ப்பனித்து வாழ்வதையே இஸ்லாம் போதிக்கின்றது. இறைவனை வழிபடுதல் என்பதுதான் ஒரு முஸ்லிமின் பூரணத்துவத்திற்கு வழிகோலும். அதையெல்லாம் அனார் மறுதலிப்பது மார்க்கத்தின் எந்தப் பிரிவில் சேரும் என்பது தெரியவில்லை. வழிபடுவது இறைவனை மட்டுமே பின்பற்றுவது அவனது தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களையே! இதையெல்லாம் அவ்வளவு எளிதில் தூக்கிப் போட்டிட ஒரு முஸ்லிமால் ஒரு போதும் முடியாது.

அப்படியானால்! அனாரின் பாஷையில், இறைவனுக்காக என்ற தியாகத்துடன், வீதிவீதியாகத் திரியும் தப்லீஃக் ஜமாஅத்தினரைப் பற்றிச் சிந்திக்கிறேன். இவர்கள் குப்பையோடு குப்பையாகத் திரியும் பைத்தியகாரத் தியாகத்திற்குச் சொந்தமானவர்கள் என்று முடிவு கொள்ளலாமா? தியாகத்தை அதிகம் வழியுறுத்தும் தவ்ஹீத் காரர்களே உங்களின் நிலைப்பாடு என்ன?  ஜமாஅதே இஸ்லாமிக்கும், ஜமாஅத்துஸ் ஸலாமாவுக்கும் அனாரின் இக்கவிதை வரிகளில் உடன்பாடு ஏதேனும் உண்டா?

'திருத்தச் சட்டங்களாலும்
புதிய ஏற்பாடுகளாலும்
வேலிகளை விசாலப்படுத்தாமல்
விலகி நில்..'
புதிய ஏற்பாடு என்பது கிறிஸ்தவத்தின் முக்கியமான அம்சம் அதாவது பைபிள் என்ற வேதப் புத்தகத்தின் திருத்தப்பட்ட வடிவம், அப்படிப் பார்க்கும் போது இப்போது புதிய சட்டங்களை அறிவிக்கும் அணியினராக அடையாளம் காணப்பட்டிருப்பவர்கள் ஸலபு சிந்தனையுள்ளவர்கள், அவர்கள் புதிதாக ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லையாயினும் பிரயோகத்தில் இருக்காது அந்நியமாகிப் போன விடயங்களை அழுத்தம் கொடுத்து சட்ட வரம்பின் எல்லைகளை விசாலப்படுத்திச் செல்வதனை அவதானிக்க முடியும். அவர்களைப் பார்த்து அனார் இப்படிச் சொல்வது போலவும் தோன்றுகின்றது.

அத்துடன் தன்னை யாரும் எதனாலும் கட்டுப்படுத்த முடியாது என்பதையும் இஸ்லாம் போட்டிருக்கும் வேலிகளுக்குள் நின்று என்னால் வாழமுடியாது என்பதையும் அதன் சட்டங்கள் என்னைக் கட்டுப்படுத்துவதை நான் விரும்பவில்லையென்பதையும் அடித்துச் சொல்லும் வரிகளாகவும் இவற்றைக் கொள்ள முடியும்.
இனி மலக்குகளை வம்புக்கு இழுக்கும் கவிதை வரிகள் பற்றிப் பார்ப்போம்

'..ஆனால் நீ கதையொன்று சொல் என்கிறாய்
பன்மடங்கு காதலில் குழைகின்ற கண்களிடம்
வானவர்கள் நமக்காகக் கூடியுள்ளனர்...'

இஸ்லாத்தின் கோட்பாடுகளின்படி ஒரு கணவனும் மனைவியும் பந்தத்தில் இணையும் போது வானவர்கள் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றார்கள் அப்படியிருக்கும் போது ஏன் அனார் காதல் கொள்வதையும் கலவியில் செல்வதையும் வீடியோ எடுப்பதா மலக்குகளின் வேலை? இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவனது ஏவல்களை முழுமையாக ஏற்று நடப்பதே வானவர்களின் பணி, அவர்கள் ஒரு போதும் ஒரு துளியளவும் இறைவனின் பாதையில் இருந்து விலகிச் செல்ல மாட்டார்கள் அப்படிப்பட்ட தூய்மையான படைப்பை இங்கு கொச்சைப்படுத்தும் விதமாக காதலில் குழைகின்ற உங்களின் கூத்தைப் பார்ப்பதற்கு வானவர்கள் கூடி வருவார்கள் என்று சொல்வது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல.

இஸ்லாத்தின் நம்பிக்கைக் கோட்பாட்டின்படி சாதாரணமாகப் பார்வைக்குத் தோற்றாத  மலக்குகளை நம்புதல் இரண்டாவது அம்சமாகும். வானவர்கள் மீதான நம்பிக்கை என்பது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

'...புணர்ச்சிக்கு அழைத்தவன் கூறுகின்றான்
 போர் தேவதையின் கண்களாக உருண்ட
உன் முலைகளால்
குறிஞ்சி மலைகளையே அச்சுறுத்துகின்றாய்...'

பெண்ணுறுப்புக்களைப் பச்சை பச்சையாகச் சொன்னால் அது நவீன கவிதையென்றும், அது பெண்ணியக் கவிதை என்றும், நம்பிக் கொண்டு கவிதை படைக்கின்ற வெட்கம் துறந்த படைப்பாளிகளின் வரிசையில் அனாரும் இணைந்து கொள்கின்றார். அப்படிப் பட்ட பலருக்கும் இருக்கும் நோய்தான் மறைக்க வேண்டியதை வெளியே காட்டுதல். இதற்கு அவர்களின் புகைப்படங்களே சாட்சி. இங்கு போர் தேவதை என்ற ஒரு விடயம் வருகின்றது. தேவதை என்பது தேவர்களின் பெண்பால். அதாவது மலக்குகளின் பெண்பால். இஸ்லாத்தைப் பொருத்தவரைக்கும் மலக்குகள் என்ற வர்க்கத்தினர் ஒளியால் படைக்கப்பட்டனர். அவர்களில் பாலினத்தை நாம் துணிந்து கொள்ளும் ஆற்றல் கிடையாது. உலகில் நாம் தெரிந்திருக்கும் ஆண் பெண் மற்றும் இதர பாலினங்களைப் போல அவர்களைக் கணிக்க முடியாது.

ஆனால் இந்து சமயத்தில் அப்படியான கொள்கை உண்டு. தேவதைகள் என்பதற்கு அவர்கள் சமயத்தில் பல்லாயிரம் கதைகள் கூட உண்டு.  ஆனால் ஒரு முஸ்லிம் அந்தக் கதைகளுக்குள் நின்று இலக்கியம் படைக்க முடியாது. அது இஸ்லாத்திற்கு விரோதமானது. கிரேக்க சமயக் கொள்கையில்தான் போர் தேவதை என்ற ஒன்று பிரபல்யம் பெற்றிருக்கிறது. போர் தேவதையை பெரிதுபடுத்தவும் வழிபடவும் கிரேக்கர்கள் முனைவது அவர்களின் தெய்வக் கொள்கையின்பால்பட்டது. அனார் என்ன கிரேக்க தேசத்தவளா? அல்லது இந்துப் பெண்ணா?

யாராவது ஒரு இந்துவோ கிறித்தவரோ இஸ்லாத்தின் கோட்பாடுகளைக் கொச்சைப்படுத்தி எழுதினால் உலக முஸ்லிம்கள் சும்மா பார்த்துக் கொண்டா இருப்பார்கள்? கடந்த காலங்களில் நாம் அவற்றைக் கண்டிருக்கிறோம். அத போல ஒரு முஸ்லிம் இந்து சமயத்தைக் கொச்சைப் படுத்தினால் இந்துக்கள் பார்த்துக் கொண்டா இருப்பார்கள். டாவின்சி கோட் எனும் திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்பட்டது, அப்போது கிறித்தவ அமைப்புக்கள் தூக்கிய போர்க்கொடி கிறித்தவத்தின் தெய்வக் கொள்கையை அது கேள்விக்குள்ளாக்குகின்றது, திட்டமிட்டு யூதர்களால் செய்யப்பட்ட நவீன சதி. அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதனால்தான் இஸ்லாம் முஸ்லிம்களைப் பார்த்துச் சொல்கின்றது மற்றவர்களின் கடவுளர்களைப் பழிக்க, ஏச, உங்களுக்கு உரிமையில்லை, கிண்டலடிக்க முடியாது, அப்படியிருக்கும் போது தனது சமய நம்பிக்கைக் கோட்பாடுகளையே கொச்சைப்படுத்த அனாருக்கு அனுமதி கிடைக்குமா?

' பருவகாலங்களை அருளும் கடற்கன்னி'

இவ்வரி ஒரு கவிதையில் இடம்பெற்றிருக்கிறது. பருவகாலங்ககைளக் கடற்கன்னிகள் அருளுவதாக நான் எங்குமே படிக்கவில்லை, இந்து சமயத்தில் கூட அப்படியொரு விடயத்தைக் காணவில்லை, எனக்குத் தெரிந்தவரைக்கும் கிரேக்க தெய்வக் கோட்பாடுகளில் கூட எனது வாசிப்பில் அப்படியொரு விடயத்தைக் காணவில்லை, யூத கிறித்தவ சமய அடிப்படைகளில் கூட இந்தக் கடற்கன்னியைப்பற்றி யான் காணவில்லை,  அப்படியிருக்கும் போது அனார் எங்கிருந்து பருவகாலங்களைத் தீர்மானித்து அருளும் கடற்கன்னிகளைக் கண்டுபிடித்தாரோ தெரியவில்லை. காமம் முத்தி தலைக்கேறிய ஒருவரின் உளறல் போலத்தான் இவ்வரிகள் என்று தோன்றுகின்றது. அந்த உளரலில் உண்மையிருக்காது ஆனால் மோசமான அர்த்தம் இருக்கும் பொய் இருக்கும், தனக்குத் தேவையானதைச் சாதித்துக்கொள்ள அந்த உளறல் அவசியமானது. இப்படியான நேரத்தில் ஒரு ஆண் தன் மனைவியை நீதான் உலகப் பேரழகி என்பான், ஒரு பெண் நீங்கதான் உலகிலேயே....உள்ள ஆண் என்பாள். அது போலத்தான் அனார் எந்த மாலையை இலக்கு வைத்தாரோ தெரியவில்லை

இஸ்லாத்தைப் பொருத்தவரைக்கும் காலங்களை தீர்மானிக்கும் பொறுப்பில் ஒரு முக்கியமான வானவர் இருக்கிறார். அவருடைய பெயர் மீகாயீல், அவர்தான் மழை வெயில் போன்ற அம்சங்களுக்கு பொறுப்பாக இருப்பவர் அப்படிப் பார்க்கும் போது இவ்வார்த்தைகள் நேரடியாக மீகாயிலுக்குச் சவால் விடுவதாக இருக்கிறது. அல்குர்ஆன் சொல்கிறது யார் ஜிப்ரீலுக்கும் மீகாயிலுக்கும் விரோதமாக இருக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வுக்கும் விரோதமானவர்கள் என்று. அனார் இங்கு தூக்கியிருக்கும் கொடி மீகாயிலுக்கு விரோதமானது அப்படியென்றால் அது மீகாயிலுக்கு விரோதமானது மட்டுமல்ல அல்லாஹ்வுக்கும் விரோதமானதுதான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இப்படியெல்லாம் நுட்பமாக எழுதி இஸ்லாத்தைச் சிதைக்கும் படி யாரேனும் நிதியுதவி அளிக்கின்றார்களா என்பதைத் தேட வேண்டும்.

ஹவ்வாவின் படைப்பையே கேலிக்குள்ளாக்கும் ஒரு காரியத்தையும் செய்கின்றார்.

'இரண்டு விலா எலும்புகளால் படைக்கப்பட்டவள்'

இது அறியாமையினால் விளைந்த வரிகளா அல்லது வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்ட வரிகளா? என்பது தெரியவில்லை. ஆனால் பல இடங்களில் ஹவ்வா அலைஹிஸ்லாம் அவர்களை இழுத்து விரசமான வார்த்தைகளால் கிறுக்கிச் செல்லும் அனார், இங்கு அல்குர்ஆனில் அல்லாஹ் சொல்லும் ஹவ்வாவின் படைப்பு பற்றிய வார்த்தைகளுக்கு நேரடியாகவே முரண்படுகின்றது. இரண்டு விலா எலும்புகளால் படைக்கப் பட்டவள் என்று சொல்லவருதனூடாக இறைவனின் எதைக் கேள்விக்குட்படுத்த முனைகிறாள் இந்த உலகப் படைப்பாளி.

ஏற்கனவே ரொம்பவும் பாராட்டப்பட்ட கவிதைதான் இது.  இரண்டு பெண்கள் எனும் தலைப்பிடப்பட்ட கவிதையைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். அதன் சில வரிகள் இப்படி

உனது  கூடு நிரம்பி தேன் வழிந்து கொண்டிருந்த
மாயப் பொழுதைச் சொல்லிச் சிரித்தபடி
நீ ஏக்கமுற்ற பொழுது
மற்றுமொருபறவை ஊர்ந்து செல்கிறது
நான் திகட்டும்வரை உணவூட்டியதில்
நிலா ஓரமாய்ச் சென்று அமர்ந்திருக்கலாம்
--
நாம் முடிவற்றுப் பருகப் பருக
தாகங் கொண்ட இரண்டு பெண்கள் அருந்தும்
இவ்விரவு
இதற்குமேல் இல்லையென்ற
அற்புதத்தைச் சுவைத்துவிட்ட திளைப்பில்
சாய்ந்து செல்கின்றது
அந்தமற்ற கண்ணாடி வானம்
நானும் நீயுமாகிக் கிடந்தோம்.

வரிக்கு வரி விளங்கப்படுத்த எனக்குக் கூச்சமாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் புரியாதபடி விளங்கப்படுத்த முடியுமாயினும் அதைச் செய்ய எனக்கு விருப்பமில்லை,

மனைவி என்ற ஒருத்தியில் திருப்திப்படும் எந்தக் கணவனாலும் இதற்கு விளக்கம் சொல்ல மனது இடம்தராது. இது போலத்தான் கணவன் என்ற ஒற்றை உறவில் முழுமையான திருப்தி கானும் எந்தப் பெண்ணாலும் இதற்கு விளக்கம் சொல்ல நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இதைப் பற்றிவிரிவாகச் சொல்ல எனது வெட்கம் தடைபோடுகின்றது. அதை உடைத்தெறிந்து விட்டு என்னால் விளக்கம் சொல்ல முடியாது நீங்களே படித்த விளங்கிக் கொள்ளுங்கள். சுருக்கமாக சின்னஞ்சிறிய குறிப்பை மட்டும் என்னால் தர முடியும்.

(ஒரு கொலைக் கேசையே தனித்து நின்று எதிர் கொண்டு வென்றவன் நான். அச்சம், பயம் என்றால் என்னவென்றே தெரியாத துணிச்சல்காரன். எதையும் எதிர்கொள்ளும் வல்லமைமிக்க உணர்வை இறைவன் எனக்குத் தந்திருக்கிறான், பல்லாயிரம் பேர் சேர்ந்து தீட்டிய சதிகளில் இருந்து இலகுவாக வெளியே வந்து நெஞ்சு நிமிர்த்தி இப்போதும் கம்பீர நடை போடுபவன். அப்படியிருந்தும் அனாரின் விரசத்திற்கும் வழிசத் தனத்திற் தோய்ந்தெழுந்த வரிகளுக்கும் முன்னால் நான் வெட்கத்தோடு தலையையும் பார்வையையும் வேறு பக்கம் திருப்பிக் கொண்டு நடை போடுகின்றேன்)

இந்தக் கவிதையில் லெஸ்பியன்கள் பற்றிப் பேசுகின்றார் அனார். அதாவது இரண்டு பெண்கள் உறவு கொள்வதைப் பற்றிப் பேசும் கவிதை இது. இதைவிட அனுபவித்துச் சொல்ல யாராலும் முடியாது. இந்தியாவில் இருந்து பாலியல் கவிதை எழுதும் பக்கிகள் அனைவரும் அனாரிடம் பிச்சையெடுக்க வேண்டும்.
'நானும் நீயுமாகிக் கிடந்தோம்' என்பதன் மூலம் அனார் சொல்லவரும் செய்தி என்னவென்னறால்

கணவனுடன் உறவு கொள்வது போல நான் இன்னொரு பெண்ணுடன் உறவு கொண்டு பின்னிப்பிணைந்து கிடந்தேன் என்பதாகும், அனார் தனது அனுபவத்தை இங்கு தீட்டுகின்றாரா அல்லது வேறு ஒருவரின் அனுபவத்தைத் தான் என்ற நிலையில் நின்று சொல்கிறாரா என்பதில் தெளிவு அனாருக்கும் நெருங்கியவர்களுக்கும் மட்டுமே தெரியும், இது அனாரின் அனுபவமாயின் மிகவும் கேவலமானது.  எப்படியாயினும் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால்! ஒரு முஸ்லிம், எப்படி பெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதை ஆதரிக்கவும் நியாயப்படுத்தவும் முடியும் என்பதுதான்?

இஸ்லாத்தைப் பொருத்தவரைக்கும் ஓரினச் சேர்க்கை, விபச்சாரம் என்பனவெல்லாம் மிகவும் அருவருப்பான ஈனச்செயல் என்பதோடு அது பெரும் பாவமுமாகும். தண்டனைக்குரிய குற்றமுமாகும், ஒரு யூத சியோனிச எச்சில் தின்ற அடிமை இதை ஆதரிக்கக் கூடும் அல்லது உலகக் கலாசாரங்கள் எல்லாம் அழிந்து சிதைந்து சின்னாபின்னமாகிப் போக வேண்டும் என்ற அடிப்படையில்  செயற்படுகின்ற ஒரு கேடுகெட்ட நபரால் இப்படிப்பட்ட  இழிசெயலை ஆதரிக்க முடியும். மற்றபடி ஒரு முஸ்லிமால் ஒரு போதும் இப்படியொரு இழிவான நிலைப்பாட்டை எடுக்க முடியாது.

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கினால் அது நாட்டுக்கும் வருமானம் அத்துடன் பெண்களுக்கும் பாதுகாப்பு என்று சொன்னதற்காக சர்மிளாவின் மீது நாலுகாலில் பாய்ந்த உலமாக்கள் இப்போது எங்கே என்று கேட்கத் தோன்றுகின்றது. அனாரின் தந்தையும் ஒரு ஆலிமு, அம்பாறை மாவட்ட ஆலிம் ஷாக்களின் தலைவர் அனார் வீட்டுக்கு அண்மையில்தான் வசிக்கிறார், சாய்ந்த மருதுவில் உலகைகையே மென்று விழுங்கிய ஆலிம் ஷாக்கள் எல்லாம் வாழ்கின்றார்கள், ஆயினும் அனார் ரொம்பக் கொடுத்து வைத்தவர் இன்னும் இவர்களின் கண்களுக்குப் புலப்படாத எட்டத்தில் தனது மாளிகையை நிறுவிக் கொண்டமைக்காக.

இன்னுமெரு கவிதையிலும் அனார் பெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதை ஆதரிக்கின்றார்

நானும் ரசித்துப் போதையேற்றுவதற்கு
இரவாகிய கறுப்புத் திராட்சையை ருசிப்பதற்கு
ஹவ்வாவின் கனியைப் பிழிந்த சொட்டுக்களை
நட்சத்திரக் கிண்ணத்தில் ஊற்றிப்  பருகுவதற்கு
நீண்ட மேசையின் அதி விசேசங்களை நேர் கொள்வதற்கு
எல்லாவிதமான அயர்ச்சிகளையும் மறந்து
நான் நிர்வாணமாகும் போது
மகா ராணி புன்னகைப்பாள்.
காமத்தின் வேட்கை மிகுந்த சங்கீதம்
உன் உடல் மாபெரும் இசையென்பாள்
என் அருகில் மகா ராணி.

இங்கு அநியாயத்திற்கு ஹவ்வாவை இழுப்பதால் அடிப்படைகளின் மீது கேள்விகளால் அதிர்வை உண்டு பண்ணுவதாக நினைக்கிறார் போலும். அதாவது சுவர்க்கத்தில் சைத்தான் ஒரு கனியை வைத்துத்தான் ஆதம் அலைஹிஸலாத்தையும் ஹவ்வா அலைஹிஸலாத்தையும் வழிகெடுத்து அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்ய வைத்தான். அந்தக் கனியைப் பிழிந்து அதிலிருந்து தயாரித்த போதையேற்றும் பானத்தை அருந்தி இறைவனுக்கு மாறு செய்யும் வண்ணம் போதையுடன் காமம் அனுபவிப்போம் என்று அறைகூவல் விடுக்கும் அனாருக்கு அதீத தைரியம்தான்.  அனாரின் இந்தக் கோட்பாட்டை ஒரு புறம் வைத்து விட்டு இன்னொருபக்கத்தில்

தஸ்லீமா நஸ்ரீன் இஸ்லாத்திற்கு விரோதமாக எழுதிப் பிரபலம் பெற்ற எழுத்தாளர். பங்களாதேச ஆலிம்கள் அவளைச் சரியாகக் கையாளத்தவறியதால் மேற்குலகம் அவளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. திருமணம் முடித்து கணவனை வீட்டில் வைத்துவிட்டு இன்னொருவருடன் குடும்பம் நடாத்தி புரட்சி செய்வதாக ஆண்களின் மீதான தனது வெறுப்பை வெளிப்படுத்தியவள். அதே சிந்தனையையொத்த வரிகள் சிலதை அனாரின் கவிதைகளிலும் காணலாம்.

இந்த
திரைச்சேலை
ஜன்லோடு உரசினாலும்
நேசிப்பதென்னவோ
எதிர்வீட்டு ரோஜாவைத்தான்

அதுபோல இன்னுமொரு இடத்தில் தனது கணவனை விட இன்னொருவனுடன் வாழ்வதுதான் தனது தாகம் என்பதை இப்படிச் சொல்கின்றார்

துணிகளை மடித்து
அலுமாரியில் அடுக்கினேன்
அறைவிளக்குகளைக் குறைத்து வைத்தேன்
விரிப்பை நேர்த்தியாக்கி
இரண்டு தலையனைகளை
அருகருகே இணைத்தேன்
தளர்வான இரவு ஆடையை
அணிந்து கொண்டேன்
விசமேறிய இரவின் பானம்
என் தாகத்தின் முன் உள்ளது
ருசிகள் ஊறிய கனவுகளுடன்
என் உறக்கம்
அறைக்கு வெளியே அலைகின்றது.

இப்படித்தான் தஸ்லீமாவுக்குத் தனது கணவன் விசமேறிய பானமாகத்தான் தெரிந்தான், அவளது உறக்கமும் இன்னொருவனை அனைத்தபடி அறைக்கு வெளியேதான் அலைந்தது, விபச்சாரத்தை அவ்வளவு எளிதில் ஊக்குவிக்கும் திறன் படைத்த கவிதைகளை அனார் எழுதுவதால்தானோ என்னவோ பலர் அவருக்கு முன்னுரிமையளித்து இஸ்லாத்தின் கோட்பாடுகளைச் சிதைக்க ஊக்குவிக்கின்றார்களோ  என்று எண்ணத் தோன்றுகின்றது. அத்தோடு மதுபானம் அருந்துவதும் போதையுடன் காமக்களியாட்டத்தில் ஈடுபடுவதும் கூட அவர் கவிதைகளில் பல இடங்களில் தொனிக்கும் பொருள்களாயிற்று. உதாரணத்திற்குச் சில வரிகள்

நீ என் கதவைத் தட்டும்போது
ஓடையில் குதிக்கும் சிவப்பு மீன்கள்
சினைக்கத் தொடங்கியிருக்கலாம்
இருவரும் கண்ணாடிக் கிண்ணங்களைத் தட்டி
அருந்த ஆரம்பிக்கையில்...

இந்தக் கவிதை வரிகளுக்கு நான் விளக்கம் எதுவும் சொல்லத் தேவையில்லை, ஆயினும் இதற்குள் புதைந்திருக்கும் நுட்பமான இஸ்லாமிய எதிர்ப்புக் கௌ;கையினை எல்லோரும் அவதானமாக விளங்கிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. போதையேற்றும் அனைத்தையும் இஸ்லாம் தடை செய்திருக்க உறவு கொள்வதென்றால் மதுக்கிண்ணத்துடன் வா என்று அழைக்கும் அனாரை எப்படிச் சித்தரிப்பதென்று  தெரியவில்லை. ஒர் முஸ்லிம் இதையெல்லாம்  ஊக்குவிப்பதைப் பார்க்க மதுப் பாவனை பற்றியும் விபச்சாரம் அதிகரிப்பது பற்றியும் நபிகளார் எச்சரித்துச் சொன்ன வாசகங்களை அச்சத்துடன் ஒரு முறை நினைவு படுத்த வேண்டி யிருக்கின்றது.

கடைசிச் சொட்டு மதுவின் சுவை என்ற பொருள்பட இன்னோர் இடத்திலும் பேசுகின்றார். குடித்தவருக்குத்தானே தெரியும் கடைசிச் சொட்டு மதுவின் ருசி. நமக்கெல்லாம் இந்த மது பற்றிப் பேசவே தகுதி கிடையாது, சுவைத்து அதில் உருண்டு பிரண்டு விளையாடும் வல்லமைகளுக்கே தெரியும் அதன் உருசி ஆஹா ஆஹா, இளைய தலைமுறைக்கும் அதை அறிமுகப்படுத்தலாமே அனார் ஜி

சுலைஹா என்ற கவிதையிலும் இதே மாதிரியான சிந்தனையை முன்வைத்தப் பேசுகின்றார். சுலைஹா ஏலவே அஸீஸின் மனைவி தனது கணவனை வீட்டில் வைத்துக் கொண்டே யூசுப் நபியைக் காதலிக்கிறாள், கணவனை வீட்டில் வைத்துக் கொண்டே அவரோடு உடலுறவு கொள்ள முயல்கின்றாள், அப்படிப்பட்ட கேடு கெட்ட நடத்தை கொண்ட அப்பெண்ணைப் பற்றியும் அல்குர்ஆன் மிக மேசமான இந்த நடத்தை பற்றியும் விமர்சனம் செய்கின்றது. அப்படிப்பட்ட மோசமான நடத்தையுள்ள பெண்ணிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அரச அரண்மனையைவிட தனக்குச் சிறைச்சாலைதான் சிறந்தது என்று யூசுப் நபி சிறையைத் தேர்ந்தெடுக்கிறார். காரணம் சுலைஹா என்ற கெரக்டர் அவ்வளவு மோசமானது. அந்த மோசமான கெரக்டர்தான், தான் என்பதை அனார் இப்படிச் சொல்கின்றார்

'மேலும்
உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றால்
நான் அர்த்தங்களுக்கு வெளியே வளர்பவள்
கண்களில் இருந்து காதலைப் பொழியச் செய்பவள்
கனவுகள் காண ஏங்கும் கனவு நான்
காதலால் கத்தியை உடைத்தவள்
நான் யூசுபைக் காதலிப்பவள்
சுலைஹா'

இந்தக் கவிதைக்கு அற்புதமான நையாண்டி ஒன்றை கவிஞர் ரிஸ்வியு முஹம்மட் நபீல் அனாரின் முகப்புத்தகத்தில் தைரியமாக இட்டிருப்பதாகவும், அதுவும் அனார் பதிவேற்றிய இக்கவிதைக்குக் கீழே என்றும் நண்பர் தகவல் தந்ததோடு அக்கருத்தையும் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அதை வாசித்தால் எல்லாம் இலகுவாகப் புரியும்.

நீ யூசுப்பை மட்டும் காதலிப்பவள். நீ
யூசுப்பை மட்டும் காதலிப்பவள்.
எந்தக் கிருஷ்ணர்களும் கள்ளச் சாவி கொண்டு
உன் படுக்கையறைக்குள் நுழைய முடியாது.
நீ யூசுப்பை மட்டும் காதலிப்பவள்.


இக்கூற்றிலும் அனாரின் வரிகளிலும் பொதிந்திருக்கும் உள்வீட்டு ரகசியங்கள் பற்றிப்  பேசுவது அவ்வளவு நல்லதல்ல, அது படுக்கையறைச் சமாச்சாரம். கவிதைகளில் தொனிக்கும் விடயங்களை பிரித்து மேய்வது வேறு, ஒருவரின் படுக்கையறைக்குள் நுளைய முனைவதும், அதை அலச நினைப்பதும் வேறு. நபீல் அளவுக்கு அங்கு உள்நுழைய எனக்குத் தைரியம் போதாது. நபீலின் கூற்றுப்படி பல கிருஷ்னர்கள் என்பது இடித்துக் கொண்டே இருக்கிறது. அதைப் பற்றி அவரே விளக்கட்டும். படுக்கையைப் பகிர்தல் விடயத்தைப் பக்குவமாகக் கடந்து செல்வது நமக்கு நல்லது.

ஆன்மீகமே கதியென்று கிடக்கும் சூஃபிகளையும் அனார் விட்டுவைக்கவில்லை, காதலின் ரகசியத்திற்குள் சூஃபிகளைச் சொருகிவிடும் அனாரின் வரிகள் இவை

நீ பாடிக் கொண்டிருந்தாய் காதலின் ரகசியத்தை,
ஆடை பறந்து குடை விரிய
வெள்ளைக் களான்கள் காற்றில் வளையமிட
சூஃபிக்கள் நடனத்தில் சுற்றுகின்றனர்
கஃவா கிண்ணங்களில் நிரம்பியுள்ளது
நீ பாடுவதை நிறுத்தவில்லை'

காதல் களியாட்டத்தில் சூஃபிக்கள் சமர்த்து என்பது போலும் அப்போது மெய்மறந்து அவர்கள் ஆட்டம் போடுவார்கள் என்பதும் அனாரின் கருத்து ஆனாலும் சில்க்சுமிதாவைப் போலவும் முமைத்கான் போலவும் பாவாடை குடைவிரிய சூஃபிக்கள் டான்ஸ் ஆடுவார்களா என்பது எனக்குத் தெரியவில்லை, சூஃபித்துவத்தை ஆதரிக்கின்ற தரீக்காக்கள் அனைத்திடமும் இந்தக் கேள்விளைக் கேட்டு வைக்கிறேன். அனார் சொல்வது போல சிலுக்கு டான்ஸ் போடுவது சூஃபித்துவத்தில் இருக்கிறதா என்று!!! இதுவும் காதலின் ரசம் சொட்டும் சந்தர்ப்பங்களில்தான் சுஃபிகளுக்கு சிலுக்கின் குடைப்பாவை விரியும் டான்சின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு ஆடத் தொடங்குவார்கள் போலும். நல்ல வேளை வெறும் கஃவா கிண்ணங்கள் என்று சொல்லிவிட்டார், கஞ்சா மிக்ஸ்ட் கஃவா என்று சொல்லாமல் விட்டாரே என்று சூஃபிகள் ஆறுதல் பெருமூச்சு விடலாம்.
 
ஜாஹிலிய்யக் காலத்தில் கவிஞர்கள் பெண்களை நிர்வாணப்படுத்திக் கவிதைகள்பாடி இறைவன் வகுத்த எல்லைகளைத் தாண்டிச் சென்றமையினால் கவிஞர்களை சைத்தானின் வழியில் நிற்பவர்களாக இஸ்லாம் கருதியது. அக்கால ஜாஹிலியக்கவிதைகளுக்கு இணையான சொல்லாடல்கள் மிகுந்த சில கவிதைகளை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது மிகவும் அவசியமாகும். காரணம் இப்படிப்பட்ட வரிகளால்தான் பார்ப்பனிய சக்திகள் அனாருக்கு மாலையும் அணிவித்து விருதும் வழங்கி பணமும் கொடுத்து கௌரவமும் அளித்து இது போல இன்னும் இன்னும் அதிகமதிகமாக எழுதி உனது இஸ்லாமிய மார்க்கத்தின் கதவுகளை உடைத்தெறிந்துவிட்டு புதுமைப்பெண்ணாய்ப் புறப்பட்டுவா என்கிறார்கள்.

அதனடியாகத்தான் பார்ப்பனியப் பத்திரிகையான இந்தியாவின் த இந்து வின் பாலியல் அரசியல் என்ற தலைப்பில் மூன்று முஸ்லிம் பெண்களையும் வேறு ஒரு பெண்ணையும் பேசவைத்து ஊக்கமளித்தார்கள். அதற்காக இலவச விமான டிக்கட்டும் தங்குமிடவசதியும் உணவும் அளித்து நன்றாகக் கவனித்து அனுப்பியிரு;ககிறார்கள். அந்தப் பெரிய இந்தியாவில் பாலியல் அரசியல்பற்றிப் பேச ஏன் ஒரு பார்ப்பனத்தி கிடைக்கவில்லையா அவர்களுக்கு? நான்கே நான்கு பேரில் மூன்று பேர் முஸ்லிம்களாகத் தெரிவு செய்தமையை அந்தப் பெண்களும் யோசிக்காமல் ஏற்றுக் கொண்டது என்னமோ உலகில் கிடைத்த பெரும் பேறு என்பது போலக் கருதியது அறிவீனத்தின் உச்சம்.

அனாருடைய கவிதைகளைப் பொருத்தவரையில் மாபெரும் கவிஞர் எனும் அந்தஸ்தை அவருக்களித்து, எல்லோருடைய மனதையும் ஈர்த்து கைதட்டல் பெற்றுக் கொடுத்த வசனங்களைப் பார்ப்போமா!! இப்படிப்பட்ட வரிகளை அனார் எழுதியிராவிட்டால் அவரை யாரும் பெரிதாகக் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள். வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற கண்டிப்பான உத்தரவோடு மளையாள நடிகை ஷகீலாவே வந்து தரிசனம் கொடுக்கும் மூன்றாந்தர செக்ஸ் படங்களுக்க ஒப்பான வரிகள் இவை. பாலியல் மனநோயாளிகளுக்கு சாருநிவேதிதா போன்ற நட்டுக் கழன்ற எழுத்தாளர்கள் அளிக்கும் ஆத்மார்த்தமான மருந்துக்குச் சமமான எழுத்துக்கள் இவை. வெட்கங்கெட்ட எழுத்துக்கள். அனார் போன்ற மூன்றாம் தர பிராண்டுகளுக்கு இப்படியான எழுத்துக்கள் சாதனைதான். அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஆதம்பாவா அவர்களின் கவனத்திற்கு அனாரின் இந்த எழுத்துக்களைக் கொண்டு வர யாரேனும் முயன்றால் நல்லது. அனாரின் எழுத்து வீரியத்தை இந்த ஆலிம் ஷாக்களும் ரசித்து இன்புறட்டுமே.

'...இரண்டு குன்றுகள்
அல்லது தளும்பும் மலைகள் போன்ற
முலைகளுக்கு மேல் உயர்ந்து
அவள் முகம்...'
---
என்று கூறும் அனார்  இன்னோர் இடத்தில்

'...புணர்ச்சிக்கு அழைத்தவன் கூறுகின்றான்
 போர் தேவதையின் கண்களாக உருண்ட
உன் முலைகளால்
குறிஞ்சி மலைகளையே அச்சுறுத்துகின்றாய்...'

'...உப்புச் சுவையாய் இரு உடல்கள் மாறினோம்
அலைகள் எழுப்பி எழுப்பி கடல் ஆக்கினோம்...'

இப்படிப்பட்ட வசனங்களைத்தான் அல்குர்ஆன் அல்ஹதீஸ்படி வாழும் கல்குடாத் தொகுதியின் பிரபல்யமிக்க வஹாபியான எழுத்தாளரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் மிக முக்கிய உறுப்பினரும் மார்க்கப் பிரச்சாரகரும் அநாதை ஆண் சிறுவர்களுக்கு மார்க்கத்தைப் படிப்பிப்பவரும் மக்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் குத்பாப் பிரசங்கம் செய்து நல்வழிப்படுத்தும் மௌலவி ஓட்டமாவடி அறபாத் ஸஹ்வி மற்றும் எழுத்தாளர் எஸ்எல்எம் ஹனீபா போன்றவர்களின் பாராட்டுக்களையும் கைதட்டல்களையும் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெற்றவை. அல்லாஹ்வை மட்டும் பயந்து அல்குர்ஆன் அல்ஹதீஸ் பிரகாரம் வாழும் தவ்ஹீத் வாதிகள் பாராட்டும் போது அனார் இஸ்லாத்தின் மான்மியத்தை கவிதைகளில் பிய்த்து உதறுகிறார் என்று நானும் தப்புக் கணக்குப் போட்டது இப்போதுதான் புரிகின்றது.

அனார் எது போட்டாலும் பிரமாதம் என்ற பின்னூட்டத்தை அறபாத் மௌலவியும், ஹனிபாவும் போடுவதற்கு ஒரு போதும் தவறியதில்லை..

அண்மையில்தான் அனார் தானாகவே சில சர்ச்சைகளை எழுப்பி அதில் சிக்கிக் கொண்டு அவமானப்பட்டுத் திரும்பியதாக அறியக் கிடைத்தது, அப்போதெல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கதைகளைச் சொன்னார்கள் அவையொன்றையும் நான் நம்பவில்லை, ஆனால் அனாரின் இந்த வார்த்தைகளைப் படித்த பின்னரும் அவற்றை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை,

'..எங்களுக்கிடையில்
இந்து மகா சமுத்திரம் இருந்தது
ஆன போதிலும்
நான் அன்றவனை மூன்று முறை முத்தமிட்டேன்..'

'..திரும்பியும் பாராமல்
நீ ஓடி விட்ட பிறகும்
உன்பாதங்களை ஒட்டிய
நிழலாகவே இருக்கிறேன்..'

துரத்தப்படும் பலர் ஓடிக் கொண்டேதான் இருப்பார்கள் துரத்துவது விசர் நாயாக இருந்துவிட்டால் நாய் நின்றாலும் ஓடுவதை நிறுத்த மாட்டார்கள். பெரும்பாலும் ஓடுவது யோக்கியவான்களாகத்தான் இருப்பார்கள், திரும்பிப் பார்க்காமல் ஓடுவதென்றால் நிச்சயம் அருகே வந்துவிட்டு அபாயம் அறிந்துதான் ஓடியிருப்பார்கள். மூடியிருப்பதைத் திறந்துபார்க்கத் துடிக்கும் மனித மனது ஓடுவதைத்தான் துரத்த நாடும்.

'...புராதன காலத்து கடல் அரக்கனின்
தந்திரோபாயங்களைத் தோற்கடித்தபடி
பருவகாலங்களை அருளும் கடற்கன்னி
ஒவ்வொரு கடலினிலும் நீந்திக் கொண்டே இருக்கிறாள்
பெருகும் தன் ஆற்றலின் பிரவாகத்தைப் பாடியபடி...'

ஆனாலும் அனார் இந்த வரிகளில் எப்படிப்பட்ட அரக்கர்களையெல்லாம் எதிர்கொண்டு அவர்களின் தந்திரங்களையெல்லாம் தோற்கடித்து எதிர் நீச்சல் போட்டிருக்கும் கடற் கன்னி நீங்கள். அது உங்களின் புன்னகை சிரிப்பு என்ற ஆற்றலால்தான் சாத்தியப்பட்டிருக்கிறது. பொங்கிப் பெருகும் உங்கள் ஆற்றலையெல்லாம்   சைத்தான்களின் கடையில் அடகு வைத்துவிடாமல் கவனமாக முதலீடு செய்யுங்கள்.
தஸ்லீமாக்களையும் சல்மான் ருஷ்டிகளையும் இந்த உலகம் வரவேற்கக் காத்திருக்கிறது. அப்படியொரு அடைப்புக் குறிக்குள் நீங்கள் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது.
தொடர்க உங்கள் எழுத்துப் பணி
வாழ்க உங்கள் கவிதை ஊழியம்


05. அனாரின் கவிதைகள் பற்றிய எனது தனிப்பட்ட கருத்துக்கள்

அனார் இது வரைப் போட்ட நான்கு தொகுதிகளையும் ஒரே இருப்பில் இருந்து படித்தவன் என்ற வகையில் சில விடயங்களைச் சொல்லும் வாசனாக தகுதி எனக்கிருப்பதாகவே கருதுகின்றேன். பலருடைய கவிதைகளையும் படித்திருக்கிறேன். ஆகோ ஓகோ என்று புகழப்பட்ட வறண்ட எழுத்துக்களையும் படித்துக் கொட்டாவி விட்டிருக்கிறேன். அனாரின் கவிதைகளைப் பொருத்தமட்டில் எனது அவதானங்களில் முதன்மையானவற்றைமட்டும் இங்கு பகிரலாம் என்று கருதுகின்றேன்.

அனாருக்கு கவிதை எழுத வருகின்றது. ஆனால் பஹீமா ஜஹான் அளவுக்கு வீச்சுள்ள கவிதைகளை எழுத முடிவதில்லை. சில வரிகளில் கைதட்டிப் பாராட்ட வேண்டும் என்று தோன்றுகின்றது. பல இடங்களில் முகம் சுழிக்க வைக்கிறது. முதல் தொகுதி போடும் போடு அனாருக்கு எழுத்து அவ்வளவு பரிச்சயப்படவில்லை, சொற்கள் சொற்களாக உடைத்துச் செதுக்கப்பட்ட கவிதைகளாகவே அவை இருந்தன. அத்துடன் அடுத்தடுத்த தொகுதிகளில் அது வரிகளை உடைத்துச் செதுக்கப்பட்டவையாகப் பெருத்துப் போய் இருக்கின்றன. என்னைப் பொரத்தவரைக்கும் இப்படி எழுதினால்தான் கவிதை, யாப்பு இலக்கணங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ப்ரேம் வேர்க் வடடத்தினுள் நின்று அளவீடு செய்யவோ அல்லது எழுதவோ தேவையில்லை. உள்ளத்தில் சொல்லத் தோன்றும் விடயத்தைப் பிறர் புரிந்து கொள்ளும்படியும் ரசிக்கும் படியும் சொல்லிவிட்டாலே போதும்.  அத்தோடு புரியாத பாஷையில் நவீன கவிதை வேய்கின்றேன் பேர்வழி என்று குறலி வித்தை காட்டும் கவிஞர்களையும் படிக்கப் பிடிப்பதில்லை.

அனார் கவிதகளில் சோலைக் கிளி கவிதைகளின் தாக்கம் பெரியளவில் இருக்கிறது என்பதை முகநூல் பதிவொன்றில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.  அனார் புத்தகமாகப் போட்ட அனைத்துக் கவிதைகளையும் வாசித்து முடித்தாயிற்று ஏற்கனவே சொன்னதுதான் என் வாழ்வில் அருவருப்பான நிகழ்வு அக்கவிதைகளைப் படிக்கவேண்டிய நிர்ப்பந்தம் வாசித்தவரை சோலைக் கிளியின் கவிதைகளின் வித்தையைக் கையால அனார்
பிரபாகரன் அளவுக்கு முயன்றிருக்கிறாள்
தனது சுயமானது என்பதை நிலைநிறுத்த கருணா அளவுக்கு பாடுபட்டிருக்கிறாள்
எல்லவற்றிலிருந்தும் விடுபட்டிட கே.பி அளவுக்கு ரிஸ்க் எடுக்கிறாள்

மொத்தத்தில்
போராடுதல்
தப்பிக் கொள்ளல்
தக்கவைத்தல்

ஒரு  ஈழப் போராட்டம் நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் பாவம் அனார் இறுதி யுத்தத்தில் பிரபாகரன் தோற்றுப் போனது போல அனாரும் தோற்றுப் போகின்றாள். புலிகளில் இருந்து பிரிந்து சென்ற கருனா தனது சுயத்தை இழந்து வேரோர் அஜந்தாவுக்குள் ஐக்கியமானது போலவும், குமரன் பத்ம நாதன் போல தனது சுயத்தை நிலை நிறுத்திக் கொள்ளப் படாதபாடு படுவது போலவும் தடுமாறுவதை முழுமையாக ஒரே மூச்சில் படிக்கும் ஒருவரால் மிக இளகுவாகக் கணித்துக் கொள்ள முடியும். அனாரின் கவிதைகளை மதிப்பீடு செய்து ஐ லவ்யுடா செல்லம் சொன்ன விமர்சகச் செம்மல்கள் அனைவருக்கும் என்னால் பகிரங்க சவால் விடுக்க முடியும். அனாரின் கவிதைகளை மதிப்பீடு செய்த சுகுமாரன் போன்றவர்கள் கூட இது குறித்து வாயே திறக்கவில்லை.

சோலைக் கிளியின் கவிதைகளின் சாயலை வலிந்து வரித்துக் கொண்ட இடங்களை. வரிக்குவரி நிறுவ முடியும். அப்படி இல்லையென்று முடிந்தால் யாராவது சவால் விடுங்கள்
இந்திய ஜாம்பவான்களே
இலங்கை ஜாம்பவான்களே
அப்படியில்லையென்று சொல்ல யாராவது தயாரா?

அனாருக்கு இந்த இடத்தில் ஒரு பாரிய பொறுப்பு இருக்கிறது, கூலிக்கு ஆள் அமர்த்தியாவது அப்படியில்லை என்பதை நிறுவ வேண்டிய தேவை இருக்கிறது. அப்படிச் செய்தாலும் பறவாயில்லை, விடுக்கும் சவாலை கொஞ்சம் பெரிய இடத்திலிருந்து விடுவது நல்லது. கதீர், நபீல், அறபாத், கவிதைக்குச் சம்பந்தமே இல்லாத ஹனிபா போன்றவர்கள் சவால் விடாமல் இருந்தால் சரி, பின்னர் கழிவுத் தொட்டிக்குள் விழுந்திருப்பதைச் சாப்பிடச் சென்று வெளியேறிக் கொள்ள முடியாமல் தடுமாறும் தெருப் பூனையின் நிலையில் அவர்கள் அகப்பட்டுக் கொள்ளக் கூடாதல்லவா!!
ஒரேயொரு குறிப்பு: அதை நான் நிறுவ வேண்டும் எனின் யாராவது ஸ்பொன்சர் பண்ண வேண்டும்
எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு இந்த நஜீசுக்குப் பின்னால் சும்மா   அலைய முடியுமா என்ன!!

அடுத்த அம்சம் பிரதி பண்ணல். நான் பெண் என்ற கவிதையை மாயா அஞ்சலோவின் நீண்ட கவிதையின் சாரம் என்று குறிப்பிட்டிருந்தேன். அதே போல நீண்ட உனவு மேசை என்ற கவிதையும் ஒரு சிங்களக் கவிதையின் சமரியை வைத்துப் பின்னப்பட்ட கவிதை என்பதும் குறிப்பிடத்தக்கது. எப்போதோ படித்த அந்தக் கவிதையின் அசல் வடிவம் இன்னும் கைக்குக் கிடைக்கவில்லை கிடைத்ததும் அதையும் பதிவிடுகின்றேன். இக்கவிதையைப் படித்ததும் அக்கவிதையின் உணர்வு தனக்கு மேலிட்டதாக இன்னும் சில ஆழ்ந்த வாசிப்பாளர்களும் குறிப்பிட்டார்கள். அக்கவிதை 1983 கலவரத்தை மையப்படுத்தியது என்பதும் குறிப்பிடத் தக்கது. அனார் தனது உணவு மேசையில் சில வரிகளை இன்றைய நடைமுறைக்குத் தகுந்தமாதிரி அமைத்துக் கொண்டிருப்பதையும் உணர முடிந்தது.

பசியடங்காத ஓநாயின் சிவந்த நாக்கென
நெஞ்சில் தொங்குகின்ற
கழுத்துப்பட்டியை வருடியவாறு
அலங்கரிக்கப்பட்ட முள் கரண்டியால்
பிஞ்சுக் குழந்தையின் மாமிசத்தை ருசிக்கிறான்.

என்று சிவப்புச் சால்வையை எப்போதும் அணிந்து கொண்டிருக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தெளிவான வார்த்தைகளால் எழுத முடிந்த தைரியமிக்க பெண்ணுக்கு எந்தப் பலமான தளமும் இல்லாத இந்தச் சிறுபிராணியான முஸ்டீனை எதிர்கொள்வது ஒன்றும் பெரிய விடயம் கிடையாது.

இந்த விடயங்கள் பற்றியெல்லாம் சிலருடன் கதைத்துக் கொண்ட போது மாயா அஞ்சலோ போன்றவர்களின் கவிதைகளில் இருந்து சாரத்தைப் பிழிந்தெடுத்துக் கவிதை புணையும் அளவுக்கு மொழிவளமிக்கவரா அனார் என்று ஒருவர் கேட்டார். அப்போது நான் வாய்விட்டுச் சிரித்துவிட்டுச் சொன்ன பதில் அனாருக்கு தமிழைத் தவிர வேறு மொழிகள்தெரியாது, கல்வித்தகைமையும் ஓ.எல் அல்லது ஏ.எல் என்றுதான் நினைக்கிறேன் ஆனால் ஒருவரின் வாசிப்புக் குறிப்பைக் கெட்ச் பண்ணிக் கொண்டு புணையும் திறன் அனாருக்கு இருக்கிறது. ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை, போலுருவாக்கத்தை அனாரில் இலகுவாக நிகழ்த்திவிடும். போலுருவாக்கம் என்பது ஒரிஜினலைப் பற்றிச் சொல்லிவிட்டால் தப்புமில்லைதானே, ஆனால் அனார் அதை மறைப்பதுதான் விமர்சிக்க வைக்கிறது. இன்னொருவர் படைப்பில் இருந்து ஒரு புணைவுக்கான கருவைக் கிள்ளியெடுத்துவிட்டு அவருக்கு நன்றி சொல்வதற்கு மனமில்லாது சொந்த சரக்கென்று தம்பட்டம் அடித்துக் கொள்ள முனைவதுதான் தப்பு.

இறுதிக் குறிப்பு

01: இப்படிக் கேவலமான கவிதைகளை எழுதியமைக்காக அனாரை எழுதக் கூடாதென்று யாரும் எச்சரிக்கவில்லை
02: அனார் மட்டுமல்ல எந்தப் பெண்கள் மீதும் அவர்களின் எழுத்துக்காக அவர்களை அடக்குமுறைக்குள் உட்படுத்தவில்லை
03: முஸ்லிம் சழுகத்தின் இறுக்கமான பிடிக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டதாக அனார் சொல்வது பச்சைப் பொய். அந்த இறுக்கமான பிடி எங்கிருந்து யாரால் போடப்பட்டது என்பதை அனார் ஆதாரங்களுடன் நிருபிக்க வேண்டும்.
04: அனார் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்து தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையும் அவாவும்.

Monday, March 10, 2014

கண்ணீரினூடே தெரியும் வீதி



சில புத்தகங்களைத் தேடிச் சென்று பெற்று வாசிப்பேன், இந்தப் புத்தகத்தையும் அப்படித்தான், எல்லாப் புத்தகக் கடைகளிலும் தேடி கிடைவில்லையென்றான போது அதை எழுதியவரையே தொடர்பு கொண்டு கேட்டேன். அதற்காக நாவல வரைப் பயணம் செய்து திறந்த பல்கலைக்கழகத்தில் நண்பர் முகுந்தனைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடி புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட போது காசு கொடுத்து வாங்குவதைவிட ஓர் ஆத்மார்த்தமான பிணைப்பை அந்தப் புத்தகத்துடன் ஏதோவொன்று நமக்குள் ஏற்படுத்தி விடுகின்றது. இருபது வயது வரை இருந்த வாசிப்பின் எக்ஸ்பிரஸ் வேகம் கடந்த பத்தாண்டுகளாகக் குறைந்திருப்பதை நான் தெளிவாகவே உணர்கின்றேன். காலையில் இருந்து இரவு தூங்கி விடுவதற்குள் எப்படியும் 400 பக்கங்களுக்கு மேல் வாசித்துவிடுவேன். பாடசாலையில் படிக்கும் காலத்தில் ஒரு பாடம் முடிந்து ஆசிரியர் வெளியே சென்று அடுத்த பாடத்திற்கான ஆசிரியர் வருவதற்கிடையில் கிடைக்கும் அந்த இடைவெளியைக் கூட நான் விட்டு வைப்பதில்லை, வேகமான வாசிப்பு 20 பக்கங்களையாவது தாண்டும், 

தேவமுகுந்தனின் பத்துக் கதைகளையும் படிக்க ஐந்து நாட்கள் எடுத்தது என்னைப் பொருத்தவரைக்கும் எனது வாசிப்பின் பெருந் தோல்வி என்றுதான் கருதுகின்றேன். கதைகளைப் படித்து முடித்துவிட்டே பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் எழுதிய குறிப்பினைப் படித்தேன், நான் சொல்ல நினைத்த விடயங்கள் பலவும் அங்கே பதிவாகி இருந்தன. மேலதிகமாக இரண்டே இரண்டு விடயங்களைத்தான் தேவமுகுந்தனின் கதைகளில் இருந்து புரிந்து கொண்டேன். 

யுத்தமும் இன முரண்பாடும் தொடர்பில் குறிப்பாகத் தமிழர் - சிங்களவர் முரண்பாடு குறித்துப் பலகதைகளைப் படித்திருக்கிறேன், அவற்றிலிருந்து இந்தக் கதைகள் பெரும்பாலும் வேறுபடுவதற்குக் காரணம் சிங்களவர்களின் மனோநிலையில் எவ்விதமான உணர்வுக் கோலங்கள் படிந்திருக்கிறன என்பதைத்தான் வெளிப்படுத்துகின்றது, அதாவது சிங்களவர்களுடனான நெருக்கத்தில் இருந்தே பெருவாரியான கதைகள் பிறக்கின்றன. அந்த நெருக்கம் இராணுவத்திற்கெதிரான தாக்குதலை அல்லது நாட்டிலுள்ள அரச நலன்களுக்கெதிரான தாக்குதலால் எவ்விதமான பரிமாணத்தை அடைகின்றது என்பது மிக முக்கியமானது. எவ்வளவுதான் ஆழமான நட்பு நிலவினாலும் தமிழர்கள் தமக்கு எதிரிகள் என்பது போலவும், தமது நாட்டுக்கெதிராக தமிழர்கள் தாக்குதல் நடாத்துகின்றார்கள் என்பது போன்ற தோரனையில் வெளிப்படும் வாசகங்கள் இரு வேறு தேசங்களைக் கட்டியங்கூறி நிற்பதுவும் கவனிக்கத் தக்கது. சிங்களவர்களுக்க மிக நெருக்கமாக இருந்து அங்கிருந்த இடைவெளியில் நின்று பேசுகின்ற கதைகளே என்னை ஈர்ப்புச் செய்தன. அன்பும் நட்பும் கூடிய பிணைப்பு ஏதோவோர் இடைவெளியால்தான் கட்டிப் போடப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளும்படி கதைகள் நகர்கின்றன. இயல்பான பிரிவினை என்ற அம்சம் இப்படியே தொக்கி நிற்கின்றது. சேர்ந்து வாழுதல் எனும் எதிர்பார்ப்பு வெறுமனே எதிர்பார்ப்பு மட்டும்தான் அதில் சாத்தியப்பாடு கிடையாது என்பதையும்  யுத்தம் முடிந்த பின்னர் அது மேலும் கூர்மையடைந்திருப்பதையும் அவதானிக்கும்படியாக உள்ளதை இப்போது நாம் வெளிப்படையாகவே காணலாம். யுத்த காலத்துக் கதைகளினூடாக தேவமுகுந்தன் வெளிபடுத்தியிருப்பது இந்த உணர்வுகளைத்தான், அநேக இடங்களின் இந்த எதிர்பார்ப்பின் படிமங்களைத்தான் என்னால் தரிசிக்க முடிந்தது. 

போர் என்பதன் பின் தூரத்திலுள்ள சில பக்கங்களை; அதற்கு அண்மையில் இருந்து பேசுகின்றது. சிங்களவர்களுக்குள் வாழும் தமிழ் மக்கள், பிரச்சினை வருகின்ற போது மாறும் மனங்களை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பதில்தான் நிறைய அம்சங்கள் சுற்றி வருகின்றன. இரட்டைக் கோபுரம், இடைவெளி மற்றும் சிவா போன்றன அதைத் தெளிவாகப் பேசுகின்றன. இது குறித்த மாற்றுப் பார்வை என்னிடமுள்ளது. அதைப் பின்னால் ஓரளவுக்கு வெளிப்படுத்தியிருக்கின்றேன். கதைகளைப் பற்றி அளவானதும் அழகானதும் குறிப்பாய் பேராசிரியர் நுஃமானின் மதிப்பீடு அமைந்திருப்பதால் அதல்லாத ஒரு கோணத்தில் தான் நான் பார்க்க வேண்டியிருக்கிறது, அது கொஞ்சம் சிக்கலானதும் கூட.

அடுத்தது தமிழர் தரப்பு எதிர்பார்ப்புகள். இதிலும் சிங்களவர் தரப்புப் போலவே தமிழர்தரப்பு நியாயங்கள் வெளிப்படுகின்றன. ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது   ஆதிக்கம் செலுத்தும் போது ஏற்படுகின்ற இயல்பான ஆக்ரோஷம் தன் இனத்தின் மீது பற்றுக் கொண்ட எந்தவொரு படைப்பாளிக்கும் விதிவிலக்கானதன்று. தேவமுகுந்தனை அப்படி நியாயமான இனப்பற்றுள்ள ஒரு படைப்பாளியாகவே என்னால் பார்க்க முடிகின்றது. யுத்தகாலத்துப் படைப்புக்களில் நானும் காணும் ஒரு முரண்நிலை ஆதிக்கம் செய்யும் இனத்தின் மீதான போராட்டதை ஆதரிக்கும் பலர் சில பொழுதுகளில் போராளிகளை மறுதலிப்பர், இந்த விடயத்தைத் தெளிவாகவே பேசி விடலாம் என்று நினைக்கின்றேன்.

விடுதலைப்புலிகள் தமிழர்களுக்கான பிரதான விடுதலைப் போராட்டப் பங்காளிகள் என்ற நிலைப்பாட்டை வலிந்து வலுவாக நிலைநிறுத்திக் கொண்டபோது ஏனைய விடுதலை;ப போராட்ட இயக்கங்கள் அனைத்தும் அரசிடம் புகலிடம் பெற்றுத் தஞ்சமடைந்துவிடுவதை தெளிவாகவே நாம் வரலாற்றில் காணலாம். விடுதலைப் புலிகளின் பாரிய பிளவான கருணாவின் பிரிவின் போதும் யுத்தமுடிவின் பின்னர் கேபியின் தீர்மானமும் கூட அரசிடம் சரணடைவதைத்தான் தெளிவாகக் காட்டின அதைத்தாண்டிய நிலையிருக்கவில்லை. அது அப்படியிருக்க புலிகள் தமக்கான ஒரே காப்பாளர்கள் என்ற எண்ணத்தை ஊன்றிவிட்ட பலகாரணிகளுள் அவர்கள் மீதான அச்சத்தின் விளைவாகக் கட்டமைக்கப்பட்ட உணர்வு நிலை மிக முக்கியமானது. அதனால்தான் புலிகளுக்கு எதிராக எழுதிய எல்லோரையும் புலிகள் தேடித்தேடி அழித்தார்கள். அதற்காகவே தனிப்புலனாய்வுப் பிரிவும் செயற்பட்டது. அதனால் படைப்பாளிகள் மௌனிப்பது தவிர்க்கவொனாதாகியது. பேராசியர் நுஃமான் சுதாராஜ் அவர்களின் பெருந் தொகுப்பான உயிர்க் கசிவுக்கு எழுதிய குறிப்பில் இருந்த ஒரு பந்தியை இங்கும் குறிப்பிட்டுள்ளார் அது இந்த மௌனம் தொடர்பானது, தேவமுகுந்தனும் அந்த மௌனத்தை இங்கு கடைப்பிடிக்கிறார் என்பது, 

என்னைப் பொருத்தவரை இந்த மௌனத்தைச் சூடிக் கொண்ட பலரின் எழுத்துக்களில் ஒரு யதார்த்தத்தினை மறந்துவிடும் போக்கினை அவதானித்திருக்கிறேன். அதாவது சிங்கள தமிழ் முரண்பாடு என்பது வலுப்பெற்று யுத்தமும் இரு தரப்பாக நடக்கும் போது, ஒரு சண்டையில் ஆயிரம் ஆமிக்காரர்கள் பலியானால் தமிழர்களுக்கு எழும் வெற்றிப் பெருமிதம் இயல்பானது. மரநாய்கள் கதையின் இறுதியில் 'மரநாய்களைத் துரத்த வேண்டும்' என்பது இதைத்தான் சொல்கின்றது. அப்படித் துரத்தும் போது சிங்களவர்களுக்குள் கலந்து வாழும் தமிழர்கள் ஏதோவோர் விதத்தில் பிரச்சினையை எதிர் நோக்குவது இயல்பானதுதானே அந்த இயல்பை ஏன் எல்லா கதைஞர்களும் மறுதலிக்கிறார்கள்? என்பதுதான் எனது கேள்வி ! 

சிங்களவர்களுடன் நெருக்கத்தைக் கொண்டிருந்த பல தமிழர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டமையும், கைது செய்யப்பட்டு விசாரணைக் குட்படுததப்பட்டமையும் இந்த வகையினவே. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் ஒரு அப்பாவிச் சிங்களவன் சென்றாலும் அவன் சிங்களப் புலனாய்வுக் காரனாக இருப்பான் என்பதே புலிகளின் கணிப்பு அவன் உயிரோடு திரும்புதல் என்பது சாத்தியமற்றது. அதே இராணுவ ஸ்டடஜியைத்தான் சிங்கள தரப்புப் இராணுவ மூளையும் கைக்கொண்டது. எல்லா தமிழர்களும் புலிகளே என்பது மாதிரியான நிலைப்பாடு. தனி ஈழம் அமையப்பெற்றால் அது தமிழர்களுக்குக் கிடைத்த பெரும் பேறு என்று கருதும் உள்ளங்கள் அந்த அடைவுக்காக சிங்கள அரசை இலக்கு வைத்துத் தாக்குதல் ஒன்று நடக்கும் போது ஏற்படும் இன்னல்களை வேறோர் கோணத்தில் நோக்குவதையும் வெளிப்படுத்திய படைப்புக்களைப் படிக்கின்றபோதுதான் எனக்குள் அந்த முரண்பாட்டின் சூத்திரம் புரியாத் தன்மை எழுகின்றது. 

மர நாய்களையும் சிவாவையும் படித்த போது எனக்குள் எழுந்ததை இப்படித்தான் வெளிப்படுத்த முடிந்தது. சிங்கள இலக்கியங்கள் எப்படி  இந்நிலைகளை நோக்கியிருக்கின்றன என்பது பெரியளவில் தெரியாது, எனக்குத் தெரிய 1993ல் இருந்து கதுருவெல பஸ் ஸ்டாண்டில் ஒரு புத்திசுவாதீனமற்ற சிங்களப் பிச்சைக்காரன். எப்போதும் அவன் மகே துவ மகே துவ என்று சிரித்துக் கொண்டே சூரியன் உதிக்கும் பக்கம் நோக்கிக் கை நீட்டுவான் 1998ல் அவனை வெலிகந்தை பஸ்நிலையத்துக்குச் செல்லும் வழியில் இருந்த பெரிய அரச மரத்தின் கீழ் கண்டேன். 1999இல் ஓட்மாவடியில் இருந்தான். அப்போது அவனை இராணுவத்தினர் மிகக் கடுமையாக விசாரித்து விட்டனர் அடிகாயங்களுடன் ஓட்டமாவடிப் பகுதியில் அவன் சுற்றித்திரிந்தான், 93ல் இருந்து பல தடைவ நான் அவனுக்குச் சாப்பட்டுப் பார்சல் கொடுத்திருக்கிறேன். பின்னர் ஒரு நாள் 2002 ல் என்று நினைக்கிறேன் மட்டக்களப்பில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தான். இராணுவப் புலனாய்வுக் காரன் என்று எல்லோராலும் பேசப்பட்டான். மள்வானைக்கும் வாழைச்சேனைக்கும் 1992ல் இருந்து அலைந்த எனக்குத் தெரியும் அவன் பிச்சைக்காரன் என்பது. ஆனால் ராணுவ மூளை அவனைப் புலனாய்வுக்காரனாய்த்தான் பார்த்தது. கறை படிந்த பற்களுடன் மிகமிக மெலிந்த தோற்றத்துடன் கிழித்து எறியப்பட்ட ஊத்தைப் பையுடன் அவனது கோலங்களைந்த பிரதேத்தைப் பார்க்கும் இரண்டு சொட்டுக் கண்ணீர் எனக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை, யுத்தம் இப்படித்தான், ஆயுத மொழி இப்படித்தான் சண்டை என்ற அத்தியாயம் இப்படித்தான். இக்கதையை ஒரு தமிழ் எழுத்தாளன் எப்படிப்பார்ப்பான் என்பதுதான் எனது கேள்வி? 

எனக்குத் தெரிந்ததால் அந்தப் பிச்சைக்காரன் பற்றிய பார்வை சரியாக அமைந்தது, அவனைப்பற்றி எதுவுமே தெரியாவிட்டால் நான் எப்படி அந்நிகழ்வை எடுத்துக் கொள்வேன்? இதைத்தான் பெருவாரியான யுத்தம் பற்றிய கதைகளைப் படிக்கும் போது எனக்குத் கேட்கத் தோன்றுகின்றது. தேவமுகுந்தனின் பார்வைகூட அப்படிப்பட்ட தனக்குத் தெரிந்த என்பதில்தான் தொக்கிநிற்பதாகத் தெரிகின்றது. ஆனாலும் தனது சமூகத்தின் மீதான பேரபிமானம் எல்லாக் கதைகளிலும் மிகைத்து நிற்பதை அவர் வலிந்து தடை செய்யவில்லை, உணர்வுகளுக்கு மட்டும் அங்காங்கே கடிவாளமிட்டிருக்கிறார். அதைச் சொன்னால் வீண்வம்பாகிடுமோ என்று மெதுவாக நகர்ந்து விலகிச் சென்றிருப்பதை ஊகிப்பது அவ்வளவு கஸ்டமாக இருக்கவில்லை. 

சில வேளை எனது நிலைப்பாடுகளைத் தவறாக யாரும் வியாக்கியானம் செய்யக் கூடும், அது பற்றிக்கவலையில் இல்லை நான் சொல்ல வருவதற்குள் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டாலே போதும். ஒரு படைப்பாளி  எல்லோரையும் போல இருக்க முடியாதே. அவனது பதிவுகள் காலத்தின் நியாயமான பிம்பங்களைப் பதிவு செய்யவேண்டும். இன்னும் ஐம்பது வருடத்திற்குப் பின்னுள்ள சந்ததி இப்போதைய நமது எழுத்தக்களை வைத்துத்தான் இன்றைய களநிலவரத்தைத் தெளிய நினைக்கும் அப்போது தவறான விவாதக்களத்திற்கு வித்திட்டுவிடக்கூடாதே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் மற்றபடி ஒன்றுமில்லை.  கண்ணீரினுடே தெரியும் வீதி இந்த வகையில் ஒரு பக்கத்து நிலைப்பாட்டை மட்டும் பதிவு செய்திருக்கிறது, கூலுக்கும் மீசைக்கும் ஆசைப்படும் படியான வெளிப்பாடு தெரிவது படைப்பின் பலவீணமல்ல, படைப்பாளியின் செம்மைப்படுத்தலை வேண்டி நிற்பது. 

மனிதம் என்கிற வட்டத்துள் நின்று நான் பேசப் போகின்றேன் என்றால் அந்த வட்டத்தை வலுவாக அமைத்துக்கொள்ள வேண்டும். ஒரு படைப்பாளியாக வாழ்ந்துவிட்டுப் போவதை விட நேர்மையான ஒரு படைப்பாளியாக வாழ்தல்தான் சிறந்தது என்பது எனது நிலைப்பாடு, அப்படியான நேர்மையான படைப்பாளிகளின் எழுத்துக்களைப் படிக்கும் பாக்கியம் இலங்கைச் சூழலில் குறைவாகவே கிடைக்கின்றது. தனது மனதுக்கு நெருக்கமான ஆறுதலான நிலைப்பாட்டை ஆதரிக்கும் போக்கிலிருந்து விடுபட்டு எந்தவொரு நிலைப்பாட்டையும் பொதுவான தளத்திலிருந்து அணுகும் படைப்பாளியாக தேவ முகுந்தனும் திகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடன்...

Sunday, March 9, 2014

வறண்ட மண்ணில் ஒற்றை மழைத் துளி – குயில் கூவியது

வறண்ட மண்ணில் ஒற்றை மழைத் துளி – குயில் கூவியது


இன்று அதிகாலை ஓர் அதிசயம் நிகழ்ந்தது, குயிலின் இன்னிசை கொழும்பில் ஒளித்தது, அதைக் காது குளிரக் கேட்டு மனது மகிழ்வினால் நிறைந்தது. விதவிதமான ராகங்களில் குயில் கூவுவதை ஊரில் இருந்த போது ரசித்து மகிழ்ந்து, குயிலுக்குப் பதில் கூவல் நாமும் கொடுத்து அதற்குக் குயிலும் பதில் தந்து இன்பமாய்க் கழிந்த பொழுதுகளின் ஏக்கம் கொழும்பு வாழ்வே கதியென்றான போது நம்மை வாட்டாமல் இல்லை.

ஒலித்தது ஆண் குயிலின் கம்பீரக் குரல், இரண்டுவிதமான ராகங்களில் இடைவெளி விடாமல் அது கூவிக்கொண்டிருக்கும்போதே ஆண் குயில்தான் என்பதைத் தெரிந்து கொள்ள எனக்கு நீண்ட நேரம் தேவைப்படவில்லை, பசுமை குறைந்து குச்சிகளுடன் நிற்கும் பழம் தராத நோஞ்சான் மரங்கள் உள்ள ஒரு பகுதியில், கொரித்துப் பார்க்கப் பழங்களோ விதைப்பருப்புகளோ இல்லாத கட்டடக் காட்டுப் பகுதியில் அந்த ஓசையை ரசிப்பது  நீண்ட நாட்களுக்குப் பின்னர் காதல் ததும்ப மனைவியைச் சந்திப்பதற்கு ஈடானது. அன்பின் ஈர்ப்பு மனது முழுவதும் வியாபித்து ஓர் அமைதி நிலவுமே, அது போல

வாகனங்கள் பேரிரைச்சலும் தேவையில்லாமல் எடுத்ததெற்கெல்லாம் கச்சாபுச்சா என்று சப்தமிடும் சாரதிகளும் ஹோர்ன் அடித்தே செவிப்பறையைச் செயலிழக்கச் செய்யும் செயற்பாடுகளும் நம்மை வெறுப்படையச் செய்து எங்காவது காகம் கரைந்தால் கூட அதையும் ரசிக்கச் செய்யும் வறுமையை விதைத்துவிட்டு நகர வாழ்க்கை நரகத்தின் ஸ்டைலில் கம்பீரமாக நிற்கிறது. 

அமைதியாகப் பேச முடியாதபடியும் நமக்கு மிக அன்மையில் இருப்பவரிடம்கூட சப்தமாய்ப் பேசும் தன்மையினையும் நமக்குப் பரிசளித்துவிட்டு ஆறுதல் கொள்ளும் கொழும்பின் இரைச்சலை எரிச்சலுடன் ஏற்றுக்கொண்டாக வேண்டிய நிர்ப்பந்தத்தை என்னவென்று சொல்லத் தெரியவில்லை. இந்தக் கொடுமையெல்லாம் சகித்துக் கொண்டுதான் வாழ்ந்தாகவேண்டிய துரதிஷ்டத்தை விளக்கிச் சொல்ல என்னிடம் வார்த்தைகளில்லை, 

குயிலின் ராகம் என் செவிகளுக்கு விருந்தானது நான் பெற்ற பெரும் பேறு போலத்தான் தோன்றியது. நரகில் வேதனைப் பட்டுக் கொண்டிருப்பவனைக் கொஞ்ச நேரம் சுவர்க்கத்தில் வீசியெறிந்தது போல இருந்தது. அப்படியொரு ஆறுதல். இந்த வருடம் முழுக்க அந்த இன்பத்தை நினைத்துக் கொண்டே அனைத்தையும் கடந்து சென்றவிடலாம் என்று தோன்றுகின்றது. 

கொழும்பில் குயில்களும் வசிக்கின்றன என்பதை இன்றுதான் ஆதாரபூர்வமாக அனுபவத்தில் கண்டுகொண்டேன். காகங்கள் வசிக்கும் போது கட்டாயம் குயில்களும் வசிக்கத்தானே வேண்டும் என்பது எனது நிலைப்பாடு, அத்தோடு ஒரு சந்தேகமும் இருந்தது, காகங்களுக்கே இங்கே கூடுகள் இல்லை அப்படியிருக்கும போது குயில்கள் இங்கு வசிக்குமா என்பதுதான் அது. ஒரு தசாப்தமாகக் ஊமையாகக் கிடந்த அந்த அந்த சந்தேகம் இன்று ஓரளவுக்குத் தீர்ந்தது, காரணம் கூவியது ஒரு குயில்தானே.

சோடி இழந்து திசை தப்பி வந்து அல்லது கோபித்துக் கொண்டு வந்து இங்கு அது செட்டிலாகி இருக்கலாம், ஆயினும் அதன் குரலில் ஒரு இன்பம் தொனித்தது, அதில் களையிழந்த ராகம் இருக்கவில்லை அப்படியாயின் அது திருப்தியோடுதான் கூவியிருக்க வேண்டும். மகளிர் தினத்துக்கு அடுத்த நாள் இவ்வளவு கம்பீரமாகக் கூவும் அது சிலவேளை தன் துணையிடமிருந்து விடுதலைபெற்று வந்துமிருக்கலாம். அதனால்தான் குடைகளுக்குள் தம்மை மறைத்துக் கொண்டு காமக் களியாட்டம் ஆடும் காதலர்கள் போல ஒரு பெரு மகிழ்வுடன் இருந்தது போலும்.

தொன்னூற்றைந்து வீத வாகனங்கள் மௌனம் உடுத்தி ஓய்வெடுக்கும் பொழுதில் குயில் கூவியது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. சூரியன் உதித்தபின்னர்தான் கண் திறக்கும் அநேகரைப் போல நானும் இருந்திருந்தால் இன்று நான் இந்த இசையை ரசிக்கும் பாக்கியத்தினை இழந்துவிட்டிருப்பேன்.நல்ல வேளை அயர்ந்து தூங்கமால் அரைத் தூக்கத்துடன் புரண்டு கொண்டிருந்தது நல்லதொருவாய்ப்பாகித்தான் போனது.

ஆண் குயில்களைவிடவும் பெண்குயில்கள் மிகவும் இனிமையாகக் கூடுவும். அதில் ஓர் அலாதியான ஈர்ப்பு இயல்பிலேயே இருக்கும், அந்தப் பரவசமூட்டும் தொனியை மறைத்துக் கொண்டு ஆண்களைப் போலக் கூவப் பல குயில்கள் முயன்று வருவதையும் நன்கு அவதானிப்பவர்கள் புரிநது கொள்ள முடியும். இங்கு எந்த ஆதிக்கவாதத்தையும் நான் சொல்லவில்லை வெறுமனே குயில் பற்றியும் அதன் கூவுகை பற்றியும்தான் சொல்கின்றேன். இயல்பாகச் சொல்லப் படும் பலதையும் அது தமக்குத்தான் சொல்லப்படுகின்றது எனக் கருதி உடனே சண்டைக்கு வரும் குடிகாரப் பெண்களும் வலிசல் ஆண்களும் பரவலாக வாழும் காலம் என்பதாலும் ஒரு பெட்டைக் காக்கைக்காக பல கிழடுதட்டின வெளவால்களும் கலிசரைப் பக்குல்களும் விதவிதமான சாயம் பூசிக் கொண்டு துடைப்பம் தூக்கிய சக்கிலியர்களாக வரிசையில் வந்துவிடுகின்றார்கள் அதற்குள் லீலை பண்ணும் கிருஷ்னரின் நினைப்பு வேறு அதனால்தான் சொல்கிறேன் இது குயிலின் கூவுகை பற்றிய ரசனை மாத்திரமே.

கூ.....ஊவ்....கூ.....ஊவ்

Saturday, March 8, 2014

ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-

ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-

என்ற தலைப்பில் கருணாகரன் தொடர் ஒன்றை எழுதி வந்தார் அதில் 04வது தொடரில் அவரிடம் கேட்கப்பட்டு இன்னும் பதில் கிடைக்காத கேள்விகள்.
00000000000

வாழ்த்துக்கள் கருணாகரன். புலிகள் தரப்பின் உள்வீட்டுச் சமாச்சாரங்கள் பெரிதாக எனக்குத் தெரியாது ஆனால் சாடைமாடையாக வந்தடைந்தவைகளைத் தொகுத்து வைத்திருக்கிறேன்.உங்கள் எழுத்து மிகத் தெளிவாக பலதையும் அலசிச் செல்சதையும் யதார்த்தத்தின் மீதே புனைவுகளற்றுப் பயணிக்கவும் முயற்சிக்கும் தன்மைக்காகப் பாராட்டுக்கள். முக்கியமான சிலவிடயங்கள் குறித்து தங்கள் நியாயமான கருத்துக்களை அறிய ஆவல்.
01. கிழக்கில்முஸ்லிம்களுக்கெதிரான யுத்தகாலத்துப் புலிகளின் நிலைப்பாடு
02.வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமும் பின்னரானவையும்
03.ஹகீம்- பிரபா ஒப்பந்தம்
04.யுத்த நிறுத்த காலத்தில் முஸ்லிம்கள் பற்றியதான புலிகளின் நிலைப்பாடுகள்
05. பிராப-கருணா பிளவு
06.வெருகல்படுகொலை
07.கருணா அணி மீதான தாக்குதல்கள்(சரணடைந்தவர்களைக் கையாண்ட விதம்-கொல்லப்பட்டது எரிக்கப்பட்டது உட்பட)
08.முதூர்2006 கைப்பற்றப்பட்டமை
09.புலிகள் 2005 ஜனாபதித் தேர்தலைப் பிகஷ்கரித்தமை
10.கிழக்கு மாகாணத்தை இழந்தது
11. கிழக்கு மாகாண சபைத் தேரிதல்
12.கட்டம் கட்டமாகப் புலிகள் பின்வாங்கியதுஇ
13. இடையே நடந்த கருத்து மோதல்கள்
14.மக்கள் நிலைப்பாடு
15.கடைசி யுத்தம் நிறைவு வரை
16.கே.பி மற்றும் அவரது மகன்
17.முரண்பட்டுத் தளர்வடைந்த புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பு

இங்கு அதிக தகவல்களையும் தரவுகளையும் நிகழ்வுகளையும் பதிவுகளையும் இருபக்க இராணுவச் செயற்பாடுகளையும் திரட்டி விட்டேன். பல நேரடி அனுபவங்கள்இ

இப்போதுள்ள பிரச்சினை அவற்றை எழுத்த தொடங்கும் போது சில முரண்பட்டு இடித்துக் கொண்டு இருக்கின்றன.

வரலாறு பற்றிய பொய்யையும் போலியையும் சுவாரஷ்யமாக எழுதிவிட்டுப் புதினம் பார்க்க நான் தயாரில்லை. அதைச் சரியாகச் செய்ய வேண்டுமெனறு நினைக்கிறேன். உங்கள் எழுத்துக்களில் நம்பிக்கை துளிர்விட்டிருக்கிறது, நீங்கள் அளிக்கும் சில விடயங்களில்அடிப்படையில் எனது நிலைப்பாடுகளைச் சரி செய்து கொள்ளலாம் என்று கருதுகின்றேன்.
கட்டாயம் மின்னஞ்சலில் தொடர்புகளைப் பேணவும் என அன்பாய் வேண்டுகிறேன்.

முஸ்டீன்



இன்றைய தமிழ்ச் சங்க மகளிர் தின நிகழ்வுக் குறிப்பு

இன்றைய தமிழ்ச் சங்க மகளிர் தின நிகழ்வுக் குறிப்பு


நடுவில் நான்கு பெண்கள் இரு மருங்கிலும் இரண்டு ஆண்கள் அமர்ந்திருந்தனர். ஒரு பக்கம் தமிழ்ச் சங்கத் தலைவர் ரகுபதி பாலஸ்ரீதரனும் மறுமுனையில் ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் அரசரத்தினம் அவர்களும் அமர்ந்திருந்தார்கள் 

அதாவது பெண்களுக்கு ஆண்கள்தான் நல்ல பாதுகாப்பு என்பதை மகளிர் தினச் செய்தியாகப் பிரகடனம் செய்யும்படியான மேடையமைப்பு. அடைப்புக் குறிகள் போல ஆண்களும் அதற்குள் பெண்களுமாக இருந்தது கவனத்தை ஈர்த்ததில் வியப்பில்லைதானே. ( 0 0 0 0 )

அடுத்தது எனது கணக்கெடுப்பின்படி இன்றைய மகளிர் தின நிகழ்வுக்காகக் கலந்து கொண்டவர்களில் 55 பேர் பெண்கள் 59 பேர் ஆண்கள் அப்போதும் பாருங்கள் மகளிர் தின நிகழ்வில் நான்கு ஆண்கள் கூடுதலாகக் கலந்து கொண்டு ஜமாய்த்திருக்கிறார்கள். இதெல்லாம் இந்தக் காலத்தில் யார் உன்னிப்பாக அவதானிக்கிறார்கள். 

ஆனால் பெண்ணுரிமை ஆணாதிக்கம் சமவுரிமைஇ என்றெல்லாம் பேசோ பேசென்று பேசிவிட்டு கணவனைக் கடுமையான தொனியில் அழைத்து பவ்வியமாக அவனுக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து செல்லும் கண்கொள்ளாக்காட்சியும் இன்று காணக் கிடைத்தது பாக்கியம்.

சட்ரூபவதி நாதன் அவர்களின் தலைமையில் பத்மா சோமாகாந்தனின் வரவேற்போடும் எழுச்சிக் கீதத்துடனும் ஆரம்பித்த நிகழ்வில் ஓய்வு பெற்ற பொலீஸ் அத்தியட்சகர் அரச ரத்தினம் உரையாற்றினார். அது பற்றிவிதந்து கூற வேண்டும். கலாநிதி அனுஸியா பேசிக் கொண்டிருக்கும் போது நானும் மனைவியும் அரங்கை விட்டு வெளியேறினோம்இ எங்களைத் துரத்திவிட்டதில் அரச ரத்தினம் ஐயாவின் பேச்சுக்குப் பெரும் பங்கிருக்கிறது. 

அப்போது ஒருவர் ஓடி வந்து வடை சாப்பிட்டு டீயும் குடித்துவிட்டுச் செல்லலாமே என்றார்இ 
'ஐயா மன்னிச்சுக் கொள்ளுங்கோ அந்தாள் ஓடிவந்து திரும்பவும் மைக்கைக் கைப்பற்றினால் பின்ன பொல்லாத கோபம் வந்துவிடும்இ அத விட ஒதுங்கிப் போறது உத்தமம்' என்று வெளியேறிவிட்டோம். அப்போது அவர் ஒரு சிரிப்புச் சிரித்தார் அந்த அழகை அரசரத்தினம் ஐயா பார்த்திருக்கவேண்டும். அந்த மனிசனுக்கு கொடுத்து வைக்கல்ல பாருங்கோ.

ஐயா அரச ரத்தினம் அவர்களே! உங்களுக்கு யாரோ பொய் சொல்லி உசுப்பேற்றி விட்டிருக்கிறார்கள். அதாவது நீங்கள் நல்ல நகைச்சுவையாகப் பேசுகின்றீர்கள் அது கேட்பதற்கு ஈர்ப்பாகவும் கலகலப்பாகவும் இருப்பதாக பச்சைப் பொய்யைச் சொல்லி உங்களைக் கிளுகிளுப்பாக்கி விட்டிருக்கிறார்கள். எல்லோரையும் போல நானும் அற்புதமாகப் பேசினீர்கள் என்று பொய்யாகச் சொல்லி இன்னும் உங்களை உசுப்பேற்றாமல் உண்மையைச் சொல்லி விடுகின்றேன். அதன் பிறகு உங்கள் இஷ்டம்.

பேசும் போது இரண்டு ஜோக் அடித்தால் அது நகைச்சுவையான பேச்சாக அமையாது. ஐயா உங்களுக்கு மேடைப் பேச்சு வரவில்லைஇ இன்று நீங்கள் பேசும் போது பல பெண்கள் உங்களைத் திட்டியது உங்கள் காதுகளை அடைந்திருக்க வாய்ப்பில்லைஇ அந்த மோசமான வார்த்தைகளைக் கேட்டால் சத்தியமாக இனி நீங்கள் சும்மா கூடப் பேசமாட்டீர்கள். 

நகைச்சுவை அடிப்பதாக நினைத்து நீங்கள் பலரின் மனதைப் புண்படுத்தி விடுகின்றீர்கள். பலரும் அதைச் சிரித்துச் சமாளித்துக் கடந்து செல்கின்றார்கள் என்பதற்காக அதை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று கருதிவிடமுடியாதல்லவா. 

உங்களின் இன்றைய பேச்சில் நீங்கள் தடுக்கி விழுந்த பல இடங்களைச் சுட்டிக்காட்ட முடியும் அது தங்களை அவமானப்படுத்துவதாக அமைந்திடுமோ என்று அஞ்சுவதால் தவிர்ந்து கொள்கின்றேன். 

ஐயா ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகரே மேடை இங்கிதம் என்பது மிக முக்கியமானதுஇ நமக்குத் தரப்பட்ட நேரத்திற்குள் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டு அமர்ந்து விட வேண்டும்இ அமர்ந்த பின்னர் வேறு விடயங்கள் பலதையும் சொல்லத் தோன்றும்இ அதற்காக மீண்டும் ஓடிப்போய் மைக்கைப் பிடித்துக்கொள்வது சிறுபிள்ளைத் தனம். 

எங்காவது அமர்ந்து தமாசாகப் பேசிக் கொண்டிருப்பதற்கு உங்களைவிட்டால் மிகப் பொருத்தமான வேறு ஆள் இருக்காது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். விழாக்களில் கலந்து கொண்டுவிட்டு பேசாமல் அமைதியாக இருப்பதே அந்த விழாவுக்கு நீங்கள் செய்யும் பேருபகாரம். தயவு செய்து இவற்றைக் கருத்தில் கொள்வீர்களா! 

கடைசியாக சைவ மங்கையர் கழக மாணவிகளின் அற்புதமான வில்லிசை நிகழ்வை ரசிப்பதற்கு கொடுத்துவைக்கவில்லையே என்ற கவலை இப்போதும் மனதை வாட்டுகின்றது. (நகைச் சுவையாகப் பேசி எங்களைத் துரத்திவிட்ட ஐயாதான் இதற்கும் பொறுப்பு)

அனைவருக்கும் மகளிர் வாழ்த்துக்கள்

உயிரோடு இருந்தால் அடுத்த மகளிர் தினத்தில் சந்திப்போம்

Friday, March 7, 2014

பௌத்த துறவிகள் ஏந்தும் ஆயுதம்

பௌத்த துறவிகள் ஏந்தும் ஆயுதம் 


பௌத்ததுடன் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் விதைக்கும் போக்கு நீண்டகாலமாக இருக்கவில்லை. ஆனால் இப்போது மிகவும் அச்சுறுத்தும் தீவிரவாதப் போக்கை பௌத்தம் சூடிக் கொள்வது புத்த தர்தமத்தை அழித்துவிடவல்லது. 

கம்யுனிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதலாளித்துவ ஆதிக்கத்துக்கு இஸ்லாமியத் பயங்கரவாதம் தேவைப்பட்டது. முஸ்லிம் நாடுகளின் துணையுடன் அதை மேற்கு சாத்தியமாக்கி பயங்கரவாதத்தை உலகமெங்கும் தமக்குச் சாதக நிலைமையை உருவாக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தி கனிசமான வெற்றிகளையும் கண்டது.

சீயாக்களைத் தங்களின் திட்டத்துக்குப் பயன்படுத்தி வந்த சியோனிசம் 1979 தோடு அதில் நம்பிக்கையிழந்து 1985களின் பிற்பாடு ஸலபிக்களை தமது வலைக்குள் வீழ்த்தும் திட்டத்தில் மகத்தான வெற்றி கண்டது. அரபு ஆட்சியாளர்கள் சியோனிசத்தின் பிடியில் மௌனமாக இருக்க ஸலபி சிந்தனை உலகைக் கபளீகரம் செய்யும் பாரிய பயங்கரவாத விதையைச் சுமந்து கொண்டதை அறிந்திருக்கவில்லை.

பௌத்தத்தின் மீதான் பாரிய தாக்குதலாகவே பௌத்த துறவிகள் ஆயுதம் ஏந்துவதையும் இனவன்ம அழிப்பில் ஈடுபடுவதையும் கருதவேண்டியிருக்கிறது. பௌத்ததுறவிகள் ஆயுதம் ஏந்துவதையும் வன்முறையில் ஈடுபடுவதையும் அச்சத்துடன் பார்க்கத் தோன்றவில்லை மாறாக பரிதாபத்துடன்தான் பார்க்கத் தோன்றுகின்றது. போர்களே வேண்டாம் மனித ஊயிர்கள் அழிவதும் வேண்டாம் என்றுதான் அசோகச் சக்கரவர்த்தி பௌத்தத்தை உலகமெங்கும் பரப்பினான். அப்படிப்பட்ட அகிம்சைபொதிந்த தர்மத்திடம் ஆயுதத்தைத் திணித்துப் பார்க்கும் தந்திரம் மியன்மாரில் வெற்றியளித்தது இலங்கையிலும் அது வெற்றியளிக்கும் போது அது பௌத்தத்தின் மிகப்பெரிய தோல்விக்கான தோற்றுவாயாக அமையும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மீதான தாக்குதலும் அமைச்சரின் தம்பியும்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மீதான தாக்குதலும் அமைச்சரின் தம்பியும்

அவ்வப்போது பல தாக்குதல்கள் புலிகள் காலத்தில் நடந்தேறின. அவற்றில் வெகு சில தாக்குதல்களே முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டன. தடுக்கப்பட்டன, மற்றபடி பெரும்பான்மையான தாக்கதல்களின் மூலத்தைக் கண்டுபிடித்தல் என்பது வசப்படாத ஒன்றாகவே அமைந்துவிடுகின்றமை ஒரு துரதிஷ்டமான நிலையாகவே இருந்தது என்பதை கடந்தகால வரலாறு தெளிவாக நிரூபிக்கிறது. ஆட்கடத்தல், கொலை, குண்டுவெடிப்பு என்பனவற்றுக்கெல்லாம் சில முக்கிய தடயங்கள் காலங்கடந்தேனும் ஒரு புலனாய்வுக்காரனுக்குக் கிட்டக்கூடும். அவை மிகவும் ஆச்சரியமாகவும் நம்பமுடியாதவையாகவும் கூட இருக்கும். இந்நாட்டில் நடந்தேறிய பல கொலைகள் மர்மம் நிறைந்த துலங்காத ஒரு கரும்பகுதியாகவே இருக்கும். சிலவை விடப்படும் சிறிய தவறுகளில் இருந்து வெளிப்படும், சிலவை ஒரு நாகடமாக நடந்து திசையைத் திருப்பிவிட்டு மௌனமாகிவிடும், துரதிஷ்டவசமாக சில அப்பாவிகள் சம்பந்தமேயில்லாது அகப்பட்டுக்கொண்டு தண்டனை அனுபவிப்பர், இங்கும் ஒரு முக்கியமான விடயத்தின் துவக்கப்புள்ளியை மட்டும் இடுகின்றேன். 

 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் குதித்த போது அவரை இலக்கு வைத்த ஒரு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டமை நாடே அறிந்ததுதான். அந்தத் தாக்குதலில் அம்மையார் ஒரு கண்ணையும் இழந்தார் அதன் மூலம் விளைந்த அனுதாப அலை அவரை மிக இலகுவாக தேர்தலிலும் வெற்றி பெறச் செய்திருந்தது. இந்தத் தாக்குதலும் புலிகளின் மீது போடப்பட்டு அறிக்கை அறிக்கையாக வந்து குவிந்து இற்றைக்கு சுமார்  15
வருடங்கள் கழிந்து விட்டன. ஆயினும் மர்மம் முழுமையாகத் துலங்கவில்லை.

அம்மையார் மீதான தாக்குதலுக்கு இப்போதைய அமைச்சில் இருக்கும் ஒரு அமைச்சரின் தம்பி அப்போதைய தாக்குதலுக்கு பல வகையிலும் தாக்குதல் தாரிகளுக்கு உதவியளித்துவிட்டுப் பின்னர் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்று மீண்டும் நாட்டுக்கு வந்து இப்போது அவரும் அரசியல் வேசம் போட்டுக் கொண்டு நல்லபிள்ளையாக இருப்பது  ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. விசாரனைகள் முடிந்து குற்றவாளிகளுக்குத் தண்டனையும் கிடைத்துவிட்டது என்று விடுபட்டவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கலாம், ஆனால் காலம் என்று ஒன்று இருக்கிறது, அது பல வடிவங்களில் செயற்படும் இப்போதும் கூட அப்படித்தான். காலம் புது வடிவம் எடுத்திருக்கிறது. சரியான ஆதாரங்களோடு எவனாவது ஒருவன் வந்து நிற்பான் அப்போது எல்லோரும் மலைத்துப் போய் நிற்பார்கள். உண்மை அனைவரையும் பார்த்துப் புன்னகைக்கும்.

இந்தக் கேசை விசாரிக்கும் அதிகாரம் எனக்கு மட்டும் இருந்தால் அமைச்சரும் முகவரி இழந்து போவார் அவரின் வால்களும் அனாதைகளாகிப் போகும். தம்பியும் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார். 
எல்லோரும் குழம்பிப் போய் இருக்கக் கூடும் அந்த அமைச்சர் யாரென்று!!!!!!!!!!!! 

குழப்பத்தின் வீரியத்தைக் குறைக்க ஒரு டிப்ஸ் தரட்டுமா?
அந்த அமைச்சர் ஒரு முஸ்லிம்
-musdeen-

Saturday, March 1, 2014

அனார் கவிதைகளில் தொனிக்கும் இஸ்லாம்


இஸ்ஸத் ரியானா என்ற அனாருக்கு


01. உனக்குப் புத்தியில்லையென்பதை நிரூபித்துவிட்டாய் சகோதரி.

02. நான் உனக்கு மிரட்டல் விடுத்ததாக ஏன் போலியாக போலிசில் புகார் அளித்தாய், உன்னுடன் கதைத் அந்த உரையாடலை ரெக்கோர்ட் பண்ணி வைத்திருக்கிறேன். நீ என்ன கதைத்தாய் என்பதும் நான் என்ன கதைத்தேன் என்புத்ம அதில் தெளிவாக இருக்கிறது. மோசமன உனது வார்த்தைப் பிரயோகங்கள் பற்றி கேட்பவர்கள் தீர்மானம் எடுக்குட்டும்.

03. பொலிசார் இன்னும் என்னை அழைக்கவில்லை சரியான முகவரி இல்லை போலும் கொழும்பு முகவரியைத் தரட்டுமா? தொலைபேசி இலக்கம் இருந்தது தானே அதைப் பொலிசாரிடம் கொடுத்து இருந்தால் அவர்கள் தொடர்பு கொண்டு என்னை அழைத்திருப்பார்க்ள தானே அவர்கள் அழைக்காவிட்டால் என்ன அடுத்த வாரம் நானே வருகின்றேன் எனது பக்க விளக்கத்தையும் ஒலிப்பதிவு செய்த உரையாடலையும் கொடுக்கின்றேன். அப்புறம் பார்ப்போம் எந்தப் பக்கம் நாறுகின்றது என்று.

04. எதையும் முகத்துக்கு முகம் எதிர் கொன்டு பழகியவன் நான். அது எதுவாக இருந்தாலும். இந்தப் பிரச்சனையையும் அப்படித்தான் எதிர்கொள்ளப் போகின்றேன். ஒரு கொலக் கேசையே தனித்து நின்று நேரடியாக எதிர்கொண்டு மீண்டவன் நான். இந்தக் கொசுக் கேசை எதிர்கொள்வதா பிரச்சினை??

05. உனது வளர்ச்சிக்காக பலவகையிலும் உதவி செய்தவர்களையே இழிவாகப் பேசும் உனது புத்தியை நீயே நிரூபித்துவிட்டாய. அப்படிப்பட்ட இழிகுணம் கொண்ட உன்னிடம் நான் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளத் தேவையில்லை.

06. நீ இது வரை என்ன எழுதினாயோ அதற்கூடாகவே உன்னை அளவீடு செய்யப் போகின்றேன். உனது தரத்தை தீர்மானிக்கப் போவது உனது எழுத்துக்களே.

07.கடந்த மூன்றுமாதகால உனது தொலைபேசி அழைப்புக்கள் பற்றிய தரவுகள் அனைத்தையும் (உள்வரும் வெளிச்செல்லும் அழைப்புக்கள் மற்றும் குறுந்தகவல்கள்) வைத்தே பலவிடயங்களை என்னால் அடையாளம்காட்ட முடியும்.

08.உன்னை முன்னிறுத்தி உனக்கு ஆதரவு தேடுவதாகச் சொல்லி விசமப் பிரச்சாரத்தில் ஈடுபடும் உனது அடியாட்கள் சிலரையும் அவர்களின் போலி முகநூல் ஐடிக்களையும் ஆதாரபூர்வமாக ஐபி முகவரிகளை முன்வைத்தே என்னால் நிறுவமுடியும். அப்படி அனைத்தையும் பொதுத்தளத்தில் விட்டால் மணல்நதிக் கூட்டம் கோவிந்தா. அவர்களின் பிரச்சாரம் இன்னம் இன்னும் உன்னை இழிவுபடுத்துமேதவிர அவை உன்னை உயர்த்தப்போவதில்லை. மொட்டக்கடதாசிகள் இந்த உலகத்தில் எதையும் சாதிக்க முடியாது என்பதை நீ புரிந்து கொள்ளவேண்டும். (மொட்டக்கடதாசி போடவும் முதுகில் குத்தவும் எனக்குத் தெரியாததால் பொதுத்தளத்தில் பதிவிடுகின்நேன்)

09.ஒழுக்கம் இல்லாதவளும் இல்லாதவனும் சமயப்பரப்பில் எந்தத் தளத்தில் நின்றாலும் புஷ்வானம்தான்.

10.ஒரு முஸ்லிம் பெண்ணின்அடையாளம் அவளது ஆளுமையில் மட்டுமல்ல ஆடையிலும்தான் இருக்கிறது

11.நான் சமர்ப்பிக்கப் போவது ஆய்வுக்கட்டுரையல்ல புலணாய்வுக்கட்டுரை அபான்டங்கள் இதில் இருக்காது ஆதாரங்கள் இருக்கும் (சிலர் நினைத்துக் கொள்கிறார்கள் நாம செய்றது ஒன்டும் ஒருத்தருக்கும் தெரியா என்று)

12. அம்மா தாயே நீ ஏனம்மா இந்த வாழை மரத்தைக் கொத்தினாய்

புலிப்பயங்கரவாதியாகக் குத்தப்பட்ட முத்திரையுடன் சிறையில் புடம் போடப்பட்ட எனக்கு எதையும் எதிர்கொள்ள காலம் நன்றாகவே பயிற்றுவித்திருக்கிறது.

பரிதாபங்களுடன்
முஸ்டீன்,